ஓகூஸ் நகரில் எழுத்தாளர் வேதா இலங்காதிலகம் அவர்களுக்குப் பாராட்டு விழா!


தமிழ் ஸ்டுடியோ இணையத்தளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதில் எனக்கான புதிய பக்கம் ஒன்றையும் தயார் செய்துக்கொன்டுள்ளேன். இனி முக்கியமான கட்டுரைகளை என்னுடைய பக்கத்திலேயே எழுதுவதாக உத்தேசம். இனி நான் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இந்தப் பக்கத்தில் இடம்பெறும். நண்பர்கள் தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கான புதிய இணையத்தளம்: தமிழ் ஸ்டுடியோ அருண் - http://thamizhstudio.com/arun.htm
அன்புடன்,
அருண்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடம்: ZOROASTRIAN CENTRE, 440 Alexandra Avenue, Harrow HA2 9TL (opposite Rayners Lane Tube Station) | நாள்: ஏப்ரில் 25, 2015 (சனிக்கிழமை) | நேரம்: மாலை 6.00 மணி
தலைமை: ஆர்.ராமலிங்கம் | வரவேற்புரை: நடா மோகன் | சிறப்புரை: அம்ஷன்குமார்
உரைகள்: மாதவி சிவலீலன், இளைய அப்துல்லா, தோழர் வேலு, இளையதம்பி தயான்ந்தா, செ.சிறிக்கந்தராஜா.
வெளியீட்டுரை: ஆர்.பத்மநாபஐயர் | நூல் வெளியீடு: சு.மகாலிங்கசிவம் | நன்றியுரை: எஸ்.பி.யோகரட்ணம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: நித்தி / மீனா 02084206440 / 07405374170
தகவல்: நவஜோதி யோகரட்ணம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

‘கலையின் மதிப்பிற்குரியவர்களாகத்; திகழும்;; மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிப்பினையை இவ் வெள்ளிவிழாவினுடாக இன்றைய நவீன சூழ்நிலையிலும் ஸ்ரீமதி விநோதினி பரதன் முன்னிறுத்துவதை அவதானிக்க முடிகிறது. பாரம்பரியமாகப் போற்றப்படும் இவ் வாசகத்தை எமது இளம் கலைஞர்களிடையே போற்றுவது முன்மாதிரியான விடயம்; என சிறப்புவிருந்தினராக ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த இசைச்சுடரொளி, குறள் இசைச் செல்வர் ஸ்ரீ மா. யோகேஸ்வரன் அவர்கள் பாராட்டியிருந்தார்.

நாள்: 26 ஏப்ரில் 2015 ( ஞாயிறு) | நேரம்: முதல் நிகழ்வு @ 1.15 பிற்பகல்; இரண்டாவது நிகழ்வு @ 6.00 மாலை | இடம்: Flato Markham Theatre, 171 Town Centre Blvd, Markham, Ontario L3R 8G5 (Warden & Hwy 7)
25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)
முதல் அமர்வு 9:30 – 11:00
வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - சரோஜா சிவச்சந்திரன்
போர்ச் சூழலில் பெண் - ச.விசயலட்சுமி
கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் - கெகிறாவ ஸஹான
சமூக அறிவித்தல் 01 : மெல்பன்
பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் - பிள்ளைகள் - பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் - பெற்றோர்கள் - பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175) நடைபெறும்.
தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சி, நூல், இதழ்களின் கண்காட்சி பெரியவர்கள் பிள்ளைகள் கலந்துகொள்ளும் பலதரப்பட்ட விளையாட்டுப்போட்டிகள், உற்சாகமூட்டும் கலை நிகழ்ச்சிகள், சிந்தனைக்கு விருந்து படைக்கும் அறிவியல் நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறும். மழலைகள் முதல் வளர்ந்தோர் வரை யாவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், புதுமையான தமிழ் மொழிப்போட்டிகள், சிறுவர் ஓவியப்போட்டி என்பனவும் இடம்பெறும்.

காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திரைச்சிறப்பிதழ்! இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திஒரை இதழாக வந்துள்ளது
http://kaatruveli-ithazh.blogspot.co.uk
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எமது புத்தாண்டு
ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
நிகழ்ச்சி நிரல்:
எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம்
எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன்
ஐயந்தெளிதல் அரங்கு: மார்ச் மாத இலக்கிய நிகழ்வுகள்
நாள்: 25-04-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட) தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் சில்லையூர் செல்வராசன், சேரன், மஹாகவி, தா. இராமலிங்கம், எம்.ஏ நுஃமான், செழியன், karoline kaitampillai, திருமாவளவன், தானா விஷ்ணு, த. அஜந்தகுமார், த. ஜெயசீலன், துவாரகன், சோ.ப, றஷ்மி, ஆர். முரளீஸ்வரன், காஸ்ரோ, அஷ்வகோஸ், வேலணையூர் தாஸ், ஒட்டமாவடி அறபாத், அஷ்ரப் சிஹாப்டீன், முல்லை முஸ்ரிபா, சங்கரி, அவ்வை, மனோகரி, சோலைக்கிளி, சர்மிளா செய்யித், சடகோபன், பா. அகிலன், கருணாகரன், கு. றஜீபன், இ.சு முரளிதரன், கி.பி அரவிந்தன் ஆகியோரின் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் உள்ளன. தொகுப்பில் 67 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் 25.03.2015 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி கவிதை நூல் வெளியிடப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களே, பேசாமொழி இணைய இதழின் 31வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் மிக சரியாக 1ஆம் தேதி இதழ் இணையத்தில் வெளியாகும். பேசாமொழி இனி மாத இதழாகவே வெளிவரும். இந்த இதழில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல்வேறு திரைப்பட இதழ்களில் இருந்து முக்கியமான கட்டுரைகளை தொகுத்து கொடுத்திருக்கிறோம். தவிர மிக முக்கியமான மொழியாக்க முயற்சியான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகேந்தர்) தொடர் வெளியாகியிருக்கிறது. பேசாமொழி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட நூலான ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழாப் பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் இந்த இதழை தவறாமல் வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_31.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
![]() |
| - புகைப்படத்தில்: கலாநிதி நா. சுப்பிரமணியன், வைத்திய கலாநிதி லம்போதரன், விசேட பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளர் அகில் - |
சர்வதேச எழுத்தாளர்களை மட்டுமல்ல, குழுசார் நிலையில் இயங்கிவந்த கனடிய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை அறிந்தோ அறியாமலோ ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ் மூலம் ஒன்று சேர்த்த பெருமை தாய்மண்ணில் இருந்து வெளிவந்த இந்த ஞானம் மலருக்கே உண்டு. கனடிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அ. முத்துலிங்கம், யோகா பாலச்சந்திரன், தேவகாந்தன், குமார் மூர்த்தி, க.நவம், சக்கரவர்த்தி, திருமாவளவன், குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், சுமதி ரூபன், வீரகேசரி மூர்த்தி, மனுவல் ஜேசுதாசன், ஸ்ரீ ரஞ்சனி, துறையூரான், கடல் புத்திரன், மெலிஞ்சிமுத்தன், இளங்கோ, வசந்திராஜா ஆகியோரது சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது. இந்த மலரில் தற்போது கனடாவில் வசிக்கும் மூத்த பெண் எழுத்தாளர், அன்று வீரகேசரியில் எஸ்.பொ.வுடன் சேர்ந்து ‘மத்தாப்பு’ எழுதிய குறமகளின் (வள்ளிநாயகி இராமலிங்கம்) சிறுகதை தவறவிடப்பட்டிருப்பதை முக்கியமாக அவதானிக்க முடிந்தது. மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் தயாரிக்கப்பட்ட இந்த மலரில் சில கட்டுரைகள் அரைத்த மாவையே அரைப்பது போல ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்கின்றன. பழைய பல்லவியையே பாடுகிறார்கள் என்பதும், விரிந்து பரந்த இந்த இலக்கிய உலகில் அவர்களிடம் புதியதேடுதல் இல்லை என்பதும் மிகவும் தெளிவாகப் புரிகின்றது. பயமா அல்லது பக்தியா தெரியவில்லை. இதைப்பற்றிய தனது கருத்தை இணையப் பத்திரிகையான பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்கள் குறிப்பிடும் போது, ‘ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். எந்தவித ஆவணப்படுத்தல்களுமின்றி, ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் பலர் தமக்குக்கிடைக்கும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு, பல படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுவது போன்றதொரு தன்மை தெரியும் வகையில் எழுதிவருகின்றார்கள். இவர்கள் இவ்விதம் எழுதுவதன் மூலம் உண்மைகளைக் குழி தோண்டிப்புதைக்கின்றார்கள்.’ என்று பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.
வணக்கம்! வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல் பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலை பதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம்.
இடம்: JC’S Group Hall
1686 Ellesmere Road
Toronto ON M1H 2V5 ( மக்கோவான்- எல்ஸ்மெயர் சந்திப்பில் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரிக்க சென்னையிலுள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 28, 2015 அன்று தொடங்கும் சமூக நீதி நிகழ்வுகள் தொடர்ந்து ஏப்ரல் 26, 2015 வரைக்கும், ஒவ்வொரு சனி, ஞாயிறன்றும் நடைபெறும்.
போட்டிகள்
மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறோம். இந்த அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி நூலை முன்வைத்து, கட்டுரை, குறும்படம், ஒளிப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு http://www.panuval.com/blog/?p=29 பார்க்கவும்
சிறப்பு புத்தக விற்பனை
சமூக நீதி நிகழ்வுகள் நடக்கும் காலம் முழுவது கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு தனி)
சாதி அழித்தொழிக்கும் வழி ரூ. 70/-
அயோத்திதாசர் சிந்தனைகள் ரூ.1400
நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும் ரூ.200
தம்மபதம் ரூ.130
மனுதர்ம சாஸ்திரம் ரூ. 160
அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் 'மறுவாசிப்பில் அகிலன்'..
தலைமை : திரு. இல. கணேசன் அவர்கள் ..
முன்னிலை : திரு. அகிலன் கண்ணன் அவர்கள்..
அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா அவர்கள்..
சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன் அவர்கள்..
இணைப்புரை: முனைவர் ப. சரவணன்..
நாள்: 27.03.2015..
நேரம் : மணி 06.30 - 8.30
இடம்: பாரதிய வித்யா பவன் - மயிலாப்பூர் ..
உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்..
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம்
நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா
பக்கங்கள் - 218
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 300 ரூபாய்
தபால் செலவு - 110 ரூபாய். |தொலைபேசி – 0115020936, 0115050983
இந்த நாவல் கிடைக்கும் இடங்கள்:-
பூபாலசிங்கம் புத்தகசாலை - கொழும்பு 11. | இஸ்லாமிக் புக் ஹவுஸ் - கொழும்பு 09.
வீட்டிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் தபால் மூலம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா, தபாலகம் ஷவெலிவிட்ட| என மணியோடர் எழுத்து அதனை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நாவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
A.C. Jareena Musthafa
No. 120 H, Bogahawatte Road, Welivita, Kaduwela, Sri Lanka. | TP – 0115020936, 0115050983
குறிப்பு:- இந்த நாவல் ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தோழர்
கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். 28/03/2015 சனிக்கிழமை பி.ப.3:00 மணி தொடக்கம் மாலை 9:00 மணி வரை
அன்புடன்
லக்ஷ்மி
Ms. Luxmy, 27 rue Jean Moulin , 92400 Courbevoie ,France.
Tél: 00331 49 97 89 83 | Mobile: 00336 09 24 96 99
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
‘முதற்கண் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அமரர் அதிபர் பொ, கனகசபாபதி அவர்களுக்கான தேகாந்த நிலை விருதை ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் அவரது குடும்பத்தினரான மணிவண்ணன், மணிமொழி, மணிவிழி ஆகியோரையும், இன்றைய விழா நாயகனான கவிநாயகர். வி. கந்தவனம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்ததையிட்டு, அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசீய கீதம் ஆகியன இசைத்த செல்விகள் சங்கவி முகுந்தன், சாம்பவி முகுந்தன் அவர்களையும் அமரர் அதிபர் கனகசபாபதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவம் தந்த கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களையும் வருக வருக என வரவேற்கின்றேன். அடுத்து தலைவர் உரையாற்றவிருக்கும் எமது இணையத் தலைவர் கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி, தகமைச்சான்றுரை ஆற்றவிருக்கும் பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர் அவர்களையும், மற்றும் பிரதம விருந்தினரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் -
'01.03.2015
பி.ப 3 மணி
அழகியற் கல்லுாரி திருமறைக்கலாமன்றம்.
டேவிட் வீதி, யாழ்ப்பாணம்.
தலைமை – வேலணையூர்-தாஸ்
உரைகள் -இ.வினோத், சத்தியபாலன், ந.குகபரன், சி. ரமேஸ், மைதிலி தயாபரன்..
ஏற்பாடு..யாழ் இலக்கியக்குவியம்
இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது.
இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை பல்வேறு கட்டுரைகளின் வாயிலாகவும், சில நேர்காணல் வாயிலாகவும், சில மொழியாக்கக் கட்டுரைகளின் வாயிலாகவும் பேசாமொழியின் இந்த இதழில் தொடங்கிவைக்க முயற்சித்துள்ளோம். எனினும் இதன் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளிவரும். தணிக்கை தொடர்பான இந்த சிறப்பிதழை சாத்தியப்படுத்ததில் பல்வேறு நண்பர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல பணிகளுக்கிடையில் பேசாமொழிக்காக கட்டுரைகளை எழுதியும், மற்றக் கட்டுரைகளை சரிப்பார்த்துக்கொண்டும் தொடர்ந்து இயங்கும் தினேஷ், தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே, பேசாமொழிக்காக நேரம் ஒதுக்கி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் யுகேந்தர், இந்த இதழில் ஐந்துக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளார். ஐந்துக் கட்டுரைகளை குறிப்பிட்ட தேதிக்குள் மொழியாக்கம் செய்துக் கொடுப்பது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நண்பர் யுகேந்திரனின் குறுந்தகவல் வரும், கட்டுரையை முடித்து மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று. அவரது எத்தனையோ நாட்களின் உறக்கத்தை இந்த மொழியாக்கக் கட்டுரைகள் தின்று செரித்திருக்கும். மேலும், பேசாமொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் யமுனா ராஜேந்திரன், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தணிக்கை தொடர்பான வரலாற்றையும், அதனையொட்டிய அரசியலையும் இந்த இதழில் விரிவாக அலசியுள்ளார். புதிதாக தீக்ஷன்யா இந்த இதழில் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். புதியவர் என்பதால், அவரது கட்டுரையை நண்பர் செகோ முகுந்தன் மேற்பார்வை செய்து, திருத்தி அனுப்பியுள்ளார். தியடோர் பாஸ்கரன் இந்த இதழுக்காக ஒரு முக்கியமான கட்டுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இல்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சிறுகதை இலக்கியம்

நிகழ்ச்சி நிரல்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் - எழுத்தாளர் அகில்
கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் - எழுத்தாளர் குரு அரவிந்தன்
ஆங்கில சிறுகதைகள் பற்றிய நவீன இலக்கிய திறனாய்வுகள் - பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் - பேராசிரியர் சு.பசுபதி
கௌரவ விருந்தினர் உரை:
எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
பெப்பிரவரி; மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

வணக்கம், புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றிய விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது.அதன் பிரதிகளை ஓவியா பதிப்பகம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் வருடாந்தம் தொடர்ச்சியாக மேலதிக விபரங்களுடன் வெளியிட உதவியாக இருக்கும்.
நட்புடன்,
முல்லைஅமுதன்...
ஓவியா பதிப்பகத்துக்கு ரூ. 400/- நூல் வேண்டுவோர் செலுத்தலாம்.
வங்கிக் கணக்கு எண்:
Name: OVIYA PATHIPPAGAM
A/c. No.: 896488767
Bank: INDIAN BANK
BATLAGUNDU, TAMIL NADU.
Pincode: 624202
IFSC Code: IDIB000B116
ஓவியா பதிப்பகத்தாரின். மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட காலவோட்டத்திற்கும் அரசியல் சூழ் நிலைகளுக்குமேற்ப தனது புதிய பாய்ச்சலை மேற்கொண்ட ஈழத்து தமிழ் கவிதையானது பதித்த தடங்களையும் பரிமாணங்களையும் மீறி பிறந்துவிட்ட புதிய நூற்றாண்டில் அடைந்த தேக்கநிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையானது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் முற்றுமுழுதாக இதன் வீச்சு அடங்கிவிட்டதா என்று ஐயம் கொள்ளும் வண்ணம் ஒரு நிசப்தநிலையை தோற்றுவித்திருந்தது. தீபச்செல்வனின் ‘போர் தின்ற நகரம்’ நிலாந்தனின் ‘யுகபுரானம்’ இன்னும் பல இனப்படுகொலையின் பதிவுகளை அச்சேற்றிய பல கவிதைத்தொகுதிகள் வெளி வந்த போதும் ‘ஈழத்துக்கவிதை இனி மெல்ல சாகும்’ என்ற நக்கல்களும் ஆருடங்களும் கூட வெளிப்படையாக எழும்பத்தொடங்கின. புகலிடத்தில் இதற்கான முனைப்புகள் முற்றுமுழுதாக அடங்கி விடவில்லை எனினும் அதனை முடக்கும் குரல்கள் ஆங்காங்கே தோன்றின. பல மாதங்களிற்கு முன்பு கவிஞர் குட்டி ரேவதியின் இலண்டன் வருகையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது கணிசமான அளவு வாசகர்கள் கலந்துகொண்ட போதும், அதில் கலந்து கொண்ட ஒரு அறிவு ஜீவி ஒன்று “புகலிடத்தில் இலக்கியக் கூட்டங்களிக்கு அதிகம் பேர் வருவது கிடையாது. அரசியல் கூட்டமானால் மட்டும் கொஞ்சம் பேர் வருவார்கள்” என்று அந்திமழையில் பார்ப்பனத்தின் ஊதுகுழலாய் திருவாய்மலர்த்தருளினார். அதன் பின் குட்டி ரேவதி மீதான சேறு வாரியடிப்பு மிக அதிகமாக நடைபற்றது. ‘அறம்’ பாடிய ஜெயமோகனும் ‘உன்னத சங்கீதம்’ பாடிய சாரு நிவேதிதாக்களும் மிகவும் கொச்சைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மாதம் நடைபெற்ற எழுநா குழுவினரால் நடத்தப் பட்ட புத்தக அறிமுக விழாவில் பேசிய கவிஞர் ஒருவர் ‘ நான் இப்போது கவிதைகளே வாசிப்பதில்லை’ என்று பிரகடனப்படுத்தி கவிதைகளை சிலுவையில் அறைய முற்பட்டார். இது பலருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும்.
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் -
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழையமாணவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள நெய்தல் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 28-02-2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதிநிதியுமான திரு. சதிஸ் மோகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரங்கில் வெளியிடப்படும் நெய்தல் நூல் நீர்கொழும்பின் வாழ்வையும் வளத்தையும் விரிவாகப்பதிவுசெய்துள்ளது. இக்கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல் மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான திரு. லெ. முருகபூபதி இந்நூலை தொகுத்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் கல்லூரியின் பழையமாணவர்கள் எழுதியிருக்கும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், ஆய்வுகளை உள்ளடக்கியது இந்நூல். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலப்பரப்பின் மகிமையை பதிவுசெய்யும் வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ள இந்நூலில் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, துபாய், மற்றும் இலங்கையில் வதியும் பலர் எழுதியுள்ளனர்.
அன்புடன் நண்பர்களுக்கு , வணக்கங்கள்! தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது. அனைத்து நண்பர்களும் இந்த அழைப்பினை ஏற்று நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நிகழ்ச்சி பற்றிய விபரங்களை வெகுவிரைவில் அறியத் தருகிறோம். மேலும் தோழர் கலைச்செல்வனின் எழுத்துப் பிரதிகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். மார்ச் மாதம் நடைபெறுகின்ற ஒன்றுகூடல் நிகழ்வில் அதனை வெளியிடுவதற்கான சாத்தியங்கள் நெருங்கி வரவில்லை. இவ்வருட இறுதிக்குள் கலைச்செல்வனின் எழுத்துப் பிரதிகள் நூல் வடிவம் பெறும் என்பதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் நண்பர்கள் சார்பாக
லக்ஷ்மி
Ms. Luxmy
27 rue Jean Moulin
92400 Courbevoie
France.
Tél: 00331 49 97 89 83
Mobile: 00336 09 24 96 99
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.