மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்
நிகழ்ச்சி நிரல்
தமிழில் காலக்கணித இலக்கியம்
உரை: கலாநிதி பால. சிவகடாட்சம்
கருத்துரை வழங்குவோர்
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
திரு.சிவ.ஞானநாயகன்
திருமதி லீலா சிவானந்தன்

நிகழ்ச்சி நிரல்
தமிழில் காலக்கணித இலக்கியம்
உரை: கலாநிதி பால. சிவகடாட்சம்
கருத்துரை வழங்குவோர்
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
திரு.சிவ.ஞானநாயகன்
திருமதி லீலா சிவானந்தன்
எமது ஒன்று கூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை 14.06.2014 அன்று மலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. இதில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 15-06-2012, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை.
நண்பர்களே, புனே திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நண்பர் திவாகர் இயக்கிய இரண்டு குறும்படங்கள் சென்னையில் எதிர்வரும் ஞாயிறு திரையிடப்படவிருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வில் திரளான நண்பர்களும் கலந்துக்கொண்டு திரையிடலை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு International Zentrum - Flachs Markt– 15> 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை ரவித்துப்பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர்.
நிகழ்வுகள்: சென்னைப் பல்கலைக்கழகம் , மலாயாப் பல்கலைக்கழகம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், PENA, ITBM இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் 'கவிதையாய் விரியும் வாழ்வு' (மலாய், தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் கருத்தாக்கம்) தொடக்க விழா (10.6.2014 காலை 10.00 மணி)... மேலதிக விபரங்கள் உள்ளே
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அதனை திரைப்பட ஆர்வலர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் எண்ணம். விரைவில் ப்ரொஜெக்டர் வாங்கியதும், தமிழ் ஸ்டுடியோ குறுந்திரை தொடங்கி, தினமும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்படும். நல்லப் படங்கள், சுயாதீன படங்கள், குறும்படங்கள் என எல்லா வகையான திரைப்படங்களையும் இந்த திரையரங்கில் காணலாம். தவிர, நண்பர்கள் தாங்கள் விரும்பும் படத்தை காண, முன்பதிவு செய்துக்கொண்டு, படத்தின் பெயரை தெரிவித்தால், அவருக்கு மட்டும் பிரத்யேக திரையிடலும் உண்டு. இதற்காக தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் விரைவில் தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வெளியிடப்படும்.
‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’ ‘கானடா ராகத்தில் ராமநாத் சீனிவாச ஐயங்கர் இசையமைத்த கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘நேர நம்’ வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்த செல்வி பிரித்தி மகேந்திரன் முத்துசுவாமி டிக்சிதர் இயற்றிய ஆதி தாளத்தில் - ஹம்சத்தவனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதிம், மற்றும் எம்.என். தண்டபாணிதேசிகர் இயற்றிய அமிர்தவக்கினி ராகத்தில் - தாளம் ஆதியில் அமைந்த ‘என்னை நீ மறவாவாதே’, தியாகராஜ சுவாமிகள் கௌளை ராகம் - தாளம் ஆதியில் அமைந்த பஞ்ச ரத்தின கீர்த்தனை ‘தூ டூ கு கல’, மேலும் ‘பரோவா பாரமா’ என்ற பௌகுதாரி ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பாடல், நாகபூஷணி அம்மனுக்கு கே. மணிபல்வனின் தந்தை கனகரட்னம் இயற்றிய ‘எத்தனை காலம்’ என்ற பாடலுக்கு ஆதி தாளம் - காப்பி ராகத்தில் கே. மணிபல்லவம் இசையமைத்த பாடல் , பிரித்தியின் குரு மணிபல்லவம் கே. சாரங்கன் இயற்றி இசையமைத்த சிவரஞ்சனி ராகத்தில் - தாளம் ஆதி - தில்லானா போன்ற பல ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி கச்சேரியை இனிமை, கம்பீரம், குழைவு, சோகம், ஏக்கம் நிறைந்த பாவங்களால் அவரது இசை மாறிமாறி ஒலித்தமை பாராட்டுக்குரியது என மேலும் அவர் பாராட்டினார்.’
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை - இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை - இலக்கிய விழா இரவு 10 மணிவரையில் நடைபெறும். பகல் அமர்வில் இலக்கிய கருத்தரங்கு மற்றும் நூல்களின் விமர்சன அரங்கும் மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியநாடகம் முதலான பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இவ்விழாவில் மெல்பன் - சிட்னி - பேர்த் - பிரிஸ்பேர்ண் ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பகல் பொழுதில் நடைபெறவுள்ள இலக்கிய கருத்தரங்கில் பார்வையாளர்களும் கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இங்கு முன்பு வெளியான தற்பொழுது வெளியாகும் இதழ்களின் கண்காட்சியும் இடம்பெறும்.
எனது 7 ஆவது நூலான 'திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஊடக தகவல் ஒளிபரப்பு அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி., உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, திருமதி தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்:
தமிழ் நாவல் இலக்கியம் - உரை: தேவகாந்தன்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியை வீச்சாக்கிய பிறமொழி நாவல்கள் - த.அகிலன்
கனடாவில் தமிழ் நாவல் இலக்கிய முயற்சிகள் - குரு அரவிந்தன்
புகலிட தமிழ் நாவல் இலக்கிய முயற்சிகள் - வ.ந.கிரிதரன்
ஐயந்தெளிதல் அரங்கு
‘தனது அயராத முயற்சியினாலும், சேவை மனப்பாண்மையோடும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் படைத்த சர்வலோகேஸ்வரிக்கு கிங்ஸ்ரன் மேயரின் விருது கிடைத்திருப்பதென்பது, தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய விடயம், அவரது பல்வேறு சேவைகளையும் எடுத்துரைத்த’ திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கத்தின் ஆரம்ப உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
‘தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப்பண்போடு நேசித்து, எல்லோருக்கும்; தன்னால் முடிந்த வகையில் உதவிகள் புரிந்து வரும் சர்வலோகேஸ்வரியின் பண்பு பாராட்டுக்குரியது. ஆரம்பகாலங்களில் லண்டனில் ஆசிரியையாகப் பணிபுரிந்த சர்வலோகேஸ்வரி பின்னைய நாட்களில் வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் என ஆங்கில மொழி பேசுவதற்கு அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிகள் புரிந்தவர். தனது குடும்பம், சொந்த விடயங்கள் என நின்றுவிடாது மற்றவர்களுக்கு பணிபுரியும் மனங்கொண்ட சர்வலோகேஸ்வரி அவர்கள் கிங்ஸ்ரன் மேயரால் விருது வழங்கி பாராட்டப்பட்டமை எமக்கு மிக மகிழ்சி தருகின்ற விடயம்’ என சமூகசேவையாளர் திரு. தணிகாசலம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.
மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் பட்டறை பெற்றோர்கள், மற்றும் பங்குபற்றும் மணவர்களுடனான சந்திப்பாகவும், ஐயம் தெளிதல் நிகழ்வாகவும் அமைந்தது. இரண்டாவது பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விஜே தொலைக்காட்சியில் சுப்பசிங்கர் இசைப் போட்டிக்கு நடுவராகக் கடமையாற்றிய அனுபவசாலியான அவர், போட்டியில் பங்கு பற்றும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தேவை கருதிச் சிறப்பானதொரு உரையாற்றினார். அவர் தனது உரையில் போட்டிக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த எப்படி மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும், ஒவ்வொரு மாணவரும் எப்படித் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும், இதை ஒரு போட்டி என்று எடுத்துக் கொள்ளாமல் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு தனது உரையில் விளக்கம் தந்தார்.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 - 05 - 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் GLENWAVERLEY R S L மண்டபத்தில் (161, COLEMAN PARADE, GLENWAVERLEY - VICTORIA - 3150) ( GLENWAVERLEY ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மண்டபம்) நடைபெறும். ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு - சமணலவெவ - தமிழில் வெளியான உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost in you மற்றும் இந்த ஆண்டு வெளியான புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை ஆகிய மூன்று நூல்கள் இந்த விமர்சன அரங்கில் திறனாய்வு செய்யப்படும்.
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் | காலம்: ஏப்ரல் 26 2014 | நேரம்: 3 – 6 pm |நிகழ்ச்சி ஒருங்கமைப்பு: Misfits for change
"நீத்தார் பாடல்"! - கற்பகம் யசோதராவின் கவிதை நூல் வெளியீடு! இது ஒரு வடலி வெளியீடு!
அன்புடையீர், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு எதிர்வரும் 24 -5-2014 Darebin Intercultural Centre மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு மற்றும் கவிதை இலக்கிய அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கவிஞர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
"தமிழில் கவிதை இலக்கியம்" என்ற தலைப்பிலான இந்த அமர்வில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளில் ஏதேனும் ஒன்றை வாசித்தல் (5 நிமிடங்களுக்கு மேற்படாமல்) "என்மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கவிதையைப் படித்துக்காட்டுதலும், அதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலும். (10 நிமிடங்களுக்கு மேற்படாமல்) சங்க காலம் முதல் இன்றுவரை கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.

உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம்
நாள்: 26-04-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: மெய்யகம்
3A, 5637, Finch avenue East,
Scarborough, M1B5k9
சங்க கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் - ஓர் அறிமுகம்

நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
வணக்கம், 'இலக்கு' என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம், 14.03.2014 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது. தலைமை : பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள்; சிறப்புரை: திரு லேனா. தமிழ்வாணன்.. விருதாளர்: தடகள வீராங்கனை செல்வி ஆ. இந்து.. அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.. தாங்களும், தங்கள் இல்லத்து இளைய தலைமுறையினரும், கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் ..
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது. ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ் இலக்கிய அறிமுகம் | உரை: கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 29-03-2014 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: மெய்யகம் | 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'ஞானம்' சஞ்சிகையானது, 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்' ஒன்றை 700 பக்கங்களில் கொண்டுவரவுள்ளது. இச்சஞ்சிகைக்கு பின்வரும் தலைப்புகளில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரை ஒன்று எழுதித்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பாலு மகேந்திரா அவர்களின் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை திரைப்படங்களின் திரையிடல் எதிர்வரும் சனி (08-03-2014) மற்றும் ஞாயிறு (09-03-2014) நடைபெறும். நாள்: 08-03-2014, 09-03-2014 (சனி மற்றும் ஞாயிறு) - அனுமதி இலவசம், அனைவரும் வருக. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில், தொடர்புக்கு: 9578780400. நேரம்: காலை 10 மணி முதல், 08-03-2014 - சனிக்கிழமை.
அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03- 2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை - இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும். இலக்கிய கருத்தரங்கு - தமிழ் தட்டச்சு மற்றும் விக்கிப்பீடியா செயல் விளக்கம் - நூல் அறிமுகம் - மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் மற்றும் அன்பர்கள் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்கள் - கலை, இலக்கிய சுவைஞர்கள் - ஊடகவியலாளர்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
இலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் - புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. - Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும் நூல்கள்:
* மருதூர்க்கனி கவிதைகள்
* சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும்
* என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.
நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.