அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்

காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)
தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)
உரை : திரு. லெனின் மதிவானம் (புதிய பண்பாட்டுத் தளம்)
ஏற்பாடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்



Sydney Tamil Events : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அக்டோபர் 6, 2013 - சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த ரவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகலிட சூழலில் மாற்று அரசியல், கலை, இலக்கிய செயற்பாடுகள் - எம். பௌசர் (ஆசிரியர், எதுவரை மற்றும் சமூகநோக்கு)
மனித உரிமைகள் செயற்பாட்டாளர், சுனிலா அபேசேகர குறித்த நினைவுப் பகிர்வு - சுனந்த தேஷப்ரிய (ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர்)
தமிழ்ப் பதிப்புலகமும் உலகச் சூழலும் - கண்ணன் (ஆசிரியர், காலச்சுவடு)
20.10.2013 ஞாயிற்றுக்கிழமை 15:30 - 20:00 மணி
177 rue de Charonne, 75011 Paris
Métro : Alexandre Dumas (ligne 2) ou Charonne (ligne 9)
Bus : 76, Arrêt Charonne Philippe Auguste ou Charonne Bagnolet
தொடர்புகளுக்கு: லக்ஷ்மி 06 09 24 96 99 / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காலம்: அக்டோபர் 5, 2013
நேரம்: பிற்பகல் 3.00 மணி
இடம்: Scarborough Civic Centre

இடம்: Scarborough Civic Centre, Council Chamber, 150 Borough Dr., Toronto, Ontario
காலம்: 'அக்டோபர் 12, 2013
நேரம்: பிற்பகல் 3.00 - 6.00 வரை
மேலதிக விபரங்கள் உள்ளே
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையீர், வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் அக்டோபர் மாதக் கூட்டம் 05-10-2013 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

திருகோணமலை- கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு :
1.-சிறந்த சிறுகதை நூலுக்கு முஸ்டீன் (ஹராங்குட்டி),
2. சிறந்த கவிதை நூல்
மு.சடாட்சரன் (பாதை புதிது),
எஸ். பாயிஸா அலி (பாயிஸா அலி கவிதைகள்),

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?
1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.
வணக்க்ம. காற்றுவெளி ஐப்பசி மாத இதழுக்கான தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்.(கவிதை,சிறுகதை,கட்டுரை(அரசியல் தவிர்த்து),நூல் விமர்சனம்,மருத்துவக் குறிப்புக்கள்,குறும்பட செய்திகள்). காற்றுவெளி பற்றிய தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள். பிரசுரிக்கப்படும். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் பல படைப்புக்களை உள்வாங்கமுடியும். நட்புடன், காற்றுவெளி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
‘முரண்படுதலுக்கான காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை’ என்ற கருத்தை முன்னிருத்தி தமிழ்நாட்டிலிருந்து இந்த (2013) ஆண்டு முதல் வெளியாகும் தளம் கலை, இலக்கிய காலாண்டிதழின்; ஏப்ரில், மே, ஜூன் இதழ் சமீபத்தில் கிடைத்தது. நாடகச்சிறப்பிதழாக வந்துள்ள இவ்விதழ் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆக்கத்தையும் பதிவுசெய்து அன்னாரின் நூற்றாண்டு காலத்தையும் மறக்காமல் நினைவுபடுத்தியுள்ளது. தளம் இதழை உலகெங்கும் வாழும் கலை, இலக்கிய, நாடக, திரைப்படச்சுவைஞர்கள் படிக்கத்தக்கதாக தற்பொழுது இணையத்திலும் பார்க்கமுடிகிறது. தளம் மூன்றாவது இதழும் வெளியாகியுள்ளது.

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழாவை 14.09.2013 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமைக் காலை 10.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்பர்களுடனும் உறவுகளுடனும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள்: http://bharathidasanfrance.blogspot.fr
சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவை நிறைந்த நிகழ்வாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களையும் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார்.
கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

பாரிஸ்: குவார்னிகா அறிமுகமும் வெளியீடும் உரைகளும்

காவ்யா தமிழ் இதழ் மற்றும் திலகபாமா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! [தகவல்: திலகபாமா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ]

தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து 'காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு' எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை அக்டோபர் திங்கள் நடாத்த உள்ளன. அவ்வமயம் பேராசிரியர்களும் தமிழ்ச்சான்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாங்கள் இக்கருத்தரங்க ஆய்வுக் கோவைக்குக் கட்டுரை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் இங்கே
நண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன், தியடோர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், ராஜேஷ், தினேஷ், பிச்சைக்காரன், அருண் மோ.ஆகியோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக லெனின் இயக்கிய நாக்-அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது. ஊருக்கு நூறு பேர் திரைப்படம் பற்றிய தியடோர் பாஸ்கரன் கட்டுரையின் தமிழ் வடிவமும் வெளியாகியுள்ளது. தவிர வெங்கட் சாமிநாதனின் முக்கியமான கட்டுரை ஒன்றும், தமிழ் திரைப்படங்களில் அரசியல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் மிக முக்கியமான கட்டுரை. நண்பர் பிச்சைக்காரனின் ஒருத்தி திரைப்படம் பற்றிய கட்டுரையும், அம்ஷன் குமாரின் நேர்காணலும், பிச்சைக்காரன் சிலாகித்து எழுதி இருக்கும் ஊருக்கு நூறு பேர், நாக்-அவுட் படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தவிர தொடர்களான, மருதுவின் அனிமேசன் கலை பற்றிய கட்டுரையும், நண்பர் ராஜேஷின் ஒளிப்பதிவு பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் அவசியம் இந்த மாத பேசாமொழி முழு இதழையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://pesaamoli.com/index_content_9.html - அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 - 08 - 2013) மாலை இலண்டன் 'மனோர் பார்க்" (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் 'இலக்கிய மாலை" நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?" - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்" - கட்டுரைத் தொகுதி, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?", 'மண் மறவா மனிதர்கள்", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'இலக்கிய வித்தகர்" த. துரைசிங்கத்தின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.
நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும். சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின் அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.

இலண்டன் மாநகரில், இலக்கிய மாலை நான்காவது நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 10-ம் திகதி (10 - 08 - 2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகவுள்ளன. இலண்டன் 'மனோர் பார்க்" (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலண்டன் மாநகரில் வாழும் பல மூத்த கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரைநிகழ்த்துவர். வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?" - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்" - கட்டுரைத் தொகுப்பு, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?, 'மண் மறவா மனிதர்கள்", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகவுள்ளன. வி. ரி. இளங்கோவனின் கல்லூரிக்கால ஆசிரியரும், இலக்கிய நேசரும், கணினி விரிவுரையாளருமான திரு சிவா பிள்ளையும் நண்பர்களும் இந்நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும், யூன் மாதம் பாரிஸ் மாநகரில் இடம்பெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும் இந்நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது இலண்டன் மாநகரில் நடைபெறும் 'இலக்கிய மாலை" நிகழ்வில் இவை அறிமுகமாகின்றன. 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்"- (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -
திராவிடர் உணவுமுறை, திராவிடர் உடைமுறை, திராவிடர் குடியிருப்பு, திராவிடர் தொடக்கக்கல்வி, திராவிடர் உயர்கல்வி, திராவிடர் தொழில்கள், திராவிடர் விவசாயமுறை, திராவிடர் மருத்துவம், திராவிடர் திருமணமுறை, திராவிடர் இல்ல விழாக்கள், திராவிடர் பொதுவிழாக்கள், திராவிடர் சுற்றுலாக்கள், திராவிடர் கலைகள், திராவிடர் விளையாட்டுக்கள்,திராவிடர் தற்காப்புக்கலைகள். மேற்கண்ட தலைப்புகளின் அடிப்படையில் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். சிறந்தகட்டுரைகளைத் தொகுத்து திராவிடர் பண்பாட்டு மலரை வெளியிட உள்ளோம். தேவையான கட்டுரைகளை காட்சிவடிவில் மாற்றி விளக்கக்காட்சிகளாக, ஆவணப் படங்களாக, காட்சிஅரங்குகளாக நிகழ்வில் வெளிப்படுத்த உள்ளோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“