சென்னை: ஆகஸ்ட்15 நூல் அறிமுக நிகழ்வு
சென்னை: ஆகஸ்ட்15 நூல் அறிமுக நிகழ்வு


சென்னை: ஆகஸ்ட்15 நூல் அறிமுக நிகழ்வு

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
*நிலாந்தன் *சோலைக்கிளி *யோ. கர்ணன் *அ.முத்துலிங்கம் *தமிழ்க்கவி *மு. நித்தியானந்தன் *சண்முகம் சிவலிங்கம் *ந.இரவீந்திரன் *ஸர்மிளா ஸெய்யித் *தேவகாந்தன் *பொ.கருணாகரமூர்த்தி *ஏ.பி.எம். இத்ரீஸ் *இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் *கற்சுறா *செல்வம் அருளானந்தம் *லெனின் மதிவானம் *லிவிங் ஸ்மைல் வித்யா *றியாஸ் குரானா *எம் .ரிஷான் ஷெரீப் *ம.நவீன் *ஓட்டமாவடி அறபாத் *ஹரி ராஜலட்சுமி *கருணாகரன் *மா. சண்முகசிவா *கறுப்பி *மோனிகா *தமயந்தி *பூங்குழலி வீரன் *எம்.ஆர்.ஸ்ராலின் * திருக்கோவில் கவியுவன் *இராகவன் *லீனா மணிமேகலை *ராகவன் *தேவ அபிரா *கே.பாலமுருகன் *குமரன்தாஸ் *விஜி *யாழன் ஆதி *லெ. முருகபூபதி *தர்மினி *ஆதவன் தீட்சண்யா *அகமது ஃபைசல் *கலையரசன் *அ. பாண்டியன் *அஜித் சி. ஹேரத் *ச.தில்லை நடேசன் *எஸ்.எம்.எம்.பஷீர் *மகேந்திரன் திருவரங்கன் *மஹாத்மன் *லதா *ஷாஜஹான் *பானுபாரதி *யாழினி *விமல் குழந்தைவேல் *மேகவண்ணன் *அஷ்ரஃப் சிஹாப்தீன் *மெலிஞ்சிமுத்தன் *யோகி *அஸ்வகோஷ் *ந.பெரியசாமி *தேவதாசன் *ராஜன் குறை *ஷோபாசக்தி... மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடு.
பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: "தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்."


வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர் முஸ்லிம் பேரவை (வை. டப்ளியு.எம்.ஏ) ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' என்னும் அறக்கட்டளையினால் $8,500 உதவித் தொகையாக இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. 100 சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் 'நிலவற்ற இரவு' ("Moonless Night") என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. அதற்காகவே, மேற்படி தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்காகவும், வெளியிடுவதற்காகவும் தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்படும் 100 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். வெளிவரும் நூலானது பொதுசன நூலகங்கள், சமுக அமைப்புகளில் மட்டுமல்லாது இணையத்திலும் விற்பனைக்கு விடப்படும். இவ்வாறு ஒண்டாரியோ டிரில்லியம் ஃபவுண்டேசன்' தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கிறது. 1999 இலிருந்து இதுவரையில் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு $500,000ற்கும் அதிகமான உதவித் தொகையினை மேற்படி 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' என்னும் அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை பெற்ற அமைப்புகளின் விபரங்களை 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. யாரும் சென்று பார்க்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://www.otf.ca/en/index.asp
இலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் 'இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்' விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு "மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு" விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இனப்படுகொலைகளின் கொடுந்துயரம்: வெலிக்கடை
முதல் முள்ளிவாய்க்கால் வரை.

'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது."

- சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள் செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக் காண்பித்தபோது எடுத்தபடம். -
மனித உரிமைகளின் மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு; Parliamentarian Forum on Human Rights For Global Development
07-06-2013 - இலங்கைத் தமிழர் புதுடெல்லி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
நாள்: ஜுன் 14, 15 – 2013. இம்மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இலங்கைத் தமிழர் மாநாடுää தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் (29-05-2013) வேண்டுகோளுக்;கிணங்க குறித்த மாநாடு இம்மாதம் (ஜுன்) 14 மற்றும் 15ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிட்டப்படி இந்த மாநாடு குறித்த நாளான ஜுன் 14, 15ஆம் திகதிகளில் டெல்லி அரசியல் அமைப்பு மண்டபத்தில் நடைபெறுகிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
சீ. வசீகரன்
இலங்கைத் தமிழர் விவகாரச் செயலாளர் (PFHRGD)
Parliamentarian Forum on Human Rights For Global Development
B-3/73 Basement Floor Safdarjung Enclave, New Delhi - 110029
www.pfhrgd.org இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Telephone: 91 11 2610 2873 Fax: 91 11 2373 1247
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார். நேற்று மாலை (07 - 06 - 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது. பாரிஸ் மாநகரில் ''ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ''சமரா கோணர் " உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் - கவிஞர் தா. பாலகணேசன் - திருமதி பாலகணேசன் - கவிஞர் க. வாசுதேவன் - ''தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் - எஸ். குமாரதாஸ் நேசன் - இ. குலம் - மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)
பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்
உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.
நாள் : 15-06-2013, மாலை 5 மணி
இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். விழா நடைபெறும் அரங்கம் மாற்றப்பட்டுள்ளது. முகவரியைக் கண்டு தெளியவும்.

காலம்- 18 ஜுன் 2013 (புதன்), மாலை 6 மணி
TRINITY CENTRE,EAST AVENUE
EASTHAM- E12 6SG
ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம். எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். நன்றி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படிக்க: http://pesaamoli.com/index_content_6.html படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம். மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையீர், வணக்கம். காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட உள்ளது. எனவே, சிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரை ஒன்றை புதிதாக (வேறெங்கும் வெளிவராத) அனுப்புங்கள். சிறு சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
22 May 2013- "I was recently denied a writing prize because they said I was lazy." runs one of Lydia Davis's two-sentence short stories. Well not any more. Davis has just been awarded the fifth Man Booker International Prize at an award ceremony at the Victoria and Albert Museum in London. Her inventive, carefully-crafted and hard to categorise works saw off the challenge from nine other contenders from around the world. The judges - Professor Sir Christopher Ricks, Elif Batuman, Aminatta Forna, Yiyun Li and Tim Parks - recognised that crafting spare, philosophical and original works, however short, is not for the lazy at all but takes time, skill and effort. The Prize, worth £60,000, is awarded for an achievement in fiction on the world stage and Davis's achievements are writ large despite often using startlingly few words (some of her longer stories only stretch to two or three pages). Her work has the brevity and precision of poetry. Sir Christopher Ricks, chairman of the judges, said her "writings fling their lithe arms wide to embrace many a kind. Just how to categorise them? They have been called stories but could equally be miniatures, anecdotes, essays, jokes, parables, fables, texts, aphorisms or even apophthegms, prayers or simply observations." Davis then is not like any other writer and she follows, and contrasts with, the previous winners of the prize - Ismail Kadaré, Chinua Achebe, Alice Munro and Philip Roth.

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...'
வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.
அன்புடன்,
வீ.சு.இராமலிங்கம்
தஞ்சாவூர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் (சுநுளுவுயுருசுயுNவு ளுயுஆயுசுயு ஊழுசுNநுசு) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" (ஆ° : ளுவயடiபெசயன) நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரான்;ஸ் நாட்டில் வாழும் பல கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவர். வி ரி. இளங்கோவனின் புதிய நூல்களான 'இப்படியுமா" சிறுகதைத் தொகுதிää 'அழியாத தடங்கள்" கட்டுரைத் தொகுப்புää 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா"ää மற்றும் 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் இந்நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27 -ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மே 11, 2013 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முதற் சிறப்புப் பிரதியை வெளியிட மருத்துவர் லம்போதரன் அதனைப் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வின் காட்சிகள் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றோம்.


கனடா - தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது நிறைவு விழாவும் மலர் வெளியீடும் ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோவிலில் தலைவர் சின்னையா சிவநேசனின் தலைமையில், ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரங்கு நிறைந்த விழாவாக சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ் வாழ்த்து, கனடாக் கீதம் என்பவற்றைத் தொடர்ந்து திவ்வியராஜனின் கணீரென்ற குரலில் வந்த பேசாப் பொருளை என்ற பாரதியாரின் பாடலுக்கு கலாய நடனப்பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி வந்திருந்தவர்களை வரவேற்றனர். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள், ‘புலம்பெ யர் இலக்கியங்களில் இலக்கியச் சிந்தனையின் போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

போரினாலும் இன அழிப்பினாலும் மரணித்த மனிதர்களை நினைவு கூறவும், சமூக விடுதலைக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும், ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடி மரணித்தவர்களை நினைவு கூறவும், அனைவருக்கும் அஞ்சலி செய்வதற்கும், அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தவும், இழந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் இவர்கள் வாழ்வை மேப்படுத்தவும், நடைபெறும் நிகழ்வு இது. இதில் பல்துறைசார்ந்தோர் பலர் உரையாற்றவுள்ளனர்.
ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு; Mid Scarborough Community Centre, (2467 Eglinton Ave East). நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். - வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு - வருகின்றவர்களுக்கு மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5.00 மணி.

இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.