
1
நான்கு நாட்களாய் மிகத் தீவிரமாக இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாய் இன்று முளைத்துள்ள பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே தொடர்வதாய் உள்ளன. அது “சிந்து நதி” சார்ந்த பிரச்சினைகளாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா ரத்து செய்யப்பட்ட பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால், இவற்றை ஆழ நோக்கும்பொழுது, பிரச்சினைகள், இன்னும் பிரச்சினைகளாக உள்ளமை தெளிவாகின்றன.
சென்ற கட்டுரைத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக ட்ரம்பின் மதிநுட்ப கூற்றுக்களும், எப்படி அது, ஜெயசங்கராலும் மோடியாலும் நிராகரிக்கப்பட்டன என்பதனையும் விவரித்திருந்தோம்.
உதாரணமாக, “அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிந்து நாங்கள், ஜெர்மனி போன்ற பிறிதொரு நாட்டை, மத்தியஸ்தத்திற்கு அழைப்பதற்கு நாம் கனவில் கூட இடம் தருவதற்கில்லை”. ஜெயசங்கர் இவ்வாறு கூறுவது முக்கியமானது-மேல் வரும் நிலைப்பாட்டை நிரூபிக்கின்றது எனலாம் (25.05.2025). இதுபோலவே, மேலே கூறப்பட்ட, “சிந்து நதி” சார்ந்த இன்றைய பிரச்சினைகளுக்கு, இன்னமும் தீர்வொன்றைக் கண்டுப்பிடித்ததாக இல்லை.
பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் என்று தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளுமோ அன்றே “சிந்து நதியின்” பிரச்சினையும் தீர்க்கப்பட்டதாக இருக்கும். காஷ்மீர் என்பது, எம்மைப் பொறுத்தவரையில், தீர்மானிக்கப்பட ஒன்றுமே கொண்டதாக இல்லை. அது முற்றுமுழுதாய்த் தீர்வைக் கண்டுவிட்டது. அது, இந்தியாவினுடையது. இந்தியாவுக்கு உரித்தானது. இது குறித்து அளவளாவுதல் என்றால் அது, பாகிஸ்தான், காஷ்மீரை விட்டு, என்று-எப்போது, வெளியேற எண்ணியுள்ளது என்பதைப் பொறுத்தது மட்டுமே ஆகும் என ஜெயசங்கர் மேலும் குறிக்கின்றார். இக்கூற்றுடன், லெப்ரோவின் கூற்றும் தொடர்புபடக் கூடியதுதான். லெப்ரோவின், கூற்று: “இந்தியாவைத் துண்டு போட இடமளிப்பதா?” (24.05.2025).
இதுபோக, மேற்படி இந்தியா-பாகிஸ்தான் போரில், தொடர் வர்ணணையில் ஈடுபட்டிருந்த மேற்கின் ஊடகங்கள், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதை (சீண்டி விடுவதை), நோக்காக கொண்டு இயங்கின என்பதும், இது, இரு உலக ஒழுங்குகளின் போராட்டத்தையே பிரதிபலிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.