எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் வெளியீடு!



இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர். நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளி அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது. இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.
ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா. மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும். தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன.

கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.
நாடகத்துறையிலிருந்தபோது திரு. அஸ்வகோஷ் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு அவர் எழுதி புத்தகமாக வெளிவந்த நாடகம் ஒன்றை அவர் முன் னிலை யல் அரங்கேற்றியிருக்கிறார்.
படிக்கிறபோதே, 1980 களில் "ஆத்மா" கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தார். "ஆத்மா" பௌர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினார்.
1988-89ல் கணையாழியில் திரு.அசோகமித்ரன் பணியி லிருந்த சமயத்தில் ஒரு மாத காலம் அச்சு கோர்ப்ப வராகவும், புரூப் ரீடராகவும் அங்கு பணிபுரிந்திருக் கிறார்.
ஆத்மாஜி என்ற பெயரை "ஆத்மாஜீவ்" என்று நியூம ராலஜி யின்படி பெயர் மாற்றி தந்தவர் திரு. பிரமீள்.
வேர்கள் ராமலிங்கம், திரு. கோணங்கி, ரவி சுப்ர மணியம், இரா.நடராசன், பாவண்ணன், பிரம்மராஜன், நாகார்ஜூனன், கால சுப்ரமணியம் போன்ற பலருடன் நேர் மற்றும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார்.
1990 களில் "காலக்ரமம்" என்ற பெயரில் கவிதைகளுக் கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள் வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தியவர். இவரது கவிதைகள் தமிழின் முக்கியமான சிறு பத்திரி கைகளில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொ குப்புக ளும் வெளியாகியுள்ளன.

இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு.இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.

கட்டுரையாளர்: முனைவர் ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி -1), குரு நானக் கல்லுரி (தன்னாட்சி), சென்னை. -
முன்னுரை
நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.
வளையாபதி - காலமும் கருத்தும்
வளையாபதி சமண சமயச் சார்புடைய காப்பியம் என்ற கருத்துண்டு, இது சீவக சிந்தாமணி எழுந்த காலத்தில் எழுந்தது என்றும் கூறுவர். இதன் காப்புச் செய்யுள் சிந்தாமணிக் காப்பின் கருத்தை அடியொற்றி அமைத்துள்ளது. மேலும், காப்புச் செய்யுளின் கருத்தைக் கொண்டு வளையாபதி சிந்தாமணிக்கு முற்பட்டது என்பாரும் உண்டு. எவ்வகையாயினும் வளையாபதி எழுந்த காலம் ஆய்வுக்குரியதாகவே அமைகிறது. வளையாபதி சமண சமயம் பற்றியது. இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. செய்யுளின் பண்புகளைக் கொண்டு இதனை இயற்றியவர் புலமைப் பண்புமிக்க நல்லிசைப் புலவர் எனத் திண்ணமாகக் கூறலாம் என சோமசுந்தரனார் தெரிவிக்கிறார். மேலும் அடியார்க்கு நல்லார், இளம்பூரணர் அரும்பதவுரையாசிரியர். பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் பெருமக்கள் வளையாபதி செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும் இந்நூல் தமிழ்மரபு மாறாக இயன்றதொரு நல்லிலக்கியம் எனவும் கூறுகிறார்.

அத்தியாயம் 3: மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு: வடிகட்டலும் விசுவாசமும் (The Translation of Translation: Filtered Aesthetics)
முதல் இரண்டு அத்தியாயங்கள் தர்வீஷின் கவிதை உலகிலுள்ள அரசியல் மற்றும் அழகியல் அடுக்குகளைத் தேடிக் கண்டறிந்தன என்றால், இந்த மூன்றாம் அத்தியாயம் நமது ஒட்டுமொத்த விமரிசன ஆய்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையப் போகிறது.
ஏனெனில், இங்கு நாம் கவிஞரைத் தாண்டி, மொழிபெயர்ப்பாளரான பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் உழைப்பையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும், 'மொழிபெயர்ப்பின் அரசியல் மற்றும் ஒழுக்கவியல்' கோட்பாடுகளின் பின்னணியில் சர்வதேசத் தரத்தில் அலசப் போகிறோம்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது முன்னுரையில் மிகவும் நேர்மையாகவும், அறிவுஜீவிக்குரிய ஒழுக்கத்தோடும் ஒரு பிரதான உண்மையை ஒப்புக்கொள்கிறார்:
"நான் அறிந்தவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தர்வீஷின் கவிதைகள் எவையுமே அரபு மூலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல... ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகவே தர்வீஷும் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவ்வகையில் நமது மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகள் தான்."
கோட்பாட்டுத் தளத்தில் இதனை 'இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு' (Indirect or Secondary Translation) என்று அழைப்பார்கள். புகழ்பெற்ற ஜெர்மன் மெய்யியலாளரும் கோட்பாட்டாளருமான வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) தனது The Task of the Translator (மொழிபெயர்ப்பாளனின் பணி) என்ற புகழ்பெற்ற கட்டுரையில், மொழிபெயர்ப்பு என்பது மூலப் பிரதியின் 'மறுவாழ்வு' (Afterlife) என்று குறிப்பிடுவார். மூலப்பிரதி தன் உடலை (சொந்த மொழியை) இழந்து, வேறொரு மொழியில் ஆன்மாவாக மறுபிறவி எடுக்கிறது.

கனடா ஒன்ராறியோவில் வோன் பகுதியில் உள்ள சினிப்ளெக்ஸ் திரையரங்கில் ‘தி ஒடிஸி’ (The Odyssey’) முதல் நாள் முதல்காட்சி பார்ப்தற்கு எனது வாசகர் வட்ட நண்பர் ஒருவர் அழைத்திருந்ததால், அந்தப் படத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் காட்சிக்கான சீட்டுக்கள் விற்பனையாகி முடிந்திருந்தன. அவரும் கனடிய தமிழ் திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர். அவருக்காக அவர் தயாரித்த படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருக்கின்றேன். இப்படியான பிரபலமான பிரமாண்டமான படங்கள் வெளிவரும் போது சென்று பார்ப்பது வழக்கம். பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படம் பார்ப்பேன், ஆனால் இம்முறை முதல் நாளே பார்க்க (17-7-2026) அவர் மூலம் சந்தர்பம் கிடைத்ததால் சென்று பார்த்தேன். பல்லின மக்களாலும் திரையரங்கம் நிறைந்து இருந்தது. படம் முடிந்தபின் அவர்களில் சிலருடன் இந்தத் திரைப்படம் பற்றி உரையாடவும் முடிந்தது.
இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பல காவியங்கள், காப்பியங்களைப் படித்திருப்பார்கள். இவற்றில் சில திரைப்படங்களாகவும் வெளிவந்திருந்ததையும் பார்த்திருப்பார்கள். வாசிப்பு அனுபவம் காட்சி மொழி அனுபவத்தைவிட முக்கியமானது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்கள். மொழி மாற்றம் செய்யப்பட்ட கதை என்றால் அங்கேயும் பொதுவாகத் தளர்வுக்கு இடமுண்டு. வாசிப்பு அனுபவம் என்பது கதை ஓட்டத்தைப் பார்த்து மிகுதியை நாங்கள் கற்பனை செய்து பார்ப்பது. காட்சி மொழி என்பது நெறியாள்கை செய்பவரின் கற்பனையில் உதித்ததைக் காட்சி மொழியில் பார்ப்பது. சில நேரங்களில் நாங்கள் நினைத்ததைவிட வித்தியாசமாக இருக்கிறதே என்று பாராட்டுவோம், சில நேரங்களில் காட்சிகளில் கருத்து முரன்பாடு ஏற்படும் போது அலுத்துக் கொள்ளுவோம். ஆனால் சரியோ பிழையே ஒவ்வொருவருடைய திறமையும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டும். அந்த வகையில் இந்தப்படத்தின் சில சிறப்பு அம்சங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

அத்தியாயம் 2: எதிர்ப்பின் அழகியலும் சீற்றத்தின் மொழியும் (The Aesthetics of Resistance and Rhetoric of Rage)
2.1 அரசியல் கருத்துநிலையும் மதச்சார்பற்ற மார்க்சியப் பார்வையும் (Ideological Landscape and Secular Marxism)
மஹ்மூத் தர்வீஷ் வெறும் உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தக் கவிஞர் மட்டுமல்ல; அவர் ஆழமான அரசியல் மெய்யியல் (தத்துவப்) பின்னணி கொண்ட ஒரு மார்க்சியப் போராளி. பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது அறிமுக உரையில் தர்வீஷின் அரசியல் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக வரைமுறைப்படுத்துகிறார்: 1961 இல் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தர்வீஷ், பலஸ்தீனப் பிரச்சினையை வெறும் மதப் பூசலாகவோ அல்லது இனவாத மோதலாகவோ பார்க்கவில்லை. மாறாக, அதை ஒரு வர்க்கப் பிரச்சினையாகவும், உலகளாவிய ஏகாதிபத்திய-சியோனிச ஆக்கிரமிப்பாகவுமே அணுகினார்.
இடதுசாரிச் சிந்தனையாளரான பிரான்ட்ஸ் ஃபனோன் (Frantz Fanon) தனது The Wretched of the Earth நூலில் குறிப்பிடுவதைப் போல, ஆக்கிரமிப்பு என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் சேர்த்தே சிதைக்கிறது; அதற்கு எதிரான பண்பாட்டுத் தற்காப்பு என்பது தவிர்க்க முடியாமல் 'மதச்சார்பற்ற தீவிரத் தன்மையைக்' (Secular Radicalism) கோரி நிற்கிறது.
தர்வீஷ் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுவதை நுஃமான் பதிவு செய்துள்ளார்:
"நான் மதம் சார்ந்த தனித்தன்மையையும் அடிப்படைவாதத்தையும் நிராகரிக்கின்றேன். பலஸ்தீனம் எப்போதும் முஸ்லிம், கிறிஸ்தவ, யூத நாடாகவே இருந்து வந்துள்ளது."
மத அடிப்படைவாதத்தை நிராகரிக்கும் இந்த இடதுசாரிச் சிந்தனையே தர்வீஷின் எதிர்ப்புக் கவிதைகளுக்கு உலகளாவிய மானுடப் பொதுத்தன்மையை (Universal Humanism) வழங்குகிறது. அவரது சீற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது அல்ல; அது ஒட்டுமொத்த மனித அடக்குமுறைக்கு எதிரானது.

1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த உலகத்தை தங்கள் கண்களால் காண்பதை உண்மை தோற்றம் என்று நம்பினார்கள். காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது வேறு, அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால், மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இப்படி, பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக் கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.
சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் உள்ள வேற்றுமை பகுத்தறிவு சார்ந்ததே அன்றி உளநெகிழ்ச்சி சார்ந்ததல்ல. இது ஒரு மனிதனின் உள்ளார்ந்த மனநிலை. சரி, தவறு, நல்லது, கெட்டது போன்ற பாகுபாடுகள் தத்துவமானது பகுத்தறிவுக்கும், அனுபவவாதத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தடுமாறுவதைக் குறிக்கிறது.

1
“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக் கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.
ஈரானின் மீது, இரண்டாவது தடவையாக, இன்று கோர தாக்குதல்களை தொடங்கி உள்ள அமெரிக்கா, ஈரானில், கொமெய்னியின், இறுதி கிரியைகளுக்காக நின்றிருந்த 200 லட்சம் மக்களின் கோபங்களை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பெண்கள், சவ ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பொறுத்து, ஊடகங்கள், ட்ரம்பிடம் வினவிய போது, அது போலி செய்தி வகைப்பட்டது (Fake News)) என்று கூறிவிட்டார் மனிதர். இதனுடன் நிறுத்தாமல், தனது முதலாவது தாக்குதலை விட, தனது இரண்டாம் தாக்குதலை, தீவிரப்படுத்தினார் ட்ரம்ப்.
அவரது, வழமையான “ஈரானிய நாகரிகத்தை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற கூற்று உண்மையாகி விடுமோ என்று பலரும் பயந்திருந்த போது, ஈரானிய பதில் தாக்குதல்களும் அனேகமாக துவங்கி விட்டன. தொடர்ந்து, போர் நிறுத்தத்தில் இருந்து தான் வாபஸ் பெறுவதாகவும் இன்று ஈரான் அறிவித்து முடித்து விட்டது.
பஹ்ரேன், குவைத், கட்டார், சவுதி ஆகிய நாடுகளின், அமெரிக்க தளங்களின் மீது, அதி உக்கிரமான தாக்குதல்களை நடத்திய ஈரான், இவ்வகையில் புதிதாய் இன்று ஜோர்டனையும் (பிந்திய செய்திகளின் பிரகாரம், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது) உள்ளடக்கி கொண்டுள்ளது.

* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
முன்னுரை
மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் உள்ளன. அவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்றுதொடர்பு கொண்டுதான் வலம் வர இயலுமே, தவிர்ந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அடையும். கம்பராமாயணத்தில் சுற்றுப்புறசூழலியல் குறித்து நாம் ஆராய்வோம்.
நான்கு வகையான சுற்றுச்சூழல் மாசுபாடு
நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய நான்கும் மாசுபாடு அடைகிறது.
1.நிலமாசுபாடு.
2.நீர்மாசுபாடு.
3.காற்று மாசுபாடு.
4.ஆகாய மாசுபாடு.
சுற்றுச்சூழல்-விளக்கம்
சுற்றுச்சூழல் என்பது பூமியில் உள்ள இயற்கை வளங்கள், உயிரனங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளப்படுகின்றது.

தத்துவார்த்த அறிமுக உரை (Comprehensive Introduction)
1. நுழைவாயில்: உலக இலக்கியப் பரப்பில் எதிர்ப்பின் அழகியல் (The Aesthetics of Resistance)
இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக இலக்கியப் பரப்பில், ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதை மொழி என்பது வெறும் சொற்களின் சேர்க்கையாக இருக்கவில்லை. அது வரலாற்றின் சிதைவுகளுக்குள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அசைக்க முடியாத கூட்டு நனவிலியாக (Collective Unconscious) விளங்கியது. லத்தீன் அமெரிக்காவின் பப்லோ நெருடா, கியூபாவின் நிக்கோலஸ் கியென், ஆப்பிரிக்காவின் லியோபோல்ட் செங்கோர் மற்றும் நுகுகி வா தியாங்கோ போன்ற ஆளுமைகளின் வரிசையில், மத்திய கிழக்கின் ஆகப் பெரும் தத்துவார்த்தக் குரலாக ஒலிப்பவர் பலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட (Internally Displaced) ஒரு சமூகத்தின் இருத்தலியல் துயரத்தை, உலகளாவிய மானுடப் பொதுத்தளத்திற்கு நகர்த்திய பெருமை தர்வீஷுக்குரியது. கவிதை என்பது அழகியல் இன்பம் தரும் ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; மாறாக, அது காலனிய மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் மேலாதிக்கச் சொல்லாடல்களை (Hegemonic Discourses) உடைத்தெறியும் ஒரு 'பொருளாயுதக் காரணி' (Material Weapon) என்பதை அவரது ஒட்டுமொத்த கவித்துவத் தடமும் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது.
2. தமிழ் அறிவுச்சூழலும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கொடையும் (The Tamil Intellectual Context)
தமிழ் இலக்கியச் சூழல், குறிப்பாக ஈழத்து இலக்கியப் பரப்பு, தசாப்த காலங்களாகப் போர் மற்றும் இடப்பெயர்வின் வலிகளைத் தன் சொந்தக் குருதியில் அனுபவித்த ஒன்று. இத்தகையதொரு சூழலில், பலஸ்தீனத்தின் ஆகப் பெரும் எதிர்ப்புக் குரலான தர்வீஷை தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகம் செய்ததன் மூலம், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தை (Cultural Exchange) நிகழ்த்தியுள்ளார்.

கட்டுரையாளர் - - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
முன்னுரை
இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது. அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.
ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்' தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள்.
இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 33 வருடங்களாக கனடாவில் இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்தகால சாதனைகளுக்காக ‘பிகைன்ட் மீ இன்ரநாசனல் மீடியாவால்’ 2026 ஆம் ஆண்டுக்கான சாதனை விருதான ‘லெஜன்ட் அன்ட் ஐகோன்’ (டுநுபுநுNனு’ளு ரூ ஐஊழுNளு) விருது கொடுத்துப் பாராட்டப் பெற்றது. இந்த நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 20-6-2026 ஆம் ஆண்டு, ரொறன்ரோ மக்னிக்கல் வீதியில் உள்ள பிரைட்டன் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட சாதனையாளர்கள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான சிறப்பு விருது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு வழங்கப்பெற்றது.


“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.
கிட்டத்தட்ட ஐந்து வருட காலத்தின் பின் இவனுடன் மீண்டும் பயணிக்கின்றேன்.
இந்த நான்கைந்து வருடங்களில் இவனில் எவ்வித மாற்றத்தையும் கண்டேனில்லை. அண்மையில் கூட முல்லை நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று கண்ணீர் வடித்து விட்டு வந்திருந்தான்: “இடத்தை விட்டு வெளியே வரவே மிகுந்த கஷ்டப்பட்டு போனேன். இரண்டு மணி நேரம் குடும்பத்தாருடன் ஆட்டோவில்… அவ்வளவு சனம் அப்பிப்போய் இருந்தது”. கேட்டிருந்தேன்: “மற்ற நினைவேந்தல் தினங்களுக்கு நீங்கள் செல்வதில்லையா?
“இல்லை. மாவீரர் நாள்தான் என்னை உலுக்கி பிடிக்கும் தினம். எனது அருமை தோழர்கள் - இதயத்தை வருடும் எனது நண்பர்கள் - தங்கள் இன் உயிரை வந்த இந்த பெருநாள் - அடடா எப்படிப்பட்ட தோழர்கள்! எப்படிப்பட்ட வாழ்க்கை அது…”.
ஆனால் ‘காணிக்குச் சென்று வருவோமா’ என்பதே அவனது முதல் கோரிக்கையானது. ஒருவேளை தான் மிக அண்மையில் வாங்கி போட்டிருந்த அந்தக் காணியை எனக்குக் காட்ட அவன் ஆசைப்பட்டிருக்க கூடும் - அல்லது அவனுக்கே அங்கே செல்ல வேண்டிய ஒரு தேவையும் எழுந்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தும் நான் சம்பந்தப்படாதது. ஆனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். ‘காட்டு தொங்கல்’ என்ற பதத்தால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.
‘கடல் குளிப்பு’ என்று ஏற்கனவே நிச்சயித்திருந்த அன்றைய தினத்தை மாற்றி இவனுடன் புறப்பட்டேன்.

அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.
அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

[வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி. இப்பாடலை யு டியூப்பில் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4 ' வ.ந.கிரிதரன் பாடல்கள் ' சானலை 'Subscribe' செய்வதன் மூலம் உங்கள் வாசலுக்குப் புதிய பாடல்கள் விரைவாக வந்து சேரும். உங்கள் ஆதரவு 'சான'லின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருக்கும்.]
சக்தியும் , பொருளும்!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!
மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின் பவள விழா நடைபெற்ற வேளையில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
மாவை நித்தியானந்தன், மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதும், கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றிருப்பவர். அண்மையில் மாவை நித்தியானந்தன் வெளியிட்டிருக்கும் இரண்டு நாடக நூல்களப்பற்றி எழுதும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது.
இனிச்சரிவராது, ஐயா லெக்சன் கேட்கிறார் ஆகிய இரண்டு நூல்களும் மாவை நித்தியின் புதிய வரவுகள். ஏற்கனவே மேடையேற்றப்பட்ட நாடகங்கள்தான் இவை இரண்டும். நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள், படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள் என இரண்டு வகை இருப்பதாக அறிஞர் மு. வரதராசன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். மாவை நித்தியின் நாடகங்களும் அத்தகையன.
ஐயா லெக்சன் கேட்கிறார்
ஐயா லெக்சன் கேட்கிறார் நாடகம் 1973 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில், கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் விழா நடந்தவேளையில் அங்கு மேடையேறியது. அன்று அங்கே பார்த்த இந்த நாடகத்தை பலவருடங்களுக்குப்பின்னர் மெல்பனிலும் பார்த்திருக்கின்றேன்.
ஒரே நாடகப்பிரதியில் இரண்டு நாடுகளிலும் வேறு வேறு கலைஞர்கள் பங்கேற்ற நாடகம் இது.

படுக்கையறையின் மெல்லிய வெளிச்சத்தில் ரேகா தன் மகன் விஷால் பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். திடீரென அவளது தூக்கம் சற்றே கலைந்தது. விழித்தவள் தன் மகனைப் பார்த்தாள்; அவளுக்குள் பதட்டம் எழுந்தது. விஷால் தன் உள்ளங்கையை உயர்த்தி, வலது ஆள்காட்டி விரலால் தொடர்ந்து மேல்நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தான். இதைக் கவனித்த ரேகா, அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள். விஷால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.
பதறிப் போன ரேகா அவனை உலுக்கினாள்.
“கண்ணா விஷால், எழுந்திரு.”
“என்ன ஆச்சு உனக்கு?”
“டேய், கண்ணை முழி,” என்று அவனிடம் இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, விஷால் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.
“என்னம்மா… என்ன ஆச்சு? ஏன் என்னை எழுப்பினீங்க?” என்றான்.
“கண்ணு, நீ தூக்கத்துல என்ன பண்றேன்னு தெரிஞ்சுதா?”
“ஏம்மா, தூக்கத்துல அப்படி என்ன பண்ணியிருப்பேன்? நல்லா தூங்கியிருப்பேன்,” என்றான்.
“இல்லடா விஷால், நீ தூங்கியிருந்தா நான் ஏன் உன்னை எழுப்பப் போறேன்? நீ தூங்கு, காலையில பேசிக்கலாம். உங்க அப்பாவும் ஊருக்கு போனவரு; காலையில வந்துடுவாரு. நீ தண்ணி குடிச்சிட்டு படு,” என்றாள் ரேகா.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.
மறைமலை அடிகள் அவர்களையும், இராஜராஜ சோழனையும் முதன்மைப்படுத்தியிருந்த நிகழ்ந்த இம்மாநாட்டில், ‘சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்’ என்ற நிகழ்ச்சியுடன் என் முதல் நாள் ஆரம்பமானது. (துவக்கமா, தொடக்கமா என்ற ஆய்வுக்குள் செல்வதற்கு நான் விரும்பவில்லை.) நிகழ்ச்சியை ஆரம்பித்துப் பேசிய சுபா காரைக்குடி அவர்களினதும், தொகுத்தளித்திருந்த அருள்ஜோதி சுப்பிரமணியம் அவர்களினதும் தமிழும், சொற்கோர்வைகளும் மிகவும் அழகானவையாக இருந்தன. புதுமைப் பித்தனின் கதைகளைப் பற்றிப் பேசிய பெருந்தேவி அவர்களின் பேச்சு, அந்தக் கதைகளை மீளவும் வாசிக்கவேண்டுமென்ற தூண்டலைத் தரும் சிறப்பான பேச்சாக அமைந்திருந்தது. நகைச்சுவை பற்றிப் பேசிய சாம்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் நகைச்சுவையானவையாக எனக்கிருக்காததால், இலக்கியத் தோட்ட நிகழ்வொன்றில் அவர் பேசிய பேச்சை ரசித்ததுபோல, அதை என்னால் ரசிக்க முடியவில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் ஏன் போரைப்பற்றி மீளமீள எழுதுகிறார்கள் என்பது பற்றி தமிழ்நதி அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார். (நான் அங்கிருந்ததாலோ அல்லது என் எழுத்துகளை வாசிக்காததாலோ அப்படி எழுதுபவர்களின் பெயர்களில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார். போரின் கொடுமையை நேரில் பார்க்காதபடியாலும், வேறு சில காரணங்களாலும் நான் போரைப் பற்றி எழுதுவதில்லை என்பதையும் இதில் சொல்லவேண்டும்.) அத்துடன் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற பிரிவில், ஈழத்திலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருப்பவர்களின் படைப்புகளும் அடங்குவதே சரியானது என்றார். ரொறன்ரோவில் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த தமிழ்நதியின் இரு நூல்களை நியூஜேர்சியில் வைத்துப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.