[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]

''அருள், இந்த​ உக்ரேன் பிரச்சனை...என்ன​, ஒன்றுமே விளங்க​ மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே  சபேஷ்,  கேட்க கூடி இருந்த​ உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய​ தொழில்சங்க​ அமைப்பில் இருந்தவர்.   அவனுடைய​ காலத்தில்  அவர் ஒன்றாய்  ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த​ பிறகு   எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு ,  பல  வருசங்கள் ஓடி விட்டன​ . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும்​ முயல்வதில்லை .  

அன்று , மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக​ தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற​ போது எதேச்சையாக​ வந்த​ குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர​ '' அண்ணே இன்னொரு தேனீர் '' என்று அவனை வரவேற்றார்கள் . '' எப்படியடா இருக்கிறீர்கள் ? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப​ சந்தோசமடா ,எங்கடா இங்கே? ''எனக் கேட்க​ ''எங்கட​ இடத்தை ஒருக்கா ​எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என​ நினைக்கிற​ போது நீ வருகிறாய்'' என்று உமா கூறினான் . '' டேய் ,கடைசி வரையில்  போகாதீங்கடா , பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள் . ''என்று எச்சரித்தான் . பக்கத்திலே தான் திரிந்த​ நிலம் , உயிர்  கிராமம் இருக்கிறது . 'போக​ முடியவில்லை என்ற​ மனவருத்தம் ' உள்ளே வெகுவாக​ அரித்தது . '' உனக்கொன்றும் பிரச்சனை  இல்லையா குலம் ? ''என்று சபேஷன் கேட்டான் . '' நான்  கல்யாணம் கட்டியவன் . சங்க​  வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம்​ . குழுவைச் சேர்ந்தவனில்லை , தொழில்ச்சங்கம் வேற​ என்பது அவங்களுக்கு தெரியும் . தப்பித்திருக்கிறேன் '' என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான் .கிராமத்துத் தோழர்கள் ,'இவர்கள் கொழும்புக்கு  எப்பவோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ' என்றே பதிலளித்து வருகிறார்கள் . சாடைமாடையாய்  தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை .ஒருமுறை பயணித்த​ பஸ் வயலில் இறங்கிய​ போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட​ காயத்திற்க்கு இழை பிடித்ததுடன் ,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர​​ 'தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி , உடையையும் ​மாற்றி விட்டிருந்தான் . முன்பெல்லாம் யூனிபோர்ம் போல​ ஒரே சாரத்துடன் திரிந்தவன் . தாடியும் , சாரமுமே   அவன் அடையாளங்கள் .கல்யாணமாகிய பின் முதலில்  செய்தது தாடியை வழித்தது தான் .மாறிய​  முகம் .மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான் . தெரிந்தவர் கூட​ மட்டுக்கட்டுவது சிரமம் தான் .

தொண்ணூறுகளிலே கைதானவர்...  வதைப்பட்டு வானுலகம்  போய் விட்டதாக​ செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன​  . 'தாமரை'யில்  பெரும்பாலும் கொலையுண்டு போனவர்கள் பொறுப்பாளர்கள் தாம் . அன்று அரசியலை படிக்க ..மதிப்பாய் பொறுப்பாளர்  என ஒவ்வொருவரையும்  நியமிச்சது இப்படி பாம்பாக மாறும் என்று​  எவருக்குத் தெரியும் .  இவன் சேர்ந்த​ சமயம் ரவி , பொறுப்பாளர் . அவர்   ...குழுவில் பாண்டி  சேர்ந்திருந்தான் .  சமூகச்சூழலில் ஐந்தாம்  வகுப்பு கூட​ படியாத அவன்   சண்டை சச்சரவு என​ கிராமத்தில் திரிந்து கொண்டிருந்தவன் . வேலு , பாண்டியின்  நண்பன் . சபேஷன்  பாண்டி மூலமாக​வே தோழராக​ சேர்ந்தவன்.   அவன் பெற்றோர் கிராமத்தில் மதிப்பானவர்கள் . அவர்களில் கூடுதலாக​ படித்தவன் சபேஷன் . அவனை கிராமத்தாருக்கும்  தெரியும் . ரவி, ஓரளவு பாண்டியை நேர்ப்படுத்தி இருந்தான் . மும்மூர்த்திகளாகவே​ திரிந்தார்கள் . பிறகு , சபேஷன் பொறுப்பாளரான​ போது பாண்டி வலதுகையாக​ மாறி விட்டான் . அவனுடைய​ தாய்க்கு ஏனோ ...' சபேஷன் தான் தன் பிள்ளையை  திருத்தினவன் என்ற​ நினைப்பு '.எவ்வளவு பாசத்தைப் பொழிந்தார் .  அன்றைய​ நிலமை...​ பாதுகாப்பாகவே இருந்தது . அது  மெல்ல​ மெல்ல​ எதிராக​ திரும்பிப் போனது . அவன் கொழும்புக்குப் போனதுபலருக்கு தெரியும் . திரும்பி வந்தது , யாழ்ப்பாணத்திலே ...இருப்பது தெரியாது .

இந்த​ கட்டுக்கு வார​ முன்னாள் 'கழுகு'க்கிழம் ஒன்று .'' டேய் , உவங்களில் யாரை  போய்க் கேட்டாலும் பொறுப்பு , பொறுப்பு என்கிற.. நாய்ப்பயல்கள் . ​ ஒருத்தன்  கூட தோழன் கிடையாது  ''என்று  ...சொல்லி கெக்கலிட்டுச் சிரிக்கும். கலை இலக்கியத்துக்கு ...பொறுப்பு , விவசாயத்திற்கு ஒன்று , கூட்டுப்பண்ணையை நோக்கி தொழிற்ச்சங்களுடன் இயங்கிறதுக்கு ஒன்று ...என​ புது ரத்தம் பாய்ச்சி ​ இயங்கியும் ,'தாக்கிறபோது புயலாகத் தான் தாக்குவோம் ' எனத் தயார்படுத்திய​  குழுவை உள்பிரச்சனைகளே சாப்பிட்டு விடும் போலாகி போனது .குழப்பத்தின்  வித்துக்களில் ஒன்று  'கழுகு'  . குழுவின் நிலை , வெளியில் இயங்கிற​ அரசியல் கட்சியைப் போன்றதா? என்ன​  ?. குழப்பத்தை நீக்க​ உள்ளே இருந்து  போராட​ வேண்டும் . இவர்களின் தலைவர்களை 'கழுகு'  தாறுமாறக​  அழித்து   வந்தது ஒருபுறம்  சிப்பிலி ஆட்டியது .​ நம்பிக்கையீனமும் வளர்ந்தது . அதற்கு​ ரஸ்யப்புரட்சிக்கட்சியைப் போல​  ... கட்டியதை இடைநடுவே விட்டிட்டு ஓடிப் போய் விட​ முடியுமா ... குழப்பத்தை நீக்க​ உள்ளேயும் போராட​ வேண்டிய​ நிலை .  கனவுகள் அழிபடவேக் கூடாது . அழிக்கப்பட​ விட​ மாட்டோம் என்று எத்தனை உள்ளங்கள் இரத்தக்கண்ணீர் வடித்தன​ ​ . வெறுமனே அழிக்கப்பட்டுத் தான்  போய் விடுவோமெனத்​ தெரியுமா ! . இது தான் விடுதலைப் பாதையா , இல்லை விதியா ? . 'கழுகு' , குழுவின் கனவை எரித்திருக்கிறது  . ஈழவரசு விடுதலையை அழித்திருக்கிறது .

''உவங்கள் உவங்களை  தான் அழிச்சாங்கள் '' என்று கூறி சிரிக்கிற​ எதிரிக்கு  தன் , கொடூரங்களை ...மூன்றாம் தரத்திற்கு தள்ளி விடுற​ வஞ்சகமும் காவி கிட​க்கிறது . கிட்லர் காலத்து இருகோடுத் தத்துவம் . ஒரு கோட்டை பெரிசாக்கி சொல்லிக் கொண்டு வர​ மற்றது சிறிசாகி விடுகிறது . . இப்ப​ , அமெரிக்காவும் அல்லைக்கைகளும் சேர்ந்து பயன்படுத்தியும் வருகின்றன​ .1008 , 9/11 களை இஸ்ரேல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது . ஆனால் பழையது... தான் என்றும் 'கொடூர​ தாக்குதல் !' . இதில் , எங்கே ஈழத்தமிழரை உலகம்  கணக்கில் எடுக்கப் போகிறது . அஞ்சலி செய்ய​லாம் . வலிந்தவன் கையில் மயிர் மண்ணாங்கட்டி ...ஊடகம் ,  எல்லாம் சிக்குப்பட்டுக் கிடக்கிறது​ . ஏழை எப்பவும் ஏழை தான் . தமிழர் நிலத்தில் துறைமுகம் , விமான​ நிலையம் ...எங்கிலும் காலூன்றி நிற்கும் படைத்தரப்பினர் .  சுதந்திரம் மருந்துக்கு  கூட இல்லை . பாலாஸ்தீனப் பிரச்சனை தீர்ந்தால் தான்  ஈழபிரச்சனையும் ஒருவேளை தீருமோ ?.

 உக்ரேனைப் போல​ இங்கேயும் அரச​ தலைவர்கள் கிடையாது . அரசியல்வாதி தொட்டு எல்லாரும் ​ராணுவ படைதளபதிககளாக தான் இருக்கிறார்கள் . தற்போதைய தொப்பிக்குள்ள​  கொஞ்சம் கருணை ...காணப்படுகிறது .  வேற​ புதிதாய் இல்லை . பள்ளி விசேங்களிலும் கூட​ தமிழ் அரசியல் தலைவர்கள் போல​ படைத்தரப்பே  எலிப்படை , பூனைப்படையுடன் விஜயம் செய்கிறது''சிவில் உடையில் வா'' என்று அவையிடம் சொல்லக் கூட​ நாதி இல்லை .

இப்படியான​  வாழ்வு எவ்வளவு காலத்திற்கு என்று  கரைகிற​ கவிஞர்களும் சிறுத்துப் போய் .... பெடியள்கள் கட்டெறுப்பாய்யாகி , பெடியகளே இல்லை என்றாகி​ ஊர்களில் எல்லாம் பேய்கள் அடித்துப் பிடித்து வாழ்கின்றன .​  ​ கிராமங்கள் ...தொட்டு எல்லாமே இருண்டு போய்​ கிடக்கின்றன​ . இப்ப​ குலத்தின் மகள் ​  கூட பேத்தியைப் பெற்றிருக்கும். குலத்தால் தப்பியவர்கள் . இல்லா விட்டால்  இந்த​ மண்ணை முத்தமிட்டவர்களாகி மண்ணுக்குக் கீழே எலும்புக்கூடாகியும் ​ இருப்பார்கள் . சபேஷன்ர​ மனைவியின் தங்கச்சியை நாகேஷ் கட்டியிருக்கிறான் . மச்சான் , தூரத்து உறவு என புதிய​ உறவுகள்  வாழ்கிறது .

''மச்சினிச்சி வந்த​ நேரம் மண் மணக்கிறது 
மனசுக்குள்ள​ பஞ்சவர்ண​ கிளி பறக்கிறது
நெஞ்சுக்குள்ள​ ஊஞ்சல் ஒன்றைக் கட்டி வைச்சேன் ஆட்டம் ஆட​ 
தேவதையைக் கூட்டி வாங்க​ வாசல் தோறும் கோலம் போட​ ...! '' என்று...

சந்தோசமாய் பாடிக் களிக்கிற​ இயல்பான​ பழைய​ வாழ்க்கை   எல்லாம் எமக்கு  எப்ப​ வரப் போகிறதோ , கிடைக்கவே​ மாட்டாதா ? .  . அவனைப் பார்த்து மனிசி , பிள்ளைகள் அழுது வடிகிறதும் ..சூழ​ அழுது வடியும் முகங்களும் . அவன் நடை பிணமாகி விட்டான் .

அவர்களின் ​ பனைவளம் கொழித்த​ பழைய யாழ்ப்பாணத்தை நினைத்துப் பார்த்து​ ஏக்கமுற வைக்கிறது .'பஞ்சவர்ண​ கிளிகள் பறக்கிறது' கூட​ அருகிப் போய் விட்ட​து ..' போர் 'மரங்களுக்குக் கூட​ எதிரானது. தமிழர் நிலங்களில் மூன்றில் ஒரு பனைமரங்களையும் அல்லவா அழித்து விட்டது . அதில் உறைந்த​ பஞ்சவர்ணக் கிளிக் கூட்டங்களும் ​  மறைந்து விட்டன . மரம் , பறவைகள் என்ன​ பாவம் செய்தன​ ?

மரமும் கூட​  உயிரினம் தான் . காதைக் கிழிக்கும் சத்தம் , உடலைக் கிழிக்கும் சன்னம் .  அவற்றையும் அதிகமாக​ பாதிக்க​ வைக்கின்றன​ . ஈழம் பல் காலனியாதிக்கம்  நிலவிய நாடு என்பது உண்மை தான் . போத்துக்கீசர் காலத்தில் சிலுவைகள் முளைத்தன​ . இப்ப​ , சிலைகள் முளைக்கின்றன​ .​ தடுக்க​ முடியாது முளைக்கிறதுகள்​ களைகளாக​ வளர்கின்றன​​ . இனத்துவேஷங்களைக் காவிக்கிடக்கும் அமைச்சுக்களாலும்  , தோரணங்களாலும் தமிழ்த்தாயகம் மூடிக்  கிடக்கிறது . செயலிழந்த​ நீதித்துறைகள் . எப்படி தடுத்து ...நிறுத்தப் போகிறார்கள் . குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தே ஆக​ வேண்டும் .பாலாஸ்தீனத்தில் , இஸ்ரேல் தலைவரை மட்டுமில்லை அமெரிக்கத்தலைவரையும் கூட​ போர்க்குற்றவாளி என்றே அறிவித்திருக்க​ வேண்டும் . அல்லைக்கைகள் காலம் முழுதும் மெளனித்துக் கொண்டே இருப்பர் . ஈழத்திலும் தொடரும் மெளன​ விரதம் .  

கையாலாகாத்தனம் தான் தற்போதைய​ அரசை  அதிகமாக  எதிர் பார்க்க​ வைக்கிறது .  

தொடக்கக் காலத்தில் சேர் . பொன் . இராமநாதன் , வடக்கு  கிழக்கில்   கடல்சார் தொழில் நுட்பக்   கல்லூரிகள் கட்டாயம் நிறுவப் பட​ வேண்டும் 'என்ற​ கோரிக்கையை  முன் வைத்தார் .வடக்கு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட​ தீபகற்பம்(பெனிசுலா). கிழக்கு கடலோரமாக​ அமைந்த​ பிரதேசங்கள் . அவசியத்தை உணர்ந்து வைக்கப்பட்ட​ கோரிக்கை . அன்று உயிர்த்த​ புறக்கணிப்பு இப்பவும் வாழ்கிறது . கல்வி ,தொழில் கலாச்சார​ உரிமைகளிற்குள்  வருகிறது . ஏன் புரிய​ மாட்டேன் என்கிறது . கெளரவமா , திமிரா ,  அல்லது உடலோடு ஒட்டிப் பிறந்ததுவோ..?.எல்லா தேரர்களையும் சுட்டவில்லை .சிலர் கலாச்சார​ உரிமைகளுக்காக​ குரல் கொடுத்திருக்கிறார்கள் . எழுத்தாளர் தேவகாந்தன் நாவல்களில் வருகிற​ ...வணக்கத்திர்குரியவர்களிடம் சபேஷன் கூட​ ஆசி பெற​ விரும்பியிருக்கிறான். தற்போதைய​ அரசு ' நாம் ஈழவர்' என்று கூறுகிறது . ஆனால் வெளியில் இருக்கிற​ எதிர்ப்புக் குரல்களை ...எப்படி ஓரணிக்குள் கொண்டு வரப் போகிறார்கள் . பேசாமல் இவர்களும் வெளியணியோடு சேர்ந்து விட்டால் தமிழர்களுக்கும் வீணே கனவுகளை வளர்க்க​ வேண்டியுமிருக்காது .

அவர்களுடைய​ அரசியல் வேதப்புத்தகத்தில் தமிழர்களுக்கு'கலாச்சார​ உரிமைகளும்  அளிக்கப்பட​  கூடாது என்கிற​ பிடிவாதமும் நிலவுகிறது  . மாகாணவரசு இயங்காமல் விட்டால்   கலாச்சார​ உரிமைகளும்... இல்லை .  ஒற்றை ஆட்சியாய்​ குறுக்கிக் கொண்டு ...கல்லூரியை  கட்டுப்பெத்தையில்  கொண்டு போய் நிறுவியது .அதற்கு பின்னால் காலனி​ மேய்ப்ப்பாளரின் கட்டளையும் கிடக்கலாம் .இனப்படுகொலை தொட்டு , எல்லா விவாகாரங்களுமே நாடுகளில் இரகசியமாக​ கூடி கூடி திட்டமிட்டே   ​ நிறைவேற்றப்பட்டு  வருகின்றன​ .

முடிவில்​ , 'நான் அவனில்லை' ​ சுத்தி விடப்படுகிறது​.புகை   இருந்தால் தானே தேவதூதர்கள் இறங்கிவருவார்கள் . பிரச்சனைகளே   இல்லாமல் ஆக்க​ ... புதிய​ பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டுமல்லவா . மேல்மக்கள் , பிறகு , தம் மேன்நிலையை எப்படி  தக்க​ வைத்துக் கொள்கிற​தாம் . 'அரசியல் விசம் ' எல்லாத்திலும்   பரவியிருக்கிறது .

நல்லபடியாக இந்தியா  ​ ' சமாதான​ ஒப்பந்தம் ' தூக்கலாக​      எழுதியது . சமாதான​ அவைகள் அதற்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றி வைத்திருக்கலாம் . இந்தியா எழுதியதாலே... அல்லைக்கைகளுக்கு அமுலாக்க​​ சம்மதம்​ இல்லை . நிறைவேற்றப்பட்டால் இவர்களுக்கு  ஏது மரியாதை  . உக்ரேன் தலைவர் போல​ ஒருத்தரும் இந்தியாவிலும் இல்லை . கூடவே கூடாது . பதிலுக்கு  இவர்கள் தயாரிக்கிற​ தடைசெய்யப்பட்ட​ ஆயுதம் ஈறாக...மற்றயவைகளையும் கொண்டு போய் இறக்கினார்கள்  . அமெரிக்கத் தயாரிப்பான​  500 ,  1000 இறாத்தல் குண்டுகள் எல்லாம் போரில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன​ . முதலாளித்துவ​ நாடுகள் பச்சைத்தண்ணீயிலே பலகாரம் சுடுறவை. தடையாக​ நின்ற​   இந்தியத்தலைவர் கொல்லப்படுகிறார் .

ஒரு கல்லூரி நிறுவது செலவுடையது  தான் . சுயாதீன​ நிதி நிலமைகள் இருந்திருந்தாலும் தமிழர்கள் மரையன் கல்லூரிகளை   எப்படியாவது நிறுவி விட்டிருப்பார்கள் . கல்லூரியை முறைசார் வழியிலே மட்டும் தான்  நிறுவ​ வேண்டும் என்பதில்லை . தொழிற்சங்க​ மூலமும் கூட​ ஏற்படுத்திக் கொள்ளலாம் . கலாச்சார​ உரிமைகளுக்குள்ளளேயே வருகின்றன​ . இவர்களுக்​கு ​கட்டளை  இடுவது பிரிட்டனாக கிடக்கிறதே ...எல்லாத்திற்குமே தடைகள்  . ஈழம் தொடர்ந்தும் ஒரு நவ​காலனி நாடாகவே  நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது . ஈழவரசு வெறும் பொம்மை  அரசு .  முட்டாள் அரசுக்கு இனத்துவேஷம் என்ற​ பையித்தியம் வேற​ பிடித்திருக்கிறது . விதி இவர்களுகெதிராக...​ ​   விளையாடுகிறது. நாடு , படு பிற்போக்குத்தனத்தில்  சிக்கிக் கிடக்கிறது . அன்றே பிரிட்டனை விட்டு  உண்மையாக விலகி இருந்தால் இன்று ஈழம் ​  சிறந்து நாடாக​ விளங்கி இருக்கும் . இன்றைய​ இனப்படுகொலையைச்  செய்து ஊனத்தை , ஊத்தையை சுமந்து கிடக்காது .  இயற்கையை அழித்தும் , மா(சு)சாகிப் போயும் கீழ்மை நிலை எய்தி கிடக்காது .  

தமிழர்களை உள்ளேயும் சரி , வெளியேயும் சரி 'அகதி 'எனக்கூறுவது சரியாகப் படவில்லை .அது ஒன்றும் அசரிரீயும் கிடையாது .அக்குரல் ' பிடுங்கி எறியப்பட்டவர்கள்' என்பதை சதா குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது​  . எந்த​ நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் இணங்கிப் போக​ வேண்டும் என்ற​ கட்டாயமும்  எமக்கில்லை  .  இடதுகுரல்களுடன் சேர்ந்து ஒலிப்பதே புத்திசாலித்தனமாக​ இருக்கும் எனத் தோன்றுகிறது​  . ஆனால் பல​ முதலாளித்துவ​ நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது . கிடையாது . கட்சிகள் இல்லாவிட்டால் என்ன , தடையற்ற  நாடுகளிலே   ஏற்படுத்திக் கொள்கிறது​ .  அத்தகையக் கட்சிகளை ஏற்படுத்தி குரல் எழுப்பி வரல்​ வேண்டும் . சுயம் இழந்த​ மக்கள் எப்படியும் தம்மை ஒரு கட்சியுடனே  இனம் காட்டிக் கொள்ள முடியும் .

இப்ப, இவர்கள்   யாழ்ப்பாணத்திற்கு  புதிதாய்  தெரிந்தவர்கள்  . பலவருசம் ஓடி விட்டாலும் ...புதுமுகங்கள் தாம் . சனப்புழக்கம் குறைந்து விட்ட​ நிலையிலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மந்தித்துப் போய் கிடக்கிறது . ஏற்கனவே யாழ்ப்பாணம் ஒரு நகரம் . சொந்தக்காரரை விட​ வேற​ எவரையும் அறியும் அக்கறையின்மை கூடிய​ இடம் . இங்கே தொடர்மாடிக் கட்டங்கள் இல்லை . இருந்தால் அயலவருடன் கூட​ பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள​ மாட்டார்கள் . நகரச் சாயல்களும் அங்காங்கே காணப்படுகின்றன​ .தமிழர்கள் காணி , வேலிச் சண்டைக்கு வேறு பேர் போனவர்கள் . கிராமத்தில் பல​ ​ சாதிகள் இருந்தாலும் எல்லாரும் ..எல்லாரையுமே அறிந்திருப்பர் . கோயில் , கல்யாணவீடு ,செத்த​ வீட்டிலே மட்டுமே ...விலகலைப் பார்க்கலாம் . அது அன்று . இன்று ...எல்லாமே சிறுத்து... பேச்சுத்துணைக்கு... அயலவரும் இல்லையென்றால் பையித்தியமே பிடித்து விடும் நிலமை .

இன்றைய​ சுய​ விமர்சனத்தில் சாதியும் ....அலசப்படுகிறது . தென்னிலம் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சி செய்வதாகத் தெரிகிறது. அவர்களுடைய​ வேதப்புத்தகத்திலே கை வைக்க கூசுகிறவர்கள் . இந்த​ சாதிவேதப்புத்தகம் ஈழத்தமிழருடையதுமில்லை  . இதில் பேசுவது எந்தளவில் சரி எனப் புரியவில்லை .  தமிழ​ர்களால் அதில்  சீர்த்திருத்தங்களை மட்டுமே ஏற்படுத்த​ முடியும் . கணிசமாகவும் முன் சென்றிருக்கிறார்கள் தான் . . அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்காத... ...​ தென்னில​த்திற்கு அவ்வளவாக​  பேச உரிமையும் இல்லை . ஆனால் , எம் தரப்பில் வி ழிப்புணர்வை எற்படுத்த​​   உண்மையாக​  , பேசுவாராயின் ஏற்றுக் கொள்ளலாம் தான் .  அதை எப்படிக் கண்டு  பிடிப்பது ?  ...சட்டம் நீக்கப்படாதிருக்கும் நிலையில் போலிச் சாயம் பரவவே  செய்யும் .

'' அருள் அண்ணே ,இந்தப் போர்    , ரஸ்யப்போரா  இல்லை ரஸ்ய​ உக்ரேன் போரா ? புரியவில்லையே ? '' என்ற​ சபேசனின் கேள்வியும் , எல்லார் மனதிலும்  இருக்கவே செய்கிறது . கேட்டான் .

''டேய் , இப்படி பாருங்கடா , ஈழத்திலே ஒரு ஆட்சி கிடக்கிறது தானே . வெளிநாட்டுக்காரன் , இங்கே உள்ள​ ஒரு முறைசாரா குழுவொன்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி , ஸ்பிரிங் புரட்சியிலேயே செயற்கை நுண்னறிவை  பயன்படுத்தியோ இங்கிருக்கிற​ ஆட்சியை கவிழ்த்து தம்  சார்ப்பானவர்களையும்  புகுத்தி புதிய​ ஆட்சியை அமைத்து தேசீயம் பேசினால் எப்படி இருக்கும் ? ,  வடக்கு , கிழக்கிலே சிங்களத்தை  ஆட்சி மொழியா திணித்த​ போதே​ போதே நாம் இங்கே ஆயுதம் ஏந்திய​ இருக்க​ வேண்டும் . எம்மவர்க்கு அது தெரியவே தெரியாத​ பாடம் . தெற்கு இளைஞர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட​ பிறகே , நாமும் இவயளைப் போல​ போராடலாம் என்ற சிந்தனை வந்து ...ஆயுதங்களை ஏந்தினோம் .

உக்ரேனில், ரஸ்ய​ மொழி பேசுறவர்கள் எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறார்கள் . நம்மைப் போல​ கிரீமியாவில், தெற்கு , கிழக்கு மாகாணங்களில் தாயகமாக​ செரிந்தும்​ இருக்கிறார்கள் . சோவியயூனியனின் குடியரசாக​ இருந்த​ போது ரஸ்ய​ மொழியும் , உக்ரேன் மொழியுடன் ஆட்சி மொழியாக்கப்பட்டிருந்தது​ . பிறகு , தொன்னூறுகளில் சுயநிர்ணய​ உரிமை வழங்கப்பட்டு உக்ரேன் தனிநாடாகிய​ போதும் அரசியல் வேதப்புத்தகத்தில் மாற்றமே  இல்லை . இரண்டுமே ஆட்சி ...மொழி தான் . மொழி பிரச்சனையாகவும் இருக்கவில்லை , நாட்டிற்கு உபத்திரமாய் இருக்கவில்லை . பரந்துபட்ட​ மக்களின் ஜனநாயகப் பண்பாகவே ஒளிர்ந்து கொண்டிருந்தது . அனைவருக்கும் அது ''நம்நாடு உக்ரேன் , நாம் உக்ரேனியர் '' என்ற​ உணர்வை பதித்திருந்தது . தற்போது , ரஸ்யமொழி உக்ரேன் மொழியின் வளர்ச்சியை தடைப்படுத்திக் கொண்டிருக்கவில்லை . ஜார்காலம் , அதற்கு முந்திய​ காலத்தில் உக்ரேனே  என்ற  நாடே இருக்கவில்லை . ரஸ்ய​ மக்களும் அவ்வாட்சியால் நசுங்குண்டு போயே ....துயரப்பட்டவர்கள் . அந்நிலமையே புரட்சிக்கும் தள்ளியது .உக்ரேனியப்பகுதியில்  சோவியத் கட்டமைப்புக்களை ஏற்படுத்த தேவையாகவிருந்தது   அந்த​ வகையிலும் , பரந்து பட்ட​ குடிகளாலும் தற்போதைய​ நிலையில் ரஸ்யமொழியும் ஜனநாயகம் என்ற​ வரைபில் ஆட்சிமொழியில் இருக்க​ வேண்டிய​ அவசியம் இருந்தது . அமெரிக்காவும் , அல்லைக்கைகளும் பழைய​ மொழித் திணிப்பின் தொடர்ச்சியாக​ சோவியத் ஆட்சி தொடர்சியையும்​ கூறுகின்றன . அது உக்ரேன் போருக்காக​ சிண்டு முடியப்பட்ட​ செயற்கைப் பிரச்சாரம் .கனடாவின் சத்த அலைகள் ....கியூபெக்கையும் தாக்கியது . அதிகரித்திருந்தால்...அம்மாநிலம் பிரான்சுடன் போய் சேர்ந்து விடும் .   கணனித்திருடர்களாய் (சோசல்மீடியா வழியில்) ஊடுருவி , இவர்களின் ஆட்களும் கூட​ இறக்கப்பட்டு (பலவழிகளிலும் நிகழ்த்தலாம்)சோவியத் கால​ அடையாளங்களை , உடைத்து, சிலைகளை வீழ்த்தி...மத்திய​ கிழக்கில் நடத்தியது போல​ செயல்படுத்தியது . பார்வையில் உக்ரேனியரின் கிளர்ச்சி ,புரட்சி போன்ற​ வடிவம் . அரபு நாடுகளில் நடத்துவதை ரஸ்ய​ அயல் நாடுகளில் போய் நடத்தினால் சாயம் வெளுத்து விடும் எனத் தெரியாத​ பாப்பாகள் . ஜி8 நாடுகளிலிருந்து ரஸ்யாவை விலத்தியது ஆரம்பம் எனத்   தோன்றுகிறது.

கியூபெக் மாகாணத்திற்கு  ஆரம்பத்திலிருந்தே கலாச்சார​ உரிமை அளிக்கப்பட்டிருந்தது .

அது போதவில்லை என​ கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் .கனடா ,முன்னம் பிரெஞ்சுதேசம் .பிரான்சு தான்   முதல் காலனிப்படுத்தி இருந்தது . தமிழ் சிங்கள​ மோதல் , போர்கள் எல்லாம் கடந்தே ஆட்சி பறிக்கப்பட்டே  ஆங்கிலயரின் கீழ் வருக்கிறது . பிரான்ஸும் லண்டனைப் போல​ பெரிய​ ராட்ஸியம் . வரலாறு , ஆனைக்கொரு காலம் , பூனைக்கொரு காலம் என் ஏறி இறங்கிற​ ஒன்று தானே . இப்ப​ , லண்டன் ..பிரான்சுடன் மல்லுக்கட்ட​ விரும்பவில்லை .கனடாவில் கியூபெக் மாநிலத்திற்குள் நுழைகிற​ போது ....அதை நேரிலே நீங்களும்  பார்க்கலாம் .

ஐரோப்பிய​ நாடொன்றுக்குள்  நுழைகிற​ உணர்வையே முழுமையாகப் பெறுவீர்கள் . ஆங்கிலத்தை ...துப்பரிவாளர் போல​தான் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டே தேட​ வேண்டியிருக்கும் . சுத்தமாக​ வேற  உலகம் . தொலைக்காட்சி ,வானொலியிலும் அவ்வளவு எளிதாய் ...காதில் ஆங்கிலதேன் வந்து பாயாது . சில​ வரைபடம் ...ஆங்கில​ எழுத்தில் என்றிருக்கும் .அதை சொல்கிற​   உச்சரிக்கிற போது புரியவே புரியாது . பிரெஞ்சு உச்சரிப்பில் ...சில​ எழுத்துக்கள் மாயம் . மெளனித்து விட்டிருக்கும் . இரண்டுக்குமிங்கு குத்துச் சண்டை இல்லை .பகையும் இல்லை . கலாச்சார​ உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது . அதை  கியூபெக்கர் விட்டுக் கொடுக்க விரும்புவதேயில்லை .   வடக்கு ,கிழக்கில் '' எமக்கு இப்படியான கலாச்சார​ உரிமைகளாவது கிடைக்காதா ? ...''  என​ ஈழத்தமிழரை நிச்சியம் கேவவே வைத்து விடும் .பஞ்சிப்பட்டு ,பஞ்சிப்பட்டு 70களிலே தான் பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாக்க​  உடன்பட்டார்கள் .  கிள்ளுக்கீரைக் கணக்கில் பேசினால்​  மறுபடியும் சந்தேகம் எழத் தொடங்கி விடும் . அப்பர் ஏற்படுத்தியதை பையன் கெடுத்தான் என்றில்லாமல் ​ ஒரு இருள்மேகம் ...நல்லகாலத்திற்கு கலைந்து போனது .

அதற்குப்பிறகு வந்த​ பிரதமர் உக்ரேன் தலைவருடன் 108 சந்திப்புகள் , வரவேற்புகள் என்றெல்லாம் நடத்துவதில்லை .

இருந்தாலும் கனடா பிரிட்டனின் பிள்ளை   . அல்லைக்கைகளின் கூட்டு வேணும் , உக்ரேனை உசுப்ப​ சேவைகள் செய்யவும் வேண்டும் .  மாறுபடு சூழலில் சேர்ந்து இயங்கவும் வேண்டும் . அச்சமயங்களில் கனடா பிள்ளையாய் மட்டுமே நடக்கும் .மனித​ உரிமை நாடாக​ ...இருக்காது . ரயில் தடம் புரண்டும்  ஓடுகிறதும்  இல்லையா. அமெரிக்கன் வெறும் தண்ணீயிலே காரை ஓட்டி வர்த்தகம் செய்பவன் , செய்விப்பவன் .கனவானான பிரான்ஸே ,சுதந்திரம் ,சுயநிர்ணயம் ,சுயாட்சை பற்றி பேசினால்  ...தூக்கலாக​ இருக்கும் ! . அதற்கு பேச​ வைக்கப்பட்டிருக்கிறது .USSR கூட்டிலிருந்த  ஒன்றை பெயர்தெடுப்பது என்றால் ...லேசுபட்ட காரியமா , என்ன​ . 'கனடாப்பையன் ரிப்பன் வெட்டினார்'அவ்வளவு தான் என​...பகிடியாக அருளர் சொன்னார்  .

USSR ​ நாடுகள் உட்கட்சிப் போராட்டம் போல​வே பாதையை  எடுத்திருக்க​ வேண்டும்  .அல்லது இவை சுயமாக கூட்டாகி தம்மை சீர்படுத்த ​ முயன்றிருக்க​ வேண்டுமே தவிர​ ​ ,தெரிந்தே வேறொரு பம்மாத்து கூட்டணியில்...சேர போயிருக்கக் கூடாது. உக்ரேனில் , குறும் தேசீயவாதிகள் ஏற்கனவே இருந்தார்கள் . புரிகிறதா ...உக்ரேன் , இப்ப​ யார் கையில் விழுந்திருக்கிறது என்று பூடகமாக​ அருளர் பேசினார் . ஆங்கிலம் தெரியாதவரிடம் ...ஆங்கிலதில் பேசுவது போல​ இருந்தது . இன்று சார்ப்பு நிலையிலே தான் எல்லோரும் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.புனைந்தும் ...தொடர்கிறார்கள் .

. உக்ரேனில் ,கசாக்(கோசாக்) புல்வெளி மக்கள் ரஸ்யப்புரட்சியை பிடிக்காது ஜேர்மன் நாஜிகளுடன் தொடர்புபட்டும்  , போலாந்து , லித்துவேனியா, ஆஜார்பையான் ஆமிகளில் சேர்ந்தியங்கியும்  கணிசமாக​​ கிடக்கிறார்கள் .அவர்களின் ​ வாரிசினர் . நாஜியராகவும் இருக்கின்றனர். ஜேர்மனிய​ ஒட்டுக்கு இது தான் பெரும் காரணமாக​ இருக்க​ வேண்டும் . வரலாற்றிலே எந்தவொரு சமாதான​ வரைபையும் எழுதாத​ ஜேர்மனி , இந்தியாவைப் போல்​ மியும்ஸ் சமாதான​ வரைபை எழுத​ பிரான்சுடன் கிளம்பி போகிறது . இவர்களில் ஒரு பிரிவினர்​ சோவியத்யூனியன் படையிலும் வீரம் காட்டியும்  இருக்கிறார்கள் . 2ம் உலகப்போருக்கு பின் ஜோசப் ஸ்டாலின்  அந்த​படையமைப்பைக் கலைத்து விடுகிறார் . ஏன் ...ஏதும்  காரணம் இருக்கலாம் . இவர்களுக்கென கலாச்சாரமும் கிடக்கிறது . உக்ரேனில் 'இவர்களுக்கென​ ஒரு நாடு ' என்ற​ குறும் தேசியக் கனவை வளர்த்து வருபவர்கள் . அல்லக்கைகளால் இவர்களின் அசோவ் குழு  உக்ரேனின் கண்ணியப்புரட்சிக்கு தெரியப்படுகிறது .அச்சமயம் குழு, ஈழக்குழுவைப் போல​ எல்லாத்திலும் வறுமையை எதிர் கொண்டிருந்தது . அதற்கு ,ஒரு யூத​ பணக்காரர்  நிதிவுதவி செய்கிறார் , பதிலுக்கு ஜெலன்ஸ்கி தலைவராக​ வர​ வேண்டும் என்கிற​ நிபந்தனை ஏதும்  இருந்திருக்க​ வேண்டும் . இஸ்ரேலின் நிழல் அங்கேயும் உள்ளது .உக்ரேன் அடிப்படையில் ரஸ்ய​ நாடு . எனவே , ஐரோப்பியருக்கு ரஸ்யாவே உடைத்து அழிப்பதிலும் ஒரு குரூர​ திருப்தி நிலவுகிறது. இன்றைய​ அமெரிக்க​ தலைவரின் வருகைக்குப் பிறகே ,  இமேஜை உடைத்தெறியிற​ மாதிரி ரஸ்யாவின் அடிகள் பலமாக​ அதிகரித்திருக்கின்றன​ .நொட்டிக் கொண்டிருந்த​ கிரிக்கெட் மச்சில் சிக்ஸர் அடிக்கிற சூடு பிடித்திருக்கிறது . அல்லைக்கைகள்( ஐரோப்பியர்)பந்து வீச்சாளர்களை மாத்தி , மாத்தி போட்டு முயன்று கொண்டே இருக்கிறார்கள் . இப்படி பேசுறது தவறில்லை . பாலாஸ்தீனப் படுகொலைகள் நடைபெறுகிற​ போது ..கால்பந்தாட்டப்போட்டி நடை பெறுகிறது , ஒலிம்பிக் நடை பெறுகிறது . ஈழக்கொலைகள் நடைபெறுகிற​ போது கிரிக்கெட்மச்சுக்கள் நதை பெற்றிருக்கும் .அருளர் உணர்ச்சியில் பேசிக் கொண்டே போகிறார்.

இப்ப​தான்  கனடாவில் இருமொழி பேசமுடியாதவர் தலைவராக​ வர​ முடியாதது இருக்கிறது . இது முக்கிய​ சாதனை சரத்து தான் .இருமொழி தெரிந்தவர் தான் ஈழத்திற்கு தலைவராக​ வர​ முடியும் என்றால் ... இந்த​ கர்மானந்தம் ஈழத்திற்கு சரிப்பட்டு வராது . சிங்களவருக்கு தமிழ் வராது . தமிழருக்கு சிங்களம்  கொஞ்சம் வருகிறது . ஆனால் ,  ஒரு தமிழர்  ஈழத்தலைவராக​  வர​ முடியாது .  கனடாஐயர் உக்ரேனில் போய் 'இந்த​ சரத்தை உடைக்கிறது' என்றால் தனக்கு மட்டும் தான் நன்மையை வைத்திருப்பார் ,மற்றவருக்கில்லை ...என்பது போல​ இல்லையா . இவர்கள் எல்லாம் பாலாஸ்தீன​ மக்களைக் கொல்வதில் வேற​ கூட்டாளிகள் . நாளை இந்தியா மீது இந்த​ கூட்டும்​ படை எடுக்கலாம் . சரித்திரம் மாறவில்லை . அப்படியேத் தான் கிடக்கிறது . ஜனநாயகப்புரட்சி எழுந்த​ போது அது பூத்தோட்டம் .மலர்கள் மலர்ந்து விட்டதாக​ நினைத்திருப்பது  வெறும்  கானல் .வெறும் மாயை .ஈழத்தில்  ' சிங்களம் 'மட்டுமே  என  எழுதப்பட்டிருக்கிறது . உக்ரேனின் புதிய​ அரசு , ரஸ்ய​ மொழியை அகற்றிய​  உடனேயே அங்கே கலகம்  வெடித்து விட்டது . கிரீமியா , தெற்கு மாகாணங்களும் பிரிவினைக் கேட்டு சர்வசன​ வாக்கெடுப்பில் இறங்கி விட்டன​ . ரஸ்யா , கிரீமியாவை மட்டும் ஏற்றுக்கொள்ள அந்த​ முறைசாரா உக்ரேன்  அரசை வெளிநாடுகள் வரிந்து கட்டிக் கொண்டு  அங்கீகரித்ததோடு  ஆயுதங்களையும் கணக்கின்றி வழங்க , அது மோசமாக​  தெற்கு மாகாணங்கள் மீது , இங்கே வடக்கு ,கிழக்கில் போரை தொடுத்தது போல​ வான் , தரை என​ வேற  தொடுத்து விட்டது .ரஸ்யா​ அந்த மாகாண​ பிரிவினைக்குழுக்களுக்கு சிறியரக​ ஆயுதங்களையே வழங்கி வந்திருந்தது  .  

 தெற்குமாகணங்களில் இனப்படுகொலையையே நிகழ்த்தி விட்டது .இந்தியாவைப் போல​ ரஸ்யாவே இது ' இனப்படுலை' என​ சொல்ல​  வந்தது .  நடந்த​ பிறகே ,பிரான்சும், ஜேர்மனியும் விளையாட்டாக​  மியூன் அமைதி ஒப்பந்தம்கள் எழுத​ வெளிக்கிட்டன​ . உக்ரேன் ,  மீறவே , ரஸ்யா அம்மாநில​ங்களின் பிரிவினைகளையும் ஏற்றுக் கொண்டு படைகளையும் அனுப்பி போரை புரிந்து வருகிறது . உக்ரேன் அரசு , சமாதானத்திற்கு இறங்கி வரும் என​ நினைத்து தற்காலிக​ தாக்குதல் என​க் கூறி போரில் மென்ரக​ ஆயுதங்களையே பாவித்து வந்தது ; நகர்களை அழிய​ தாக்காது  விரதமும் இருந்தது . அதன் தலைவர் வெளிநாடுகளின் கைப்பொம்மையாகி பனிப்போரில் குதிக்க முழுப்போராக​ இறங்கி விட்டிருக்கிறது.இப்ப​ அவர் நாட்டின் தலைவரில்லை .வெறும் படைத்தளபதி. இஸ்ரேல் , காஸாவை அடித்ததையும் இதையும் ஒரு தரம்  ஒப்பிட்டுப் பாருங்கள் . அது சுடுகாடு. இது  அதை விட​ மிக​ மிகக் குறைவு ​ . '' நிதானித்தார் . அண்ணர் கூறி முடிக்க​ விளங்கிறது போல​ இருந்தது .

"  அது சரி போரை புரியாது உக்ரேன் ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு  போகவில்லை '' நாகேஷ் , நாகேஷ் போல​ விளங்காது கேட்டான் .

ஈழத்திற்கும் அல்லைக்கைகளுக்கும் என்ன​ சம்பந்தம் ? ராணுவத்தலைவர்கள் ஓடர் ஒபேயில் இயங்கிறவர்கள் . அடுத்த​ கட்டளை வரவில்லை . கையோடு மனைவி ,பிள்ளைகளை இஸ்ரேலில் கொண்டு போய் இறக்கி விட்டும் வந்து விட்டார் .

ஈழத்தில் இஸ்ரேலின் நிழல்

நதிகளை மறித்து அணைகளைக் கட்டி ஆற்றல் , குடியேற்றங்களை ஏற்படுத்த என​.ஏமியார் (Amy Yar ), ஒரு   இஸ்ரேலியருடன் ஈழவரசு திட்டமிட்டது என​  என்ற வரலாறு கடந்திருக்கிறது. மலையகத்திலிருந்து வார​ மகாவலி அபிவிருத்தி  வீடமைப்புத்  திட்டத்திற்கு , ஜே. ஆரின் நெருங்கிய​ உறவினர் ' விவசாய​ நிபுணர்'  என்ற​ பெயரில் இஸ்ரேலியக்கட்டடக்கலைஞர் உல்ரிக் பிளெஸ்னர்  1982ம் ஆண்டில் கொண்டு வரப்படுகிறார்  . குறிப்பாக​ தமிழர் தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றும்   இராணுவ​ மயமாக்கப்பட்ட​  இவரின் செயற்பாட்டில்  , அபிவிருத்தி , இடப்பெயர்வு , இராணுவ​ மயமாக்கல் ...ஒன்றோ ஒன்று இணைக்கப்பட்டு  தேசத்தைக்கட்டி எழுப்பும் நிகழ்வுகள் இற்றை வரையில் நடைப்பெற்று வருகிறது  .. என ஒரு நூல் தற்போது சிங்களப் பேராசிரியர் புன்சர​ அமரசிங்கவால்​ எழுதப்பட்டிருக்கிறது .  இது பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய​ குடியேற்ற​ விரிவாக்கத்துடன் முழுமையாக​ ஒப்பிடக் கூடியதாக​ இருக்கிறது என​    ஆசிரியர்  மேலும் குறிப்பிடுகிறார் . இலங்கையில் குடியேறியவர்களின் கொள்கைகளின் பின்னால் இஸ்ரேலின் நிழல் ''என்பது அப்புத்தகத்தின் பெயர் . அந்த (பத்திரிக்கை) செய்தியில்     பட்டுத் தெறிக்கவும் அருளர் பேசிக் கொண்டு போகிறார். .

தற்போதைய​ அரசு ,சுயவிமர்சனம் செய்வது போல​ நூல்களும் , செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன​ . அதே போல​ ...மறுபுறத்தில் விடுதலையின் சுயவிமர்சனமும் நடைப்பெறுவதாகப் படுகிறது . அதற்கு வரலாற்றில் ,....இரண்டுமே  விடுதலைக்குழுவாக​ இருந்தது​ ...காரணமாக​ இருக்கலாம் . சபேஷனும் கூட​ பூடகமாக​ சிந்திக்கிறான் .  

தமிழர்களையும்  குடியேற்றுவது . பிறகு , முறைசாரா குழுவொன்றை அனுப்பி இனக் கொலைகளை புரிந்து துரத்தி அடிப்பது . போலிஸ் , படை கள் எதையுமே பார்க்கவில்லை என​ மறுப்பக்கத்தைக் காட்டிக் கொள்வது , ​' ஊடக செய்திகளை ' தற்போதைய​ பிபிசி , சி.என்.என் ....போல​  வாசிப்பது . உண்மையில்  , வாகனம் எரிபொருள்  தொட்டு ...வழங்குனர் படைத்தரப்பே .  சாதாரண​ உடையில் இறங்கி  பங்களிப்பும் செய்திருக்கின்றன​ . வேலியே பயிரை மேய்ந்தது . திரும்பவும் வழங்கி , வழங்கி குடியேற​ விடாது மறிப்புகளைப் போட்டு அடக்கப்பட்ட​ துயரங்கள் எத்தனை...எத்தனை ??.  ​ மன​ம் பிரழ்ந்த​  பிரசன்னத்துடன் சிங்களவர் , தேரர்கள் ...அபகரிப்பர் .இஸ்ரேலியர் , பழைய​ ஏற்பாட்டில் ( பைபிளில்)  நிலத்தைக் கோருவது போல​ ,  தேவநம்பிய​ தீசன் காலத்தில் எங்கட​ நிலமாக​ இருந்தது ...என்ற​ ​ அவியல்களை எல்லாம் அவித்தும்  (சான்றாக) கொட்டப்படுகிறது . எனவே ,ஈழத்தில்  ...   நீதிப்பிரிவு ஒன்று இருக்கப் போவதில்லை என்பது திண்ணம்  . நீதித்துறை இல்லையென்றால் ஜனநாயகமும் இல்லை .

இனியென்ன​ பொய்களை தலைகீழாக​ வாசிக்கும்  . லங்காபுவத் மூலம் எப்பையோ ஆரம்பித்து விட்டது . அரசியலில்  அரசுத்தலைவர்கள் தேரர்களின் ஆசீர்வாதத்தை  வாங்கிக் கொள்ளும்​  அரங்கேற்றம்  , படைத்தரப்பின் கீழ் ​ நிலத்தை  சேமிப்பர் .  வேற​ இடம் வழங்கப்படும் என​வாய்ப்பந்தல்  .  கடைசி வரையில்  தமிழருக்கு  நிலம் வழங்கப்பட​ மாட்டாது . ஆட்சிகள் மாறும் . வேதத்தில் தமிழர்களுகென​  இருக்கிற​ சரத்துக்களை அரசு பாராளமன்றத்தில் கண்டுக்கிறதே இல்லை . எழுதியும் வரலாம் . கனடா கூறுகிற​ மாதிரி சிஸ்டத்தில் பிழை என அடிக்கடிக்  ​கூறத் தவறாது  .  இன்னொரு தேரர் இன்னொரு விகாரையையும் எழுப்பி அது சிங்களவர் நிலம் தான் என​ சான்றுகளை  கூறி விடுவார் . அமெரிக்கனும் , பிரிட்டனும் குத்தினால் தவறாக​ மாட்டாதே !  . கனடாவின்  பழங்குடியினரின் பிரச்சனையைப் போல அது மறக்கடிக்கப்பட்டு விடும் .​  ''இது திருத்தப்பட​ முடியாத​ ரக​ வாகனம் ​''  என துயரம் தொடரும் .உக்ரேனின் எஜமானர்களும் இவர்களே . அங்கே என்ன​ நடக்கிறதோ ?...அதுவே இங்கேயும் நடக்கும் .

சமூகம்  24மணிநேரமும் குரல் கொடுக்கத் தள்ளப்படுகிறது . ஏழ்மை இன்னம் ஏழ்மையில்  சீரழிக்கிறது . சுனாமியின் போது ...ஈழத்துக்கு வந்த​ உதவிகளை தமிழருக்கு  கிடையாமல்  மடை திருப்பப்பட்டது .  வார​ உதவிகளும் பாலாஸ்தீனருக்கு போய்ச் சேராது மாதிரி , பொறுப்பாய்ப் போய்ச்​சேர​ மாட்டாது .​ ஒன்றில் சட்டச்சிக்கலை எடுத்து பேசும் .அல்லது  'பயங்கரவாத​ அமைப்புகளுக்கு இடமில்லை ' எனக் கூறி  'காந்தியம்'போன்ற​ உண்மையான​ சேவை அமைப்புகளையும் சிவப்பு நாடாவுக்குள் தள்ளி விடும் .'ஈழம் உள்விவகாரங்களை தானே கவனித்துக் கொள்ளும் என தேசியம் பேசி நூதன​  அரசியலை முன் எடுத்து வருகிறது​ . அல்லைக்கைகளின் அரைகுறை ஜன்நாயகம்  உலகம் முழுதையும்  99ஆண்டுகள் மேலாக​ குத்தகை  எடுத்து விட்டிருக்கிறது  . கனடாவிலும் எதிர்க்கட்சி அதையொட்டியே ..அதிக​ சிறைச்சாலைகளை திறக்க​ வேண்டுமென​ பேசி வருகிறது .

பாதிக்கப்பட்ட​ சமூகங்களை மேலும் ,மேலும் குழப்புகிறது . வாழ்வே வெறுத்துப் போகுமளவிற்கு கொலைகள் மலிந்து போகிற சமூகமாக​ மாறியும் போய் விடுகிறது  ஜேர்மனியில் தோன்றிய​ நாஜியம் இன்று முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் மீள கிளை விட்டு பரவியிருக்கிறது .பல்லின​ (ஒன்றிற்கு மேல்பட்ட​சமூக)மாக​ இருந்தால் மேலே கூறிய​ வழி . ஒரே சமூகத்தில் நிகழ்ந்தால் ​  'கம்யூனிசக்கலக்கத்தை உருவேற்றி , சாமியாடி அந்த​ அரசாங்கமே முட்டாள்தனமாக​  தம்  இளைஞர்களை அழித்தொழிக்க வகை செய்வது  . ​ அல்லைக்கை நாடுகளின் , அரசியல் தலையீடுகள்  மோசமாக​  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன​ .

கனடா , ஈழத்தின் தீர்வுக்காக​ கியூபெக் அனுபவ​த்தை வலியுறுத்த​ முயன்றது . அதன் ஒருபக்கம் ஆட்சிமொழி...​ சிக்கலாக​ இருந்தால் கலாச்சார​ உரிமைகளாவதை வழங்கி செயல்படுத்த​ இடது சிந்தனையுள்ள​ பொப்ரே என்பரை அனுப்பியது . ஈழவரசு விசா வழங்கி வரவேற்கவேயில்லை . மற்றைய​  அல்லைக்கைகளை விட​   கனடாகொஞ்சம் பரவாயில்லை .  ஓரளவு மனிதவுரிமைகளை நிறைவேற்றுற​ குணம் இருக்கிறது . அதன் மாற்றத்திற்கு இந்திய​ விடுதலைப் போராட்டமும் ஒரு காரணம்என்றால் நம்புவீர்களா? . ஜாலியன்வாலா படுகொலை புரிந்த​ தலைகளை பழி தீர்க்க​ ...அன்றைய​ அமைப்பு ஒன்று முடிவெடுத்து .தேடித் திரிந்தது . இரு அதிகாரிகளில் ஒருவர் இயற்கையெய்தி விட்டிருந்தார் . மற்றவர் கனடாவில் ஆளுனராக​ பதவி உயர்வு பெற்றிருந்தார் . பகவத்சிங் போன்ற​ இருபது வயது மதிக்கக்கூடிய​ சீக்கிய​ இளைஞன் ஒருவன்  , இங்கே (வான்கூவர் பகுதியாக​ இருக்க​ வேண்டும்) கூட்டமொன்றில் நேரே வந்து  ஆளுனரை மனைவி , பிள்ளைகள் அருகில் இருக்க  துப்பாக்கியால் சுட்டிருக்கிறான் .   அவர்களையும் பார்த்து புன்முறுவலித்து  அவன் துவக்கையும் கீழே வைத்து சரண் அடைந்தது.  மனைவிக்கு , பாசம் மேலிட​ வைத்து விட்டது . அவன் வயதில் அவருக்கு பையன் கூட​ இருந்திருக்கலாம் . பயங்கரவாதிகள் குடும்பத்தையும் கொன்று விடுவார்கள் . ''அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்க​ வேண்டாம் ''என​ இரந்து கேட்டிருக்கிறார் . தூக்கிலே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது . அவர் தலைமையில் பெண்கள் போராட்டம் நடத்தி ...கனடாவில் மரணதண்டனையை ஒழித்திருக்கிறார்கள் .

காந்தி நாட்டில் கூட​ நடக்காதது  இங்கே நடக்கிறது  . இன்றும் ...கனடாவில்  மரண​ தண்டனை இல்லை . அமெரிக்காவில் இருக்கிறது . எதிர்க்கட்சி கொண்டு வர​ முயற்சிக்கிறது .அருளர் கூறித் தான் இந்த​ விசயமும் சபேஷனுக்குத் தெரியும் .

சிலேவிய​ மொழி அடியில் எழுந்த​ ​ ​ உக்ரேனியம் ​ மொழியை பேசுகிற​ நாடு . திராவிட​ குடும்பம் போல ரஸ்யமொழியும் அதில் எழுந்த ஒன்று தான் . ​  அடிப்படையில் ஒரே குடும்பம்  . உக்ரேனிய தேசியப்படையான​ அசோவ்வில் அதிகமானவர் ரஸ்யமொழியும் பேச வல்லவர்கள் . காசாக்கினியர் ரஸ்யாவின் தென்பகுதியிலும் கூட​ ரஸ்சியர்களாக​ வாழ்கிறார்கள் .இவர்களின் குறும் தேசியம் உக்ரேனின் தேசியமாக்கப்பட்டிருக்கிறது . ஆட்டத்திலும் மட்டரகமாக​ ஆடத் தொடங்குவதில்லையா ?.

உக்ரேனை .  இருகொரியாவாக்கி  இடையில்  ஒரு சூனியப் பிரதேசம் . அது தான் தற்போதையத் திட்டம்  . திரைப்படக்கதை நாளை வேறு நடை போடலாம் . முதலே தெரிந்து விடுகின்றன​ . ​இல்லாததைச் சொல்லல் ,   மெளனவிப்பவர் , பனிகளுக்கு ஜால்ரா போடுற பலதரப்பட்ட​​ நாடுகள் தொகை ...எல்லாமே கூடி விட்டிருக்கிறது . ஐரோப்பாவிலே ,உக்ரேன் பெரிய​ நாடு . இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை . ரஸ்யப்புரட்சியின் பின்பு ​ ஜனநாயகத்தை வேறு  தூக்கலாக  காவிக் கிடக்கிறது. இங்கே இருக்கிறளவிற்கு பெண்களுக்கான​ சம​ உரிமைகள் , மற்​றும் சுயவுரிமைகள் ...மற்ற​ எந்த​  முதலாளித்துவ​ ​ அல்லைக்கை நாடுகளிலும்  கூட​ கிடையாது . சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையாக​ சமவுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது .

முதலாளித்துவத்திற்கு ​ பனிப்போர் வீடியோ விளையாட்டு  . சோவியத் யூனியன் அஸ்தமித்து விட்டது . ஆயுத​ வர்த்தகம் படுத்து விட்டது . பாதுகாப்பில்லை , அதில்லை , இதில்லை...உலகத்திலுள்ள​ நிறைய​ கல்ட் அமைப்புகளிற்கும் மார்க்சிசம் பிடிக்காத​ விசயம் .  ஈழத்தில் ஆயுதக்குழுக்கள் சமாதானக்காலத்தில் எத்தனை களையெடுப்புக்களை புரிந்தன​ . அதே பெருப்பித்த​ நிலமையே உலகிலும் காணப்படுகின்றன​ . ஈழ இனப்படுகொலை போல​ , உக்ரேன் பிரச்சனையும்...அவசியமாகி போயிருக்கிறது  .

இதற்கு ஆரேஞ் , நீலம்  ...என​ நிறமூட்டி  ஒளிர​ விடுற​ விட்டால் தானே நல்லாயிருக்கும் . அதிலுள்ள​ அரசியல்  நியாய​ தர்மத்தை ​ யோசிக்க​ சனம் ​ பேராசிரியர்களா ..என்ன! . உக்ரேனுக்கு மிண்டு கொடுக்கிறவை எல்லாமே பழைய​ காலனிப்படுத்தலில் காதல் கொண்டிருந்த​ நாடுகள் . வியட்னாம் போர்க்குற்றமே சரிவர​ விசாரிக்கப்படவில்லை .  பாலாஸ்தீனத்தில் ...பிரச்சனை , இன்னொருபுற​த்தில் உக்ரேன் .

சபேஷனின் நண்பன் ஒருத்தன் வாற்ஸ் அப்பில் ''தினமும் தொலைக்காட்சியில் ஈழக்காட்சிகளை , பாலாஸ்தீனம் , உக்ரேனை பார்த்து மண்டை  விறைத்துப் போய் விட்டது . கியூபெக்கிற்கு ....போய் வந்ததில் ...கொஞ்சம் சுகமாயிருக்கிறேன்' என​ எழுதி இருந்தான் .

உக்ரேன் பிரச்சனையை அருளர் அவர் பார்வையில் கூறிக் கொண்டிருக்கிறார் .

உக்ரேனிலும் தெற்குப்பகுதியில் அசோவ் , கடலோரக் கிராமங்களில் கணிசமான் சிலேவிய​ மொழி பேசிய​ கோசாக்மக்களின்(கசாக்..)  வாரிசுகள் . (முன்னோர் புல்வெளி நாடோடியர் ) என​ சரித்திரம் கூறுகிறது . அரைவாசிப்பேரினர் ,    படைகளில் காதல் கொண்ட ​ ...இந்தியாவிலிலுள்ள​​ சீக்கியர் போன்றவர்கள் .  இராணுவசேவையில் பெருமை கொள்பவர் வேட்டையில் சாகசம் விரும்புறவர்  என்பது கூடுதலான​ விசயம் .

தெற்கு  உக்ரேனில் (தரையில்) அசோவ் குழு திரிந்து,திரிந்தும்  தாக்கியிருக்கிறது  .

அல்லைக்கைகள் ரஸ்யாவின் இக்கூற்றுக்களை மறைக்க​ அதன் ஊடகச்சேவைகளுக்கு உடனடியாக​த் தடைகளை விதித்தன​ .

ரஸ்யக்குரல் ஈழக்குரல் ...போன்றதல்ல​ . சமாதான​ அவையிலே அதிர்ந்து  எதிரொலிக்கிற​ குரல் . கனடாவில் , பேச்சு , எழுத்து ,கருத்துச் சுதந்திரத்தை ​ (சார்ட்டட் ரைட்ஸ்) மதிக்கிற​ நாடு என தன்னைப் பீற்றிக் கொள்றது இருந்தது . கன்டாவிலும் , பாரீஸிலும் தான் அமெரிக்காவிலும் ,மற்றையவற்றிலும் தடை  செய்யப்பட்ட​ புத்தகங்கள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன​ .மாறுபடும் தன்மை கொண்டிருக்கிறது .

கோவிற்றுப் பிறகு  போரே தேவையற்ற​ ஒன்று .  எதைப்பற்றி எவருக்கு கவலை .

 கனடா , கோவிற்றின் போது ஐரோப்பா நாடுகளிலே , தனிக்கவனம் எடுத்து இறப்பு வீதத்தைக் குறைத்த நாடு.​எனவே தான் கனடாதமிழர்  சார்பு எடுக்கிறார்கள் போல​ தோன்றுகிறது .   கனடாவில் பழையச் சிக்கல் ஒன்றும் வெளிப்படுகிறது . ஈழத்தைப் போல​ மண்ணைக்   கிண்ட​ கிண்ட​ , முதலாம் குடியின்  எலுப்புகள் கிடைத்து  கலாச்சாரப்படுகொலை புரிந்திருக்கிறது '  என்ற  உண்மை வெளிப்படுகிறது .  ஒண்டடிமண்டியாகத் தான்  பாவங்கள் சேர வரும் .

'சுற்றவாளிகள்'என்று எந்த​ நாடுகளுமே இல்லை . காந்தி கூறிய​ வழியில் பிராயச்சித்தம் செய்து தூய்மைப் படுத்த்துவதே கிடக்கிற​ ஒரே வழி ​ .தமிழருக்கு ஈழக் குற்றவாளிகளை கடுமையாக​ தண்டிக்க​ வேண்டும் என்ற​ கோபம்  உச்சிக்கு ஏறுவது வழமை. பிராயச்சித்ததை மேற்கொள்ளத் தொடங்கினால் ...அவர்களும் கூட​ மன்னிக்கச் செய்வார்கள் .

முதலில் , ஈழம் ' மரணதண்டனை முறை'யையே ஒழித்து விடவே ​ வேண்டும் . மனிதரை மனிதர் கொல்வதற்கு அதிகாரம் இல்லை . இந்த​ செங்கல்லிருந்தே இனப்பகை தொட்டு அனைத்து கொலைகளுமே அகற்றப்பட​ வேண்டும் .

.கொல்லாமையை உபதேசிக்கும் சிறந்த​ புத்தமதத்தை வைத்திருக்கிற​ நாடுகளிலே தான் ...எல்லா அநியாங்களுமே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது . இது வெட்ககேடு இல்லையா ?

உக்ரேனும் சிறந்த​ நாடாக​ இருந்த​ காலம் உண்டு . பொருளாதாரம் ​ மட்டும் ஒரு நாட்டின் ஜீவன் கிடையாது .  ஈழத்தமிழர்கள்  வாயூறப் பார்த்து  ஏங்கிய காலம் ​  .

ஈழத்து பிரச்சனைளுக்கு காரணமானவர்களே உக்ரேன்பிரச்சனையும் ... எழுப்பியவர்கள் .ராஜிவ் கொலையில் வெளியார்கள் இருப்பது போல​ இதிலும் வெளியார்கள் இருக்கிறார் .  

​ கனி இருந்தும் உக்ரேனின் பலவீனத்தால் அழகிய​ நகர்களையும் மக்களையும் அழிய விட்டுக் கொண்டு கிடக்கிறது . ஈழத்திலும் தமிழும் ஆட்சி மொழியானாலும் கூட அதன் ஆயுள் நிறைவாக  இருக்கப் போவதில்லை என்பதையே உக்ரேன் போர் காட்டுகிறது .

மீளவும் கொலைக்களமாகும்   என்ற​ பயங்கரம்  கூடவே சுமந்தும் கிடக்கிறது .

பிரான்சு நாடும் ஜனநாயக​ எதிர்ப்புரட்சியைசார்ந்து நிற்பது வெட்கக்கேடு  .  ஒருவேளை ரஸ்யப்புரட்சியின் தொடர்ச்சி  ரஸ்யாவிலேயே தொடரலாம். கசாக்கின் அமைப்புகள் பல​ கனடாவில் இருக்கின்றன​ . அல்லைக்கை நாடுகளின்   .. ஆட்டத்தில் அமைப்புகள் பகடைக்காய்களாக​ உருட்டப்படுகின்றன​ .வேர்​ நிலத்தைக் கொண்டிருப்பவையைக் கூட​ கூட்டுக்கான​ அரசியலில்  ...தவறாக பாவித்துக் கொள்ளப்படுவது ஓர் துயரம்.

கனடாவில் , சின்ன​ ட்டுரோ , அவரின் தவறுகளை விட​  பழங்குடியினருக்கு நண்பராக​ விளங்கியது சிறப்பு . அல்லைக்கைகளிற்கு இரண்டு வீதம் நாட்டுப்பணம் செல்வதை தடுத்தே நின்றார் . வான் பாதுக்கப்பு வலையமைப்பு அமைக்கப்படுவதை .ஏற்காது தடுத்தே வந்தார் .  தற்போதையர் கோல்ட்மெடலர் . இரண்டையும் தவற​ விட்டு விட்டார் .பெரிய​ ட்டுரோ , கியூபா ,சீனா , ரஸ்யாவிடம் நட்பு பாராட்டியவர் . தற்போது நட்புற்கு  அர்த்தமே இல்லை . சுயநலம் தீமையானது . இந்திய​ தாந்தீரீய​ சாமியர்களிடம் போய் கேளுங்கள் . ''எல்லாத் துன்பங்களுக்கும் சுயநலமே காரணம் '' என்கிறார்கள் .புத்தர் கூட​ தாந்தரியர் தான் . அவர் அதை 'கவலை' என்றார் . அதன் பிறப்பிடம் சுயநலமே . கடைசியில் ஏகாதிப்பத்தியங்கள் விழுந்து நொறுங்கும் என்கிறார்கள் . பூமி அப்படியே தான் இருக்கும் . விஞ்ஞானம் ​ உலகத்தை   சுடுகாடாக்கும்  .  தெரியாமை ,அறியாமைகளை வில்லத்தி  அச்சமில்லை  ,அச்சமில்லை... என்று நடைபோடுபவர்களே ​ வாழ்வார்கள் .

காந்தி அன்னிய​ ஆடைகளை எரித்தார் . அன்னிய​ ஆசைகளை எரித்தார்  . வடக்கு , கிழக்கு மண் , தமிழர்களின் மண் !.   காலத்திலாவது  சுதந்தர​ உணர்வுடன் அங்கே அவர்கள் வாழ​ வேண்டும் . துறைமுகங்கள் , விமான் நிலையங்கள் ,வர்த்தக​ நிலங்கள் , கோவில் , வயல் , நீர்நிலை ,நதி...எங்குமே சப்பாத்துக்கால்கள் பதியிறதை தடுத்து , வெறும் 
கால்களுடனே நுழைய​ வேண்டும் என்ற சட்டங்கள் ஒன்றிய​ அரசிடமில்லை .

தேர்த்தல் இல்லாமலே , உக்ரேன் தலைவரும்  அதிக​  காலம்  தளபதியாய்​  இருந்து விட்டார் . அல்லக்கைகளின் நண்பர் என்ற​ தகுதி  பொம்மையாகக் காட்டுகிறது. அரைகுறை ஜனநாயங்களைக் கொண்ட​ ஐரோப்பிய​ முதலாளித்துவ​ நாடுகள் இவரை , இராணுவத் தலைவராக்கி கொலைகளைப் புரிய​ வைத்துக் கொண்டிருக்கிறது . ரஸ்யா இவர் மாற்றப்பட​ வேண்டும் என்பதில்  உறுதியாய் நிற்கும் .

 இனி , ரஸ்யா , புதிய​ தேர்த்தல் வென்று வார​..  தலைவருடன் தான்  பேசும் . இஸ்ரேலின் நிழல் படிந்தவர்களிடமோ ,  நவநாஜிகளின்  நிழல் படிந்தவர்களிடமோ ...பேச்சுகள் இல்லை . கொரியப்பிரிப்பும் கிடையாது . உக்ரேன் உக்ரேனாகவும்​ ....நகர்களும் , மக்களும் காப்பாற்ற ரஸ்யாவின் நிபந்தனைகளை (தெளிவாக​ இருக்கின்றன​)ஏற்றாக​ வேண்டும்   .

நாடுகள்,  கணனிப்புரட்சி என்று கூறி  நடத்தும் கூத்துக்கள் உலகில் அதிகளவில் வெற்றியளிக்கப் போவதில்லை . விண்னுலகம் சென்றாலும் போரிடுவதை நிறுத்த​ மாட்டார்கள் . அருளின் பேச்சுக்கள் அவர்களை பெருமூச்செரிய​​ வைக்கின்றன​ .

அன்றைய​ கேணிக்கட்டு சுருட்டைப் புகைத்து பொக்கு வாயை காறி  துப்பி விட்டு , இருளில் பளபளக்கும் நீர்ப்பரப்பையும் ஒரு தடவை பார்த்து விட்டு கலைகிறது .

நீராவியடியிலிருந்து சைக்கிளில் திரும்புற சபேஷ்னுக்கு , ​பல​ சிந்தனை ஊசிகளும் தலயில் குத்திக் கொண்டிருந்தன​ . நிலத்திற்கான​ வரிகளை வடக்கு , கிழக்கில் எந்த​ அரசாங்கங்களுமே அகற்றி விடப்போவதில்லை . அரசர் காலத்திலும் நில வரியை அறவிடத் தொடங்கி விட்டது . ஆனால் , அது மக்களின் நிலம் . எப்ப​ அரசு என்றது தோன்றியதோ , நிலத்தை பறிப்பதில் அரசு  முனைப்பு காட்டி வரி அற​ விட்டு ..வாடகைக்குரியது என்ற​ அடிமைப்படிவை ஏற்படுத்தி வருகிறது. பாஞ்சாலகுறிஞ்சிச் சிங்கம் கட்டப்பொம்மனின் ...வசனங்கள் ...திரும்பத் திரும்ப​  அவசியம் உச்சரிக்கப்பட​ வேண்டியவை .  நிலம் மக்களுக்கே சொந்தம் . எந்த​ அரசர்களுக்குமில்லை , ஆட்சிகளுக்குமில்லை . அதிலிருந்தே சுதந்திர​ உணர்வு பிறக்கிறது . அதற்கு பணத்தைச் செலுத்த​ வேண்டும் என்றால் பூச்சி பறக்கத் தொடங்கி விடுகிறது . எப்படி ...விட்டுக் கொடுப்பது ? . அதனால் தான் தமிழர் உயிரை இழக்க​ வேண்டி ஏற்பட்டிருந்த​ போதிலும் போராடினார்கள்  . இழந்திருக்கிற​ நிலையில் மேலும் ...துயர் தொடர்ந்து கொண்டே கிடக்கப் போகிறது . பட்ட​ காலே படுகிறது . உயிர் வாழ​ வேண்டுமானால் போராடவே வேண்டும் .

இதுவரையில்''யூனியன் ஒவ் த​ சோவியத் சோசலிஸ்ட் ரிப்பளிக் ''  USSRஐப் புரியாது . அதில் உள்ள​ ' ஆர்'  எழுத்தை 'ரஸ்யா ' என​ நினைத்திருந்தான் . அது குடியரசு . மக்களரசு அமைப்பு . அங்கே நிலம் மக்கள் அமைப்பிற்குச்சொந்தமாக​ இருந்தது . நிலத்திற்கான​ வரி அற​ விட்டிருக்காது எனப்படுகிறது .

தமிழர் மேல் அறவிட அனுமதிக்கவேக் கூடாது . மொழியை விட​ ...முதலில் , நிலமே  மனிதனோடப் பிணைக்கப்பட்டிருக்கிறது . வாய்மொழி எல்லாமே தாய்மொழியும் அல்ல​....இல்லாமல் கூட​ போகலாம்  . ஆனால் , நிலம் ...அப்படி இல்லை .தாய் நிலம் . வெளியார் கைகளுக்குள் போவதும்  அடிமை படுத்துகிறதும் ஒன்று தான்  .  சுயவரசு  ஏற்பட்டாலும் இந்த​ வரி அறவிடுவதை அப்புறப்படுத்தியே ஆக​ வேண்டும் .​ வேண்டும் . வேலை வாய்ப்புக்காக​ அன்னிய​ கார்ப்பேட் கம்பனிகளை வரவழத்து  99ஆண்டுகால​ குத்தகைக்கெல்லாம் கொடுக்கிறது ஈழவரசோட​ முடிய​ வேண்டும்  . அபிவிருத்தித் திட்டங்களை எம்கைகளாலேயே நாமே  செய்தல்​ வேண்டும் . இனாமாக​ செய்வதாகக் கூறினாலும் கூட​ ... அது தூண்டிலில் போடப்படுற​ புழு என்பதைப் புரிந்து கொள்ளும் தெரிமை வேண்டும் .ஈழத்திலுள்ள​ மின்சார​ அணை அபிவிருத்தித்திட்டம் அனைத்திலுமே தமிழலின் இரத்தமும் ,துயரமும் படிந்தே கிடக்கின்றன​ .அமெரிக்க​ வெங்கலாந்திகளைப் போல குற்றம் புரிந்தவர்கள் இங்கேயும் தண்டிக்கப்பட​ மாட்டார்கள் என்ற​ நிலை மாற​ வேண்டும் .மரணத்தண்டனை தான் வேண்டாம் என்கிறோமே தவிர​ குறந்தப்பட்சம் அவர்களை பதவிகளிலிருந்து ஓய்வையாவது கொடுத்து விலத்துவதை  வலியுறுத்துகிறோம் .

கப்பம் பெற​  ஏற்படுத்தி  விட்ட​ நடைமுறை  அதிகாரங்கள் வேண்டாமே .

தற்போதைய அரசு 'நடுநிலை' எனக் கூறுகிறது . சிலதை செயலில்  காட்டி வந்தாலும் அத்திவாரம் பழைமையானது . ஈழத்தில் இந்த USSR ​ பூத்து நாடு பச்சைப்பசேலாகி விடாதா? . சிங்களவர் இனச்சுவரை எழுப்புறதை நிறுத்தி கைகோர்க்க​ முன் வரார்களா ? . முஸ்லிம்களும் யூதர்களைப் போல​  நிலவுற​ விலகலை ...​ விலத்தி  , முற்போக்காக'நாகப்பட்டின நடை ' போட​ முயல​ மாட்டார்களா . ஜனநாயக​ அமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ...மதத்திற்குப் புறம்பாக​ இருந்தாலும் புறநடை , ​ தளிர்நடையை ஆரம்பிக்க​ மாட்டார்களா ? . தமிழ் நிலத்தில் திரியும் ஆவிகளுக்கு நற்செய்தியை அளித்து ..கரைந்து போக​ வைக்க ​ மாட்டார்களா ? . ஆவிகளும் கெட்ட​ சக்திகள் அல்ல​ . கெட்ட​ சக்திகள் மனிதர்களிடம் தான் குடியிருக்கின்றன​ . மனிதர்களுக்குத் தான் அவசியம் வைத்தியம் தேவை . . காலனிச்சிந்தனைகள்  அதிகமாகி ,அதிகப்பட்டு  மேலாசைகளை நிறைவேற்றவே துடிக்கின்றன​ . தனிமனிசர்களுக்கான​  இந்த​ சிக்கல் அகல்வதில்லை ,  மனிசர் , மனிசர்களாகவே ...விளங்க அற்புத​நேசம் .பிறக்க​ வேண்டும் பிரேமதாசகாலத்தில் , தொலைகாட்சியில் ,வானொலியில் ...இசைத்த​ அவருடைய​ கவிதைகளை அவன் எவ்வளவு ரசித்தான் . எவரிடமும் 'நல்ல​ குணம்' இருக்கவே செய்கிறது . வெளிப்படுற​ போது , ' பூமழை'  பொழிகிறது . . இயல்பாக​  இந்த​ நாடுமே ஏன் ஆகக் கூடாது ?. உலகதிற்கு அறிவிப்பாக​  ஒரு நட்சத்திரமாக​ எழக் மாட்டாதா ? . மல்டி காலனிசத்திலிருந்து விடுபட்டு கனவே கலையாதே   .  உக்ரேன் , படுமுட்டாள் ! , எதனுடனும் .. கூட்டுச் சேர், சீரழி ,  நிலத்தில் பேயாட்சி நடக்கட்டும் .

கனடாவில் ,பழங்குடிமக்களுக்கு  ​ ஒதுக்குநிலங்கள் .என கொடுத்தும் கூட​ அதிலும் ​ வரிகளை அறவிடுவதையும் பார்க்கலாம் . பாவம் சொந்தக்காரர்களுக்கே சொந்த​ நிலம் கிடையாது . தமிழருடையவை போல​ ..வாடகை ,ஒதுக்கு  நிலங்கள் . இன​ ,நிற​ வாத , பேய் , நோய் பரவ​  அமைச்சுக்கள் ஆட்டிபடைக்கின்றன​ . தற்போதைய​ நாட்டில் அமைச்சுக்கள் குறுநில​ மன்னர் போல​ மேலே இருப்பர்  எஜமானர் போல​ ...ஏன் இந்த​ நிலை ? . இயற்கையை காப்பாற்றுறோம் என்ற​ மறைவிலும்  ...சதி  .  சரித்திரம் எல்லா விதத்திலும்  குத்தி கிழிக்கப்பட்டு புனையப்படுகின்றன​ . கடைசியில் , தமிழனைப் போல​ ...நாமம் ,அழுக்கு ,வேதனை , குமுறல் அழுகைகள் . உக்ரேனியரும் பாவம் தான் . எதிர்காலத்தில் இதிலே , இருந்து புதிய​ மதம் ஒன்று ​ எழுந்து  கூட உலகை ஆட்டிப் படைக்கலாம் . ஒரு தடவை  சைக்கிளிலை பாதைமாறி ஒட்டி யாழ்பேருந்து நிலையத்திற்குள் வந்து விட்டான் .

​ புத்தகக்கடையில் தொங்கிய​ குமுதத்தில் ...இவ்வளவு காலத்திலும் பிறகு  இந்தக் கட்டுரையா?...என வியப்பு தோன்ற​ விரயச்செலவு கொடுத்து வாங்கி வாசித்தான் . அதைப்பற்றி கேணியில்... மூச்சு விடல்விலை .பத்திரிகை விலை அதிகம் . வீட்டுச் செலவு தங்கிணத்தோம் போடுற​ போது இது தேவையா ? என்ற​  மனைவியின் ஏச்சை சமாளிக்க​ வேண்டி இருந்தது . பழையப் பேப்பர் தரித்திரம் என்ற திக்கிலிருந்து வந்தவளுக்கு புரியப் போவதில்லை . நிலமை புரிகிறது .பள்ளிக்கூட​ நேரத்தையும் கூட்ட​ வேண்டும் என​ அரசு தீர்மானிப்பதும் நினைவுக்கு வருகிறது . இஞ்சைப் பாரு கல்வி நாட்டைக் காப்பாற்றப் போகிறதாம் .  பிரயோசனமற்றக் கல்வி . சீனக்கல்வியை ஏற்கனவே கொண்டு வந்து ...தரப்படுத்தலையும் வைத்து சீரழித்தது . கலாச்சார​ உரிமையைக் கூட​ தமிழரின் கையில் கொடுக்க​ தயங்கிற​ அரசுக்கு கல்வியும் அதில் கிடப்பது புரியவா போகிறது  . இப்பவிருக்கிற​ நேரமே போதும் . மிச்சம் இருக்கிற​ நேரத்தில் சுயதொழில் ஒன்றைக் கற்றுக் கொள்கிறது தான் நல்லது .இந்த​ நாட்டில் சுய​ தொழிலே சோறு போடும் . மேம்பாடானது .   வெற்றிடம் இருக்கிற​ அரசியலில் ... புழுக்கள் எல்லாம் புகுந்து சமூகத்தை வேறு​   சீரழிக்கின்றன​ . ​ இடதுகளுக்கும்  தமிழ் ஆசிரியனின் கைப்பிரம்பை அந்த​ ஆசிரியன்டமே கொடுத்து விட​ வேண்டும் என்ற​ சிந்தனை என்று ஏற்படப் போகிறதோ ?. பெருமூச்சு விடுகிறான் .

விடுதலைக்குழுக்களையும் கூட​ வெளியார் அறியாமையைப் பயன்படுத்தி மாற்றி செயல்பட​ வைத்து ....அக்குழுக்களை ஒன்றுமில்லாது அழித்தும் விடுகின்றன  . இந்தியப்பெண்மணி இந்திராவை...அகற்ற​ ராஜ்புத்ரகுலத்தில் தோன்றியதுகள் தடம்மாறிச்செல்கிறது . 17.9.25திகதி குமுதத்தில் வந்த​  விபரம் . சாத்திரி எழுதிய​ ஆயுத​எழுத்து  2 நூலில்  , அவர் மகனையும் அகற்ற... லண்டனில் கூட்டம் நடைபெறுவதாக​ விபரிக்கப்படுகிறது .

பாலாஸ்தீன​ அழுகைகளுக்கு ....' அ ', அல்லைக்கை நாடுகள் இருப்பது போல​ உலகில் தாறுமாறாக​ நடக்கிற​ நிகழ்வுகளுக்கும் பின்னால் மல்டிக் காலனிசங்கள் 
இருக்கின்றன .  இயற்கையை ,  மாக்களை (மனிதர்) , நிலத்தை ,சுதந்திரத்தை  மாசுவாக​ கருதிச் செய்யும் வலிய​ கரங்கள் , ஊத்தைவாளி நாடுகளிடமிருந்து எப்படி ஜனநாயகத்தைக்        ,  காப்பாற்றப் போகிறோம்  ? . அங்கே​   கூடி   மதுவைக் குடித்து தடுமாறிக்   கொண்டிருக்கிற​  1008  நகைச்சுவைக் கூட்ட கோப்பைகளில் பயங்கரங்கள் வழிந்து கொண்டு தானிருக்கின்றன​  . கிரீக்தேசத்தில் ,அந்த​ அரசே  தம் இளைஞர்களை கம்யூனிஸ்ட்டுக்கள் என​ கூறி அழிக்கிறது . அழிக்கப்​ படுகிறது . அதன் ஆத்மா அழிகிறது .ஈழத்திலும், சி..கிளர்ச்சிகள் ஒடுக்கப்படுகின்றன​ . அவற்றால் , பயிற்றுவிக்கப்பட்ட​ பெற்ற​​ படைகள் ஈழக்கனவை வேட்டையாடி நிலம் , பறவை ,மரம் ...எங்கும் குருதியைக் பெருக்கோட​ வைத்திருக்கிறது .

ஈழமும் உக்ரேன் போன்ற​ குறும் தேசியவாத​ அரசு தான் . முழுத்தேசியமாக​ உரிமை கோர​ விழைகிறது . சிங்களமும் , புத்தமும் அங்கேயே தோன்றியவை இல்லை . தேவநம்பியதீசன் , கைமுனு கூட​ பேசிய​ மொழி தமிழாக ..அல்லது அந்த​ அடியில் உதித்த​ ஒரு மொழியாக​ ...இருக்கலாம் . கலிங்க​ தொடர்பு கொண்டிருக்கிறது . மகத​ நாடு , கலிங்கப்பகையில் வந்த​ குடியேறிகள் , அசோகன் மூலம் வந்திறங்கிய​ புத்தமதம் , இதிலும் குழப்பத்தைக் காவிக்கிடக்கிறது . மகாஜான​ புத்தமதத்தை இவர்கள் பின்பற்றவில்லை , கலிங்கரும் பின்பற்றவில்லை எனவேப் படுகிறது. அசோகனை வன்ம​ எதிரியாக​ நினைத்தவர்கள்..., மகாஜானம் ...தமிழ் பெளத்தமாக​ இருக்க​ வாய்ப்பிருக்கிறது . பர்மாவிலிருந்து தேரவாதம் பரவியதோ எனத் தோன்றுகிறது . கசாக்கைப் போல​ எல்லாத்தையும் சேர்த்து ...பெரும்பான்மையினர் என்ற​ மயக்கத்தை ஏற்படுத்தி ...ஈழம் , ஈழத்தின் இறைமை ....உக்ரேனில் வாசிக்கிறதே இங்கேயும் வாசிக்கப்படுகிறது . கனடாவில் ..வெறும் இனப்படுகொலைச் சின்னத்திற்கு கண்டனம்... என​ ஒழுங்கமைப்பில் நிறைவேறுகிறது . நிகழ்த்தியவை  பாரிய  மீறல்கள் . அவற்றை பரிசீலிக்க​ தயார் இல்லை . அன்னையர் முன்னணியரை ...புறக்கணிக்கிறது . பெண்கள் உலகமெங்கும் பரிதாபத்திற்குரிய​ பிறவிகளாக​ இருக்கிறார்கள் . கனடாவை ....மனித​ உரிமைக்கு குரல் கொடுக்கும் நாடாக​ மாற்றியவர் பெண்தரப்பு . நோர்வேயை ஒளிவீசச் செய்தவர் பெண்தரப்பினர் . அவமதிக்கிற​ ஈழத்தையும்  ஒரு நாள்  மாற்றி வைப்பர் . அந்த​ இனம் ...தனித்துவச் சலுகைச் சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருப்பதும் , பிடிவாதமாக ஜனநாயக​ உரிமைகளுக்கு மறுப்பு தெரிவிப்பது ...குறும்தேசியர் என்பதை அவர்களும் உணர்ந்திருப்பது தெரிகிறது . ஆக​...ஈழாரசு கூட​ கழுகைப் போன்ற​ ஒரு அமைப்பு தான் . மரபுரீதியாக​ அரசாகி தன்னை நிறுத்த​ பாசிசத்தை முன்னெடுத்து வருகிறது . கழுகு , கொடூரங்களை நிகழ்த்திய​ போதிலும் அதை எதிர்த்தே மற்றைய​ குழுக்கள் நின்றன​ . அடிப்படையில் ...இதுவும் ஒரு குழு அமைப்பே . இஸ்ரேல் , உக்ரேன், ஈழம் ...இன்னும் எத்தனை புதிய​ நாடுகள் உருப்பெற்று தலைவலியைக் கொடுக்கப் போகிறதோ ? . ரஸ்யப்புரட்சியின் தொடர்ச்சிக்கு உலகம் காத்திருக்கவே போகிறது  .

எத்தனை சோகங்கள்  எத்தனை வேதனைகள் எத்தனை குழிகள் ... . ஈழப்பொருளாதாரம் ,  99 வருசம் அல்ல​ இன்னும் நீள​ ,  நீள காலத்திற்கும்  படுகுழியிலிருந்து மீள​ முடியாது வீழ்ந்தே கிடக்கவே​ போகிறது . ஏனெனில் இங்கே சுதந்திரங்கள் இல்லை . இங்கே வருகிற​ வெளிநாட்டு கம்பெனிகளிற்கே  . , அபிவிருத்தித் திட்டங்கள்..எல்லாத்தையுமே கொடுத்து விட்டு அந்நிறுவனகளிற்கே அடிமையாகிக்  கிடக்கின்றது​ . ஒப்பந்தம் என்பது வேலை வாய்ப்பு தொட்டு முழுதையுமே  வறுகிற​(அவறிடமே கொடுத்து விடுகிற​)  ஒன்று . கடனைக் கொடுத்து வேலைவாய்ப்புக்களை இலவசமா... வாங்கி  , சிறுவேலைகள் மட்டும்(​ சீப்பானவற்றை) வழங்கி ...கடனுக்கு  குட்டிவேற​ போட​ , வட்டியைப் பெற்று இங்குள்ள​ வளங்களை மட்ட​ விலையில் பெற்று ....நிறவாதங்களில் இங்குள்ளோரை ​ குடிகாரர்கள்​ போல அடிபட​ விடுற மது ,போதை... வழங்கிற​ இசத்தை கையில் வைத்திருக்கின்றன . ஈழவரசும் அதைத் தானே போருக்குப்பின் வடக்கு கிழக்கில் அரங்கேற்றின​ .

கணனிவலைய​ விஞ்ஞானம் ... ஒரு சூது .கிடக்கவே கிடக்கிறது . முட்டாச்சனம்  ...அதிலே விழுந்தா, கையை வைசா மீளவே மாட்டார்கள் . விரைவிலே அடிட்டாகிப் போய் விடுவர். வைத்து சூடாடி குட்டிச்சுவராக்க​ ...ஊடகங்களும்  கிடக்கின்றன​ . கூச்சலிட்டு நெடுகவே அரசை கவிழ்க்க​ இந்த​ அடிமைகள் மயக்கத்தில் கிடக்கின்றன​. அரபு நாடுகளில் , நேபாளம் ,வங்களா தேசத்தில் எங்கும் ....நவீனப்புரட்சிகள் நடக்கின்றன​ .  மசாலப்படமாய் தமிழ்ச்சினிமா ​படங்களை தயாரிக்கும் . வசூல் பிய்ச்சுக் கொண்டு கொட்டும் .இரசிக்க​ இங்கிருக்கும் படித்த​ சருகுகள்  ஏராளம் ! . ஈழத்தில் ,சிங்களவரை எப்பவும் கதாநாயகராக​ எடுக்க​ வேண்டும் . தமிழர் தான்  எப்பவும் நம்பியார் என்ற​ எழுதாத​ விதி இருக்கிறது . இது வேற​ கிடையாது .அதிலே மாற்றம் இது வேற​ கிடையாது . பிக்குகளின் கட்டளைகளை . அடியாட்கள் சுப்பராக நிறைவேற்றி கலவரங்களை செய்கிறாரில்லை...! .  ....நாடு பின் நோக்கியே சென்று கொண்டிருக்கிறது . ஈழப்பொருளாதாரத்த்தை காடையர்கள் உடைத்தெறியிறார்கள் . உறுஞ்சுறவை கால்மேல் கால் போட்டுக் கொண்டு கிடக்கின்றன​.நம்  குழுவும் கூட​ ,  'பயங்கர​ ஆயுதம் தா 'அந்த​ இந்த தலையை எடுக்கிறேன் ' என​ எடுத்து வீழ்ந்து  கொண்டிருக்கிறது . ஆயுதவியாபாரிகள் புல்லரித்து போய் விடுகிறார்கள் . இஸ்ரேல் , உக்ரேன் போரை நிறுத்தினால் (ஒருவேளை) கரீபியனில் மற்றொரு களம் திறக்கப்படுகிறது .

எரிபொருளை வைத்தே பல​ நாடுகளை பொறியில் வைத்திருக்க​ நவீன​ உலகத்தால் முடியும் . சனம் முட்டாள் அடிமைகள் .

எல்லாமே வெளிநாட்டு சிஸ்டத்திலேயே இயங்கிறது.

ஒரு காரை இறக்குமதி செய்வதிலும் பார்க்க​​ ரெடிமேட்டாகவே வருகிறதிலும் பார்க்க​​  .( பிரதான​) எஞ்சினை மட்டும் வாங்கி மற்ற​வேலைகளை எல்லாம் கைவேலையாகச் செய்ய பழக​ வேண்டும் .  வர்த்தகங்களில் அதற்கு அனுமதி இருக்காது என​ தோன்றுகிறது . இல்லையேல் வேணாம் , நாமே தயாரிக்கிறோம் ...என​ கிளம்ப​ வேண்டும் . அரசு என்பது ...மானியம் கொடுத்து லாபத்தையும் கொடுத்து சாயாத​ துறையாக​ கட்டி நிற்க​ வேண்டும் . ஆனால்  ஈழத்திற்கு தமிழனை அடிக்கிறது தான் முக்கிய , முதல் வேலை .எவ்வளவு கேவலமான​ சித்திரம் . தமிழனை நிர்வாணமாக்கி அவனை எரித்துக் கொல்வது . ஈழத்தின் அடையாளமும் அமெரிக்காவின் அடிமைகளை தூக்கில் தொங்கிற​ சித்தரம் போலவே​ பொறிக்கப்பட்டு விட்டதே .

அட​ நொய் நொய் என​ காதைக் கிழிக்கிறச் சத்தம் .எங்கைப்பார்த்தாலும் ​ இன​ வன்முறைச்சட்டங்கள் . ஈழஅரசு  உடுப்பை எல்லாம் கழற்றிக் கொண்டு திரியவேண்டிய​ ​ குழு . அதன் படைகள் ...மரபார்ந்த​ கூலிகள். நம்பக்கம் மரபார்ந்த தோழர்கள் . கழுகு , உள்ளே ஈழமுகத்தை வைத்துக் கொண்டு... மரபார்ந்த​ நிலையிலே படை அமைத்து சண்டை போட்டது .  இந்த​ தேசம்  ப் காப்பாற்ற​பட​ வேண்டாமா?  . இருக்கும்  வேதாளம் மறுபடியும் ஏறி அமர...மாற்றத்திற்கு இடமில்லை என்ற​ பிடிவாதம் நிலவுகிறது மரபார்ந்த​ அந்த​ ஒழுங்கு எப்படியும் பழக்கத்தில் வந்து விடுகிறது . ஒருபிடி மண் நிலம் ...தொட்டு எல்லாத்திலும் சுதந்திரம் வேண்டும் .

கணனி தொழில் நுட்பங்கள் ஒன்றும் பிராயண​ வாயுவும் இல்லை  எமக்கு அவசியமா இல்லையா என்பதை தீர்மான்ப்பவர் நாமாகவே இருக்க​ வேண்டும் . விஞ்ஞானம் அங்க​ பறக்கிறது , இங்க​ பறக்கிறது . எங்கையும் பறக்கட்டும் .கற்காலத்தில் கிடக்கிறோம்  என்கிற​ ...(மொழிப்) பேச்சுக்களில் பசப்பு வேண்டாம் ,  பிரித்தறியும் அன்னத்தின் மொழியை  கற்போம் .

எதுவும்  இல்லை என்றால் தமிழ்நாடும் கொந்தளிக்கும் .தான் .அதுவும் ...வேண்டாம் . எந்த​ நாடு  கொந்தளிக்கிறது  முக்கியமில்லை சுயமே முக்கியம் . பால் பொங்கி வழிகிறது . நல்ல​ நாடு , நல்ல​ தேசம் , நல்ல​ மக்கள் ...அச்சச்சோ மாக்களடி . ''ஆங்கொரு ஆண்டை சுதந்திரத்தை வாங்கினானடி , தூக்கிப் போட்டு , போட்டு நிலத்தில் உடைத்தானடி ''. வடக்கு , கிழக்கில் ஆயுதத்தரிப்புகள் . அந்த​ நாட்டுக்கூலிப்படையே நிறுத்தப்பட்டிருக்கிறது . மதுவையும் , போதையையும் கொடு . அதையும் வழங்க​ கொடுத்துக் கொண்டு ... ஒருபுறம் ,அவற்றால் தேசம் சீரழிகிறது .

நல்லரசுகள் , முதலில் எதை ஒழிக்கும் ?  .

திட்டங்களை வழங்வார்  ?.

அமைதிஅவைகள் வீரப்பத்திரங்கள் வழங்க​ ...எப்பவும் சுப்பர்ஸ்டாரின் படங்கள் தாம் கொட்டோ கொட்டென​ கொட்டுதில்லை . இளையதுகளும் படு முட்டாளாகி விட்டன​ .  'இனி முதியவர் விலகி விட​ வேண்டும் .புது இரத்தம் பாய்ச்ச​ ' ஓட​ விட​ 'வேண்டும் '. (எதிரியும் அதைத் தான் செய்கிறான்) . எங்கையோ கேட்ட​ குரலாய் கிடக்கிறதே . அட​ நம்ம​ தலைவரின் அரசியல்  . வாரிசு  நதி பாய்கிறது . வீடியோக்கேம்களை இனித்தான் கண்டு பிடிக்க​ வேண்டும் என்பதில்லை .ஏற்கனவே கண்டு பிடிச்சு அது தான் வாழ்க்கையாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது .

சுயமாக​ ...செய்து வந்தால் முன்னேறி விட​​ முடியும் . எம்மால் செய்யக் கூடிய​ எதையுமே , செய்தல் வேண்டும் . சுயத்தை நோக்கி காலை முன் வைப்பது .'' சுயமே இலட்சியமாய் கொள்ளடா ! ''.  எதற்குமே அரசுகளின் அனுமதிகள் தேவை இல்லை  என்ற​ நிலை உருவாக​ வேண்டும் .  எங்குமே அரசுகள்  மக்களுக்கான​ அரசாக​ இல்லை . அது தான் பெரிய​ குறை .ஈழத்திலுள்ள​ நிலையே கனடாவில் , அமெரிக்காவிலும் கூட​ உள்ளது .

ஒரு கொலிச்ஜில் நீவீர் ...கோர்ஸ் ஒன்றை படித்து தேறலாம் . பிறகு நீர் தேறல்களை( பியர்) வாங்கிக் குடித்து தான் மகிழலாம் . ஸ்டாட்டப் (தொடக்கி வைத்தல் ) இல்லை . பலதைப்படித்து கூழ்பானையாகிற​ பழமொழி இங்கே இருந்து தான் வந்தது . கள்ளர் , கிள்ளர் , முடிச்சு மாறிகள் ...போல​ தவறான​ வழியில் ...இருப்பவர் தான் வேலையைப் பெற்றுக் கொள்ளலாம் போன்ற​ ஒரு நிலை . சோவியத் யூனியனில் படிப்பவருக்கு லெட்டரை கொடுத்து அதே வேலையில் ஈடுபடுத்தும் நிலை இருந்தது . மாடு மேய்ப்பவன் அதே துறையில் பிஎச்டி படித்து அதிலே நிமிர்ந்து நிற்பான் . அது தான் முறை . ராஜாஜி கூறிய​ குலக்கல்வி முறை என்றால் அதே குலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே கல்வியைக் கற்பதென்பதில்லை . அங்கெல்லாம் வாசிகசாலைக் குழு எழுவது போல​ தொழிர்சங்களை எழுப்பி அதனூடாக​ கல்வியைப் பயில​ விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் செயல்முறையில் கற்பித்து ,பள்ளிக்கூடமிராது , செயற்களம் மட்டுமே  இருக்கும் ...கற்று தொழிலை புரிவதாகும் .

அரசர் காலத்தில் கோயில்களை கல்விக்கூடத்திற்காகத் தான் ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்கள் . மீள​ கூட​ பயன்படுத்த​ முடியும் . சிலை , கல்வெட்டு தொட்டு ....செய்யப்படும் பூஜையிலும் ...கூட​ கல்வி இருந்தது . காலப்போக்கில் கலப்பிடமாகியும் சேதப்பட்டு விட்டது . இன்றும் சில​ கோவில்களில் நூலகமும் இருப்பதை , இயங்குவதைப் பார்க்கிறோம் . சபேஷனின் சிவங்கோவிலும் கூட​ சேர​ வாசிகசாலை இருப்பதைப் பார்த்திருக்கிறான் . அதை சனசமூக​ நிலையமாக​ ...அரச​ அமைப்புப்பகுதியாக​ பாவித்ததில் அவன் அதனோடச் சேர்ந்த​ ஒன்றாக​ அறியத் தவறியிருந்தான் . இனறு ​ ஈழத்தில் இருக்கும் எந்த கல்விநிலையம் வாசிப்பு பற்றி  ஒன்றிருப்பதைப்  அறிந்திருக்கிறது . படிப்பிக்கும் ஒரு ஆசிரியர் வெளிவாரியில் ...ஒரு கதை ,ஒரு நாவலாவது வாசித்திருப்பாரா ?காசை சுண்டிப் பார்த்து தான் அறிய​ வேண்டியிருக்கிறது . அவர் கணக்கிலே புலி , விலங்கியலில் 'புலி' ...இப்படி தான் இங்கேயும் , எதிர்ப்பக்கத்தில்.. 'சிங்கம்' என்றுமே இருக்கிற​ போக்கு . 'சுயம்' அதை ஏற்றும் அறிவு ....இல்லை . வடபகுதியில் புலி (மிருகம்) கிடையாது , ஈழத்திலே சிங்கமே கிடையாது . இல்லாதை பிடித்து வைத்துக் கொண்டு சண்டையிடும் ...கழன்ற​ ஜென்மங்கள் . ஒருவேளை சரக்கடித்தால் மட்டுமே மண்டை வேலை செய்கிறதோ ? .

அரசுகள் மத​ ,இன​ , கழிச்சன் ,புழிச்சன் என​ தினுசுகளில் கிடக்கின்றன​ , எதுமே உருப்படியாக​ இல்லை . அரசியல்வாதிகள் ஒரு வேலைவாய்ப்புக்காகத் தான் அரசியலுக்கே வாரார்கள் . அந்த​ மண்ணுகளிடமிருந்து எதிர்பார்க்க​ முடியுமா ?. உறுதி , அனுமதி , பத்திரம் கொடுக்கிற​ ஒபிஸ்காரர்கள் அவர்கள் . சட்டரீதியான​ ஊழல்ப்பெருஞ்சாலிகள் . நடந்திருக்காதே . புலிச்சாயம் காட்டியது செல்லுபடியாகி போய் விட்டிருக்குமே .மற்போக்கு அரசும் முற்போக்குத் தனமாக​ வழுவி நிற்கிறது . ஓராண்டு சாதனை பொறித்து விட்டது . இனி ஈராண்டு ...என​ கடந்து விடப் போகிறது .  அன்று வீசிய​ காற்றில் தமிழர் இருந்தார்கள் . இன்று சிங்களவர் இருக்கிறார்கள் . மாகாணவரசு அலகிருந்தால் ...மேற்கத்தைய​ ஜனநாயகத்தை தூக்கி எறிந்து போட்டு கூட்டரசாகி இருக்கலாமே . சோவியத் யூனியன் . குடியரசுக்கூட்டு . இரண்டு இருந்தால் என்ன​ ,பலது இருந்தால் என்ன​ ...கூட்டு பலம் தானே .

படிக்கிற​ போதே ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிற​ முறை நல்லதே . மாணவன் படிக்கிற​ மெசின் , அதை செய்ய​ வேண்டாம் , இதை செய்ய​ வேண்டாம் என்ற​ வேதம் எதுவுமே வேண்டாமே . மாணவன் புதுபுதுத் தொழில்களையும் கற்றுக் கொள்ளும் தேடல்காரனாகியும் கிடப்பான் . விளையாட்டுக்களுக்கும் , மரதன் ,சைக்கிள் ஓட்டங்களுக்கு வாசிகசாலைகள் .சனசமூக​ நிலையங்கள் எத்தகைய​ முறையில் பங்களித்தன​ என்பது ...கிராமத்தவருக்கு நன்குத் தெரியும் . அதேமுறையில் தொழிச்சங்களும் பங்களிப்பை நிகழ்த்தி வர​ ....வேலையில்லாப் பிரச்சனை ஒரு பிரச்சனையாயும் இராது .

தற்போதைய​  எந்த​ அரசியலாலும் இன்று  இந்தப் பிரச்சனையைத் தீர்க்க​ முடியாது . ராஜாஜி பிரமாணியத்தில் பிறந்தாலும் சாதியரில்லை . சேர் .பொன் .இராமநாதனும் கூட​ ....மரைன் கல்லூரி வைக்கப்பட​ வேண்டும் என்று வலியுறுத்தியவர் ...சாதியரில்லை . சாதியருக்கு எல்லாரையுமே சாதியருக்குள் தள்ளி விடுவதிலே ஆசை . அதிலே , மேல் , கீழ் ...என​ வித்தியாசம் கிடையாது . அரசியல் அதிகாரத்தைக் கொடுக்க​ ...பயங்கரவாரச்சட்டத்தின் கீழ் ,மட்டுமே தமிழரை கைது செய்யும் ஈழத்துப்போலிஸை  ...பற்றி தெரியாதவர்கள் இல்லை . அரசுக்கு அதிகாரம் பத்தவில்லை போலிஸும் , நிலமும் கொடுக்கவே முடியாது ...எனக் கூறி நிற்கிறது .பிறகும் என்னப் பிரச்சனை ? , சட்டம் ,மயிர் ...என​ இன்று வரையில் மாகாணவரசு தேர்த்தலையே பின்போட்டுக் கொண்டு வருகிறது . ஒரு படியிலாவது நேர்மையில்​ உறுதியாக​ நின்றிருந்தால் ...இந்த​ இனப்படுகொலைப்போரே தேவைப்பட்டிருக்காதே . இத்தனை சேதம் . தமிழர் கைகால்மனம் உடைந்து  யானைக்கு வெட்டிய​ குழிக்குள் கிடக்கிறார்கள் . வெறும் தரகர்களாக​ .ஏஜென்டுகளாக​ புத்திஜீவிகள் கூட​ ...இழுபடுகிறது , சனம் நசிபடுறது மாற​ வேண்டும் . இதற்கு மேலே அவர்களின் ஆயுதங்களை பரிசீலித்துப் பார்க்கும்  களமாக நாட்டை  வழங்றதும் ஒழிக்கப்பட​ வேண்டும்  . மற்ற​ நாடுகளைப் போல​ பாதுகாப்பு , மண்ணாங்கட்டி என​ ..வெளியாருக்கு படைமுகாம்களை அளிக்க நிலத்தை விற்கும்  ஒருஈன​  நாடாக​  மாறக் கூடாது .யப்பான் , துருக்கி , ஜேர்மனி , கட்டார் ...இருகிறதுக்காக​ ...இருக்க​ வேண்டியதில்லை .

அமைச்சுகள் எல்லாமே அரசியல் ஊது  குழலாய்   கிடக்கிறதை விட்டுவிட்டு  அறிவுடன் செயல்படுவதாக​  மாறவே மாட்டாவா ? . தொல்பொருள் ...அமைச்சு தமிழ்ப்பகுதிகளில் ...மாகாணவரசின் சிந்தனையில்லாது ...தடிகளை நடுகிறது  குழிப்பறிக்கிறது. போலிஸும் , நீதித்துறையும் மாறவே இல்லை . பிடுங்கிளாக​ சட்டம்பிகளாக​ வீம்புநடை போடுகின்றன​ .​ . நடுவரிற்கு ...மூச்சுக்காற்று கூட​ கசிவதில்லை . நடைபெறும் தவறுகள் திருத்தப்படுவதேயில்லை . நிரந்தர​ இருப்பு தான் . கயவாளிக் கூட்டங்களாக​ இருந்தால் சுயம்கள் எப்படி வெளிப்படும் ?.திறமைகள் எப்படி வெளிப்படும் .நாடு பற்றிய​ சிந்தனையின்றிய , எல்லா வாதங்களையும் நினைக்கிற​ குறும் தேசியங்கள் உண்மையிலடிமைப்பட்டுக் கிடப்பவையே ! .  

இந்த​ சாதனையை   ஈழவரசு புரிந்தே வ​ருகிறது  . ஆசாமிகளின் ஆட்சியில் பெண்மையின் இரக்கம் சிறுதுளியும் காணப்படவே இல்லை . இஸ்ரேல் , பாலாஸ்தீன​ நிலத்திலிருந்து எப்ப​ வெளியேறுகிறதோ , அப்பவே  ஈழத்தமிழருக்கும் விடியத் தொடங்கும்   என்பது  என்ன​ தலைவிதி .  முட்டாள்தனம் இல்லையா ? . அங்கே ஒரு ஜனநாயகம் , இங்கே ஒரு ஜனநாயகம் கிடையாது  . எங்குமே  ஜனநாயகம் ஒன்று தான் .சம ஜனநாயகம் . அங்கே அல்லைக்கைகள் வரைவிலக்கணத்தை மாற்றி எழுதுவார்கள் . நாம் காத்திருக்க​ வேண்டியதில்லை .

அது இந்த​ ஜென்மத்தில் நடக்க மாட்டாது .தெரிகிறது. எந்த​ ஜென்மத்தில் நடக்கப் போகிறதோ ..? . தென் அமெரிக்கா ,  இச்சூழலை 'கடன் பொறி' என​ விமர்சிக்கிறது . உலக​ம்  பிரெஞ்சுப்புரட்சியைப் பின்பற்றி இருந்தால்  ...இங்கே  கனவுகள்  ஏன் வருகின்றன ?. தற்போதைய​ பிரான்சு நாடு  ...அழிப்பதிலும் கூட்டு . அது  ஏற்படுத்தி​ , வளர்த்து விட்ட​ அமெரிக்காவும் , அல்லைக்கைகளும் பெரும்பூதங்களாக உருவெடுத்து​  அதன் முன்னால் எழுந்து நிற்கின்றன​ . நாடுகளின் வலையமைப்புகளில் ...​இரகசியக் கூட்டங்களை வைக்காமல் பகிரங்கமா வைத்திருந்தால் ஒருவேளை இந்த​ சூறாவளிகள் வீசாமல் போய் விட்டிருக்குமா ?.

சூறாவளி வீசினால் வெளிக்க  நீண்ட​  காலம்  இன்னமும்  எடுக்கிறது ! . இதில் , நம் வாழ்வு கருகி சுயமும் மக்கி மனசுக்குள்ள​ பஞ்சவர்ணக் கிளி பறக்காமலே போய் விடுகிறது . மனிதவாழ்வு இருப்பை தக்க​ வைக்க​ பிள்ளைகளைப் பெற்று புளுதியில் ... எறிந்து நாட்களும் கழிந்து கொண்டிருக்கிறது .

கனடாவில் ஏற்பட்ட​ ....காந்திக்கதிரை தற்போதைய​  ஈழ​ அரசும் சிறுக​ பற்ற​ வைக்க​ முயல்வது போல​ ...மயக்கம் காட்டுகிறது . அது வளர்ச்சியுற்று ஜனநாயகத்தை நோக்கி நடை போடுமா...? . செயற்கை தொழினுட்பத்திற்க்கு கூட​ தெரியாத​ சங்கதி . எந்தக்காலத்திலும் வன்முறை தடம் ...மனிதக்குலத்திற்கு ஆரோக்கியமானதில்லை . A I காந்தி உருவாகவே முடியாது . ஈழத்தைப் போல​ கோடூரங்கள் நிகழ்ந்த​ தென் ஆபிரிக்காவில் ...மலர்ச்சி காணப்படவில்லையா !  தனிமனிதர்கள் , ஆமாம் , காந்தி ,  ஆபிரகாம்லிங்கன் , மண்டலா ...ஈழத்திலும் தனி  மனிதர்களாலும் அவர்களைச் சூழ்ந்த​ அணியினினாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ ...???? .

வீட்டுக்கு வர​ வழமை போலவேயாகி விட்டது .

வீட்டோட​ நடத்துற​ கடையை  செல்வன் மூடிவிட்டிருந்தான் . பெடியள்களின் களமும் சுடுகாடாய் கிடக்கின்றன​ .

ஒருகாலத்தில் விளையாட்டுக்கழகம் என​ புளுதி கிளப்பிய​​ நிலங்களை ... பத்தை மேய்ந்து போய்க் கிடக்கின்றன​ .   தற்போதைய​ இருச்சக்கர​ கலாச்சாரத்தில் , வாற்ஸப்பில் ...பெடியளுக்கு எதற்குமே நேரமில்லை . அரசியல்  ஒரு சூரியன் ! . அதை கருமேகங்கள்   மூடி இருளாக்கி  கிடக்கிறது . பிச்சை எடுத்தாலும் கல்வி கற்க​ வேண்டும் என்ற​ வள்ளுவனைக் கேட்​டு, உதைக்க​ ...பல​ கேள்விகள் உள்ளே பிரவாகிக்கின்றன​ . பதினாலு வயசுப் பொடியன் கடையிலே பழியாய்க் கிடக்கிறான் .ஒரு அப்பன் மட்டும் பிள்ளைகளுக்கு தோழனாக​ , தோழர்களாக​ இருக்க​ முடியாது .வெளியில் கலகல​ தோழமை சுயம்  நிலவ​ வேண்டும் . குழந்தைகள் மகிழ​  குழந்தைகள் மத்தியிலே தான் விட​ப்படுகிறார்கள்.

எங்கே போனாலும்  . இந்த​ ' அரசியலில் விடுதலை வேண்டும்'  என்றதுக்கே ...கடைசியில் வந்து விழுந்து விடுகிறான் ..  சுருக்கம் விழுந்து போன​ கைத்தோல்...முந்தியும் ...தூக்க​ பலமில்லாத​ கைகள் என​ மனம் நொந்த நாட்கள்  நினைவிற்கு வருகிறது . முட்டாள் சனம் !. வீரம் கொழித்த​ இனம் . 20 வயதிலே வீரர்களாக​ ஓடித்திரிந்த​ சரித்திரம் கிடக்கிறது . பிரிட்டீஸ் முறைகளையும் ,சிங்கள​ முறைகளையும் வேதங்கள் என​ மூளையில் பச்சைக்குத்திக் கொண்டு கிடக்கிற​ அறுந்த​ சனம் ... ??? , சுயமுறைகளை தேடி அறியும் சுயம் கூட​ கிடையாது  கிடக்கிறது . காலுக்க​ , கையிலே ​  ஆயுதங்கள் தரித்து ஊறுகிற புழுபூச்சிகள் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த​ தேசத்தையுமே அழித்து விடும் என்பது எவருக்குமே புரியவில்லை  . ஆயுதங்களில் போய் காதல் கொண்டிருக்கிற​ இந்த​ சமூகங்களை என்ன​ செய்வது? . கதவைத் திறந்து நுழைகிறான் . அவனும் முந்தி  ஒரு குழுவில் இருந்தது மனைவிக்குத் தெரியவே தெரியாது . தெரிந்தால் ...வேற​ பயப்படுவாள்'' என்னங்க​ , இவ்வளவு நேரம் . நித்திரையும் வேணுமப்பா!'' என்று மனைவியின் குரலில் அன்பு இழையோடுகிறது . 'தனிச்சுப்போன​ பறவையாய் ஊரில் இருக்கிறான் ' என்றதை அவளும் புரிந்து தான் இருக்கிறாள். வெளிநாடு ?...அது இன்னொரு மலச்சிக்கல் மட்டுமில்லை சகதியும் கூட​ தான் .  எல்லாமே விடுதலை உணர்வையையும் ​  ​நலமடித்துக்  கொண்டிருக்கிறவை .

சோவியத் யூனியன் , USSR​ கூட்டு ஆசியப்பகுதியிலும் ஏற்பட்டிருந்தால்  எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும் .ஈழத்தமிழரும் ஜனநாயக​ உரிமைகள் பெற்றிருப்பர்,'' நாமும் ஈழவர் ''என்ற​ நினைப்பில் விவசாயம் , தொழில்த்துறையில் சுதந்திரமாக​ கவனத்தைப் பதித்து...தமிழ், சிங்கள​ பேதமில்லாது முன்னேறிக் கொண்டிருப்போம் . பகல்க்கனவுகள்  .

சிங்களவரை  ...சந்தேகப்பிராணி​ என​ வெறுத்திருக்க​ மாட்டோம் .  சிலைகளையும் ,பெயர்பலகைகளும் நட்டு மண்ணின் வாசனையை மறக்கடிக்கிற​தை சகித்தும் நினைப்புகளும் துரத்திக் கொண்டிருக்க அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிற  மாட்டோம்  . மொத்தத்தில் , பகைவர் , வஞ்சகர் , காலைவாரிகள் , எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ   என்று​ சதா அச்சத்தில்  உழன்று கொண்டிருக்கிற  வாழ்வு வாழ​ மாட்டோம் . இனப்படுகொலைகளை ,  ஊனத்தை   சுமந்து கொண்டு ....பாலாஸ்தீனமாக்கப்பட்ட​ ஈழமண்ணில் பழைய​ வாழ்க்கையை நோக்கி ஏங்கிக்  கொண்டிருக்கிறோம்  . தற்போதைய​ அரசால் ​அவற்றையெல்லாம் மீட்டுக் கொடுத்து விட முடியுமா ?. கதை விடுறது போலவும் ​ படுகிறது . கொஞ்சம் நட்பைச் சுமந்த​ முகங்கள் என்பது உணரப்படுகிறது  . நம்பி மறுபடியும் ஏமாந்து விடப் போறோமோ ? . அது தானே வழமை .

பழைய​ அரசுகளைப் போலவே , பெண்னுரிமைகளை காலில் போட்டு மிதித்துஅன்னையர் முன்னணியினரை உதாசீனப்படுத்தி , அன்னியப்படுத்தி  வருவது ...தவறாகப்படுகிறது . இணைப்பை பிரித்து , எதிராக​ நின்ற​ இவர்களின் பழைய​ செயற்பாடுகள் சிலவும்...குறுக்கே வருகின்றன . கடைசியில் , இவர்களும் குறும் தேசீகள்  தானோ ? என்ற​ ஐயமும் ஏற்படுவதை தவிர்க்க​ முடியவில்லை . மாகாண​ தேர்த்தலைகளை வைத்து அப்பிரச்சனையை தமிழரிடம் பாரப்படுத்தி விட்டால் ...வரவு செலவு திட்டதிலும்  நிதி ஒதுக்கி , ஒதுக்கி புறக்கணிக்க்கிறதை நிறுத்தி விட்டால் ..., நல்ல​ ஆட்களிடம் போய் கேட்பதாகவும் படுகிறது . காதல் சுகமானது . சிலவேளை 'கனவும் மெய்​ படலாம்  '. ஒரு  காலத்தில் , ரூபவாகிணியில் ,வானொலியில் ...ஒலித்த பிரேமதாசாவின் கவிதைகள் ​ ...அந்த​  நட்பைச் சுமந்த​ குறுகிய​ காலமும் நினைவில் வந்து போக தவறவில்லை . தற்போதைய​ அரசு முதல்வரும்...பிரேமரைப் போல​ நட்புமுகம் காட்டி நிற்கிறார் . பிரேமரின் மகனிலும் அதே முகம் ...காணப்படுகிறது . இருவரும் சேர்ந்தால் நல்லாய் இருக்குமே . ஆனால் சேர​ மாட்டார்கள் . எதிர்பார்க்க​ ...நம்மில்  எந்த​ விடுதலைக்குழு இணைந்தது . இணைந்திருந்தால் ...இன்னும் கொஞ்சம் வீரம் வெளிப்பட்டிருக்கும் .  உதிரிகளாக​ உருப்படாமல் அழிந்தது தானே மிச்சம் .

உலகத்தின் மனசாட்சி​ பாலாஸ்தீன​ மக்களை பேரம் பேசுவது போல​ ..பேச​ முடிந்திருக்கும் . இங்கே , எழுதுற ஒப்பந்தம்  ஈரம் காயமுதலே கிழித்தெறியபடுகிறது  வெளியில் யாருக்குத் தெரிகிறது  ?  இஸ்ரேலால் ,ஈழத்தால் ஒரு தீர்வைக் கூட​ முன்வைக்க​ முடியாது . அது தான் நெடுக​ கலவரம் ,கொலையென​ மும்மணித்தாக்குதல்கள் . அமெரிக்காவிற்கு எதிராக  ஒவ்வொரு நாடும் சிறுகவாவது ​ஒரே ஒரு தடை உலகளவில் எடுக்கிற​ போது ...ஏற்கனவே , காந்திக்கிழவர் அன்றே அன்னிய​ ஆடை எரித்திருக்கிறார் , அதற்கு  அமெரிக்கா ​ காட்டூனில் , சப்பாத்தில் , காலுறையில்....காந்திப்படத்துடன் மிதிக்கிற​ ...ஒருவித​ அவமதிப்புகளை செய்கிறது   , காந்திக்கு கிட்ட​ அமெரிக்கா நெருங்க  முடிவதில்லை , இஸ்ரேலின் கோட்டையில் வெடிப்பு ஏற்பட்டு விடும் . தெனாபிரிக்காவில் இவர்களின் போர்க்குற்றங்கள் விசாரிக்கிற​ போது பலபலவென​ விடியிற​ போரற்ற​ அழகான​ வானத்தை கூடப்பார்க்கலாம் .அதுவரையில் , சேரனின் கவிதையில் வருவது போல​​ எல்லோரும் நிர்வாணமாக​  திரிய​ வேண்டியது தான் .  அமெரிக்காவிற்கு என்ன​ ஐரோப்பாவிற்கே பிடித்ததாயிற்றே ! ''தையன​ தையன​ தா ! ''. ஆயுதங்களைக் கொண்டு  ஒருபோதும்  பசியாற​ முடியாது தம்பிகளா . பகட்டு , ஆயுதங்களை... விட​ குணமே  முக்கியம் !  கடைசியில் தர்மமே வெல்லும் . மகாபாரதப்போரிலே சொல்லப்படுற​ அதே தர்மம் தான் !. தர்மம் தன்னை சூது கவ்வும் . அது மீண்டு ...தன் வெற்றியையும் பொறிக்கும் !.​

உணவுப்பொருட்களை அனுப்புவதை தடைபடுத்திக் கொண்டு வரும் போது ஆயுதம் மெலிந்து உருக்குலைந்து போய் விடும்  .ஈழம் போல​ சிறிய​ தீவிற்கு என்னத்திற்கு 500 , 1000 ... இறாத்தல் , கிலோ வெடிகுண்டுகள் ? . வழங்கியவை அவை .பங்குச்சந்தை முறை ஒழியட்டும் . இவர்களுக்கு அதை நன்மைக்கு பாவிக்கவேத் தெரியாது . ஆசியருக்குத் தான் மண்ணை அள்ளி வீசி சாபம் இடும் முறைமை இருக்கிறதே . பழைய​ காலத்தில் ...கலம்பகம் பாடும் முறைமையும் இருக்கிறது . எழுத்து எட்டுத் திக்கும் பறை அறிவிக்கட்டும் .

நடைமுறை அரசியலை   ஒதுக்கி கடந்து ​ போகவும் முடியவில்லை . சதா முட்களைக் கொட்டி விடுற​ தலைவர்களாக​ இருக்கிறார்கள் .  எந்த​ தலைவரையும் நேர்மையாக​ எதிர்பார்க்க முடியவில்லை...!. ​  இங்கேயும் ,எந்த​ ஈழத்தலைவர் பூவாரிக் கொட்டியிருக்கிறார் ?.  இருந்தாலும் கைகோர்த்த​ அந்தக் கவிதைகள் ... வரிகள்..?  நிச்சியம் ஒரு கவிஞன் உள்ளத்தால் பாடுகிறவன் . பிரேமரை பொய்யர் எனக் கூற​ அவனுக்கு மனம் வரவே இல்லை . சிலவேளை கற்பனைகளும் சுகமானவை  . தடம் புரழ்ந்தாலும்  கூட​ தற்போதையரின்  மலையகப் பேச்சும் பொறித்து  நிற்கிறது .

உக்ரேனை அறிய​ கிளம்பி கடைசியில் , ஈழத்தின் ஒரு குறுக்குவெட்டை அறிந்தது .. மிச்சம்  ! அதன் குறும் தேசீகளால்  பொருளாதாரவளர்ச்சியை ஒருபோதும் அடைய​ முடியாது , கொள்கைகளை சீர் செய்யா விடில் கானல் நீராகவே இருக்கவும் போகிறது  . அருளரின் வகுப்பு அயர்ச்சியைக் கொடுத்தி​ருந்தது .

எல்லாமே மறுபடியுமா ? . மூளையில் இலத்திரன்கள் குறுக்கு மருக்காய் ஓடுகின்றன ​  கேள்விக்குறிகள்  மாறாது அப்படியே தான் ...நகர​ அலங்காரக் கோபுரங்களாக​ நிற்கின்றன .விழுவது எழுவதற்குத் தானே . ஒரேஒரு செங்கல்லை எடுத்து வைக்கிற​ போது ...துளியாகி விடுகிறது . முன்னோரை புறந்தள்ளி விடாது முயற்சியுடையவராய் இருப்போம் .இகழ்ச்சியடைய​ மாட்டோ . யார் இந்தக் கண்ணன் , இடையில் வந்து பகவத்கீதை சொல்வது ?   அசரீயையாய் இருக்க​ வேண்டும் !

ஒருமுறை தோமஸ் அல்வா எடிசன் மின்சார குமிழ்விளக்கை முதலில் தயாரிக்கிற​​ ஆய்வுக்கூடம்  முழுமையாக​ நெருப்பில் எரிந்து போன  போது மனைவியிடம் காட்டி '' இந்தக்காட்சியை ரசி '' என்று கூறி சந்தோசமாக​ கூறினாராம் . அயலவர் , நண்பரையும் கூட்டி பார்ட்டியும் வைத்தார் . மீள​  ஆய்வுக்கூடத்தைக் கட்டி எழுப்பி...இன்று நாம் மின்சார​ விளக்குகளைப் பெற்றுக் கொண்திருக்கிறோம் . எப்படி நிகழ்ந்தது . இந்த​ மண் எங்களுக்கு சொந்த​ மண் !

தோல்விகள் என்றும் தோல்விகள்  கிடையாது . ''மனமே  !  வழி நடத்து . தவறுகள் மலிந்து தோல்வியுற்ற​ போதிலும் ...வீரம் கொப்பளித்திருக்கிறது , தோழமைகள் சிறக்கடித்திருக்கிறது , பள்ளிச்சிறைகளிலே அடைப்பட்டிருந்த​ இளைஞர்களிற்கு ..வெளியில் நிலவும் சீர்கேடுகள் முதல் தடவையாக​ தெரிந்திருக்கிறது . இரத்தமும் , வலியும் ...மரணமும் , எல்லா பெண்களுமே வாழ்வில் நிதம்  கடக்கிற​ கண்டம் தான்  . அதை அவர்கள் இயல்பாய் ஏற்றுக் கொள்ளவில்லையா ? . இப்ப​ ஆண்களும்  கண்டத்தை கடந்திருக்கிறார்கள் . அனுபவித்திருக்கிறார்கள் . மாறுபாடு அது தான்.  முதல் தடவை அழுகை என்றால் என்னவென்று தெரிய​ வந்திருக்கிறது . ஆண்பிள்ளைகள் அழவும்செய்வார்களா? . செய்கிறார்கள் . அழுகை நிச்சியம் புரட்சி செய்யும் .

''இன்னுமா நித்திரை கொள்ளவில்லை , எதையும் யோசிக்காமல் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் . நித்திரை  வரும்'' என்கிற​ மனிசியின் குரலும் பாயில் அவனை நெருக்கி அணைத்துக் கொண்டதும் ...ஆறுதலாகவே கிடக்கிறது  .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா (Google Nano Banana வழி வநகி.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்