கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]
1.
வரலாற்று முக்கியத்துவம்
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? 
அறிமுகம்: எண்பதுகளின் ஈழத்துக்கவிதைச் சூழலும் சோலைக்கிளியின் வரவும்
வானதி பிறந்தது வசதியான குடும்பத்தில். ஆனால் அவளின் வாழ்க்கையின் உண்மையான வடிவம் கனடாவின் பனிக்காற்றில் தான் செதுக்கப்பட்டது. ஒழுங்கும் ஒத்திகையும் கலந்து கிடந்த வளர்ப்பு, அதன் நடுவே, கடின உழைப்பை தன் நெஞ்சின் துடிப்பாக மாற்றிக் கொண்டு, அவள் வைத்தியராக உயர்ந்தாள்.
ஈழத்திலிருந்து ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழர். இவர் இலங்கைக் காரைநகரில் 1915 பிப்ரவரி 15 பிறந்தவர். இவரது தந்தையார் இலங்கையில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரும் அவரது தந்தையாரும் இலக்கிய ஆர்வமிக்கவர்கள். அதனால் அவரது மகன் அழகு சுப்பிரமணியத்தை வெளிநாட்டில் சட்டத் துறையில் பயில வைத்தார். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது குடும்பத்தினரின் இலக்கியத்துறை ஆர்வத்தின் காரணமாக அழகு சுப்பிரமணியமும் ஆங்கில இலக்கியத்துறையில் ஈடுபட்டு உலகப் புகழ் பெற வழிவகுத்தது.
மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.
தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.





அது புதிய வண்ணத்துப்பூச்சி 


கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.
முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









