முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய படையினரின் மனித உரிமை மீறலகள்! (ஓவியம் - AI) - நந்திவர்மப் பல்லவன் -

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள். . - வ.ந.கிரிதரன் -
- ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -
83 ஜூலை இனப்படுகொலை இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனை. இலங்கையை 26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது. போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே. இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை' ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம்.
அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.
இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல் நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்) இணைத்திருக்கின்றேன். இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் , ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.
இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.
உலகம் அமைதி பெற! - சந்திரகெளரி சிவபாலன் -
* ஓவியம் - AIஇன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய பாரதநாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.
டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (2) - ஜோதிகுமார் -
“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”
எழுத்தாளர் சிவராசா கருணாகரனின் தேசிய மக்கள் சக்தி பற்றிய கேள்விகள் சில பற்றி..... - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?
இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் அல்லது கருத்துகள் இவை
இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்காவின் இனவாதத்துக்கெதிரான ஆரோக்கியமான அரசியல்! - நந்திவர்மப்பல்லவன் -
- இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா -
முகநூலில் எம்.எல்.எம். மன்சூர் ( MLM Mansoor) என்பவரின் இப்பதிவு என் கண்களில் பட்டது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. இவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வேண்டுபவை. அதனால் பகிர்ந்து கொள்கின்றேன்.
தற்போது ஆட்சியிலிருக்கும் அநுரா குமார திசாநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ளன. இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கைகளிலிருந்த ஆட்சி முதன் முறையாக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் கையில் சென்றிருக்கின்றது. மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றம். இதனை இதுவரை அதிகாரத்தைத் தம் கைகளில் வைத்திருந்த தமிழ், சிங்கள அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் பதிவு.
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இனவாதத்தை அநுரா அரசால் பதிலுக்குப் பதில் தோலுரித்து காட்ட முடியும். மேலும் அநுராவின் பலம் அவரது வர்க்கத்துப் பின்னணி. இதனால் தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செயயும் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதையே அம்மக்களும் விரும்புவார்கள். எனவே அவ்வளவு இலகுவாக அநுரா அரசைப் பதவியிலிருந்து கலைக்க முடியாது. அவர்களுக்குப் பின்னால் ஒழுங்காக,அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமொனறு அணி திரண்டு நிற்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சிந்தனைகளும், அதனை நிரூபிப்பதில் உள்ள சவால்களும் பற்றி.... - நந்திவர்மப்பல்லவன் -
அண்மையில் பிராம்டன் மேயர் பற்றிக் பிரவுண் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தபோது இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றி சில வார்த்தைகளை உதிர்த்தார். யாராவது அதனை மறுத்தால் இலங்கைக்குச் செல்லலாம் என்னும் கருத்துப்பட அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தார். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவு என்ப்து மிகப்பெரிய சோகம் துயரம். மானுட அழிவு. தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஓர் இனப்படுகொலையாகவே கருதுகின்றார்கள். பற்றிக் பிறவுண் போன்ற் அரசியல்வாதிகள் தம் அரசியல் நலன்களுக்காக அதனைப் பாவிக்கின்றார்கள். ஆனால் ஏன் சர்வதேச அரங்கில் இதனை ஓர் இனப்படுகொலையாக இதுவரையில் ஏற்கச்செய்ய முடியவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. ஏன்? ஏன் ஐக்கிய நாடுகள் சபையில் முள்ளிவாய்க்கால் அழிவை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் இருக்கிறது?
தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்! - நந்திவர்மப்பல்லவன் -
(* ஓவியம் AI)
தேர்தல் வெற்றிக்காக, உங்கள் அரசியல் நலன்களுக்காகத் தொடர்ந்தும் இனவாதம் பேசாதீர்கள். அவன் சிங்களவன். அவனுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று கோசம் எழுப்பாதீர்கள். அது இனவாதம். அதற்குப் பதிலாக இதுவரை கால அரசுகள் இனவாதம் பேசின. நாமும் இனவாதம் பேசினோம். இனியும் இனவாதம் பேசுவதைத் தவிர்ப்போம். ஆனால் இதுவரை இலங்கையில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும், போர்களுக்கும் காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இதுவரை கிட்டவில்லை. அதுவரை பிரதேசமொன்றில் வாழும் மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பது ஆரோக்கியமானது, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க அது அவசியம் என்று கோரிக்கை விடுங்கள். அது நியாயமானது. ஆரோக்கியமானது. இனவாதமற்றது.
அதே நேரத்தில் எம் அரசியல்வாதிகள் இதுவரை புரிந்த அனைத்துத் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணத்துக்கு எம் பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென்று வந்த நிதியைத் திருப்பி அனுப்பினோம். ஆனால் அதே சமயம் நாம் எமக்கு, எம் பதவிகள் காரணமாகக் கிடைத்த நன்மைகளை உதாசீனம் செய்யவில்லை. முன் கதவாலும், பின் கதவாலும் ஏற்றுக்கொண்டோம்.
தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு! - நந்திவர்மப் பல்லவன் -
நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.
ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே! - நந்திவர்மப்பல்லவன் -
ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே!
தமிழகத்தின் நிலை கண்டு அறிஞர் அண்ணா 'ஏ! தாழ்ந்த தமிழகமே!' என்று மனம் நொந்து நூலெழுதினார். உரைகள் பல ஆற்றினார். மக்களைத் தட்டி எழுப்பினார். விழிப்படைய வைத்தார். என் பிரியத்துக்குரிய யாழ் மண்ணின் அண்மைக்கால நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாழ்ந்து விட்டதா என்னும் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. அல்லது யாழ்ப்பாணத்தின் மேன்மையினை கீழ்மைத்தனமான செய்லகள் சில மூடி மறைத்துவிட்டனவா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.
இலங்கையில் தமிழர்கள் வடகிழக்கில் செறிந்து வாழ்கின்றார்கள். ஏனைய பகுதிகளில் நடக்காத பல செயல்கள் யாழ் மாவட்டத்தில் தற்போது நடக்கின்றன. அவை யாழ் மண்ணின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன.
அடிக்கடி நடக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள்! பணம் சம்பாதிகக் வேண்டுமென்ற வெறியில் நிகழும் முறைகேடான நிகழ்வுகள். அடிக்கடி நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள். அண்மையில் வீட்டுச் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறிப்புகுந்த ஒருவன் அவரது தாலிக்கொடியைப்பறித்தெடுத்துச் சென்றிருக்கின்றான். இளம் அரசியல்வாதிகள் சிலர் நடந்து கொள்ளும் அநாகரிக முறை. பெண்களைப்பற்றிய பகிரங்கமான அவதூறுகள். போலி முகநூற் கணக்குகள் மூலம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைத்தல். யாழ் பல்கலைகக்ழக மாணவ்ர்கள பட்டமளிப்பு விழாவைக் களியாட்ட விழாவாக மாற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். இது போதாதென்று யு டியூப் அங்கிள், அன்ரிமாரின் இளம் சமுதாயத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்கள்.
ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி..... - நந்திவர்மப்பல்லவன் -
- ஆய்வாளர் மன்னர் மன்னன் -
அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன். ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது. Saattai யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68
சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.
1. ஒற்றெழுத்து சொல்லுக்கு முதலில் வராது.
இக்கூற்று பொதுவாகச் சரியென்று பட்டாலும் , ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இதற்கெதிராகவும் தர்க்கிக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு வசனத்தை எடுப்போம். அது - நான் திரைப்படம் பார்த்தேன். இதன் முதலெழுத்து நா. நெடில். இவ்வசனத்தில் முதற் சொல்லான நான் என்பதைப் பிரித்து எழுதினால் அது எப்படி இருக்கும்? இப்படி இருக்கும் - ந்+ஆ+ன் . அதாவது நான் என்பதன் முதல் எழுத்து ந். இப்படிப்பார்த்தால் இவ்வசனத்தின் முதலெழுத்து ஒற்றெழுத்தில் ஆரம்பமாகின்றது எனத் தர்க்கரீதியாக வாதிடலாமல்லவா.
2. இரண்டாவது திராவிடம் என்பது வடமொழி. தாய் மொழிக்கு எப்படி அந்நிய மொழியில் பெயர் வைக்கலாம்? அப்படி யாராவது வைப்பார்களா?
இதற்கு என் பதில்: தமிழ் மொழியில் பல சொற்கள் பல திசைகளிலிருந்து வந்து சேர்ந்துள்ளன. அவ்வகையில் தமிழில் பல வட சொற்கள் அடங்கியுள்ளன. சுதந்திரம், சுந்தரம், பிரபாகரன், இப்படிப் பல. பலர் தம் குழந்தைகளுக்கு இவ்விதம் அந்நிய மொழியில் பெயர்களை வைக்கின்றார்கள். இதற்குக் காரணம் இம்மொழிச் சொற்கள் அவ்வளவுதூரம் தமிழில் கலந்துள்ளன. பாரதியாரின் கவிதைகள் பலவற்றில் வட சொற்கள் உள்ளன. உதாரணத்துக்கு வீர சுதந்திரம் வேண்டி நின்றார் என்னும் கவிதையினைக் கூறலாம்.
திராவிடம் என்னும் சொல்லை மேனாட்டு அறிஞரான கால்ட்வெல் தென்னிந்திய மொழிபேசும் மக்கள் அனைவரையும் குறிப்பதற்குப் பயன்படுத்தினாலும் , வடமொழியில் தமிழ் என்பதைக் குறிக்கவே பயன்பட்டது என்பர் தேவநேயப் பாவாணர் போன்ற மொழி அறிஞர் பலர். எனக்கும் அதில் உடன்பாடே.
மேலும் மன்னர் மன்னன் 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாராவது திராவிடம் என்னும் சொல்லைப்பாவித்துள்ளனரா என்று கேள்வி கேட்கின்றார். பின்னர் அதை மறந்து போய் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் பாவிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொள்கின்றார்.
சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசுவின் காந்திய அனுபவங்கள்.
சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.
அங்கம் 23
1974ஆம் ஆண்டு கிளிநொச்சி, உருத்திரபுரம் “காந்தி சேவா சங்கம்” பொதுக்கூட்டம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்து இருத்தார் அதன் செயலாளர் அமரர் சி.க.வேலாயுதபிள்ளை அவர்கள் அதன் தலைவர் திரு.பெரியதம்பி (முன்னாள் பாராளுமன்ற சமநேர மொழிபெயரப்பாளர்) இந்தக் கூட்டத்திற்கு காந்திய வாதிகளான திருகோணமலை காந்தி மாஸ்ரர் அவர்கள், உருத்திரபுரம குருகுலம் கதிரவேலு அப்பு ஆசிரியர், ஆ.ம.செல்லத்துரை ஆசிரியர், சி.க.நல்லதம்பி. எஸ்.ஏ.டேவிட், சோ.இராச்சுந்தரம், மு.பாக்கியநாதன், எஸ். ஶ்ரீரங்கன், இராதாகிரஷ்ணன் இன்னும் பலர் கிட்டத்தட்ட 75-80 பேர் பார்வையாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். மத்ய போசனம் வழங்கப்பட்டது். வழமைபோல காந்தி மாஸ்ரர் புத்தகக் கடையை கடை விரித்திருந்தார். வாசகர்களுக்கு அது விருந்தாயற்று பலர் நூல்களை வாங்கினார்கள். நானும் சில நூல்களை வாங்கினேன். அவர் எங்கு புத்தகக் கடை வைத்தாலும் அவருக்காக புத்தகங்கள் வாங்குவேன். சிறிய சிறிய நூல்கள் பல நூல்களை அவருக்கு உதவ செய்யும் நோக்கிலும் வாங்குவேன். கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்தனர்.
காந்தியம் பிறக்க அடித்தளமிட்ட வரலாறு.
அடுத்தநாள் நான் சாந்தி கிளினிக்கிற்குப் போனேன். அப்போது இராசுந்தரம் அவர்கள் கூறினாரகள் நாம் இந்த ஊரில் சாதியில் ஒதுக்கப்பட்ட ஒரு குடியிருப்பு உண்டு. அவர்கள் நகரசுத்தி தொழிலாளர்கள். அவர்களே இந்த நகரத்தைச்சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள் இவர்கள் முழுப்பேரும் மலையத்தை சேரந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு சிறுவர் கல்வி, போசாக்கு உணவு , சுகாதார வாழ்க்கை போன்றவற்றை கற்பிக்க வேண்டும். இங்கிருந்து எமது சமூகத்திற்கு சில இங்கு இருந்து அத்திபாரம் போடுவோம் என முடிவு செய்து இரண்டு இளம் படித்த பெண் பிள்ளைகளை தெரிவு இதில் ஒரு பெண்பிள்ளை அந்த சமூகத்தில்இருந்தே தெரிவு செய்தோம். முதலில் வவுனியா நகரத்தில் உள்ள படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட பத்துப்பேர் வரையில் இராச்சுந்தரம் அவர்கள் அழைத்து பி .எஸ். மொகமட் கட்டிடத்தின் மேல் மாடியில் அவர்களது அனுமதி பெற்று 10-12 பேர் ஒன்று கூடி ஒரு விளக்கக் கூட்டம் நடத்தி அதில் நாம் சூசைப்பிள்ளையார் குளத்தில் குடியிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறுவர் பாடசாலையும் சத்துணவுக் கூடமும் நடத்துவதென்று முடிவு செய்து், மாதம் ஒருவரிடம் 10 ரூபா வீதம் வங்கி கட்டளை மூலம் பெறுவதென்று முடிவு செய்து அதனை இராச்சுந்தரமும் பாக்கியநாதனும் சேர்ந்து சேர்க்க வேண்டும் என்ற முடிவுடன் வந்தவர்கள் யாவரும் வங்கி ஸ்ராண்டிங் ஓடரில் 10ரூபா செலுத்த கையெழுத்திட்டனர்.
தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா? - வ.ந.கிரிதரன் -
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?
'எம்மை மன்னித்து விடுங்கள்' - நந்திவர்மப்பல்லவன் -
சுயேட்சைப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரைப் பற்றிக் கூறியதாக முகநூலில் வாசித்தேன். இது பற்றிய காணொளியை முகநூல் நண்பர் நவமகன் கேதீஸ் தனது எதிர்வினையில் தந்திருக்கின்றார். அதற்கான இணைப்பு
இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று. உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது 'நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்' என்றே.
ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -
தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.
இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.
ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள் தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.
நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்? தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா? அல்லது அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா? அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின் கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.
நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம் தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான் இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.
பெரியார் சிந்தனைகள் - தொகுப்புகள்! பதிப்பாசிரியர் - வே.ஆனைமுத்து! பதிப்பகம் - சிந்தனையாளர் கழகம்! - ஊர்க்குருவி -
ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள்
ஈ.வெ.ரா பெரியார் பெரும் சிந்தனையாளர். வர்க்கம், வர்ணம், மூட நம்பிக்கைகளால் சிதைந்து கிடக்கும் உலகில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமநீதி, பெண் உரிமைகளுக்காக இருந்தவரை தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பிரமிப்பைத்தருகின்றன. அவரது சிந்தனையின் ஆழத்தைக் காட்டுகின்றன.
பெரியாரின் சிந்தனைகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் அவர் எழுத்துகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.அதற்குப்பின் அவற்றின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். அவற்றைப் படிக்காமல், அறியாமல் அவர் மீது சேற்றை வாரியிறைக்காதீர்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ராவய வார இதழின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான சிங்கள ஊடகவியலாளர் விக்டன் ஐவன் மறைந்தார்!
- ஊடகவியலாளர் விக்டர் ஐவன் -
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ராவய வார இதழின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான சிங்கள ஊடகவியலாளர் விக்டன் ஐவன் மறைந்தார்! விக்டர் ஐவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் பதிவுகள் இதழின் ஆழ்ந்த இரங்கல்.
அரசியல் ஆய்வாளரும், ராவய வார இதழின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான விக்டர் ஐவன் 1971இல் நடந்த ஜே.வி.பியின் முதலாவது புரட்சியில் லொகு அதுல என்னும் பெயரில் பங்குபற்றியவர் என்பதும் நினைவுகூரத்தக்கது. ராவய இதழை இவர் 1985இல் ஆரம்பித்தார். ஏனைய இன ஊடகவியலாளர்களுடன் ஆரோக்கியமான நட்பைப்பேணியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது! - வ.ந.கி -
ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகத் தேசம்.நெற் செய்தி வெளியிட்டுள்ளது.
சூழலியாளர், ஊடகவிலயாளர், எழுத்தாளர், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் என்னும் பன்முக ஆளுமையாளரான மு.தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டது அதிர்ச்சி தருவது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மு.தமிழ்ச்செல்வனைத் தாக்கியவர்கள் சட்டத்தின் மும் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவார்கள் என எதிர்பார்ப்போம்.
Nun other than ஆவணப்படம்! அருட்சகோதரி, அரசியல் செயற்பாட்டாளராக மாறிய கதை! சித்ரா லயனல்போப்பகேயின் வாழ்வும் வலிகளும்! - முருகபூபதி -
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக, அரசியல், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், அவ்வாறே கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருபவரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளருமான தோழர் லயனல் போப்பகேயின் அன்புத்துணைவியாருமான சகோதரி சித்ரா லயனல் போப்பகேயின் வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும் ஆவணப்படம்தான் Nun other than .
மெல்பன் Darebin Inter cultural centre இல் அண்மையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு எனது இரண்டாவது மகள் பிரியாவுடன் சென்றிருந்தேன். அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரனும் அவரது துணைவியார் திருமதி ஜெஸி ரவீந்திரனும் வந்திருந்தனர். எம்மைத்தவிர ஏனையோர் பிற சமூகத்தினர்தான்.
ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்து அருட்சகோதரியாக மாறி , மதம் சார்ந்த பணிகளுடன் சமூகப்பணிகளும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் சீர்மியத் தொண்டராகவும் இயங்கிய சித்ரா, எவ்வாறு மனித உரிமை ஆர்வலராக மாறினார், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசித்திபெற்ற விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக இணைந்தார், அத்துடன், மனித நேயம் மிக்க புரட்சியாளரான தோழர் லயனல் போப்பகேயின் காதல் மனைவியானார், அதனைத் தொடர்ந்து 1978 – 1983 காலப்பகுதியில் இலங்கையில் தோன்றிய அரசியல் அடக்குமுறை நெருக்கடிகளை அவர் எவ்வாறு எதிர்கெண்டார் முதலான செய்திகளை Nun other than ஆவணப்படம் சித்திரிக்கிறது.
ஆரோக்கியமான செயற்பாட்டினை வரவேற்போம்! -நந்திவர்மப்பல்லவன் -
அமைச்சர் விஜித ஹேரத்
அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் வடகிழக்கில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மையமாக வைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர் ஆகியோர் மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடினர். அநுரவின் அரசு தமிழர் சார்பான அரசு என்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை எழுப்புவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதற்குக் கடும் முயற்சியெடுத்தனர். இதனை அநுர அரசு முளையிலேயே கிள்ளி எறிந்தது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனேயே இனவாத அரசியல்வாதிகளை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்தார். இவ்விதம் இனவாதத்தைத் தூண்டியவர்களை இனவாதிகள் என்றார். நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறும் நினைவு கூரல்களைச் செய்யும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத் தடுக்க முடியாது. சட்டங்களை மீறுபவர்களைக் காவல்துறை கையாளும் என்று அவர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இனவாத அரசியல்வாதிகளின் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டது.
வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப் பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.
பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.
பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல. விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.
இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்மப்பல்லவன் -
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.