ஐபிசி தமிழில் ஒரு செய்தி வந்திருந்தது. அது இதுதான்: "சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்."
ஏற்கனவே ராஜபக்சாக்கள் நாட்டின் சில பகுதிகளைப் பிரித்துச் சீனாவிடம் தாரை வார்த்து விட்டார்கள் என்பதை விமல் வீரவன்ச மறந்து விட்டது ஆச்சரியம்தான். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ராஜபக்சாக்களும், ரணிலும் 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதை நாடே அறியும். கொழும்புத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததொன்று. இவற்றையெல்லாம் மறந்து விட்டு வடகிழக்கைப் போராட்டக்காரர்கள் பிரித்து விடுவார்கள் என்பதன் மூலம் இனவாதத்தை விமல் வீரவன்ச கையிலெடுத்துள்ளார்.
எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.
இக்கலவரம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.
தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார். ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது. இனக்கலவரக் காலத்தில் சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகளைக் கொன்று குவித்ததும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான். இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.
ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.
எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ள மாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு. எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புகழ் பெற்ற நாவல்களிலொன்று 'அன்னா கரினினா' . இந்நாவலைத் தழுவித் தமிழில் 1953இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 'பணக்காரி' என்னும் பெயரில் திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. சித்தூர் நாகையா அன்னாவின் கணவன் கரீன் ஆக நடித்துள்ள திரைப்படத்தால் அன்னா வேடத்தில் நடித்திருப்பவர் அந்நாளைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி. இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடுத்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.
வெரோன்ஸ்கி நாவலின் பிரதான பாத்திரங்களிலொன்று என்றாலும், தமிழ் உலகில் அன்னாவின் காதலன் என்னும் பாத்திரம் ஒருவிதத்தில் எதிர்மறையான பாத்திரம். தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இது போன்ற சவாலான பாத்திரங்கள் பலவற்றில் எம்ஜிஆர் நடித்திருக்கின்றார்.
தமிழில் வெளியான முதலாவது அண்டவெளிப் பயணத்தை விபரிக்கும் திரைப்படமான 'கலையரசி'; திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் வசூலில் தோல்வியுற்றாலும், டால்ஸ்டாயின் நாவலின் திரை வடிவம் என்ற வகையிலும், நாகையா, டி.ஆர்.ராஜகுமாரி & எம்ஜிஆர் நடிப்புக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்திரைப்படம் வெளியானபோது வெளியான பிச்சைக்காரி என்னும் திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றதாகவும், இதனால் அக்காலகட்டத்தில் பிச்சைக்காரி பணக்காரியானாள், பணக்காரி பிச்சைக்காரியானாள் என்று தமிழ்த்திரையுலகில் கேலி செய்யப்பட்டத்தாகவும் விக்கிபீடியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் இது போன்ற படங்களில் நடிப்பதில்லையென்று எம்ஜிஆர் முடிவு செய்ததாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூலை 10 நாவேந்தன் நினைவுதினம்
'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.
தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் இளைஞர் அணி முக்கியஸ்தராகக் கட்சிக் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் உணர்வும் தமிழ்த் தேசியவாதமும் வட கிழக்குப் பகுதிகளில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவும் வகை செய்தார். சுதந்திரன் பத்திரிகையில் ஆஸ்தான எழுத்தாளராகப் பல புனைபெயர்களில் பொருள் மிகுந்த கருத்துக்களை அள்ளித் தெளித்தவர். இவர் நடத்திய 'சங்கப்பலகை" என்ற பத்திரிகையில் 'நக்கீரன்" என்ற பெயரில் நாவேந்தன் எழுதிக் குவித்தவை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைத்த வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் தர்க்க முறையான வாதத்திறன் கொண்டவையாக அமைந்திருந்தன. அரசியல் எதிராளிகள் நாவேந்தன் மீது கொண்டிருந்த அச்சமும் நியாயமானதே.
"தமிழ்த் தேசிய வாதம் இன்று உண்மையாக வளர்ச்சியுற்று அகில உலகக் கவனத்தை ஈர்த்ததுடன் தென்னாசியாவில் ஒரு உறுதியான கருத்திற் கொள்ள வேண்டிய சக்தியாக வளர்ந்துள்ளதென்றால் அதில் நாவேந்தனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு." இவ்வாறு தனது கல்லூரிக் காலம் முதல் நாவேந்தனை நன்கறிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர். தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் நில உச்சவரம்பு கோரி கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற நடை பயணக்குழுவில் இடம்பெற்றவர். இறுதிவரை உறுதியான மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர்.
உடல் - அரசியல் இரண்டும் இரு வேறுபட்ட தளங்கள் உடல் தோன்றியபோது அரசியல் தோன்றவில்லை. ஆனால் அரசியல் உடலை முன்னிறுத்தித் தோன்றியது எனலாம். அரசியல் என்பது என்ன? அதிகாரத்தை நிலை நிறுத்துதலை அல்லது செயல்படுத்துலை அரசியல் எனக் கூறலாம். ஆனால் இது மட்டும் தான் அரசியலா என்றால் இல்லை., அதற்குள் பல்வேறு பட்டுணர்வுகள் அல்லது கருத்துகள் நிலவுகின்றன. அதிகாரம் செய்தலும் அரசியல் அந்த அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும் அரசியல்.
உடல் அரசியல் எனில் எதைக் கூறலாம்? எந்த வரையறைக்குள் அதை நிலைப்படுத்துவது என்ற பல சிந்தனைகள் உள்ளன. மனித உயிர் தனக்கான வாழ்வை வாழவும் கொண்டாடவும் முக்கிய கருவியாக இருப்பது உடல். அந்த உடல் தனிமனித நனவிலி மற்றும் விருப்பம் சார்ந்து மட்டும் இயங்கக்கூடியதா எனக் கேட்டால் இல்லை. அவ்வுடல் சமூகம் வரையறுத்த பண்பாடு அதிகாரம் அனைத்திற்கும் உட்பட்டு இருக்கக் கூடியதாகும். உடலின் இயக்கம் மனம் மற்றும் அறிவு சார்ந்து இயங்க கூடியது. ஒரு தனி மனிதனை எவ்வாறு சமூக மற்றும் பொதுவெளியில் ஒரு கட்டுக்குள் இயக்க இயலுகிறது., என்ற கேள்விக்கு அரசு அதிகாரம் அல்லது சமூக பண்பாடு எனப் பதிலுரைக்கலாம்.
(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்“சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.)
இன்று இயக்கவியலைப் (Dialectic) பார்க்கப் போகிறோம். இயற்கை, சமூகம் ஆகியவை ஒரு விதிக்குள் தான் இயங்குகிறது. அனைத்து நிகழ்வுகளையும், விதி என்று கூறிடமுடியாது. அதாவது நிகழ்வது அனைத்தும் விதியாகாது. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நடைபெறுவதையே விதி என்று கூறப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும், இன்றைய சமூகம், ஒரு மாறுதலுக்கு உட்பட்டு, அடுத்தப் புதிய சமூகத்திற்கு மாறும் என்பதை இயக்கவியல் ஏற்றுக் கொண்டு, விளக்குகிறது. அதனால் தொழிலாளர்களுக்குத் தேவையான அணுகுமுறை இயக்கவியல் ஆகும். இன்றைய சுரண்டும் சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இயக்கவியலை மறுக்கின்றனர். அவர்கள் இயக்கவியலுக்கு மாறான இயக்கமறுப்பியலை ஏற்கின்றனர். இன்று நாம் இயக்கவியலைப் பற்றிப் பார்ப்போம்.
மார்க்சியத் தத்துவமான, பொருள்முதல்வாதம் இயக்கவியல் அணுகுமுறையையே ஏற்கிறது. அதனால் தான் மார்க்சியத் தத்துவத்தை, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம், இயக்கவியலால் அணுகப்பட்டது. மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல், இயக்கவியல் முறையால் எழுதப்பட்டது. அதனால் தான், மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகள் இயக்கவியலை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சேவையாற்றிபோது, ஸ்னைப்பர் தாக்குதலுக்குப் புகழ் பெற்றவர். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு ஸ்னைப்பர் வீரனால் ஐந்து அல்லது ஆறு பேரைத்தான் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவர் ஒரே நாளில் 40 பேரைச்சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டவர். இப்போது உக்ரைனுக்கு உதவும் நோக்கத்தோடு, ரஸ்ய படையினருக்காகத் தலைநகரான கீவ்வில் தனது .338 ஸ்னைப்பர் ரைபிளுடன் வீதியில் காத்திருக்கின்றார். இவரைப் போலவே, பிரபல டென்னிஸ் வீரரான சேர்ஜி ஸ்ராகேவஸ்கியும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருக்கின்றார்.
உக்ரைன் - ரஸ்யா யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துவிட்டன. சென்ற பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஸ்யாவால் இந்த இந்த யுத்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரஸ்யா நாட்டின் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடக்காத படியால், யுத்தம் உக்ரைன் நாட்டில் நடப்பதால், இந்த யுத்தத்தில் உக்ரைன் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய போலாந்து நாட்டுப்பிரதமர், செக் குடியரசுப் பிரதமர், ஸ்லோவேனியா பிரதமர் ஆகியோர் உக்ரைனுக்கு சென்று, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி உக்ரைன் அதிபரைச் சந்தித்து உரையாடினார்கள். உக்ரைன் தலைநகரான கீவ்வில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. ஒரு வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய யுத்தம், நேசநாடுகள் உக்ரைனுக்கு உதவியதால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதே நேரம் உக்ரைன் நாட்டின் மீது ரஸ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து இருக்கின்றது. தலைநகரான கீவ்வையும், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வையும் கைப்பற்றினால் உக்ரைன் பலமிழந்து விடும் என்ற கணிப்பில் இந்தத் தாக்குதல்கள் ரஸ்யாவால் மேற்கொள்ளப் படுகின்றன.
[ நல்லதொரு கட்டுரை. தற்போது நடைபெறும் ருஷ்யா & உக்ரைன் மோதலைப் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை. உக்ரைன் தன் பூகோள கேந்திர முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுக்காது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதும், நேட்டோ நாடுகள் வார்சோ நாடுகளின்கூட்டணி கலைக்கப்பட்ட பின்னரும் ருஷ்யாவுக்கெதிரான விஸ்தரிப்பினை அதிகரித்து வந்ததும் இம்மோதலுக்கு முக்கிய காரணங்கள். போருக்கான காரணங்கள் எவையாயிருப்பினும் பாதிக்கப்படுவது உக்ரைன் நாட்டு அப்பாவி மக்களும், உக்ரைன், ருஷ்யாப் போர்வீரர்களும்தாம். விரைவில் யுத்தம் முடிவுக்கு வரட்டும். உக்ரைன் நடுநிலை நாடாக இருப்பது இம்மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். - பதிவுகள்.காம்]
யுத்தம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.
போருக்கு எதிராக நிற்றல் என்பது போரை அதை நிகழ்த்துபவர்மீதும் அதை உருவாக்கி நலன்பெறும் திட்டமிட்ட நாடுகள், சக்திகள் மீதுமான கூட்டு எதிர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால் நடப்பது அந்த நிலையை உருவாக்குபவர்களின் சக்திமிக்க ஊடகங்களும் குயுக்திகளும் மக்களை மூளைச்சலவை செய்து தம்மை காப்பாறிக்கொள்கின்றன. இந்தப் போரில் மேற்குலகினதும் அமெரிக்காவினதும் பெரும் பாத்திரத்தை மீறி ரசியாவுக்கு மட்டும் விரல் நீட்டுவது பகுதியளவே சரியாக இருக்கும். (இதை போரை ஆதரித்தல் என மொழியெர்க்காமல் இருந்தால் சரிதான்).
உக்ரைன் யுத்தத்தில் ரசியா படைகள் உட்புகுந்ததால் அதுவே குவிமையப்படுத்தப்படுவது நிகழ்கிறது. ஆனால் நாம் அதற்குள் மட்டும் நின்றுவிட முடியாது. இந் நிலை வரலாற்று ரீதியில் எப்படி நிகழ்ந்தது என்ற பார்வையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எமது போரெதிர்ப்பு மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்லும்.
நேட்டோ தற்போதைய ருஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்குக் காரணமா? இதனை மையமாக வைத்து 'கிராவிட்டாஸ் செய்திகள்' சானலில் 'பல்கி சர்மா' (Palki Sharma) விபரிக்கும் இக்காணொளி முக்கியமானதென்பதால் பகிர்ந்துகொள்கின்றோம். இக்காணொளியில் பல்கி சர்மா நேட்டோ அமைப்பு பற்றியும், அதன் விஸ்தரிப்பு பற்றியும் , அதனால் ரஷ்யாவுக்கு ஏற்படும் அதன் நலன்களுக்கு எதிரான ஆபத்துகள் பற்றியும் , உக்ரைனின்ம் , நேட்டோவின் பரஸ்பர அரவணைப்பு பற்றியும் இக்காணொளியில் ஆராயப்படுகின்றது.
சோவியத் குடியரசைத் துண்டுகளாக்கியதில் வெற்றி பெற்றன மேற்கு நாடுகள். அதுவும் போதாதென்று அவற்றையெல்லாம் தம் கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்டு, ரஷ்யாவை மேலும் பவீனப்படுத்தி, உலக அரசியலில் ஓரங்கட்ட முயற்சி செய்ததன் விளைவுதான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டு வரும் முயற்சி. அது இன்னும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும். அதன் தேசிய நலன்களுக்கும் எதிரானது; ஆபத்தானது. உக்ரைன் மட்டும் தான் ஒருபோதும் நேட்டோவுடன் இணையப்போவதில்லையென்று அறிக்கை விட்டிருந்தால் இந்தப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். தான் ருஷ்யாவுக்கு மிக அருகிலிருப்பதால், ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுடன் தான் பின்னிப்பிணைந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து தனது பூகோள அரசியலை அது நடத்தியிருந்தால் இப்போர் தவிர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம் போர்கள் அவை எக்காரணங்களால் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. அது மிகவும் துயரமானது.
அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.
திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நூல்வெளியீட்டு அரங்கை, திருமதி பாக்கியம் அம்பிகைபாகர், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களை நினைவுகூர்ந்தவாறு, இலங்கை உட்பட உலகெங்கும் போரினால் மறைந்தவர்களுக்கும் கொவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
எழுத்தாளர் திரு. முருகபூபதி, வழக்கறிஞர் திரு. ஜே பிள்ளை ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து, எழுத்தாளர் சட்டத்தரணி ‘பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா, கலாநிதி ஆனந்த ஜெயசேகரம், திரு. ஜூட் பிரகாஷ், ஆகியோர் நூல் நயப்புரை நிகழ்த்துவர். நூலாசிரியர் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." - வள்ளுவர் -
தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.
அவ்வகையில் அண்மையில் இவர் பகிர்ந்திருந்த இலங்கை , இந்திய அரசுகளுக்கிடையிலேற்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய கருத்துகளை 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான அரவிந்தன் என்னும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு அது பற்றி அளித்திருந்த பதில்களைப் பகிர்ந்திருந்தார். தெளிவான பதில்கள். உபகண்ட அரசியலை நன்கு விளங்கியுள்ளதை வெளிப்படுத்தும் பதில்கள்.
1. என் காதலி ஒரு கண்ணகி
நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.
மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.
சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?
அண்மித்த நிகழ்வுகள்:
பகுதி 1
அண்மையில், இலங்கையில் காணப்பட்ட நகர்வுகள் முழு தமிழ் உலகத்தையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்த கூடியவைதான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒன்று, வடக்கே, 13வது திருத்தம் வேண்டாம் என கோரி, போராடிய நிகழ்வு. மற்றது இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கம் பூணும் நோக்குடன் தனது நகர்வுகளை ஆரம்பித்த நிகழ்வு. இவ்வகையில், இதனுடன் தொடர்புபட்ட, பேராசிரியர் கணேசலிங்கனின், மிக அண்மித்த கட்டுரை ஒன்றின் தலைப்பானது, இவ்வாறு அமைந்திருந்தது:
“இந்தியாவுடன், இலங்கையின் நெருக்கமான உறவுக்கான அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான உத்திகளா?” (தினக்குரல்--06.02.2022).
மேற்படி தலையங்கம் எழுப்பக்கூடிய பிரதானமான கேள்விகள் இரண்டே இரண்டுத்தான்:
i. ஒன்று: மேற்படி ‘அணுகுமுறைகள்’ என்பன யாவை?
ii. இரண்டாவது: அவ்அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான, ‘உத்திகளாக’ செயற்படுகின்றனவா, என்பனவையே அவை.
மேற்படி இரண்டு கேள்விகளும், ஒன்றை ஒன்று சார்ந்தது அல்லது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதாவது, கிழக்கு முனைய ஒப்பந்தம் போல், 13ஐயும் ஒருதலைபட்சமாக கிழித்தெறியப்பட முடியாது போனால், நிச்சயம் அது இந்திய ஒத்தாசையுடனேயே ஆற்றப்பட வேண்டிய கருமமாகும். எனவேத்தான் 13ஐ நீக்க வேண்டும் எனில் முதலில், இவ் ‘அணுகுமுறைகள்’ மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை ஆகின்றது. இதனால்தான், ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியப்பட்டது போல கடனுதவியை நாட, உலக வங்கியை அணுகாமல், இலங்கையானது, ஏன் இந்தியாவை நாடுகின்றது என்ற கேள்வி, இன்று, என்றைக்கு விடவும் மிக முக்கியமானதாகின்றது. இதனையே வேறு வார்த்தைகளில் கூறிவதென்றால், கடனுதவியை இந்தியாவிடம் இருந்து கோருவதன் நோக்கம் இரண்டாகலாம்:
“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.
ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர். ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் என்னும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா. கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.
2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது. அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே. இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.
கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.
"நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள். அன்றும் இதே சிரித்த முகத்துடன் வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்."
என்னும் வரிகள் மருத்துவர் ராஜினி திரணகமாவை நினைவூட்டுகின்றன. ராஜினி திரணகமாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் பெண்ணொருவருக்கு ஏற்படக் கூடாது. அதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.
இவருக்கு நான் கூறுவது இதனைத்தான்:
"உங்களைப்போன்ற துணிச்சலும், அறிவும், சமுதாயப்பிரக்ஞையும் மிக்க இளையவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதே நேரத்தில் உங்கள் மருத்துவத் தொழிலையும் நீங்கள் தொடரலாம். அரசியலில் வருவதன் மூலம் உங்களுக்கும் ஒரு மேலதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் உங்களைப்போன்ற துணிச்சலும், ஆற்றலும், மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள இளையவர்கள் குறைவு. உங்களுக்குள் மருத்துவருடன் கூட சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் இருக்கிறார்கள். அதனால்தான் ஊழல்களுக்கெதிராக உங்களால் இவ்வளவு தூரம் துணிச்சலுடன் செயற்பட முடிகின்றது. நீங்கள் புதியதொரு சமூக நலன் பேணும் அமைப்பொன்றைக்கூட உருவாக்கலாம். அதன் கீழ் ஆயிரக்கணக்கில் பலர் அணி திரளும் சாத்தியமுண்டு. அவ்விதம் செய்தால் யாரும் தனிப்பட்டரீதியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவும் உங்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும்."
1
தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”
கிட்டத்தட்ட, மூன்று பத்திகளாக (Columns) ஓடிய, 71 வரிகொண்ட, மேற்படி செய்தியில், சுமந்திரனால் ஆற்றப்பட்டதாக கூறப்படும் கூற்றை, முழுமையாக வாசித்து பார்த்தால், இக்கூற்றின் 71 வரிகளில், கடைசி ஆறே ஆறு வரிகள் மாத்திரமே இக்கடித தயாரிப்பில் தமிழரசு கட்சி இடைநடுவே ஈடுபட தொடங்கியது என்பதும், இடைநடுவே ஏற்பட்ட அத்தகைய பங்களிப்பை தொடர்ந்து, கடித அமைப்பின் நோக்கம் - அதன் கோரிக்கை – அதன் தலையங்கம் - இவை மாற்றம் கண்டன என்பனவும், மேற்படி செய்தியில் சுமந்திரன் ஆற்றிய கூற்று கூறப்பட்டிருந்தது.
அதாவது, இந்நீண்ட அறிக்கையின் கடைசி மூன்றே மூன்று வரிகளில் மாத்திரமே தமிழரசு கட்சி, அறிக்கையில், இடைநடுவே செய்த, நோக்கம்-கோரிக்கை–தலையங்கம் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. தமிழரசு கட்சி போன்ற கட்சியானது இடைநடுவே சேர்ந்த பின், - இம்மாற்றங்கள், எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றே. இது ஒரு புறம் இருக்க, இதன் மிகுதி பகுதியான, 65 வரிகளும் பின்வரும் விடயங்களை விஸ்தாரமாக விவாதித்தன.
அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.
மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர்.
இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை.
இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து.
கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் இந் நூலானது கடந்து போன காலங்களையும், அக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் எமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.
அத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம்மை எமது முந்திய காலத்திற்கும் அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு வீரகேசரி, லேக் ஹவுஸ் (Lake house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின் வரலாறுகளாகும்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது. களனி கங்கையின் ஆரம்பப் பெயர் கல்யாணி என்பதையும் நாளடைவில் அது களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த குதிரைப் பந்தயம், சூதாட்டம் பற்றியும் கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு புரிந்தது.
இதே காலகட்டத்தில் குதிரைப் பந்தயத்திடலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் களனி பாலத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்ட செய்தியும், பின்னர், அதே சம்பவம் சிங்களத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள செய்தியையும் இந்நூல் ஆதாரங்களுடன் கூறுகிறது.
இதிலிருந்து இலங்கையின் இன்றைய பாதாள உலகக் கோஷ்டி பற்றியும் விளங்கிக் கொள்ள முடிந்தது. இவற்றால் நாட்டில் இன்றுவரையில் காலத்திற்குக் காலம் தோன்றும் அதிர்வலைகளையும் உணரக் கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு சம்பவங்கள் பற்றி எழுதத் தொடங்கும் போதும் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற மிகச் சிறந்த சினிமாப் பாடல் வரிகளுடனும் முருகபூபதி ஆரம்பித்திருப்பது "பீட்சா" மீது தூவும் பாலாடைக்கட்டி (Cheese) போன்று சுவையளிக்கின்றது.
அஹிம்சையின் அவதாரங்களான கௌதமபுத்தர் வந்த இடம், மகாத்மா காந்தியின் அஸ்தி கரைத்த இடம் முதலானவற்றையும் காண்பித்து, அதே இடத்திலேயே இலங்கையின் இன்றைய நேற்றைய அரசியல்வாதிகளின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத அரசியல் பக்குவத்தினால் இம்சை அரசியலும் நிகழ்ந்துள்ளது என்ற பார்வையிலும் களனி நதி தீரத்தின் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்.
அக்கால அரசியல் வாதியான S.W.R.D. பண்டாரநாயக்கா பற்றிய பதிவும் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா, பிரதமராகவிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய நாளில் நாம் 10 அல்லது 11 வயதுப் பராயத்தில் இருந்திருப்போம்.
பாடசாலை முடிந்து திரும்பும் போது வானொலியில் செய்தி கேட்டு நாம் பயந்த காலங்களும் இது பற்றிய தகவல்களை வாசித்தபோது கண்முன்னே தோன்றுகின்றது.
பண்டாரநாயக்காவின் மறைவின் பின்னர் அவர் மனைவி பதவியேற்றார். அதன்பின் அவர்கள் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார். இவ்விதமாக இவர்கள் பிறந்து வளர்ந்த வரலாறுகள் பற்றி எமது எழுத்தாளர் முருகபூபதி அழகாகச் சித்தரித்துள்ளார்.
எமக்கு அன்று இலவசக் கல்வியை அறிமுகம் செய்த கன்னங்கராவைத் தவிர வேறு சிங்களத் தலைவர்கள் எவரும் எமது நினைவுக்கு வருவதில்லை. ஆனால், இன்றைய அன்றைய அத்தனை அரசியல்வாதிகளையும் இப்பதிவில் முருகபூபதி எம்முன்னே நிறுத்தியுள்ளார்.
பனை ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எமது முன்னோர்கள் எழுதியதிலிருந்து அதன் பின்னர் அறிமுகமான பலரக பேனாக்கள் முதல், நாம் பாவிக்கும் Ball point pen வரை எழுதுகோல்களின் காலத்தையும் விளக்கமாகக் கூறியிருக்கின்றார். இது எமது இளம் சந்ததியினருக்கு சுவாரஸ்யமாயிருக்கும்.
போர்க்கால நெருக்கடிகளின் பல உண்மைச் சம்பவங்களை முருகபூபதி எழுதி நினைவூட்டியிருப்பதிலிருந்து எத்தனை விடயங்களை நாம் தொலைத்து விட்டோம் என நினைக்கத்.தோன்றுகிறது.
இராவணன் காலம் முதல் இராஜபக்க்ஷ காலம் வரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்த பலரும் இந்தியாவிலிருந்து சமாதானத் தூதுவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நசூக்காகச் சொல்லிச்செல்கிறார்.
இன்று கோத்தபாய இராஜபக்க்ஷ காலமும் ஒரு சிறந்த நடுநிலையான தீர்வை முன்வைக்க முடியாது முனகிக் கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர்.பொன்னம்பலம் அருணாசலம் எனும் பெரியாரின் சகோதரர் சேர். பொன். இராமநாதன் ஆவார். இவர் இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பரிஸ்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் மாளிகையில் இவருக்கு “சேர்" பட்டம் வழங்கினார். இப்படிப்பட்டவர்கள் தமிழ் அறிஞர்களாக , அரசியல்வாதிகளாக இருந்தாலும் இவர்கள் கோயில்களின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், இவர்கள் எவராலும் தமிழினத்திற்கு ஒரு சரியான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதையும் இந்நூலின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
மற்றுமோர் பிரசித்தமானவர்தான் ஜுனியஸ்ட் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா ஆவார். இவர் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இவரும் பிறப்பால் ஒரு கத்தோலிக்கர். சொலமன் டயஸ் (S.W.R.D) பண்டாரநாயக்கவும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் கத்தோலிக்க மதப்பின்னணி உடையவர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் இதில் நிறைய எழுதப்பட்டுள்ளன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்ற அரசியல்வாதிகள் போன்று பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதியானாலும் வாரிசு அரசியலுக்குத் துணை போகவில்லை என்ற செய்தியையும் நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே இந்நூலை அழகுற வைத்துள்ளார் நமது எழுத்தாளர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப இலங்கை அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள், உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என இலங்கை வரலாறு, குறிப்பாக தலைநகரத்தின் வரலாறு இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் மாணவர்கட்கு விளங்கும் வகையில் எளிமையாக அவர் எழுதியிருப்பது மிகவும் சிறப்பானது.
அக்கால அரசியல்வாதிகள் , கலைஞர்கள் பற்றியும் பல பெரிய நிறுவனங்கள், வீதிகளின் பெயர்கள் என கொழும்பு வாழ்க்கையில் நாம் சந்தித்தவைகளையும் இழந்தவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.
அக்காலத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் போன்றவர் களை பற்றியும் சிங்களப்பட உருவாக்கமும் அதன் பின்னர் காலப்போக்கில் தமிழ்ப்பட உருவாக்கம் பற்றியும் இந்நூலில் திறம்பட விபரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து இலங்கை வந்த ஒளிப்படக் கலைஞரும் ராஜா ஸ்ரூடியோவை கொழும்பில் உருவாக்கியவருமான ராஜப்பனைப் பற்றியும் அவர் மனைவி கௌரீஸ்வரி ராஜப்பனைப் பற்றியும் இந்நூல் கூறத் தவற வில்லை.
எனது மகள் ஆர்த்தி, திருமதி. கௌரீஸ்வரி ராஜப்பனிடம்தான் சங்கீதம் கற்றாள். அவரது வீட்டில் நுழைந்தால் அங்கு தென்படும் வீணையும் அவர் குளித்து முடிந்த தலையும் பெரிய நெற்றிப்பொட்டும் எனக்கு நினைவுக்கு வந்தன. எனது பழைய பசுமையான நினைவுகளுக்கும் இந்நூல் விருந்தளித்தது.
அது மட்டுமல்ல, திருமதி . ரோஸி. சேனநாயக்க அழகுராணியான செய்தியும் பின்னர் அவர் அரசியல்வாதியாக வலம் வருவதும் போன்ற விறுவிறுப்பான செய்திகளுக்கும் இந்நூலில் பஞ்சமில்லை.
மொத்தத்தில், நடந்தாய் வாழி களனி கங்கை மூலம் நேரத்தை சிறகு கட்டிப் பறக்கச் செய்திருக்கின்றார் நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள்.
இலங்கைத் தலைநகரின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் பற்றிய பல அரிய தகவல்களுடன் சுருங்கக் கூறி எளிதாக விளங்க வைக்கும் இந்த நூல் வாசகர்களுக்கு மாத்திரமன்றி மாணவர்களுக்கும் பயனுள்ளது.
தற்போது, இந்த நூல் கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது
நடந்தாய் வாழி களனிகங்கை - Kindle link