ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் 'நெய்தல் நடை' நூல் வெளியீட்டு நிகழ்வு உரை! - பவானி சிவகுமாரன் -

தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் ஆரம்பமான எம் ஈழத்துச் சிறுகதை வரலாறு தன் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தடம் பதித்தவர்கள், ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், தம் இருபது வயதுகளிலேயே இவர்கள் எழுத ஆரம்பித்தது தான்.
மருத்துவத் துறையில் முப்பத்து மூன்று ஆண்டு காலச் சேவை நிறைவின் பின்னும், காலந் தாழ்த்தியே எழுத ஆரம்பித்தவர் ரஞ்ஜனி அவர்கள். Better late than never. என்ன தான் தாமதித்திருந்தாலும், குறுகிய காலத்தில் சிறுகதை, திறனாய்வு,கட்டுரை எனப் பல தளங்களில் எழுதிப் பலரின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தவர் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.
பன்னிரெண்டு சிறுகதைகளுடன், ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது இச் சிறுகதைத் தொகுப்பு. இச் சிறுகதைகள் அனைத்தும் 2022 முதல் 2025 வரையான காலப் பகுதியில் ஞானம், ஜீவநதி, பதிவுகள் இணையத்தளம், சிறுகதை மஞ்சரி, வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளில் வெளி வந்தவை. ஞானம் சஞ்சிகையில் 'அன்றொரு நாள்' எனும் தனது முதற் சிறுகதை மூலம் சிறுகதை இலக்கிய உலகில் கால் பதித்த ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் ஆறு சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலேயே வெளி வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் பதின்ம வயதின் இறுதியில், தான் கற்பித்த ஊரைப் பார்க்க விளையும், அறுபது வயதுகளின் விளிம்பில் நிற்கும் பெண் பற்றியது இவரின் முதற் சிறுகதை 'அன்றொரு நாள்'. எதற்காக அங்கே செல்கிறாள் என்பது அந்தப் பெண்ணிற்கே தெரியவில்லை என்பதை 'கார்க் கண்ணாடியில் பதிந்த புகைமூட்டம் போல் தெளிவில்லாமல் இருந்தது' என்னும் வரி வெளிக் கொணர்கிறது. அந்த ஊர் பற்றிய விபரிப்பும்,வர்ணனைகளும், உளம் கிளர்ந்த உணர்வுகளும் கதையைப் பின் தள்ளிக் கோலோச்சுகின்றன.




தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .


புதைந்திருக்கும் ஒலி ஒன்று,


கனவுகளில் தோய்ந்து
முன்னுரை


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.




“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”


நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.
சமூகம் என்பது கருத்துகளின் கூட்டுச் சுவாசம். ஒரு தலைமுறை எழுந்து நிற்க வேண்டுமெனில், அது கேள்விகளால் ஊட்டமளிக்கப்பட வேண்டும்; விமர்சனத்தால் செம்மையாக்கப்பட வேண்டும்; உண்மையால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில், சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், சமூக மாற்றத்தின் பெயரில் அதிகார அரசியலை உள்-வட்டமாக நிறுவி, வெளியில் இருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் கூட பகைமை என சித்தரித்து ஒடுக்குகின்றன. இந்த அதிகாரக் கட்டமைப்பு வெளியில் தெரியாத நிழல் போல செயல்பட்டாலும், அதன் தாக்கம் சமூகத்தின் ஆழ வேர்களையே சிதைக்கும் அளவுக்கு வலிமையானது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









