சிறுகதை: மனைவியர்! - ஜோதிகுமார் -

- டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG -
1
சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான். ஒரு பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”
“நீங்கள் அடிக்கவில்லையா? ”
“செத்துப் போனால்.”
காரை, மாதா கோவிலின் அருகே நிறுத்தினேன்: “இத்துடன் எமது கார் பயணம் முடிவடைகிறது.”
“நீங்கள் …” இழுத்தான். நானும்த்தான் நடக்கப் போகின்றேன். கிலர்ன்கன் வரைக்கும்.
“எதற்காக”
“நடைக்காக”.
“கிலன்கர்ன் சென்று திரும்பி விடுவீர்களா?.”
“ஆம்” என்றேன்.
“அப்படி எனில் சேர்ந்தே நடக்கலாம்”.
நானும் அவனுடன் இணைந்து நடந்தேன்.
வலப்புறமாய், ஏரி, கோபித்தப்படி உம்மென்று இருந்தது.
அதன் ஆழத்தையும் அமைதியையும் யார் படம் பிடிக்க கூடும். அமைதியை வேண்டுமானால்…
ஆனால் ஆழத்தை…
“காலை அஞ்சரை மணிக்கு தட்டுகளை கழுவத் தொடங்கனும். இரவு பன்னெண்டு மணிவரை.”
“சரிபட்டு வரல… ரெண்டே ரெண்டு கிழமை. அண்ணனே சொன்னார் ‘நீ போ… போறதுத்தான் உனக்கு நல்லது’ அஞ்சாயிரம் தந்து பஸ்ஸிலும் ஏற்றிவிட்டான்…”
“துக்கமாக இருக்கிறது. இடைநடுவே வேலையை விட்டுவிட்டு வந்ததற்காய்” என்று வேதனைப்பட்டான். “வயது என்ன என்றேன்”, “பதினெட்டு”. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்தேன். மோட்டார் திருத்துவது – சமைப்பது – ஏதோ ஒன்று. ஆனால், அதனை திறம் பட செய்ய தெரிந்து கொள்ள வேண்டும் என தேற்றினேன். ஒரு பிளேன்டீ குடித்தாக வேண்டும் என்றான், எதிர்பட்ட மூடியிருந்த கடையொன்றை பார்த்துவிட்டு. பணம் இருக்கின்றதா என்றேன். அஞ்சாயிரம் என்றான் பையன்.
இடை நடுவே, பெரியண்ணனுடன் தினமும் மாட்டுக்கு புல் அறுப்பவன், தனது வண்டியை, வழமைப் போல் பாதையோரமாக தள்ளி வருவதைக் கண்டேன். என்னை கண்டவுடன், வழமை போல் தலையிலிருந்த தொப்பியை வலக்கரத்தால் அகற்றிய படி தள்ளுவதை நிறுத்தினான். “எப்படி, கன்னுகுட்டி” என்று விசாரித்தேன்.
“நல்லா இருக்கு சார்”.
அவரது மாடு, நேற்றுத் தான், கன்று ஒன்றை ஈன்று இருந்தது. “ஆறரைக்கு துவங்கியது. முடிய இரவு பண்னெண்டு மணி.”
“குட்டி – காளையா, பசுவா” என்றேன். “தெரியவில்லை” என்றான். ஒரு கணம் விக்கித்து தடுமாறி போனேன். மாலை ஆறு மணி தொடக்கம், இரவு பண்னெண்டு மணி வரை மாட்டுடன் இருந்துள்ளான். போட்டது காளையா பொட்டையா என்று தெரியவில்லை. தெய்வமே – எத்தகு மனிதர்கள், பசுவின் வேதனையில் தன்னையும் மூழ்கடித்து… காளையா பொட்டையா என்று கூட பாராமல், மாட்டின் வேதனையுடன் இவர்களை இணைத்தது யார்? யார் உன்னை இங்கு கொண்டுவந்து இருத்தியது? தேவர்களா! இல்லையெனில் இந்த அமைப்புமுறைத்தானா – இப்படி பல்வேறு சிந்தனைகள் என்னை அலைக்கழிக்க, கேள்வி கேட்டதற்காக கூசி போனேன். “பெரியண்ணன் எங்கே”. “படுத்து இருக்கிறார். அசதி. சரி, தூங்கட்டும் என்று வண்டியை தனியாக தள்ளி வந்து விட்டேன். தூங்கி எழும்பி வருவார் அவர்”. “பெரியவர் தானே” என்றான், வண்டியை தள்ள தொடங்கிய படி. கிலர்ன்கனிலிருந்து திரும்பும் போது பெரியண்ணன் எனக்காக நிற்பதைக் கண்டேன்.




அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.

அழகான உடை பெண்ணின்







மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.


தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









