கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு ! - முருகபூபதி -

ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.
அஷ்வினியை குழந்தைப் பராயத்திலிருந்தே நன்கு அறிவேன்.
சிட்னியிலும், மெல்பனிலும் நடைபெற்ற கவிஞர் அம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும், அஷ்வினி, கடந்த 2024 ஆம் ஆண்டு, சிட்னியில் தமது அபிமானத்திற்குரிய தாத்தா அம்பி அவர்களின் இறுதி நிகழ்விலும் உருக்கமான உரையை நிகழ்த்தினார்.
அஷ்வினி, கவிஞர் அம்பியின் மூத்த புதல்வி மருத்துவர் உமாதேவி – பொறியியலாளர் சிவகுமாரன் தம்பதியரின் மூத்த புதல்வியாவார். சிட்னியில் ஹார்ட்ஸ்வில் பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்த அஷ்வினி, இங்கு தனது ஆரம்பக்கல்வியையும் உயர்தரக்கல்வியையும் பயின்றார். சிட்னி பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானத் துறையிலும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பயின்று பட்டம் பெற்றார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.

ஈழத்திலும் எம்மவர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை. இவர் எழுதிய எழுச்சிப் பாடல்கள் உலகெங்கும் எம்மவர் பலரது வீடுகளிலும் விரும்பிக் கேட்கப்பட்டன. அன்று எழுபதுகளில் இவர் எழுதிய புரட்சிகரக் கவிதைகள் பேராசிரியர் கைலாசபதி முதல் மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், கே. டானியல்இ சில்லையூர் செல்வராசன், டொமினிக் ஜீவா உட்படப் பலரையும் கவர்ந்தது.


உக்ரைன்-ரஷ்ய மோதலானது, உலகின் முகத்தைத் தீவிரமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டுள்ளது எனச் சிலர் கருதுவர். இன்னும் சிலர் இதனை ஒரு நிரந்தர மாற்றம் எனவும் வாதிப்பர். மேலும் சிலர் இது Uni Polar World என்பதிலிருந்து Multi Polar World என்ற உலகை நோக்கிய ஒரு பயணம் எனவும் விவரிப்பர்.






பாரதி வந்தார் பற்பல பாடினார்
முன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.





கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









