'புத்தகம் பேசுது' சந்தா செலுத்த வேண்டுமா?
அன்புடையீர், வணக்கம், புத்தகம் பேசுது ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது. புத்தகம் பெறுவதற்கு சந்தா செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு ரூ.75 அனுப்பவும் இச்சலுகை ஏப்ரல் 23, உலக புத்தகதினம் வரை மட்டுமே. (சந்தா தொகை ரூ.120), அல்லது இந்தியன் வங்கி. ஆழ்வார்பேட்டை 701071066 என்ற தற்போது பாவனையிலுள்ள வங்கிக் கணக்கிலும் Current Account (பாரதி புத்தகாலயம்) செலுத்தலாம்.
puthagam pesuthu <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:


மே15, 2011 - மே 22, 2011 வரை] நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு நாட்கள் நடக்க இருக்கின்றன.. கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெறவேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு, முதலியவை கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர்கள், வழக்குரைஞ்கர்கள் ,பொறியாளர்கள், டாக்டர்கள் முதலியோர் இந்த கோடைகால பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்கலாம். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு. பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும்,உலகப் புகழ் பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்..
பெப்ரவரி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை (15-02-2011) காலை 10.00 மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வளாகத்தில் கணனிக் கற்கைக்காக அமைக்கப்பட்ட விசேடமண்டபத்தின் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கணனிக் கற்கை நிலையத்திற்குத் தேவையான தொகை ரூபா 25 இலட்சம் பெறுமதியான 30 கணனிகளையும் அதற்குரிய தளபாடத் தேவைகளையும் கனடா பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கியிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகாஜனா கல்வி அபிவிருத்தி நிறுவனம் முன்னின்று உழைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் 'வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.'. பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









