'மல்லிகை ஜீவா' 85!

நண்பர்களே! இத்துடன் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 85 வது நாள் நிகழ்வுக்கான அழைப்பிதழ் அனுப்ப்பட்டுள்ளது. அத்துடன் இணைப்பாக அதனையொட்டி கலை இலக்கிய நண்பர்களால் வெளிப்பட்ட சிறு பிரசுரமும் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.


நண்பர்களே! இத்துடன் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 85 வது நாள் நிகழ்வுக்கான அழைப்பிதழ் அனுப்ப்பட்டுள்ளது. அத்துடன் இணைப்பாக அதனையொட்டி கலை இலக்கிய நண்பர்களால் வெளிப்பட்ட சிறு பிரசுரமும் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.


நேரம்: ஜூன் 24, 2011 - வெள்ளிக்கிழமை - மாலை 6.00 மணி.
இடம்: East York Civic Centre, 850 Coxwell Avenue (North-west corner of Coxwell Avenue and Mortimer Avenue)
Toronto, ON M4C 5R1
- நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி 17.06.2011 வெள்ளிக் கிழமை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 மணி வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணி வரை -
இசையமைப்பாளர் கண்ணன் என்று கூறினால் 70 களில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கண்ணன் நேசம் இசைக்குழுவாகும். கண்ணன் நேசம் இசைக்குழு ஈழத்து சினிமாவுக்கும் மெல்லிசைக்கும் பொப்பிசைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆரம்ப காலத்தில் கண்ணன் நேசம் இசையமைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது ரோஜா மலரே என்னும் பாடலை அனைவரும் நினைவு கூருவர். மேலும் அருவி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குளிரும் நிலவு இசைத்தட்டில் உள்ள பாலை வெளி என்ற என்.சண்முகலிங்கம் எழுதிய பாடலையும்; கண்ணன் நேசம் இசையமைத்தமை இங்கு நினைவு கூரலாம். இவ்வாறு கண்ணன் நேசம் குழுவினூடாக அறிமுகமான கண்ணண் அவர்களின் ஆளுமை பின்னாளில் பல பரிமாணங்களைக் கொண்டதாக பரிணமிக்கிறது.
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர் பற்றிய அரிய செய்திகள்/ புகைப்படங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம். தங்களது படைப்புகள், நன்கொடைகள் வருகிற 30.06.2011 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டிகிறோம்.
தொலைக்காட்சிகள் பெருகியதன் காரணத்தினால் நாடகங்களும், நாடக அரங்குகளும் குறைந்து வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பது கலை ரசிகர்களினால் வழக்கமாகிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின்’ நாடக விழா – 2011 இலண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மொழிபெயர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் கூடுதலாகக்கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டபோதும், இம்முறை நாடக விழாவில் ‘தர்மம்’ (மனோ மனுவேற்பிள்ளை), ‘அயலார் தீர்ப்பு’(பேராசிரியர் சி. சிவசேகரம்), ‘படிக்க ஒரு பாடம்’(மாவை. தி. நித்தியானந்தன், ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை’(செழியன்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துருவாக்கத்தில் அமைந்த நாடகங்களை மேடையேற்றியிருந்தமை சிறப்பு அம்சமாகும்.

நீங்களும் எழுதலாம்.
1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா
யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது. இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்
நாள்: சனிக்கிழமை (11-06-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)
ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.
முதல் பகுதி: (3 மணி)
கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.
ஜூன் 11, 2011: ஒன்பதாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாவில் 'காலம்' சஞ்சிகையின் 'வாழும் தமிழ்' தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2011. புதிய புத்தகங்கள், புதிய சஞ்சிகைகள், புதிய வெளியீடுகள் (தமிழகம், ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து). காலை 10:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை. இடம் : ஸ்கார்பரோ 'சிவிக் சென்ரர்'. தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . மேலதிக விபரஙகள் ... உள்ளே
எமக்கான

தோழர் யோகரட்ணம் அவர்களது நூல் வெளியீடு 03 யூலை 2011 அன்று பாரிசில் இடம் பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.matrathu.com/


கவிஞர் செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை - ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்' நூல் வெளியீட்டு விழா ஜூன் 18, 2011 சனிக்கிழமை , மாலை 5.30 மணிக்கு London Sivan Kovil Hall இல் நடைபெறவுள்ளது. [ தகவல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ] ... விரிவான விபரங்கள் .... உள்ளே
கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme
20.5.2011 வெள்ளி மாலை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 வரை; இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை
சமகால ஈழ நாடகம் : கலந்துரையாடல்; உரையாடுவோர்: இங்கிலாந்திலிருந்து க. பாலேந்திரா கலந்து கொள்கிறார். பாலேந்திரா இலண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நெறியாளர். கடந்த பல தசாப்தங்களாகச் சளையாது இலங்கையிலும் புகலிடத்திலும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். புகலிட தமிழ் குழந்தைகளுக்கான நாடகப்பள்ளி இவரது முக்கியமான பங்களிப்பு.
ஜூன் 12, 2011

பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்: மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்; தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades, உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர். யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர், இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர். வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan), இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி- (Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்
பருத்தித்துறை அறிவோர் கூடலின் ஏற்பாட்டில் மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதை நூலின் அறிமுகவிழா 14.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார். பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், தொழிலதிபர் திருமதி சக்தி பாலேந்திரா, சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன், இலக்கியச்சோலை து. குலசிங்கம், திருமதி எம்.ஜெயசிறீ(ஜெய பரத சாஸ்திரா) ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். வரவேற்புரையை கவிஞர் தீபச்செல்வன் நிகழ்த்தினார். வாழ்த்துரையை சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் நிகழ்த்தினார். வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் கவிதை நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். நூலின் முதற்பிரதியை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களிடம் இருந்து திலக் ரி. திலகராஜ் (Managing Director, Tilko Jaffna City Hotels) அவர்கள் பெற்று நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்புப் பிரதிகளை திருமதி சக்தி பாலேந்திரா அவர்கள் வழங்கிக் கெளரவித்தார். கவிதை நூலின் மதிப்பீட்டுரையை ஆசிரியர் எஸ். ரமேஸ் நிகழ்த்தினார். ஆசிரியர் சு. குணேஸ்வரன் நன்றியுரையையும் நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஏற்புரையையும் நிகழ்த்தினர்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இவ்வருடம் (2011) சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக் குமுறல்கள் இவைகளை எல்லாம் வெளிப்படுத்தியதற்காக குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ குறுநாவலைத் தேர்வு செய்துள்ளதாக நடுவர்கள் குறிப்பிட்டனர். திரு. பி. மணிகண்டன், திரு. ப. ஸ்ரீதர், டாக்டர் லட்சுமி ஆகியோர் இப்போட்டிக்கு நடுவர்களாகக் கடமையாற்றினர். தேர்வின்போது கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர், பதிப்பாசிரியர் திரு. நாராயணசாமி ஆகியோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவு குறுநாவல் போட்டியிலும் ஈழத்தமிழர்களின் சோகக் கதை சொல்லும் குரு அரவிந்தனின் ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் பரிசு பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
தகவல்: கெஆர்
ஆளுமைகளும் அனுபவங்களும் - வ.கீதா (இந்தியா)
வணக்கம்! ஆனந்தவிகனும் , 'டிஸ்கவரி புக் பேலஸு'ம் இணைந்து முதன் முறையாக 'டிஸ்கவரி புக் பேலஸி'ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். கழிவு இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம். முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பின்பு புத்தகங்களை உறுதி செய்து நாங்கள் பதில் அனுப்பியதும் கீழ் காணும் வங்கி எண்ணில் பணத்தை செலுத்திவிட்டு தகவல் அனுப்பினால் தங்களுக்கான புத்தகம் உடனே அனுப்பப் படும்.
கவிஞரும்,பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில் மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்தம்TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.
பிரான்ஸ்: 'சமூக பாதுகாப்பு அமைப்பி'ன் மே தின ஊர்வலம் 'அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஒன்றிணைவோம்'. 'மெற்றோ': Voltaire. விரிவான விபரங்கள் (தகவல்: யோகன் கண்ணமுத்து - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ) ... உள்ளே
கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது.

வணக்கம்.. தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற இருக்கிறது.
மே 8, 2011 அன்று, மறைந்தும் மறையாத முற்போக்கு எழுத்தாளர் அமரர் திரு. எஸ்.அகஸ்தியர் அவர்களின் 'லெனின் பாதச் சுவடுகள்' நூல் வெளியீடு! ...விரிவான விபரங்கள் கீழே: