அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் பதிவுகள் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!


அனைவருக்கும் பதிவுகள் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.
குறும்பட விருது
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.
அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்கள் இங்கே
அன்புடன்
டாக்டர் தி. ஞானசேகரன்
இலக்கியப்பணிச் செயலாளர்,கொழும்புத் தமிழ்ச்சங்கம்
ஆசிரியர் ஞானம்
“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது.
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
'கவிஞன்' காலாண்டு கவிதை சஞ்சிகை....
- கவிஞர் அஸ்மின் -

மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. 'கவிஞன்' என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை. கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்.
“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது நினைவாக ,'தடாகம் கலை இலக்கிய வட்டம் '(அஞ்சலி கவிதை )நிகழ்வினை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்து வருகின்றது. இக் கவி அரங்கில் இலங்கையின் எப் பகுதில் இருந்தும் கவி உள்ளங்கள் கலந்து சிறப்பிக்கலாம். அத்தோடு (கானக் குயிலுக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி .)எனும் தலைப்பில் கவிதைகளை சர்வதேச மட்டத்தில் இருந்தும் எதிர்பாக்கின்றோம் அக் கவிதைகளை தரமான நூலகவெளியிட உள்ளோம் எனவே உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள் தரமான கவிதைகளுக்கு அம்மாவின் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கும் , ஆக்கங்களை அனுப்பி வைப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தலைவி - சுகைதா ஏ கரீம்
( தாடாகம் கலை இலக்கிய வட்டம் )
677 அஹமட் வீதி ,
சாய்ந்தமருது -14 (கி .மா)
இலங்கை ..
email- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் - கலைமகள் ஹிதாயா றிஸ்வி
அமைப்பாளர் -தாடாகம் கலை இலக்கிய வட்டம் ..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் மாதிரி மொழிபெயர்ப்பு (ஒரு பக்கம்) மற்றும் கட்டண விபரங்களுடன் எம்மை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவும். - பதிவுகள்.
எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது "ஓர் எழுதுவினைஞனின் டயரி" சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க. எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வணக்கம் வாசகர்களே! இது வரை காற்றுவெளியில் பிரசுரமான சிறுகதைகளை தரமானவற்றை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அதிலிருந்து தொகுக்கப்படும் சிறுகதைகள் நூலாக்கம் செய்யப்படும். அடுத்த இதழுக்கான படைப்புக்களை விரைவாக அனுப்பி எமது சிரமத்தைக் குறைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நட்புடன், - முல்லைஅமுதன் -
http://kaatruveli-ithazh.blogspot.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
JOBFAIR Reminder: Come on THURS. March 15, 2012 Centennial College Residence, 940 Progress Ave. PLEASE forward this email to friends
NAPP Canada Jobfair and Education Fair HAPPENING THURSDAY March 15, 2012 10am-2:30pm
DATE: Thursday March 15, 2012
LOCATION: CENTENNIAL COLLEGE Residence and CONFERENCE CENTRE, 940 PROGRESS AVE, SCARBOROUGH
Public transit: TTC, McCOWAN SUBWAY, GO BUS
TIME: 10:00AM - 2:30PM Free Parking, Free Admission, Open to the Public
Jobseeker FREE REGISTRATION: http://www.nappcanada.com/attendeeregistration.php
Please forward this email to all your friends!! COME!! DON'T MISS OUT!
Thanks
Check http://www.nappcanada.com/jobs for job postings
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


இடம்- கொழும்புத் தமிழ் சங்கம்
காலம்- 10. 03. 2012 பி.ப 5.00
தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர். நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.

நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்
ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்
நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழாவை 19.02.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் 20.00 மணிவரை கொண்டாடுகிறது.

நாள்: 11-02-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
வணக்கம், எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6- மணியளவில் ''ஜீராங் ஈஸ்ட்" (Jurong Regional Library - Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய "ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்" புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.
காலம்: மார்ச் 4, 2012 , ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு
இடம்: கனடா சிறிசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கலாச்சார மண்டபம், 1 Golden Gate Court , Unit -1 (Brimly/Ellesmere சந்திப்புக்கு அருகாமையில்)
தற்போது சுவிசில் வாழ்ந்து வரும் சயந்தன் எழுதிய முதலாவது நாவலான “ஆறா வடு” நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரதும் வரவேற்பைப் பெற்றிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்த விடயங்கள் இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பயணம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் "நேரு ஐயா" என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் உதாரணம். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் "ஆறா வடு" முக்கியமான ஒரு நாவல். இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு -) 647-237-3619
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
புதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன. 9 வது இதழில் ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.