Global Media & Entertainment / சாதகப்பறவைகள் இணைந்து வழங்கும்.. வணக்கம் ஐரோப்பா

50 ஆண்டுகளாக இசைப்பணியாற்றிவரும் இசைமேதை L.R ஈஸ்வரி கலந்துகொள்ளும் இசைநிகழ்ச்சி. L.R ஈஸ்வரியுடன், ”கோ” ”ரௌத்திரம்” ”சரோஜா” புகழ் ரனீனா ரெட்டி, ”போக்கிரி” ”வில்லு” ”சங்கீத மகாயுத்தம்” புகழ் நவீன் மாதவ், மற்றும் பரணி, கவிதாவுடன் 18 இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைமாலை.
இடம்: Groruddalen Kultur og aktivitetssenter, Kalbakkeveien 46, Oslo.
காலம்: 23.10.2011 நேரம் : 18:00
தொடர்புகள்: 41295659/ 90181179
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

List of Employers for JOB FAIR and Training Expo THURS. OCT. 20, 2011 International Centre - Mississauga. PLEASE forward this email to friends. NAPP Canada Jobfair and Training Expo HAPPENING
Dear All, I am sure you are all aware of the events and news that have been developing and unfolding here in Australia over the last few days and about the international conference co-hosted by Australian Tamil Congress (ATC) and Global Tamil Forum (GTF) here in Sydney tomorrow (Thursday, 20 Oct 2011), almost a week before CHOGM in Perth, Australia on 28/10/2011. Please take time to watch: ABC 7.30 Report
As Sri Lanka hangs under mounting evidence of war crimes and defies international calls for an independent investigation into war crimes, the leaders of Sri Lanka are soon due to attend CHOGM in Perth to campaign for CHOGM 2013 to be held in their country. Sri Lanka is also competing with Australia to host the 2018 Commonwealth Games. And while thousands continue to flee the island on boats towards Australia seeking asylum, many ask:



தமிழ் கலை இலக்கியப் பரப்பில் 'பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன. ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு 'பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது. இந்நிலையில் திரு லெனின் மதிவானம் எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. 'பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு மாலை நடைபெற்றது.
சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில் லண்டன் The Orchard Theater இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.
“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் தலைமை வகித்தார். நிகழ்வில் சி.க செந்திவேல் அவர்களுக்கு நூலின் முதற்பிரதியை கிருஷ்ணபிள்ளையின் மகன் கி. நவநீதன் வழங்கினார். இந்நூலில் வே.சிவயோகன், சி.காசெந்திவேல், ,சி.வன்னியகுலம், க.தங்கவடிவேல், செ.திருநாவுக்கரசு, கி.கணேசன், நந்தினிசேவியர், எம்.கே சிவாஜிலிங்கம், வையாபுரி, தெணியான், திருமதி பிறேமா மதுரநாயகம், வ.சின்னத்தம்பி, தணிகையன், குணசிங்கம் மற்றும் சீனியர் குணநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் ,குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.


சென்ற வாரம் 03-11-2011 ரொறன்ரோ பின்ச் அவனியூவில் உள்ள ஜோர்க்வூட் அரங்கத்தில் சிறார்களின் இசை அர்ப்பணமும், சலங்கைப் பூசையும் ஒரே மேடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. பிரபல பாடகியான இசைக்கலா வித்தகர் கலைமணி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான ஆகாஷ் கதிர்காமனின் இசை அர்ப்பணமும், பிரபல நாட்டிய தாரகையான லலிதா கதிர்காமனின் மாணவியான அஸ்வினி கதிர்காமனின் சலங்கைப்பூசையும் ஒரே மேடையில் இடம் பெற்றன. ரொறன்ரோவின் பிரபல நடன, சங்கீத, இசைக் கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.


தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். ஆகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்சுட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத்தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாயபூர்வதாக 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாள மன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பொறுப்பான நாடாளூமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான சுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









