அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
பெயராகவும் வைக்கப்பட்டது). ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையில் முன்னோடிகளாகவிருந்த அமரர் கலாநிதி.வே.இ.பாக்கியநாதன், அமரர் எஸ்.எம்.கமால்தீன், திரு.இ.முருகவேள் போன்றோருடைய ஆலோசனை, வழிகாட்டலுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் அமைப்பு, யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும், நூலியல் அறிவை தமிழரிடையே விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் எடுத்துச்செல்வதுமாகும்.

 

இத் திட்டத்திற்கு அடிப்படையாக நூலகவியல் எனற் காலாணடு சஞ்சிகை செப்டெம்பர் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் சந்தா அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தது. 1991வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, அதன் ஆசிரியர் (திரு. என்.செல்வராஜா) புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. அதன்பின்னர் இன்றுவரை ஈழத்தில் தமிழில் நூலகவியல்துறைசார் சஞ்சிகைகள் எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் உதவி, நூற்பகுப்பாக்கம், கல்வி நிறுவன நூலகங்கள், கலைச்சொற்றொகுதி: நூலகமும் தகவல் விஞ்ஞானமும், கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும், ஆரம்ப நூலகர் கைந்நூல், நூலும் நூலகமும், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத்
தொகுப்பு ஆகிய வரலாற்று முக்கியத்துவமான நூல்களை அக்காலகட்டத்தில் அயோத்தி நூலகசேவையே வெளியிட்டது. ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையின் முன்னோடி வெளியீடுகள் இவை என்பது இன்றைய வரலாறு.

அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூலியல் பங்களிப்பாக அமைவது “நூல்தேட்டம்” என்ற பாரிய நூல்விபரத்தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு தமிழ் நூல்விபரப்பட்டியல் நூல்தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் நூல்பற்றிய குறிப்புரையுடன்
தொகுக்கப்பட்டுள்ளன. 2002இல் முதல் தொகுதியை வெளியிட்ட அயோத்தி நூலக சேவைகள் இன்று 2011இல், 8ஆவது தொகுதியின் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அயோத்தி நூலக சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட 1985ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் இவ்லின் இரத்தினம் பல்லினப்பண்டபாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தியதுடன், யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300க்கும் அதிகமான சனசமூக நிலையங்களை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும் ஐப்பசி 1989இல் சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் கொட்டடிப்பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் அழைப்பின்பேரில்(Coordinating Secretariat for Plantation Areas, Kandy) கண்டி புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் 1990 ஏப்ரல் 6-8ம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்திதொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பல நூலகர்களை ஈழத்து நூலகவியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரே மேடையில் இடம்பெறச்செய்தமை இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.

மாநகரசபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு பிரதேசரீதியில் உள்ளுராட்சி நூலகங்களுக்கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தது. சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜுன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989இல் இடம்பெற்றது.

சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது. நவாலி வை.எம்.சீ.ஏயுடன் இணைந்து நூலக வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு கிராம விழிப்புணர்வை ஊட்டியதுடன் நவாலியில் வை.எம்.சீ.ஏ நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியுதவினர். புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஸ்கொட்லாந்தின் டீழழமள யுடிசழயன நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராதவொரு வேளையில் தீவிரமாக  ன்னெடுக்கப்பட்டிருந்ததென்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

இந்த அயோத்தி நூலகசேவைகள், அதன் தாபகர், நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் முன்னெடுப்புடன் மேற்கொள்ளப்படும் புது முயற்சியாகவே ஈழத்துத் தமிழ் நூற் சந்தையும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும் அமைகின்றது. கூட்டுறவு முறையில் ஒரு விற்பனைச் சந்தையை லண்டனில் ஆண்டுக்கு இரு தடவையாவது மேற்கொள்வது என்பதே இத் திட்டமாகும். இது முழுமையானதொரு
புத்தகச் சந்தையேயன்றி புத்தகக் கண்காட்சியல்ல. லண்டன்வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தாம் முன்னர் வெளியிட்ட நூல்களைச் சந்தைப்படுத்தும் பொது வாய்ப்பினையும் அங்கு வழங்குவதுடன் இன்று அவர்களின் வீட்டறைகளில் விநியோகிக்க வாய்ப்பின்றிக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அந்த நூல்களை ஆண்டுக்கு இரு தடவையாவது, மக்களின் பார்வைக்கு மீண்டும் வைத்து அவற்றைக் கொள்வனவுசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் உதவுகின்றது.

எம்மிடையே புத்தகக் கலாச்சாரத்தை வளர்க்கும் திட்டத்தின் முதற்படியாக அங்கு குடும்ப நூலகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவியாக, புத்தகங்களை எம்மவரின் இல்லங்களுக்குள் நுழையவைப்பதும் இச்சந்தையின் மற்றொரு நோக்கமாகும். தமிழகத்தின் மேலாதிக்கத்தின்கீழ் நலிந்துசெல்லும் ஈழத்தில் தமிழ்ப் பதிப்புத்துறைக்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் அவர்களது வெளியீடுகளில் குறைந்தது 25 பிரதிகளையாவது கொள்வனவு செய்து அவர்களுக்கு உறுதியான புகலிடச் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம்.

இலங்கையின் தமிழ்ப் பதிப்பகங்களிலிருந்து தருவிக்கப்பட்ட அண்மைக்கால வெளியீடுகளை அன்றையதினம் புத்தகச் சந்தையில் விற்பனைக்காக ஒரு மண்டபத்தில் கடைவிரிப்போம். இதில் அறிவியல் ஆய்வுகளுக்கும், சிறுவர் நூல்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. வாசகரின் தனிப்பட்ட விருப்புகளும் கவனத்துக்கெடுத்துக்கொள்ளப்படும். இத்திட்டத்தில் புத்தகக் கலாச்சாரத்தை புகலிடத்தில் வளர்த்தெடுக்கவேண்டும் என்று உதட்டளவில் மாத்திரம் பேசித்திரிபவர்களன்றி, உளமார விரும்புவோர் தாமும் நேரடிப் பங்காளர்களாகலாம்.

எதிர்வரும் ஒக்டோபர் 2011இல் முதலாவது ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தை லண்டன் வோல்த்தம்ஸ்ரோவில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது புத்தகச் சந்தை தமிழர் செறிந்து வாழும் வேறோரிடத்தில் மே 2012இல் திட்டமிடப்படுகின்றது. இது தொடரும் ஒரு செயல்திட்டமாகும்.

தயவுசெய்து இச்செய்தியை வாசிப்பவர்கள் எவரும், இது நல்லதிட்டம், அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது, உடனே செயற்படுத்துங்கள் என்று பாராட்டை மாத்திரம் வழங்கிவிட்டு உங்கள் பங்களிப்பை மேற்கொண்டுவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொண்டு ஒதுங்கிவிடாதீர்கள்.

இவ்வறிக்கையின் கருத்தையே முதலில் உள்வாங்குங்கள். உங்களால் என்ன பங்களிப்பைச் செய்யமுடியும் என்று சிந்தியுங்கள். பெற்றோர்களே, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களே, குறைந்தபட்சம் உங்கள் இல்லத்திலேயே ஒரு குடும்ப நூலகத்தை உருவாக்கி வீட்டில் ஒரு புத்தகக் கலாச்சாரத்தை உருவாக்க மனதளவிலாவது முதலில் முன்வாருங்கள். எம்மவரிடையே அதுவே மிகச்சிரமமானதொரு பணியாகும். மனமிருந்தால் இடமுண்டு. அதற்கான வாய்ப்பினை அயோத்தி நூலக சேவைகளின் புத்தகச் சந்தை உங்களுக்கு மலிவு விலையில் வழங்குகின்றது. வர்த்தக நோக்கற்றவிதத்தில் இலங்கை விலையுடன் அந்நூலை இங்கு எடுப்பிக்க ஆகும் செலவையும் மாத்திரம் சேர்த்து விலை நிரணயிக்கப்படும். இத்திட்டத்தை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளக்கி புத்தகச் சந்தைக்கு ஒக்டோபர் 16ம் திகதி அவர்களையும் வோலத்தம்ரோஸ்ராவுக்கு அழைதது வாருஙக்ள். லணட்னிலுள்ள பல்வேறு இலக்கிய வட்டத்தினர்களே, முடிந்தவரையில் உங்கள் இலக்கிய வட்டத்தின் அங்கத்தினருக்கு இத்தினத்தை நினைவுபடுத்துங்கள்.

லண்டன் வாழ் தமிழ் எழுத்த்தாளர்க்களே, முன்னொரு தடவை வெளியீட்டு விழாவுடன் முடிவுக்கு வந்துவிட்ட உங்கள் நூல்களை ஆண்டுக்கு இருமுறையாவது மீண்டும் மக்களிடம் சேர்ப்பிக்கவும், சக எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் இறுக்கமற்ற ஒரு எளிமையான நேரடிச் சந்திப்பை மேற்கொண்டு உரையாடவும் கருத்தாடவும் இவ்வாப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிகழ்வில் எவ்விதமான கருத்தரங்குகளோ, கலை இலக்கிய நிகழ்ச்சிகளோ, பேருரை-சிற்றுரைகளோ ஒழுங்குசெய்யப்படமாட்டாது. இது ஒரு வித்தியாசமான இலக்கிய, அறிவியல் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் சந்திப்பு நிகழ்வாகும். விரைவில் புத்தகச் சந்தைகளில் சந்திப்போம்.

முதலாவது புத்தகச் சந்தை விபரம்:

இடம்: Lord Brooke Hall,Shernhall St,Walthamstow, E17 3EY London
காலம்: October 16 2011, 10:00 - 20:00
இத்திட்டத்தில் அக்கறை கொண்டவர்கள் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்: என். செல்வராஜா 01582 703786
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
N Selvarajah <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here