மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி! - கார்த்திக் , மியன்மார் -

[ பயிற்றுவிக்கும் தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக்]
சுமார் 20 இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் நாட்டில் தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.
பயிற்சி முடித்த தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.





கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பாரம்பரிய நடனக் கலை மரபுகளில் ஒன்றான பரதநாட்டியம் உலகில் மரபுக் கலையைப் பிரதிபலிக்கும் அழகிய நடன வடிவமாகும். கைகளின் அபிநயங்களோடு கண்களில் பாவங்கள் மற்றும் முகபாவங்களின் தனிச்சிறப்பினைக் கொண்ட அழகிய கலை. இத்தகைய இந்த பரதநாட்டியக் கலையானது இசையோடும் தாளத்தோடும் இணைந்து ஆனந்த உணர்வினைத் தரும் அற்புதக் கலையாகும்.






அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58: “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்” 



கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








