லண்டன் பாரதிய வித்ய பவனில் ‘சாஸ்வதம்' - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
பாரம்பரிய நடனக் கலை மரபுகளில் ஒன்றான பரதநாட்டியம் உலகில் மரபுக் கலையைப் பிரதிபலிக்கும் அழகிய நடன வடிவமாகும். கைகளின் அபிநயங்களோடு கண்களில் பாவங்கள் மற்றும் முகபாவங்களின் தனிச்சிறப்பினைக் கொண்ட அழகிய கலை. இத்தகைய இந்த பரதநாட்டியக் கலையானது இசையோடும் தாளத்தோடும் இணைந்து ஆனந்த உணர்வினைத் தரும் அற்புதக் கலையாகும்.
இத்துணை சிறப்பு வாய்ந்த கலையை ‘சாஸ்வதம்’ நடன அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயந்தி யோரகராஜா மற்றும் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைவோடு அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏட்டாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் இக்கலையை மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
ஸ்ரீமதி. அம்பிகா தாமோதரம், திருமதி. நித்தியானந்தன், ஸ்ரீமதி பாமினி சித்தரஞ்சன், ஸ்ரீமதி கலா அமரன், ஸ்ரீமதி பவானி பாக்கியராஜா, ஸ்ரீமதி விநோதினி இந்திரகுமார், ஸ்ரீமதி சஸ்கியா கிஷான், ஸ்ரீமதி பவித்திரா சிவயோகம், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து அலங்கரித்தனர். வரவேற்புரையை ஸ்ரீமதி பவித்ரா சிவயோகம் வழங்கிச் சிறப்பித்தார்.








கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58: “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்” 



கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய 








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








