'சிந்தனைக் களம்: 'திருவாசகத்தில் மகளிர் ஆடல், பாடல்'
Join Zoom Meeting | Meeting ID: 833 5062 2591 | Passcode: 605384]


Join Zoom Meeting | Meeting ID: 833 5062 2591 | Passcode: 605384]


கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் மலையக கலை கலாசாரச் சங்கம் இணைந்து நடத்தும் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட ஊடவியலாளர் இக்பால் அலி ஆகியோர் பதிப்பில் முதற்பதிப்பாக வெளிவரும் மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் வெளியீட்டு விழா கண்டி டி.எஸ். சேனநாயக வீதியில் (கண்டி அசோகா வித்தியாலத்திற்கு முன்னால்) அமைந்துள்ள செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை 2.-12-2023 , பி.ப. 3.00 மணிக்கு,மலையகக் கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
Join Zoom Meeting | Meeting ID: 838 2346 8673 |Passcode: 2023
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'ஈழத்துக் கலை இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவரான 'பல்துறைக் கலைஞர்" கோவிலூர் செல்வராஜன் இன்று உலகறிந்த தமிழ்க் கலைஞராக விளங்குகிறார். அவரது பொன்விழா சிறப்பு மலரில் உலகெங்குமுள்ள எம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்களின் கட்டுரைகள், வாழ்த்துகள் நிரம்பியுள்ளன. எல்லோருக்கும் அறிமுகமான, பிடித்தமான படைப்பாளியாக அவர் விளங்குகிறார். வானொலிக் கலைஞராகஇ எழுத்தாளராக, பாடலாசிரியராகப், பாடகராக, நடிகராக அவர் பணி தொடர்கிறது. இன்று அவரது பொன்விழா பாரிஸ் மாநகரில் நடைபெறுவதும், அவரது நூல்கள் இங்கு வெளியிடுப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. நூல்களை அச்சிட்டு வெளியிடுவதும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று மிகவும் செலவுகரமான விடயமாகவுள்ளது."

நேற்று, நவம்பர் 19, எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், வருகை தந்தவர்கள் இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக் காணொளியை ஒளிப்பதிவு செய்தமைக்கும், புகைப்படங்கள் எடுத்ததற்கும் தடயம் நிறுவனத்துக்கும், அதன் ஸதாபகர் கிருபா கந்தையாவுக்கும், நிகழ்வைப் புகைப்படங்களில் ஆவணப்பதிவாக்கிய நண்பர் அலெக்ஸுக்கும் நன்றி. அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றி.

வணக்கம் நண்பர்களே! எனது மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகமும் எதிர்வரும் ஞாயிறு , நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ளது. 'தேடகமும்' , 'பதிவுக'ளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு இது. நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணி தொடக்கம் 8 மணி வரை 3600 Kingston road இல் அமைந்துள்ள Scarborough Village Community Recreation Center இல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
நிகழ்வில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு பற்றி எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களும், 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' பற்றி எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவர்களும், 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவர்களும் உரையாற்றுவார்கள். எழுத்தாளர் பா.அ.ஜயகரன் அவர்கள் தலைமைதாங்கி நெறிப்படுத்துவார்.
மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

சென்ற ஞாயிற்றுக் கிழமை 5-11-2023 கனடா எத்தோபிக்கோ நகரத்தில் இயங்கும் ‘கிராமத்துவதனம் ஒன்ராறியோ தமிழ் பெண்கள் பண்பாட்டு மையம்’ என்ற தமிழ் குடும்ப அமைப்பினரால் அல்பியன் வீதியில் உள்ள திஸ்ரில் நகர மண்டபத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெற்றோர்களும், கனடாவில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இந்த விழாவில் மிகவும் ஆர்வத்தோடு பங்கு பற்றியிருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றலுடன் சுமார் 4:00 மணியளவில் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அப்சரா சயந்தன் ஆகியோரால் சகலகலாவல்லி மாலை பாடப்பொற்று, நவராத்திரி பூசை சிறப்பாக இடம் பெற்றது. தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அக்சிதா பிரபாகரன், அதிஸா பிரபாகரன், அஸ்மிதா மாலரவன் ஆகியோரால் கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது.
அகவணக்கத்தை அடுத்து வரவேற்புரை சிந்துஜா சங்கர் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தலைவரும் ஒருங்கமைப்பாளருமான திருமதி கமலவதனா சுந்தரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச்சபை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான குரு அரவிந்தன் ‘பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய கடமைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நாடளாவிய ரீதியில் புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று நாள் எழுத்துப் பயிற்சிப் பட்டறையை நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கள / தமிழ் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடும் புதிய படைப்பாளிகளின் திறமைகளை மெருகேற்றுவதன் மூலம் இலக்கியத்துறையின் வளர்ச்சியினூடாகப் பண்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
நடைபெறும் திகதிகள்: 28, 29 மற்றும் 30 நவம்பர் 2023
இடம்: பொது நூலக மண்டபம், கொழும்பு. (விஹார மகாதேவி
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்கேற்புடன்
இலக்கியவெள் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் அ. யேசுராசாவுடனான நேர்காணலுக்கான காணொளி. நேர்காணலைக் கண்டவர்கள் எழுத்தாளர்கள் கலாநிதி சு.குணேஸ்வரன் & எஸ்.ரமேஷ்.
https://youtu.be/inRhsmjh74Q
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்
இந்தக் கருப்பொருளில் அல்லது பொதுவாக ஆண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேச விரும்பினால் தயவுசெய்து எங்களுடன் Nov 10, 2023ம் திகதிக்கு முன் தொடர்புகொள்ளவும்.
பின்குறிப்பு: இலங்கையிலுள்ள சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ-சுகாதார தளங்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புக்களில் பணிபுரிபவர்களை நாம் குறிப்பாக எதிர்பார்க்கிறோம்.
*புகைப்படங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.
எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
link here | Zoom Meeting ID: 918 584 6813 |No Passcode


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர். 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.
போட்டிக் கதைகளை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி - நவம்பர் 1, 2023
'காமன்வெல்த்' சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளர்கள் வெவ்வேறு ஐந்து காமன்வெல்த் பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் £2500 வழங்கப்படுவதுடன் அவர்களில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் ஒருவருக்கு £5000 வழங்கப்படும். பரிசு பெற்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பாளர் சில பரிசுத் தொகையைப் பெறுவார். போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம்.
தமிழில் கதை எழுதுபவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையென்றாலும், தமிழிலேயே தங்கள் கதைகளை அனுப்பலாம். தேர்வு விதிகளின் ஓர் அங்கமாக, அக்கதைகள் அனுபவமுள்ள தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பெறும். இந்த முதல் நிலையை வெற்றிகரமாகக் கடக்கும் கதைகள், சர்வதேச தேர்வுக்குழுவினர் வாசிப்பிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
நேற்று மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின் வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடந்த நிகழ்வைத் தேடகம் ( தமிழர் வகைதுறை வளநிலையம்) ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர்கள் மீராபாரதி, துஷி ஞானப்பிரகாசம், எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களைப்பற்றிய உரைகளை நிகழ்த்தினர். சிறப்புப் பிரதிகளைக் கவிஞர் திவ்வியராஜன், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், நாடகவியலாளர் சொர்ணலிங்கம், ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன், கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் மீராபாரதி வித்தியாசமாகத் தன் உரையினை ஆற்றினார். வழக்கமான உரையாக அல்லாமல் ஒரு நவீன நாடகக் காட்சியைப்போல் அவரது உரை அமைந்திருந்தது. பார்வையாளர்களின் பின்னாலிருந்து, வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கையைப்பற்றிய விமர்சனத்துடன் ஆரம்பித்து 'இனிச் சரிவராது' நாடகத்தின் உரையாடல்களை நடித்துக் காட்டியபடி தன் உரையினைத்தொடர்ந்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அதுபோல் உரை, நடிப்பு என இரு வடிவங்களில் நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை. வித்தியாசமான முயற்சி, ஆனால் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலானதாக அமைந்திருந்தது.