இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச் சந்திப்பும், அல்பெர்கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்”
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345


Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், பிரதான நூலக இந்திய தகவலகமும் இந்திய உதவித் தூதரகமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு (05.03.2025) புதன்கிழமை அன்று இடம்பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஈழத்துக் கவிதை மரபிற்கும் மிக நீண்டகாலமாகவே அணுக்கமான தொடர்பொன்றுள்ளது.ஈழத்தின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆரம்ப நாட்கள் பேராதனைக்களத்திலிருந்து உருவானதை அடையாளம் காண முடியும். அந்த வகையில் தமிழ்த்துறை வருடந்தோறும் ஒழுங்கமைக்கும் குறித்த பயிலரங்கு இம்முறை பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதம நூலகர் கலாநிதி ஆர். மகேஸ்வரன். “உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம், அகத்திய முனிவர்இ தொல்காப்பியர் ஆகியோரின் இலக்கணப் பங்களிப்பு முதலான விடயங்களைக் குறிப்பிட்டார். மேலும் இந்திய, தமிழக அரசுகள் வெளியீடு செய்யும் நூல்களை பிரதம நூலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அம்மையார் அவர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.
Join Zoom Meeting | ZOOM Meeting ID: 897 1736 5517ss | Passcode: 737853
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம் பாகம் ) மின்னூல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது. இதன் வெளியீட்டு அரங்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம் பாகத்தின் மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார். முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர். குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனிஸ்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னாள் நடேஸ்வராக் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபைத் தலைவராகவும் பணியாற்றிய அமரர் திரு. அ. குருநாதபிள்ளை அவர்களின் நினைவாக அதிபரின் குடும்பத்தினரும், எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினரும், இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தனர். அதிபரின் குடும்ப அங்கத்தவரும் பேரனுமான திரு. அருள் சிவகணநாதன் நேரடியாகச் சென்று இந்தக் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
போர்ச் சூழல் காரணமாக காங்கேசந்துறைப் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருந்தனர். அதனால் பாடசாலையும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து தற்போது மீண்டும் பழைய இடமான காங்கேசந்துறை கல்லூரி வீதியில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. கல்லூரியின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு போதிய வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Zoom Meeting-ID: 250 977 0769 | Pass Code: 246810

நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலை சீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான்.
'கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என எங்கள் ஆணவத்தை எண்ணெய் போட்டுத் தடவிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருவோம்.
கண்ணகி என்ற வார்த்தைக்கு அர்த்தம், சிலப்பதிகாரத்தைக் கேள்விப்படாத ஒருவனுக்கு மட்டுமல்ல, அரிச்சுவடி எழுதாதவனுக்கும் புரியும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரை கண்ணகி என்றால், கற்பு, நெருப்பு, துணிவு, கோபம் என்றவாறான விம்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு கலை வடிவங்களில் நின்று நிலவிவரும் சிலப்பதிகாரத்தின் கதைமூலம் தமிழ் மக்களின் மூளையை பதிவுசெய்துவந்திருக்கிறது.
அந்தச் சிலப்பதிகாரத்தை, அழகான நாடகக்கதையாக்கி மெல்பேனில் மேடையேற்றிய, பாரதி பள்ளி மாணவர்களுக்கு நன்றி. மேடை ஏற்றத்திலிருந்து, நிர்வாகம், பாடல்கள் என மாவை நித்தியானந்தனின் உழைப்பையும் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
சிலப்பதிகாரத்தை முறையாக வாசிக்காத போதிலும் நானும் நீங்களும் அறிந்த கதையது. கண்ணகி-கோவலன் - மாதவி என்ற மூன்று பாத்திரங்கள் நமது இலக்கிய வெளியில் மட்டுமல்ல, சமூக, குடும்ப வெளியிலும் இன்றும் நடமாடுபவர்கள். இதனாலேயே சில இலக்கியங்களை எக்காலத்திற்கும் இசைவாகச் சாகாவரம் பெற்றவை என்கிறோம்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகசபை அங்கத்தவர்களால் மங்களவிளக்கு ஏற்றப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன பைரவி அருள் மாறன், லதிசா தயாளன், பிரகதி சர்மா ஆகிய சிறுமிகளால் இசைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து புஸ்பா சிவராசா, இந்திராணி சங்கநிதி ஆகியோரின் தமிழரின் பாரம்பரிய பறை இசையும், சிலம்பாட்டமும் இடம் பெற்றன. அடுத்து வரவேற்பு நடனமும், திருமதி அருள்மலர் மதியழகனின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.
அடுத்து இளையதலைமுறைக்கும் பெண்களுக்குமான ‘வதனம்’ சஞ்சிகையின் முதலாவது ஆண்டுமலர் வெளியீட்டுரையை எழுத்தாளரும் முதன்மை ஆசிரியருமான குரு அரவிந்தன் நிகழ்தி வைக்க, இளைய தலைமுறை இணையாசிரியர் ஆகாஸ் ஞானவேலு அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. திருமதி கேதா கிருபராஜனின் இதழ் ஆய்வுரையைத் தொடர்ந்து, முதல் பிரதியை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ZOOM Meeting ID: 626 491 9582 | Passcode: 6643 | ZOOM LINK

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

Zoom Meeting | Meeting ID: 812 2400 3054 | Passcode: 516885
படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்.

கடந்த மார்கழி மாதம் 6ம், 8ம் திகதிகளில் சிலப்பதிகாரம் ஒரு முழு நீள அரங்க அளிக்கையாக மெல்பேண் - டான்டினோங் Drum Theatre இல் அரங்கேறியிருந்தது. தமிழ் நாடக உலகில் நீண்ட காலமாக பாராட்டுப் பெற்ற பல நாடகங்களை எழுதி, இயக்கிய மாவை நித்தியானந்தன் இந்த அரங்கப் பிரதியை எழுதித் தயாரித்திருக்கிறார். நடனக் கலைஞர் திருமதி பகீரதி பார்த்திபன் இதனை இயக்கியிருந்தார்.
சிலப்பதிகாரம் தமிழ் காப்பியங்களுள் மிக பிரசித்தமானது என்பதுடன் நாடகத் தன்மை கொண்ட படைப்பு என்பதால் நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால்
பெரும்பாலான காப்பியங்கள் அரசனையோ அல்லது தெய்வம் ஒன்றையோ பிரதானமான பாத்திரமாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம், கோவலன் என்ற குடிமகனையும் மனைவி கண்ணகியையும் பற்றியே சொல்கிறது. இன்னும் குறிப்பாக கண்ணகியின் நீண்ட பயணத்தின் கதை இது.

வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
இக்காலத்தில் பொதுவான இலக்கிய, கலை நிகழ்வுகள் வெளியரங்குகளில் நடப்பதில்லை. சிறியகுன்றுகள் உள்ள இடங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகள் இடம் பெறுவதுண்டு. இதைவிட வெளியிடங்களில் ‘சினோமான்’ போன்ற பனியிலான பொம்மை உருவங்களைப் பெரிதாகச் செய்து காட்சிப் படுத்துவார்கள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வானது தேசத்தின் கண் - தமிழ் மணி மானா மக்கீன், கலைஞர் - கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் சமூக தீபம், அல்ஹாஜ் எம்.சீ. பஹார்தீன் நூலின் முதற் பிரதியையும், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதியையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
வழி: ZOOM | Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

* தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை இரு தடவைகள் அழுத்தவும்.
உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025
போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.
தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.
15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள்,
இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.
முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.
மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.
நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.
ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.
10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.
குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 21 ஆம் திகதி ( 21-12-2024 ) சனிக்கிழமை மெய்நிகரில் (Zoom) நடைபெறும்.
1. வண்ணாத்திக்குளம் (நாவல்) - ஜே.பி. ஜொசப்பின் (தமிழ்நாடு)
2. உனையே மயல் கொண்டு (நாவல்) - டாக்டர் பஞ்சகல்யாணி (இலங்கை)
3. சோகனின் வைத்தியசாலை (நாவல்) - கவிஞர் சல்மா (தமிழ்நாடு)
4. கானல்தேசம் (நாவல்) - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து)
5. பண்ணையில் ஒரு மிருகம் (நாவல்) - சந்திரிக்கா அரசரட்ணம் (பிரான்ஸ்)
6. தாத்தாவின் வீடு (நாவல்) - கலா. ஶ்ரீரஞ்சன் (இங்கிலாந்து)
7 வாழும் சுவடுகள் (புனைவு சாரா பத்தி) - அசோக் (அவுஸ்திரேலியா)
8. நாலு கால் சுவடுகள் - புதிய வரவு – டாக்டர் கிருபானந்த குமரன் ( இலங்கை )
9. எக்ஸைல் – (கட்டுரைகள்) - நடராஜா சுசீந்திரன் (ஜெர்மனி)
எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.
மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting
Meeting ID: 842 7782 0317 | Passcode: 659335
அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 1-30 மணி
இங்கிலாந்து நேரம்: காலை 8-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் : காலை 9 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை 3-00 மணி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஓவியப் போட்டி: 'நாளை விடியும்' இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..
ஓவிய உள்ளடக்கம்:
பெரியார், அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமே, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரைந்தவரின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address) அலைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.01.2025 க்குள் அனுப்புங்கள்.

நாம் வாழும் இந்த அழகான, வளமான பூமிக்கோளை போர்களினால், தவறான அணுகுமுறைகளினால் சீரழித்து வருகின்றோம். இதனைப்பாதுகாப்பது மனித குலம், சக உயிர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவசியம். இதற்கு முதற் படி இயற்கை வளங்களைப் பேணுவதாகும். இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உணவுச்சங்கிலி முறையாகப் பேணப்படுவது அவசியம். இதற்கு முதற்படி காடுகளைப் பேணுவதாகும். அபிவிருத்தி என்னும் பெயரில் காடுகளை அழித்துக்கொண்டே வருகின்றோம். இப்படியே நிலை நீடித்தால், உணவுச்சங்கிலி சீர்குலைந்தால், இந்த நீலவண்ணக் கோளில் உயிரினங்கள் வாழும் நிலையே இல்லாது போய்விடும். இதனால்தான் சூழலியலாளர்கள் சூழலைப்பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.