நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகள் என்ற தலைப்பில் பலர் உரையாற்றினார்கள். முதலில் அறிமுக உரை நிகழ்த்திய இலக்கியவெளி அகில் சாம்பசிவம் அவர்கள், சர்வதேசப் புகழ்பெற்ற, ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரான குரு அரவிந்தன் ரொறன்ரோவில் கணக்காளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான இவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம், பீல்பிரதேச குடும்ப ஒன்றியம் போன்றவற்றில் முக்கியமான பதவி வகிக்கின்றார். இதைவிட கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழாரம்,’ ‘வதனம்’ போன்ற இதழ்களின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று குறிப்பிட்டார்.  

அடுத்து உரையாற்றிய கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள் குரு அரவிந்தனின் தற்போது வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளான, இனிய நந்தவன வெளியீடுகளான ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ மற்றும் ‘யாதுமாகி நின்றவள்’ ஆகிய நூல்களோடு தொடர்பு படுத்தித் தனது உரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய வைத்திய கலாநிதி மேரி கியூரி போல் அவர்கள் மணிமேகலைப் பிரசுர வெளியீடுகளான ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘நின்னையே நிழல் என்று’ ஆகிய நூல்களைத் தொடர்பு படுத்தித் தனது உரையை நிகழ்த்தினார். 25 வருடங்களுக்கு முன் எப்படி எங்கள் சமூகக் கட்டமைப்பு இருந்து என்பதை, அனுராதா ரமணன் அணிந்துரை எழுதியுள்ள குரு அரவிந்னின் கதைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என்பதையும், தமிழகத்து பிரபல இதழ்களில் இந்தக் கதைகள் வெளிவந்திருப்பதையும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டம் சார்ந்த கதைகளை முதன் முதலாகத் தமிழக இதழ்களில் குரு அரவிந்தன் வெளிக் கொண்டு வந்து தமிழக வாசகர்களுக்கு அறியத்தந்ததையும் எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் எடுத்துக் காட்டினார்.

அடுத்து உரையாற்றிய கலாநிதி சு. குணேஸ்வரன் அவர்கள் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்,’ ‘உன்னருகே நானிருந்தால்’ ஆகிய நாவல்களைத் தொடர்பு படுத்தித் தனது உரையைத் தொடர்ந்தார். குரு அரவிந்தன் யாழ்ப்பாணத் தமிழில் ஏன் எழுதுவதில்லை என்ற தனது ஆதங்கத்தையும் அப்போது வெளிப்படுத்தினார்.

அடுத்து திறனாய்வாளர் சி. ரமேஸ் அவர்கள் ஞானம் இதழின் அட்டைப்பட நாயகனான குரு அரவிந்தனை ‘ஆச்சரியம் தரும் எழுத்தாளராகக்’ குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி, குரு அரவிந்தனின் ஆறு நாவல்களை ஒப்பிட்டுத் தனது உரையைத் தொடர்ந்தார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது, கியூபிசக் கோட்பாட்டைப் (ஊரடிளiஅ) பின்பற்றி எழுதிய முதல் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தன்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய நாவல்களில் இருந்து இதன் படைப்பு முறைகள் மற்றும் சாராம்சத்தில் வேறுபடுத்தப்பட்டு, உளவியல் தரவுகளைக் கொண்டு, பல முன்னோக்குகளை ஆதாரமாகப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திற்கு பிறகு வந்த எழுத்தாளர்களில் அதிகம் அறியப்பட்ட, பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட எழுத்தாளராகக் குரு அரவிந்தன் இப்போது இருப்பது எங்களைப் பெருமைப்பட வைக்கிறது. முத்துலிங்கம் அவர்கள்; ஓரிடத்தில் ‘குரு அரவிந்தனின் நாவல்களை வாசிக்கும் போது, ‘ஐஸ்கிறீம் குடிப்பது போன்ற சுவை இன்பத்தையும், முடிந்துவிடுமோ என்ற ஏக்கத்தையும் அனுபவிக்க முடிகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். குரு அரவிந்தனின் எல்லா நாவல்களையும் குணேஸ்வரன் வாசிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன், வாசித்திருந்தால் அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அடுத்து தமிழகப் பேராசிரியர் முனைவர் கரு முத்தையா அவர்கள் உரையாற்றினார்கள். ‘எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய பொதுத் தமிழில் எழுதியபடியால்தான் இன்று குரு அரவிந்தன் பலரையும் கவர்ந்த சர்வதேச எழுத்தாளராக, தமிழகத்தின் அத்தனை பிரபல இதழ்களிலும் எழுதுவதால் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களைத் தனதாக்கிக் கொண்டிருக்கின்றார். சங்க இலக்கியப் புலமை மட்டுமல்ல, அறிவியல் சார்ந்த புனைவுகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் ஒரு எழுத்தாளனின் பெரிய பலமே அவனது வாசகர் வட்டம்தான், இதைத்தவிர வேறு என்ன வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.

அனுப்பியவர் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்