இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 53 : "எழுத்தாளர் சுதாராஜ் - பன்முக ஆளுமை" - தகவல்- அகில் -
Join Zoom Meeting: | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345


Join Zoom Meeting: | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345


சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 12-10-2025 ஞாயிறு காலை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை வாயிலில் நடைபெற்றது..
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய ‘தன்முனைக் கவி ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் வெளியிட முனைவர் வே.புகழேந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
Join Zoom Meeting | Meeting ID: 835 7605 6586 | Passcode: 245552
* அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
* அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதல்வர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.
இராமாயணத்தின் முதலாம் பாகம் இசை நாடகமாக அரங்கேறியது. நாடகத்தின் ஆரம்பக் கட்டத்தில் விசுவாமித்திர முனிவர் இராமனையும் இலக்குமணனையும் அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரராக வேடம் பூண்டு நடித்தவர் சினம் கொண்ட முனிவராக காட்சியளித்தார். இராமன் இலக்குமணனாக வந்தவர்களும் தமது கதாபாத்திரங்களை திறம்பட நடித்தனர் என்றால் மிகையாகாது.

கனடாவில் நடைபெறவுள்ள (19-09-2025 - 21-09-2025) ஆறாவது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள கீழ்வரும் இணைப்பின் ஊடாக பதிவுசெய்யலாம்.
விழா குழு

எழுத்தாளர் தமிழ்நதியின் மூன்று நூல்கள் இம்மாதம் 'டொரோண்டோ'வில் வெளியிடப்படவுள்ளன. வெளியிடப்படவுள்ள நூல்களின் விபரங்கள் வருமாறு: 'நாடு கடத்தப்பட்ட சொற்கள்', 'மாயக்குதிரை' & 'தங்க மயில் வாகனம்'.

[ நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து சில ஆண்டுகளின் முன் விடுதலையான தமிழ் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸின் சிறைவாசத்தை விபரிக்கும் இந்நூல் அவர் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.]
16 ஆண்டுகள் 'தமிழ் அரசியல் கைதி'யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்துஎழுதிய உண்மையாவணத் தொகுப்பான 'துருவேறும் கைவிலங்கு' நூல், பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..!

சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வெங்கட் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
முதலில் மங்கள விளக்கேற்றி, கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து, மன்றப்பாடல் ஆகியன இளையோரால் இசைக்கப்பட்டு, நாட்டிற்கு நன்றி, அகவணக்கம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அதன்பின் மாணவர் பாசறை பற்றி முனைவர் இல. சுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து மாணவர் பாசறையின் ‘தொல்காப்பியர் கால வாழ்வியல்’ என்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி சுவந்திசங்கர், செல்வி காவியா சிவசங்கரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தினர். இதில் பங்குபற்றிய சுமார் 22 இளையோர் மிகச் சிறப்பாக ஒவ்வொரு நிலத்திணை பற்றியும் தெளிவாகத் தமிழில் விளக்கம் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
தொடர்ந்து திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி யூனிதா நாதன் அவர்களின் பாராட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து மன்றத்தின் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. தொல்காப்பியம் சார்ந்த நிகழ்வுகளை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும், அடுத்த தலைமுறையினரிடம் ஏன் கொண்டு செல்ல வேண்டும் என்பது போன்ற விளக்கத்தைச் சபையோருக்கு எடுத்துச் சொன்னார். தொடர்ந்து ஜனனி குமார் அவர்களின் சிலம்பொலி நர்த்தனாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.
Meeting ID: 811 9560 6664 | Passcode: 178162 | Join Zoom Meeting

எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் முழுமையாக , ஐந்து பாகங்கள், ஆய்வாளரும், மொழிபெயர்ப்பாளருமான நேத்ரா றொட்ரிகோவால் ஆங்கிலமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
'மாவென்சி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று இலக்கம் 1265 Military Trail, Scarboroughஅமைந்துள்ள AC-223 at UTSC Academic Advising & Career Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வெளியீட்டுக் குழுவினர் அழைக்கின்றனர். நிகழ்வுக்கு வருகை தர விரும்பினால் அழைத்து உங்கள் இருக்கையைப் பதிவு செய்யும்படியும் நிகழ்வுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர். பதிவு இலவசம்.
இந்நிகழ்வு பின்வரும் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. Mawenzi House, Ontario Arts Council, Tam Fam Lit Jam, The Tamil Literary Garden, Toronto Arts Council & Tamil Studies at the University of Toronto Scarborough.
நிகழ்வில் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு விற்பனை செய்யப்படும். நிகழ்வில் கிடைக்கும் நிதி முழுமையாக ஸ்கார்பரோ நகரில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கு (Tamil Community Centre) நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுத் தொகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டன.
மீண்டும், இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
Join Zoom Meeting | Meeting ID: 838 9328 0707 | Passcode: 2025

Join Zoom Meeting | Meeting ID: 885 9929 2299 | Passcode: 372549

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
