வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்..! - அசலை -

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்இ இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைக் கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டுக் கடந்த பல வருடங்களாக 'இரா. உதயணன் இலக்கிய விருதுகளை" வழங்கிவருகின்றனர். கொரோனாப் பரவல் காரணமாக 2020, 2021இ 2022 ஆண்டுகளுக்குரிய விருது வழங்கல் அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது அந்த ஆண்டுகளுக்குரிய விருதுகள் யாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 -ம் ஆண்டுக்குரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது"க்கு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.



தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.




யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.




இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









