கனடாவில் 'தேடகம்' அமைப்பின் ஏற்பாட்டில் கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீடு..! - வி.ரி.இளங்கோவன் -

கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.
டானியலின் அரசியல், இலக்கிய, சமூகப் பணிகளில் இறுதிவரை அவருடன் உடன்நின்று செயற்பட்ட தோழர் வி. ரி. இளங்கோவன், டானியலின் பணிகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். இளந்தலைமுறையினர் உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பலரும் விருப்புடன் நூலைப் பெற்றுச் சென்றனர்.
கல்வியாளர்கள் பார்வதி - கந்தசாமி, மூத்த தோழர் வீரசிங்கம், ஹரிகரன் ஆகியோர் சிறப்புப் பிரதிகள் பெற்றனர். டானியலின் மூத்த மகன் புரட்சிதாசன் சிறப்புப் பிரதிகளை வழங்கினார்.
கனடா 'தேடகம்' அமைப்பினர் இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நூல் ஏற்கனவே யாழ்ப்பாணம், சென்னை, தஞ்சாவூர் ஆதியாம் இடங்களில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..!

காற்றுவெளியின் மார்கழி மாத மின்னிதழ்(2023) நமது எழுத்தாளர் சொக்கன்(க.சொக்கலிங்கம்)அவர்களின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளதால் அவரின் படைப்புக்கள்,பாத்திர வார்ப்புக்கள்,நாடகம்,நாவல்,சிறுகதை,கவிதை,தொகுப்புக்கள் போன்றதுறை சார்ந்த ஆழுமையினை ஆய்வுக்கட்டுரையாக(4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்) அனுப்புங்கள்.படைப்புக்கள் யாவும் யூனிக்கோட் எழுத்துருவிலும்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.











சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 தமிழ் எழுத்தாளர் விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டும், கௌரவிப்பும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.












பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









