விமர்சன அரங்கம்: ஜெயந்தி சங்கர் கதைகள்!
அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய விமர்சன அரங்கிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். ஆறு முக்கிய எழுத்தாளர்கள் இவ்வரங்கில் விமர்சிக்க இருக்கிறார்கள். வாய்ப்பிருப்பின், இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் விமர்சன அரங்கிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்கள், தெரிந்த / அறிந்தவர் /வாசகர்/ஊடக வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

இத்துடன் ஞானம் 163 இதழையும் அனுப்பி வைத்துள்ளேன். ஞானம் குழுவினர் போர்க்கால இலக்கியம் என்ற 600 பக்க மலரை வெளியீடு செய்தது போல தற்பொழுது புலம் பெயர் இலக்கியம் ஒன்றை வெளியிட உள்ளனர். பல பல்கலைக் கழக மாணவர்கள் ஞானம் இதழை தங்கள் சிறப்பு பட்டத்துக்க ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புலம்பம் பெயர் வாழ்வினைப் பிரதிபலிக்க கூடிய தரமானதும் ஆழமானதுமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஞானம் குழுவினர் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். 
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார். அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும். இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.
“Diaspora” is the term for a group of persons with a common group identity, unique in culture and language, dispersed or scattered in various parts of the world. A diaspora maintains and nurtures its own civilizational and cultural identity and its aspirations are linked with their country of origin, as well as with the diaspora worldwide, making it a global unity with global identity. The Jewish, Chinese and Indian diasporas are some of the vibrant diasporas with a presence all over the world. The Tamil diaspora is a demographic group of Tamil people, of Indian and Sri Lankan origin, who have settled in various parts of the world. Among the Indian diasporas, the Tamil diaspora is a very strong and vibrant community whose presence has been in Asia and Europe from age-old days, when the Tamil people developed commercial ties with various countries all over the world. Tamils are a sea-faring race and their trade with the western and eastern worlds has been documented from the pre-Christian era. This early commercial trade, followed by the travel of Buddhist monks and Saivite and Vaishnavite saints to East and Southeast Asia, then the conquering of the later Chola kings of Southeast Asia all resulted in early Tamil settlements in various countries.
கனடாவில் இருந்து வாராவாரம் வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் உதயன் பத்திரிகையின் வருடாந்தம் நடக்கும் பல்சுவைவிழா சென்ற சனிக்கிழமை மாலை (26-10-2013) ரொரன்ரோவில் உள்ள ஆர்மேனியன் இளைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு கனடா கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. கனடிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறனின் பாட்டு மன்ற நிகழ்ச்சி முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதைவிட கர்நாடக இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளுர் கலைஞர்களால் மேடை ஏற்றப்பட்டன.

பொலிகையூர் சு.க சிந்துதாசனின் “கடலின் கடைசி அலை” கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு 17.11.2013 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யா/பொலிகண்டி இ.த.க பாடசாலை மண்டபத்தில் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை ஆ. முல்லைத்திவ்யன் நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞமான த. ஜெயசீலன் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் (உரிமையாளர், செல்லமுத்தூஸ் புடவையகம், நெல்லியடி), சிறப்புப்பிரதியை பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சே. செல்வசுகுணாவும் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரைகளை இ. இராஜேஸ்கண்ணன், தானா விஷ்ணு ஆகியோரும் ஏற்புரையை நூலாசிரியர் சு.க சிந்துதாசனும் நிகழ்த்தினர்.
ஷா ஆலாம்,மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, 2014 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டுக்காண புதிய மாணவர்கள் சேர்க்கும் நடவடிக்கையில்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளியின்சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள செக்ஷன் 7, பாடாஞ் ஜாவா,கம்போங் சுங்கை இராசா,கம்போங் மணிமாறன்,ரிம்பா ஜெயா மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர். பள்ளித் தலைமையாசிரியை திருமதி. கோ.வரலட்சுமி அவர்களின் ஒத்துழைப்புடன்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.ந.இரவிந்திரன், துணைத்தலைவர் திரு.மு.கணேசன் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் நேரிடையாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.பள்ளி வாரியம் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பை வழங்கி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளிப் பிள்ளைகளின் போக்குவரத்துக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வகையில் பெற்றோர் களுடன் சந்திப்பு மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இன்னும் பிள்ளைகளைப்பதிவு செய்யாத பெற்றோர்கள் பள்ளியின் அலுவலக நேரத்தில் விரைந்து பதிவு செய்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 
பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளது. மாநாடு இந்த வாரம் 15 - 17 வரை கொழும்பில் நடைபெற இருக்கிறது. பொதுநல்வாய மாநாடு சிறீலங்காவில் நடைபெறுவதும் மகிந்த இராசபக்சே தலைமை ஏற்க இருப்பதும் பன்னாட்டு மட்டத்தில் பலத்த எதிர்ப்பு அலைகளை எழுப்பியுள்ளது. மன்னிப்பு சபை, மனித உரிமை காப்பகம், பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளார். அவருக்குப் பதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்திஷ் இந்திய குழுவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேற்று (திங்கட்கிழமை) பொதுநலவாய மாநாட்டை முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் லா சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் நட்பார்ந்த சூழலில் நிறைவாக நடந்து முடிந்தது. பல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்ட 75 நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமர்வுக்கு தோழர். அசோக் யோகன் தலைமையேற்று தோழர். குமரன் தொடர்பாகத் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குமரனோடு பழகிய பல்வேறு நண்பர்கள் மற்றும் தோழர்களின் குமரன் குறித்த கூட்டுநினவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அசோக் யோகனின் நினைவுகூரல் அமைந்திருந்தது.
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக்ககவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தளார் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தைஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப் கொடகே பதிப்பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருது ஆகியனவற்றையும் பெற்றுள்ளார்.
இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.
இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts) என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. கனடாவில் உள்ள கலை ஆர்வம் மிக்க மாணவர்களுக்கான பொதுப் பரிட்சையில் சித்தியடைந்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திரு திருமதி குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்து கனடிய தேசிய கீதம் கல்லூரிக்கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து எம்மினத்திற்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. செல்வி அருசி மகேஸ்வரன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராவும், திருமதி வனிதா குகேந்திரன் தொடர்பாளராகவும் கடமையாற்றினார்கள்.
டாக்டர் ஜி.ஜெயராமன் (13.05.1934 – 25-09.2012)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









