உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழாஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ்வாலயத்திலிருந்து பிரபந்தப் பெருந்திரட்டு மதகுருமார்கள், சமயப் பெரியார்கள், அறிஞர்கள் இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் சகிதம் புலவர் ஊஞ்சல் பாடிய வல்லைவாளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழாவில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் திரு. ந.சஞ்ஜீவன் இறை வணக்கத்தை இசைத்தார். புலவரின் பக்திப் பாடலொன்றும் இசைக்கப்பட்டது. புலவரின் கொள்ளுப் பேரரும் பொறியியலாளரும் வெளியீட்டாளருமாகிய திரு. நீ. நித்தியானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். நகரபிதா தமது தலைமையுரையில் தமிழினத்தின்; சொத்துக்கள், சாதி மற்றும் பிராந்திய பாரபட்சமின்றி ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந் நூல் வெளியீடும் என்று குறிப்பிட்டார்.

ஆசியுரையைச் சிவபிரம்ம ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈழத்துத் தலங்கள்மேல் புலவர் பாடிய இலக்கியங்கள் அழிந்துவிட்டன என்று நினைத்தோம். ஆனால் கடினமான முயற்சியுடன் அதனைத் தேடி எடுத்து, புலவருக்கும் புலவர் பாடிய ஆலயங்களுக்கும் பக்திப் பாடல்களுக்கும் பதிப்பாசிரியர்கள் பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

வாழ்த்துரையினை வழங்கிய யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசாகரூபன், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளியீட்டு விழா என்றும் கூழங்கைத் தம்பிரானில் இருந்து உருவாகிய இரண்டு புலமை மரபுகளாகிய ஆறுமுகநாவலர் மரபு, சிவசம்புப் புலவர் மரபு என்பவற்றில் சிவசம்புப் புலவர் மரபினை ஆராய்வதற்குரிய வரலாற்று ஆவணங்கள் கொண்ட தொகுதியாக இந்நூல் விளங்குகின்றது எனவும் இதனைப் பதிப்பித்தவர்கள் பட்ட பெரும் சிரமங்களை நேரடியாக அறிவேன் என்றும் ஒரு பெரும் நிறுவனம் செய்ய வேண்டிய பணியைப் புலவர் மணி அவர்களும் சுதர்சன் அவர்களும் திறம்படச் செய்துள்ளனர் என்றும் அவர்களுக்கு ஈழத்து இலக்கிய வரலாறு கடமைப்பட்டது என்றும் குறிப்பிட்டார். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. சு. கிருஷ்ணகுமார், உடுப்பிட்டி மண்ணிற்கென அமைந்த இலக்கிய பாரம்பரியத்தை அருளம்பலம் முதலியார் தொடக்கி வைத்தார் எனவும் அது இன்று வரை இலங்கை முழுவதும் பரவியுள்ளது எனவும் குறிப்பிட்டு ஈழத்து இலக்கியத்திற்கு உடுப்பிட்டி தந்த நன்கொடையே இந்நூல் எனவும் இக் கல்லூரியின் மைந்தர்கள் இதனைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரையினைப் புலவரின் ப10ட்டி தமிழ் புலமை மிக்க ஆசிரியை திருமதி. இ. தில்லையம்பலம் வழங்கினார். புலவரின் வாழ்க்கைப் பின்னணியிலிருந்து சுவாரசியமான விடயங்களை எடுத்துக் கூறி அவற்றோடு புலவரின் படைப்புக்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் காலத்தின் தேவை குறித்து அவை நூலாக வெளிவந்துள்ளதையும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி தீக்கிரையானபோது, புலவரின் நூல்களும் தீக்கிரையாகின எனினும், அவற்றைச் சுதர்சன் தனது நான்கு வருடமான தீவிர தேடுதலில் கண்டுபிடித்து தொகுத்திருப்பது பாராட்டத்தக்கது என்றும் கூறினார். புலவரின் சுவடிகளைப் பாதுகாத்த புலவர்மணிக்கு நன்றியும் கூறினார்.

பின்னர் நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. முதற் பிரதியைப் புலவர்மணி கா. நீலகண்டன் வழங்க வைத்திய கலாநிதி இருதய வைத்திய நிபுணர் ந. குகதாசன் பெற்றுக்கொண்டார். கௌரவப் பிரதியினை திரு. கி. தவநேசன் வழங்க யாழ். பிரதம நூலகர் திருமதி இமெல்டா கருணாகரன் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சி. ஸ்ரீ சற்குணராஜா வழங்கினார்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழாஅறிமுகவுரையினை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ப10. சோதிநாதன் நிகழ்த்தினார். சிவசம்புப் புலவரின் கவிதை ஆளுமை பற்றியும் சமய தத்துவ புலமை பற்றியும் சமஸ்கிருதப் புலமை பற்றியும் தமிழ்ப் பக்திக் கவிதை மரபில் அவருக்குரிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாகக் கூறிய அவர், ஆங்கில மொழியில் வெளிவந்த பக்திக் கவிதை, மானுடம் சார்பான கவிதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் தனது அறிமுக உரையினை நிகழ்த்தி பதிப்பாசிரியர்களுக்கு தனது ஆசியினையும் தெரிவித்தார்.  நயப்புரையினை வழங்கிய பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் பொக்கிஷம் ஒன்று இன்று வெளியிடப்படுகின்றது என்று கூறி, சிவசம்புப் புலவரின் உரைப்பணி, புராணப்படனப் பணி, கல்விப் பணி, இலக்கணப் பணி, இலக்கியப் பணி ஆகியவற்றை நயந்து கூறினார். இலங்கைப் பல்கலைக்கழங்களில் தமிழ்ப் புலமையாளர்கள் என்ற பாரம்பரியம் சிவசம்புப் புலவரின் கல்வி மரபிலிருந்து ஆரம்பிக்கின்றது எனக் கூறி சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியேரின் ஆசிரியர்கள், சிவசம்புப் புலவரின் நேரடி மாணாக்கர்கள் என்று சான்று காட்டிக் கூறினார். இத் திரட்டில் அமைந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் கூறி, பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு கடின உழைப்பினால் தொண்டு செய்த புலவர் மணி அவர்களையும் சுதர்சனையும் பல்கலைக்கழக புலமையாளர் சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

ஆய்வுரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். வ. மகேஸ்வரன் அவர்கள், தமிழில் பதிப்புத்துறை பண்பாட்டுப் பின்னணியில், வரலாற்று ஓட்டத்தில் திரட்டு பெறும் முக்கியத்துவத்தை விளக்கியும் பல்கலைக்கழகப் புலமையாளர்கள் பகுப்பாய்வு முறையிலான பதிப்பினை மேற்கொள்வதற்கு இத்திரட்டு சிறந்த முன்னோடியாக, ஆரம்பமாக, முன்னுதாரணமாக அமைகிறது என்றும் செவ்விதாக்கம் செய்யப்பட்ட செம்மையான இதுபோன்ற பதிப்புக்கள் தனியே பதிப்பு நூலாக மட்டுமன்றி, வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றமை தமிழியலுக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.  சிவசம்புப் புலவர் அக்காலப் புலவர் போன்று குறித்த ஒரு கிராமத்திற்குரியவராக - உடுப்பிட்டிக்கு மட்டும் உரியவராக இருக்கவில்லை. இலங்கை எங்கணும் உள்ள தலங்கள் பலவற்றையும் அவர் பாடியவர். பிராந்திய எல்லைகளைக் கடந்தவர். இலங்கைக்கு அப்பால் இந்தியத் தலங்களான மறைசை, எட்டிகுடி ஆகியவற்றின் மீதும் பாடியவர். ஈழம், தமிழகம் மட்டுமல்லாது முதன் முதலில் ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்கிழக்காசியாவை நோக்கி நகர்ந்து சென்ற புலவர் இவரே எனவும் அதற்குச் சான்று அவரது மலேசியா, பினாங்கு, தண்ணீர்மலைக் கந்தசுவாமி மலை பதிகம் எனவும் குறிப்பிட்டார். நேர்த்தியான அச்சமைப்போடு புலவரது கையெழுத்து அமைந்த ஏட்டுச் சுவடியையும் சேர்த்துப் பதிப்பித்திருப்பதும் சிவசம்புப் புலவரது கவிதை மரபு, சிவசம்புப் புலவர் கால ஆராய்ச்சி முதலிய கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதும் இந்நூலுக்கு பெரும் பலம் சேர்க்கிறது என்றும் ஈழத்துத் தமிழ்க் கீர்த்தனை மரபு முன்னோடியாகிய சிவசம்புப் புலவரது கீர்த்தனைகள் இடம்பெற்றிருப்பன சிறப்பானது என்றார். புலவர்மணி நீலகண்டன் எனும் புலமையும் முதுமையும் நிறைந்த ஒருவரும் எனது மாணாக்கனும் என் துறை விரிவுரையாளருமாகிய சுதர்சன் என்னும் இளமையும் புலமையும் நிறைந்த ஒருவரும் இணைந்து செய்த பதிப்புப் பணி இது. மரபு ஆளுமைமிக்க ஒருவரும் மரபும் நவீனமும் கலந்த ஆளுமை மிக்க ஒருவரும் இணைந்து மேற்கொண்ட இப்பதிப்புப் பணி பாராட்டத் தக்கது. புலவரது நூல்கள் மேலும் வெளிவர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஏற்புரையினை பதிப்பாசிரியர் சார்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை விரிவுரையாளர் திரு. செ. சுதர்சன் நிகழ்த்தினார்.  நன்றியுரையினை கொழும்பு ஆதார வைத்தியசாலை இருதயவியல் துறையின் சிரேஷ்ட பதிவாளர் வைத்திய கலாநிதி பானுபிரசன்னா நிகழ்த்தினார். இதன் பின்னர் கல்லூரிக் கீதம் இசைக்கப்பட்டு அறிஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது. சுமார் எழுநூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல் யாழ். குரு பிரின்டஸில் அச்சிடப்பட்டுள்ளது. அட்டைப் படத்தினை யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. பா. அகிலன் புலவரது ஓலைச் சுவடியையும் புலவர் காலத்து (பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்)  மரஅச்சு விளக்கப் படமொன்றினையும் கொண்டு அழகுற வடிவமைத்துள்ளார். அட்டைப் படத்தினை கரிகணன் அச்சிட்டுள்ளது. சிவசம்புப் புலவரின் இல்ல வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

- பதிவுகளுக்கு அனுப்பி வைத்தவர்: சு.குணேஸ்வரன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here