கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்!

கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்! கவிஞர் ஆணியின் 'விந்தையாய் விரியுதடி' மற்றும் ஏனெஸ்ட் மக்கின்ரயரின் 'ஐராங்கனி'


கலப்பையின் ஆதரவில் சிட்னியில் நூல் அரங்கேற்றம்! கவிஞர் ஆணியின் 'விந்தையாய் விரியுதடி' மற்றும் ஏனெஸ்ட் மக்கின்ரயரின் 'ஐராங்கனி'

அனைவரும் வருக! ஆதரவு தருக!
ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மாராம வீதி, கொழும்பு – 06.
காலம்: 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணி
தலைமை: திரு. வி. கருணைநாதன்
சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை'; உரைஞர் - திக்வல்லை கமால்
சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் ; உரைஞர் - லெனின் மதிவானம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சங்கத்தின் தலைவர் உயர்திரு.வே.ம.அருச்சுணன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் 14 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 21.4.2013 ஆம் நாள் காலை 9.00 மணியளவில் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையில் நடைபெறவிருக்கிறது. ‘நியாட்’ இயத்தின் தலைவர் பெரும் மதிப்புக்குரிய டத்தோ தஸ்லீம் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றவிருக்கின்றார்.சங்க உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். புதியதாக உறுப்பியம் பெறவிரும்பும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் விரைந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தலைவர்: 012 6152537 செயலாளர்: 013 2758142 பொருளார்: 012 3175417
தகவல்: வே.ம.அருச்சுணன் - மலேசியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நாள்: 21-04-2013, ஞாயிற்றுக் கிழமை
இடம்: பவள விழா அரங்கம், மெரினா கேம்பஸ், சென்னை பல்கலைக் கழகம், வள்ளுவர் சிலை எதிரில்
நேரம்: மாலை 5 மணிக்கு.
நண்பர்களே ஞாயிற்றுக் கிழமையை (21-07-2013) மறந்துவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை ஜாலியாக மெரினா பக்கம் குடும்பத்தோடு வந்து, கடற்கரையில் கொஞ்சம் நேரம் கழித்துவிட்டு, அப்படியே இந்த நிகழ்விற்கு வந்து விடுங்கள். மா. அரங்கநாதன் தமிழின் முக்கியமான எழுத்தாளர். அவரோடு நேரிடையாக கலந்துரையாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்காகவே, அவர் புதுவையில் இருந்து வரவிருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் ரவிசுப்ரமணியன்.
மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன்ää திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

ஸ்கார்பரோ, கனடா: இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு - 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' (ஏப்ரில் 27, 2013)
இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)
காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை.
தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் - எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்து வருகின்றது. இதுவரை காலமும் நடந்த விழாக்களில் இலங்கையிலிருந்து தி.ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், தேவகெளரி, உடுவை.எஸ்.தில்லை நடராஜா, தெளிவத்தை ஜோசப், லலிதா.நடராஜா ஆகியோரும் டென்மார்க்கிலிருந்து வி. ஜீவகுமாரன், அமெரிக்காவிலிருந்து வேலுப்பிள்ளை. பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழகத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளி எஸ்.வைதீஸ்வரன், ஜேர்மனியிலிருந்து எழுத்தாளரும் ஓவியரும் ‘வெற்றிமணி’, ‘சிவத்தமிழ்’ இதழ்களின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஞாயிறு தினக்குரல் வடலி வெளியீட்டின் ஆதரவுடன் மாபெரும் சிறுகதைப் போட்டி ஒன்றை இளம் எழுத்தாளர்களுக்காக நடத்துகின்றது. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்ளமுடியும். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த சிறுகதைப் போட்டியில் 65,000 ரூபா மொத்தப் பரிசாக வழங்கப்படுகின்றது. எல்லாமாக 13 பேருக்கு பரிசில்களைப் பெறுவதற்கான வாய்பு உள்ளது. அத்துடன் வெற்றிபெறும் சிறுகதைகளை நூலாக வெளியிடுவதற்கும் வடலி வெளியீட்டு நிறுவனம் முன்வந்திருக்கின்றது. வெற்றிபெறும் எழுத்தாளர்களுக்கு பணப் பரிசில்களுடன் நூல்களின் பிரதிகளும் வடலி வெளியீட்டினரால் வழங்கப்படும்.இலங்கையில் இது ஒரு முன்மாதிரியான முயற்சி. சிறுகதைப் போட்டி ஒன்றில் இந்தளவு தொகை பரிசாக வழங்கப்படுவது இலங்கையில் இதுதான் முதல் முறை. உலகம் முழுவதிலுமுள்ள இளம் எழுத்தாளர்கள் களத்தில் குதிக்கலாம்.
பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில் பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.
நோர்வே ஈழத்தமிழர் அவையின் ஏற்பாட்டில் 05ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிதொடக்கம் நான்கு மணிவரை இந்திய தூதரகத்திற்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமையை வெளிப்படுத்த பொது வாக்கெடுப்பு நடாத்த கோரியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
காலம: 05.04.13
நேரம்: 15:00 – 16:00
இடம்: இந்திய தூதரகம் முன்பாக (Niels Juels gata 30, 0272 OSLO)
நோர்வே ஈழத்தமிழர் அவை
“வீழ்வது அவமானமல்ல. ஆனால்
வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையீர் வணக்கம், பிரான்சு கம்பன் கழக மகளிர் அணி நடத்தும் குறளரங்கம் 26 அறிக்கை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக! மேலதிக விபரங்கள் ....உள்ளே
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையீர் தமிழாய்வு மாநாடுகள் மற்றும் தமிழ் விழாக்கள் பற்றிய கருத்துக்களை ஒரு கட்டுரைவாயிலாகப் பதிவுசெய்திருக்கிறேன். தமிழின் வளர்ச்சியில் அக்கறைகொண்டவர் என்ற வகையில் உங்கள் மேலான கருத்துக்கiளைப் பதிவிட்டு ஒரு இணைய விவாதமேடையை ஆரோக்கியமானதாக நடத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கட்டுரையினை 'தேசம்.நெற்' என்னும் இணையத்தளத்தில் வாசிக்கலாம். - அன்புடன், என்.செல்வராஜா.
N.Selvarajah, Bibliographer, Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 7817402704 | E-Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். website: Noolthettam.com
காலம்: 01ஏப்ரல் 2013 (வங்கி விடுமுறை தினம்) | காலை 10.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்: Trinity Community Centre, East Avenue, Eastham, London E12 6SG, (Nearest Underground: Eastham)
புகலிடத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எம்மவர்களுக்கு மலிவு விலையில் அண்மைக்கால வெளியீடுகளான ஈழத்துத் தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் முழுநாள் நிகழ்வு. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது அண்மைக்கால வெளியீடுகளையும் அதற்கான வாசகர்களையும் நேரடியாக ஒரு தளத்தில் கொண்டுசேர்க்கும் நிகழ்வு.
சிறுவர் நூல்கள், வளர்ந்தோர்களுக்கான கலை, இலக்கிய அறிவியல் நூல்கள்ää தீவிர வாசகர்களுக்கான துறைசார் ஆய்வுநூல்கள்ää 500க்கும் அதிகமான தலைப்புகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் 2009-2013 காலப்பகுதியில் தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி வெளியாகிய நூல்களும் காட்சிப்படுத்தப்படும். தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்ட முன்வந்துள்ள ஆசிரியர்களையும் பெற்றோர்களையும்ää படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் அன்புடன் அழைக்கின்றோம். ஈழத்துத் தமிழ்ப் பதிப்பு-விற்பனைச் சூழலில் புதியதொரு அனுபவத்தை பகிர்ந்துகொள்வோம். வங்கி விடுமுறை தினமான ஏப்ரல் 1ம் திகதி – உங்கள் நாட்குறிப்பில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாகட்டும்.
தொடர்புகள்: என்.செல்வராஜா 0781 740 2704
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்பு தோழர்களே, 'தமிழர்களுக்கான சர்வதேசப் பிரச்சாரம்' (Global Campaign for Tamils) சார்பாக , ஐ.நா.ம.உ.க வாக்கெடுப்பை முன்னிட்டு பல மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்திருக்கிறேன். இவற்றை உங்களுடைய வெளி மாநில, வெளிநாட்டு நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும். இது இன்றோடு முடிகிற விவகாரமன்று. இன்று தொடங்கி இந்த பிரச்சாரத்தை இலங்கையில் காமன்வெல் மாநாடு நடைபெறவுள்ள நவம்பர் வரையில், அல்லது அடுத்த ஆண்டு வாக்கெடுப்பு காலம் வரை செய்யவேண்டும். உலகின் கவனத்துக்கு ஈழத் தமிழர் பிரச்சனையைக் கொண்டு செல்ல அனைத்து முக்கிய ஐரோப்பிய, ஆசிய, இந்திய மொழிகளிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். அதன் தொடக்கமே இந்த பிரச்சார ஃபேஸ்புக் கவர்கள். இன்று தொடர்ச்சியாக அவற்றை நான் ஃபேஸ்புக்கில் ஏற்றிவருகிறேன். பின்வரும் மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் இன்று தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளன:
பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் 'பிரஞ்சுப் புரட்சி' (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!

தமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, இந்திய அளவிலும், உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில், உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும்
பெரிய சிவன் கோவில் (1148 Bellamy Road)
பிரதம விருந்தினர்: பேராசிரியர். செல்வா கனகநாயகம்
காலம்: ஞாயிறு ஏப்ரல் 28, 2013 மாலை 5.00 மணி - 9.00 மணி வரை
2012 ஜனவரியில் செயற்பட ஆரம்பித்த எழுநா ஊடக நிறுவனம், 2012 / 2013ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான செயற்பாடுகளைப் பூர்த்திசெய்து 2013 / 2014ஆம் ஆண்டு பருவகாலச் செயற்பாடுகளுக்குள் காலடி வைக்கின்றது. எழுநா செயற்பட விரும்பும் வெளிகளில், எழுநாவின் நண்பர்கள் வட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகளே கடந்த காலத்தில் வெளியீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் சமூகங்களின் பல்வகைமையை உறுதிசெய்யுமுகமாக பிரதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, எழுநா வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது, 2013 / 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில், எழுநா வெளியீடுகளுக்கான கோரலை பகிரங்கமாக முன்வைக்கின்றது. இளைய படைப்பாளிகள், அறிமுகமாகியிருக்காத எழுத்தாளர்களின் வெளியீடுகளை எழுநா ஊக்குவிக்க விரும்புகின்ற அதே நேரம், வெளியீட்டு வசதிகளற்ற / வெளியீட்டு வாய்ப்புக்கள் குறைந்த தரமான பிரதிகள் சார்ந்தும் அதிக கவனம் கொள்கின்றது.
1951 -ம் ஆண்டு ''வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 - ம் ஆண்டு ''ஈழநாடு" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் இவர் செய்வதை எல்லோரும் பாராட்டுவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர். ''ஈழநாடு" பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ''முரசொலி" பத்திரிகையிலும் பணிபுரிந்தார்.சிறுகதைகள் - குட்டிக்கதைகள் பல எழுதியவர். நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது. யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள்வரை அன்பாகப் பழகி இலக்கிய உரையாடல் செய்வதில் மகிழ்ச்சியடைந்தவர். போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து தமிழ்நாடு - திருச்சி நகரில் மனைவியோடு அமைதியாக வாழ்ந்துவந்தார். பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தார். 2010 -ம் ஆண்டு அக்டோபர் 10- ம் திகதி திருச்சி நகரில் இவரது அபிமானிகளால் இவரின் ''முத்துவிழா" சிறப்புறக் கொண்டாடப்பட்டது. ''இனிய நந்தவனம்" சஞ்சிகை முத்துவிழா மலர் வெளியிட்டுக் கௌரவித்தது. யான் கடந்த மே மாதம் (2012) திருச்சி சென்று ஒரு நாள் இவரோடு தங்கி பலஆண்டுகள் நாம் சந்தித்துப்பேச முடியாமல்போன அரசியல் - இலக்கிய விடயங்கள் - சர்ச்சைகள் குறித்து மிகவும் சுவராசியமாகப் பேசிக்கொண்டேன். இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..! அவரது மறைவை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது..! அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

40ஆவது இலக்கியசந்திப்பு- லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013: மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும். நன்றி! - 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் (லண்டன்)

Still Counting the Dead நூலாசிரியர் ஃபிரான்சிஸ் ஹாரிசனுடனான சந்திப்பு.
"நான் தமிழ்நாட்டில் இருந்த காலப் பகுதியில்தான் இராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை ஈழத் தமிழர்கள் செய்தார்கள் என்பதை ஏற்க மறுக்கிறேன். திரு பழ. நெடுமாறன் கூறுவதைப் போல இந்தக் கொலையைச் செய்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டன. இராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப் பட்ட விதமும் தண்டனை வழங்கப்பட்ட விதமும் பல அய்யங்களை எழுப்புகின்றன. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். எஞ்சிய 13 பேர் ஈழத்தமிழர்கள். சரி சமமான எண்ணிக்கை என்பது தற்செயலான செயல் அல்ல. ஆழமான உள்நோக்குடன் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ் தேசிய உணர்வை சிதைப்பதற்காக இந்த சதி வகுக்கப்பட்டு சிபிஅய் என்ற புலனாய்வு அமைப்பு தனது புலன் விசாரணையை நடாத்தியது என நூலாசிரியர் திருச்சி வேலுசாமி சொல்லுகிறார்" என இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூல் பற்றி ஆய்வுரை ஆற்றிய முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் குறிப்பிட்டார்.
கணையாழி விருது விழா அழைப்பிதழ்