படச்சுருள் - அறிமுகக்கூட்டம் - தமிழ்நாடு முழுவதும்...
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான படச்சுருள் மாத இதழை தமிழ்நாடு முழுக்க அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்யவிருக்கிறோம். உங்கள் பகுதியில் நீங்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சார்பாக பெரிய செலவு இருக்காது. நான் சொந்த செலவில் வந்து போகிறேன். ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களை ஓரிடத்தில் கூட்டினால் போதும். நல்ல சினிமாவிற்கான ஒரு கூடுகையாக இதனை நண்பர்கள் எடுத்துக்கொண்டு இந்த பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு ஐம்பது பிரதிகள் விற்றால் மட்டுமே நாம் விரைவில் நமது இலக்கை அடைய முடியும். எனவே நண்பர்கள் சிரமம் பாராமல் தங்கள் பகுதியில் படச்சுருள் இதழை அறிமுகம் செய்யும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தொடர்புக்கு: 9840698236. பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை பேசலாம் என்று தள்ளிப்போடாமல் உடனே அழையுங்கள். ஜூலை மாதத்திற்குள் பயணத்தை தொடங்கி சில இடங்களுக்கு சென்றாக வேண்டும்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
தமிழ் ஸ்டுடியோ: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.





தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.



கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள். 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு, ஜெயகாந்தனின் அரசியல் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய படங்கள், ஜெயகாந்தனின் சினிமா பற்றிய பார்வை போன்றவற்றை பதிவு செய்து, அவற்றை ஆவணமாக்கியுள்ளோம். அவசியம் நண்பர்கள் படித்துவிடுங்கள். 
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூலின் வெளியீட்டு அரங்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









