சயந்தனின் 'ஆதிரை' நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு
சயந்தனின் 'ஆதிரை' நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியவர் நடராஜா முரளிதரன்.


சயந்தனின் 'ஆதிரை' நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியவர் நடராஜா முரளிதரன்.

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
அலெக்ஸ் வர்மா:
தொலைபேசி எண்: 416 857 9773
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அலெக்ஸ் வர்மாவுடன் (Alex Varma) முகநூலில் நட்பு பேணுவோர் அவரது உட்பெட்டி வாயிலாகவும் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
*டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்துடனான அனுபவப் பகிர்வு - மு. பாக்கியநாதன்
*காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) -ஜென்னி ஜெயச்சந்திரன்
*மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும் - பீ. ஏ. காதர்
*டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று -பீமன்
*நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்! - வ. ந கிரிதரன்
*டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவரின் செய்தியா? - நிலாந்தன்
*நினைவு மீட்டல் - இ. பூபாலசிங்கம்
*David Envisaged Human Emancipation Through Tamil Struggle - K. Sachithananthan
தகவல்: அலெக்ஸ் வர்மா

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை: "ஆவணப்படுத்தல்: ஓர் அறிமுகம் " அருண்மொழிவர்மன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை: "எண்ணிம ஆவணப்படுத்தல்" - நற்கீரன்
"தமிழ்ச்சூழலில் ஆவணப்படுத்தலும், ஆவணப்படுத்தலின் அவசியமும்" - பொன் பாலராஜன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 27-02-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடம்: மெல்பன் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் கலாசார மண்டபம். Boundary road, Carrum Downs
காலம் : 13-02-2016 சனிக்கிழமை மாலை 4.00 மணி
யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையிலே 24 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள், படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத்துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து, 2002 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொண்ட வர். இவர் சிலகாலம் தமிழகத்திலே தங்கி தற்பொழுது கனடா வாசியாவார்.
நால்வர் வாழ்வும் வாக்கும், கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம், காலத்தின் குரல், ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் உட்பட சில நூல்களை எழுதியிருக்கும் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், தமிழக அரசின் விருது, இலங்கை தேசிய சாகித்திய விருது, இலங்கை வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் விருது, இந்திய ஸ்டேட் பேங் விருது தமிழகத்தின் சேக்கிழார் ஆராய்ச்சி மன்றத்தின் விருது என்பனவற்றையும் பெற்றவர்.
கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களின் அவுஸ்திரேலியா வருகையின் நிமித்தம் விக்டோரியா இந்து சங்கம் ஒழுங்கு செய்துள்ள இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

13 பெப்ரவரி 16 (சனிக்கிழமை) மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station)
நிகழ்வு-01
நூல்களின் அறிமுகம்
* தமிழகத்தின் ஈழ அகதிகள் – தொ,.பத்தினாதன்
* இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – கருணாகரன்
உரை - எஸ்.வாசன் , கோகுலரூபன் | வழிப்படுத்தல் – ராகவன்
நிகழ்வு-02
ஆதிரை நாவலின் அரசியலும் அழகியலும்
உரை- மாதவி சிவலீலன், ஹரி இராசலெட்சுமி | ஏற்புரை- – சயந்தன் ( நாவலாசிரியர்)
வழிப்படுத்தல் – எம். பௌசர்

அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும். அன்னாரின் நினவுகளை பதிவுசெய்யும் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்ற விஜயதாரகை என்னும் இலக்கியத்தொகுப்பும் அருண். விஜயராணியின் வாழ்க்கை மற்றும் குடும்ப விபரம் அடங்கிய பிரசுரமும் இந்நிகழ்வில் வெளியிடப்படும்.
இந் நினைவரங்கில் திரு. ஆதித்தன் அருணகிரி வரவேற்புரை நிகழ்த்துவார். சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - திருமதி ரேணுகா தனஸ்கந்தா - திரு. தெய்வீகன் - திருமதி வாசுகி பிரபாகரன் ஆகியோர் அருண். விஜயராணியின் சமய - சமூக - கல்வி - கலை இலக்கியப்பணிகள் குறித்து நினைவுரைகளை நிகழ்த்துவர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஓவியர் மருதுவுடன் நடைபெற்ற சந்திப்பு பற்றிய அறிவித்தல் இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால் பிரசுரமாவதில் தாமதமாகிவிட்டது. ஒரு பதிவுக்காக அதனை இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
‘
யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.

"அருகிவரும் தமிழரின் பாரம்பரியக்கலைகள்"
நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
"வில்லுப்பாட்டு" பொன்.அருந்தவநாதன் B.A(Hons) M.Phil
சிறப்பு பேச்சாளர்கள் உரை:
"வசந்தன்கூத்து" - பேராசிரியர்.இ.பாலசுந்தரம்
"பறைமேளக்கலை" - ச.இரமணீகரன் B.A(Hons) M.A
"வடமோடி,தென்மோடிக்கூத்து" - கலாநிதி.க.மதிபாஸ்கரன்
"இசைநாடகங்கள்" - திருமதி.பூங்கொடி அருந்தவநாதன் B.A(Hons) Dip.in.Edu

Date: Sunday, January 10, 2016
Time: 8:30 - 9:30 ET
Location: By Conference Call
Telephone Number: (641) 715-3670
Passcode: 873905
அனைவருக்கும் வணக்கம். வரும் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப்பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.
சொற்பொழிவு:- "தமிழ் மரபுத்திங்கள்" - விளக்கமும், கலந்துரையாடலும்.
வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரியில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரை அமைந்திருந்தால் நலம் பயக்கும்.

கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது. சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) தலைமையில், யாழ்ப்பாணம் புதிய உயர்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் ந. சத்தியபாலன், தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம், விமர்சகர் சி. ரமேஸ், சத்தியன், ஞானசக்தி ஸ்ரீதரன், வேல் நந்தகுமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இலங்கையில் 2009 இல் ஏற்பட்ட போரழிவுக்குப் பின்னான மீந்து போன மனிதர்களின் வாழ்வைக்குறித்துப் பேசும் இந்தக் கவிதைகளில் விட்டுப்போன காலத்தில் காட்சிகள் அல்லது தவிர்க்கப்பட்ட கதைகள் பேசப்படுகின்றன.
அத்துடன் படுவான்கரைக்குறிப்புகள் REMACKS ON PADUVANKARAI என்ற நீள் கவிதையும் உள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.
உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
ஊ) கட்டுரைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மற்றும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.
போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தொடர்புக்கு: சங்கரநாராயணன் - 09789316700; பாலாஜி - 09940288001.

நூல் வெளியீடு: காவ்யா : பறந்து மறையும் கடல்நாகம்
காலம்: ஜனவரி 1, 2016 மாலை 5.30 மணி.| இடம்: 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041 (திருவான்மியூர் பேருந்து நிலையம், திருவான்மியூர் சிக்னல் இடையில், பாம்பே டையிங் அருகில்)
நூல் வெளியீடு: பேராசிரியர் வீ.அரசு | நூலைப் பெறுபவர்: பேராசிரியர் இரா. பிரேமா
சிறப்புரை: எழுத்தாளர் சத்யானந்தன் | தலைமையுரை: பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம்
பதிப்பகம்: காவ்யா, 16, 2nd Cross Street,3rd floor, Trustpuram, Kodambakkam, Chennai 600 024
பக்கம்: 1038 | விலை ; ரூ. 999
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தேடகம் அமைப்பினரின் இவ்வருடத்துக்கான விடுமுறை ஒன்று கூடல் 27.12.2015 அன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு 1173 Brimley, Scarborough, ON M1P
3G5 இல் அமைந்துள்ள The Queen Palace Banguet Hall இல் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


இடம்: Golden Cultural Event Centre, 3001 Markham Rd. Unit 10. Scarborough, On. M1X 1LR. டிசம்பர் 24, 2015 வியாழக்கிழமை பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகும். உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாபிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: (416) 286- 0457 | (416) 546-1394 | (416) 893-0399 | (416) 267-5255
- ஒழுங்கமைப்பாளர் குழு -
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை: "ஈழத்தமிழரின் சினிமாப்பயணம்" - வயிரமுத்து திவ்வியராஜன்
சிறப்பு பேச்சாளர்கள் உரை:
"சர்வதேசத்தரத்தை நோக்கி எமது சினிமா " - கென் கந்தையா
"புலம்பெயர் தமிழ்ச்சினிமாவும் பெண்களும்" - சுமதி
"ஈழத்தில் அண்மைக்கால குறும்படங்கள் " - அருண்மொழிவர்மன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 26-12-2015 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், 3A, 5637, Finch Avenue East,
Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குவிகம் இலக்கிய வாசல் புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அடியேனின் நேர் பக்கம் என்ற கட்டுரைத்தொகுதிதான் அது. டிசம்பர் 19, 2015 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பனுவல் புத்தக மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தள்ளாத வயதிலும் அசோகமித்திரன் அவர்கள் என் புத்தகத்தைப் பற்றி சில வார்த்தை பேச உள்ளார். அதேபோல் ராஜாமணி, க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களும் பேச உள்ளார்கள். கூட்டம் ஏற்பாடு செய்துள்ள குவிகம் இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் என் புத்தகத்தைப் பற்றி எதாவது நாலுவார்த்தை நல்லபடியாக சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் தவறாமல் கலந்துகொண்டு தடபுடலாக கூட்டத்தை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இக் கூட்டத்தில் ஒருவர் கதையும், இன்னொருவர் கவிதையும் வாசிக்கிறார். இடம் : பனுவல் புத்தக நிலையம், 112 திருவள்ளுவர் சாலை,திருவான்மியூர், சென்னை 600 041. திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில, பாம்பே டையிங் அருகில்.மாலை 6.30க்கு.
அனுப்பியவர்: லதா ராமகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வ.ஐ.ச.ஜெயபாலனுடனான சந்திப்பு.| காலம் - 19.12.2015 (சனிக்கிழமை) மாலை 5.30 - 8.00 மணிவரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station).
அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் | தொடர்புகளுக்கு 07817262980, 07736908421
அனைவரையும் அழைக்கிறோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையோரே! உங்கள் புத்தகங்களை இலங்கையிலிருந்து மிக குறைந்த செலவில் அச்சிட்டு இங்குகொண்டு வந்து தர நாம் தயாராக உள்ளோம். அச்சிடல் மட்டுமோ அல்லது டைப்செற்றிங் உடன் அச்சிடல் செய்து தரப்படும். உங்களுக்கு புத்தக அச்சிடல் தேவை இருந்தால் தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும். மற்றும் உங்கள் புத்தகம் பற்றிய விபரங்களை எமது முகபுத்தக பக்கத்தில் பதிவேற்றி விளம்பரபடுத்தவேண்டுமானால் விபரங்களை அனுப்பி வைக்கவும் இலவசமாக இணைத்ததுக்கொள்ளப்படும். https://www.facebook.com/Thetamilbookgallery/?ref=bookmarks
தொடர்புகளிற்கு,
ஜனா
The Tamil Books Gallery | 0429672128
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன பிறவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சில நாட்களில் வெள்ள நீர் முற்றிலும் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கப்போவது இல்லை. குறிப்பாக கல்வி, உணவு சமைக்க தேவையான பொருட்கள், அரிசி பருப்பு, மாற்றுவதற்கு உடை போன்றவை கூட அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு இந்த உடனடி நிவாரணம் அளித்த நிறுவனங்கள், தனி நபர்கள், அரசு அமைப்புகள் அனைத்தும் மெல்ல மெல்ல அவர்களை மறந்துவிடும். ஆனால் அடுத்த சில மாதங்கள் கழித்தும் கூட அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. அதற்கு நாம் தொலைநோக்கு அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

'போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். 'ஞானம்" சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற தொகுப்பாகும்." இவ்வாறு 'ஞானம்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அண்மையில் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" ஞானம் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி. ஞானசேகரன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'போர் இடம்பெறும் வேளையில் உள்நாட்டில் இருப்பது தமது உயிர் பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்து சென்ற ஏக்கத்தினையும், சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அல்லல் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. நாம் தொகுத்த இந்தச் சிறப்பிதழில் போர்க் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களின் பயண அனுபவங்கள், தாயக நினைவுகள், புலம்பெயர் வாழ்வின் அவலங்கள், கலாசாரக் கலப்பு மற்றும் முரண்பாடு, அகதி நிலை, நிறவாதம், புதிய சூழல்சார் வெளிப்பாடுகள், பெண்களின் விழிப்புணர்வு, மற்றும் விடுதலை, அனைத்துலக நோக்கு, அரசியல் விமர்சனம் முதலியவற்றைப் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அவதானிக்க முடியும். இத்தெகுப்பில் 85 சிறுகதைகளும், 125 கவிதைகளும், 50 கட்டுரைகளும், நான்கு நேர்காணல்களும் அடங்கியுள்ளன. இந்த போர் இலக்கியம், மற்றும் புலம்பெயர் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இலக்கிய வகைமைகளாகும்." என்றார்.

"காலம்" : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- வாசகர்களே! பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக, குறிப்பாகத் தமிழகத்தமிழர்களுக்காக, அவர்கள்தம் மத்தியில் தமிழகத்தின் சிறப்பு முகாம்களென்ற சிறைச்சாலைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, அங்கு வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை பற்றி எழுதப்படும் புனைவுகள், அபுனைவுகள் ஆகியன தொடர்ச்சியாகப்பிரசுரிக்கப்படும். தமிழகத்துச்சிறப்பு முகாம்களில் நீங்கள் அடைபட்டிருக்கின்றீர்களா? அப்படியானல் உங்களது அனுபவங்களை எம்முடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். - பதிவுகள் -

நேற்று , நவம்பர் 29, 2015 அன்று, பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின.
எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். இந்த நூல் வெளியீட்டின் இன்னுமொரு சிறப்பு அரசியல்ரீதியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக்கொண்டவர்கள் இணைந்து இந்த நூல் வெளியீட்டினை நடாத்தியிருப்பதுதான். இது வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளுக்குள் நட்புரீதியிலான ஐக்கியத்தைக்காணல் ஆரோக்கியமானதே. நிகழ்விலும் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா, சிவா போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி , சிவவதனி பிரபாகரன் என்று பலரைக்காண முடிந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மார்க் அந்தனி என்னும் இளைஞர் தமிழகச்சிறப்பு முகாமொன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை விபரித்து உரையாடினார். 'நாடு கடந்த தமிழீழம்' அமைப்பின் பிரதிநிதிகளிலொருவரான உஷா ஶ்ரீஸ்கந்தராசா தனதுரையில் தமிழகத்துச் சிறப்பு முகாம்கள் மூடப்படுவதனை வற்புறுத்தி உரையாற்றினார். அத்துடன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை புலப்படும் வகையில் ஜெயலலிதாவுக்கு எல்லாரையும் கடிதங்கள் எழுதும்படியும் அறிவுரை பகிர்ந்தார்.
அவரைத்தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச்சபையினைச்சேர்ந்த ஜான் ஆர்கியு உரையாற்றினார். அவர் தனதுரையில் தனக்குக் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான புரிதல் இருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் இவ்விதம் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் பற்றி அவ்வளவான புரிதல் இல்லை என்றும், ஆனால் இனிமேல் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த விடயத்தைச் சர்வதேச மன்னிப்புச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்போவதாகக்குறிப்பிட்டார்.
இவர்களைத்தொடர்ந்து நூல் பற்றிய ஆய்வுரைகள் இடம் பெற்றன. முனைவர் சேரன், எழுத்தாளர் த.அகிலன், கணன் சுவாமி , பரதன் நவரத்தினம் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்கள்.