யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!
அன்புடையீர், வணக்கம்.
தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்த அறிவாசான்; சிறந்த சொற்பொழிவாளர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்; யாழ்நூல் இயற்றிய ஆராய்ச்சியாளர்; இத்தகு பெருமைக்குரிய அறிஞரின் வாழ்வும் பணிகளும் முற்றாக அறியப்படாமல் உள்ளதை உணர்ந்து அவற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆவணப்படத் தொடக்க விழாவும் எம் பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவும் நிகழ்ச்சி நிரலில் காணும்வண்ணம் நடைபெற உள்ளன. இத்தகு இனிய விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.
அழைப்பில் மகிழும்
வயல்வெளித் திரைக்களத்தினர்
புதுச்சேரி – 605 003
தொடர்புக்கு: 9442029053
நாள்: 06.10.2016 (வியாழன்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி






ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை எழுத்தாளர் கவிஞர் வானொலி – மேடைப் பேச்சாளர் விமர்சகர் ஆய்வாளர் விவாத அரங்கு மேலாளர் நடிகர் நாடகவியலாளர் இனப்பற்றாளர் சமூக சேவையாளர் என்று பல தளங்களை வெற்றிகரமாகச் சந்தித்த இவர் இலங்கையில் 27 வருடங்கள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண் எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக மதிப்புப் பெற்ற இவரே கனடாவில் இலக்கிய பொன்விழா கண்ட ஒரேயொரு தமிழ் எழுத்தாளர். 1994 ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளை மதித்து தமிழர் தகவலால் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி இவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன்னர் வைரவிழா கண்ட இவர் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளாக கனடாவிலுள்ள பல பொது அமைப்புகளில் பிரதான பதவி வகித்து புகழ் பெற்ற குறமகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களின் ஒருவரான ரோசா மாவீரரானவர். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களுக்கு 905-274-1136 அல்லது 647-878-2451 தொடர்பு கொள்ளலாம்.



04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கரவை மு. தயாளன் எழுதிய 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள் முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள தொகுப்பு நூலும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் Dandenong North Senior Citizens Centre ( 41 A, Latham Crescent, Dandenong North , Victoria 3175) மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து 7.00 மணிவரையில் நடைபெறும்.
வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை" ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்" தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது."
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









