அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!" அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன."

இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி)  அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய  நிதியத்தின் தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  குறிப்பிட்டார். மெல்பன், வேர்மண்  தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  நிதியத்தின்  உறுப்பினர்கள்  கலந்து  சிறப்பித்தனர். இலங்கையிலும்  உலகநாடெங்கிலும்  போர்களினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும்  உயிரிழந்த  மக்களுக்கும்,  கடந்த ஆண்டு இறுதியில்  மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  ஒரு  நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது. நிதியத்தின்  2015- 2016  ஆண்டறிக்கையை  துணை  நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும்  நிதியறிக்கையை  நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஶ்ரீஸ்கந்தராஜாவும்  சமர்ப்பித்தனர். அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!

இதுவரைகாலமும்  நிதியத்துடன்  இணைந்து  இயங்கும் அன்பர்களுக்கும்  இலங்கையில்  செயற்படும்  தொடர்பாளர்களுக்கும் நிதியத்தின்  செய்திகளை  வெளியிடும்   ஊடகங்களுக்கும் அறிக்கையில்  நன்றி   தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால்  தந்தையை  அல்லது குடும்பத்தின்  மூல உழைப்பாளியை  இழந்த ஏழைத்தமிழ் மாணவர்கள்  தமது கல்வியை ஏழ்மை கருதி நிறுத்திவிடாமல் தொடருவதற்காக   உதவி வழங்கும்  தொண்டு  நிறுவனமாக இயங்கும்   இக்கல்வி  நிதியம்  அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட  அமைப்பாகும்.

இதுவரை காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி,  அவர்களை க.பொ.த உயர்தர வகுப்புவரையில் கல்வியை  தொடரவைப்பதற்கு  ஆக்கபூர்வமாக நிதியம் உதவியபோதிலும்  அனைத்து   மாணவர்களுக்கும்  பல்கலைக்கழக அனுமதி  கிடைப்பதில்லை. பல மாணவர்கள்  தமது கல்வியை சாதாரண தரம் அல்லது உயர்தரத்துடன் நிறுத்திவிடுகின்றனர். பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகிய  மாணவர்களும்  பொருத்தமான  தொழில் வாய்ப்புக்கிட்டாமல்  அவதியுறுகின்றனர் என்று  இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

சாதாரண மற்றும் உயர்தரத்துடன் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் அரசினால் இயங்கவைக்கப்படும் தொழில் நுட்பக்கல்லூரிகளில்  இணைந்து தொழில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.   இலங்கையில்   அனைத்து   மாவட்டங்களிலும் அரசாங்கத்தின்  தொழில்  நுட்பக்கல்லூரிகள்  இயங்குகின்றன. குறிப்பிட்ட  மாணவர்களில்  குறைந்த  எண்ணிக்கையினரே  இவற்றில் இணைந்து   படிக்கின்றனர்  தொழில் பயிற்சிகளில் தேர்ச்சியடைகின்றனர்.  இதில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையென்று  இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அவுஸ்திரேலியா  முதலான  தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் செயல்படும்  பழைய  மாணவர் சங்கங்கள் வருடாந்தம்  ஒன்றுகூடல் விருந்து  நிகழ்ச்சிகள்  மற்றும்  கலை நிகழ்ச்சிகள் நடத்தி தமது ஊர்ப்பாடசாலைகள்  கல்லூரிகளின்  அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும்  உதவி வருகின்றன. ஆயினும்,  அங்கு எத்தனை  மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்துகின்றனர்,  அதற்கான பின்னணி காரணிகள் யாவை முதலான  விடயங்களில்  ஆய்வு மேற்கொள்வது அரிதாகக்காணப்படுகிறது என்றும்  இக்கூட்டத்தில்  கவலை  தெரிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!

நீடித்த போர்ச்சூழலினால்,  இழப்பு, வாழ்வாதார பிரச்சினைகள், இடப்பெயர்வுகள், ஆசிரியர் பற்றாக்குறை, முதலான நெருக்கடிகளும், குடும்பத்தின் வருமானம்  சூழ்நிலை  கருதி தமது குடும்பத்தில்  தம்மை விட வயது குறைந்தவர்களுக்கு  உதவுமாறு கோரிக்கை  விடுத்துவிட்டு,  சிறு சிறு கூலித் தொழிலுக்கு செல்வதற்காக கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டதுடன்,  தீர்வுகளை   நாடுவதற்கான செய்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்  என்ற  தீர்மானமும்  முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா மெல்பனில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தி, தாயகத்தில் இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை  முன்னெடுப்பதெனவும் கூட்டத்தில் முடிவாகியது. பொருளாதார காரணங்களினாலும்  மேற்கல்வியை தொடரமுடியாத தேர்ச்சியின்மையினாலும்  கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களை தொழில் நுட்பக்கல்லூரிகளில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து, இலங்கை தொடர்பாளர்களுடனும் வடக்கு கிழக்கு  மாகாண  சபை  கல்வி  அமைச்சு  அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை  உருவாக்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்  எனவும்   கருத்துகள்   முன்வைக்கப்பட்டன.
நற்செய்திகள்

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்று பட்டதாரிகளாகியிருக்கும் பல மாணவர்கள் அதிபர், ஆசிரியர், மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர்களாகியிருக்கும் தகவல்களும் அரச தனியார் துறை தொழில் வாய்ப்பு பெற்றுள்ள நற்செய்திகளும் தெரிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு பல்கலைக்கழகம் பிரவேசித்துள்ள மாணவர்கள், மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றமாணவர்களுக்கும் இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!

பரிபாலனசபை தெரிவு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவாகும் நிதியத்தின் பரிபாலன சபைக்கு  பின்வருவோர்   ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்கள்.
தலைவர்: திரு. விமல் அரவிந்தன்.
துணைத்தலைவர்கள்: திரு. எஸ்.துரைசிங்கம் (சிட்னி) Dr. D. ரவீந்திரராஜா (கன்பரா)
செயலாளர்: திருமதி சத்தியா சிவலிங்கம்
துணைச்செயலாளர்: திருமதி சாந்தி ரவீந்திரன்
நிதிச்செயலாளர்: திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா
துணை நிதிச்செயலாளர்: திரு. லெ. முருகபூபதி

பரிபாலன சபை உறுப்பினர்கள்:
Dr. திருமதி மதிவதனி சந்திரானந்த் - திரு. என். கணேசலிங்கம்
திரு. நவரத்தினம் அல்லமதேவன் - திரு. தயாளகுமார்
திரு. இராஜரட்ணம் சிவநாதன்  - திருமதி செல்வம் இராஜரட்ணம்
திரு. நடனகுமார்   - திரு. அ. சதானந்தவேல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்