09-10-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 100 திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ நடத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறையை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஞாயிறு திரை எழுத்தாளர்கள் சுபா அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கே.வி. ஆனந்தின் கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன் உள்ளிட்ட படங்களுக்கும், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதி, ஷங்கரின் ஐ படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்கள். திரைப்படங்களுக்கான திரைக்கதை எழுதுவது, திரைக்கதை அமைப்பு போன்றவை குறித்து நண்பர்கள் இவர்களுடன் கலந்துரையாடலாம்.
அனுமதி இலவசம்... அனைவரும் வருக...
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









