கவிதை: பாரதியே வருக!

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்
மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு


முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்
மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட
நீ நான் நாம் மட்டும் காதல் சிறையில் கைதானோம்
ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளி தீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன்
கண்கூசீப் போனேன்...
உன் குற்றமற்ற அன்பில் குறுகிப்போனேன்...
குயிலாகிப் போனேன் -உன் பெயரை மட்டும்
கூவும் குயிலாகி போனேன்....

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !
நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !
விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே
கூடிப்பனங் கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே
எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே
கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே !
படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது
நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது
அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று
வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்
வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு
அடிவேரும் இப்போது வலிவிழக்க லாயிற்று
நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது !

வாழ்க்கை… வாழ….
முயற்சி என்னும் சுவாசம் வேண்டும்
வாழ்க்கை பெரும் கதை… அது
மண்ணில் புதைந்த விதை
மெல்ல காற்று உன்னை கைதூக்கும்
சூரியன் நித்தம் புதுப்பிக்கும்
சிறு நம்பிக்கை என்னும் இலை
உன்னில் துளிர் விடும்.

அறம்பொருள் இன்பம் வீடு
அகத்தொடும் வாழ்வுங் கூடல்
சிறந்திடும் காதற் பூக்கள்
சிந்திடும் மழலைத் தொட்டில்
நிறைந்திடும் உலக முற்றும்
நீந்துதல் அமுத மாகும் !
மறந்திடும் துன்ப வாழ்வே
மானிடம் வகுப்ப தாமே !
எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !
சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !

- வாய்ப்பாடு: இரண்டு விளம் சக ஒருகாய் -
மானிடம் தேனகம் வளம்பெருக
வையகம் வானகம் மறைபெருக
ஞானமும் மந்திரம் நறைபெருக
நற்றமிழ் புத்தகம் நலம்பெருக
பானிதம் பூத்திடும் பரம்பெருக
பைஞ்;ஞிலம் பஞ்சமில் லாதுயர
கானிடும் மாமழைக் கார்பெருக
கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

1-செப்பும்; பூமி சிறந்ததுவே
(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)
நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!
*உலக தந்தையர் தினத்தில் இக்கவிதை தந்தையர்க்குச் சமர்ப்பணம் !

தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கி வைத்து
பாரடாஎன்று காட்டும் பாங்கினை மறக்கமாட்டேன்
ஊரிலேயுள்ளார் எல்லாம் உன்மகன் உதவானென்று
நேரிலேவந்து சொன்னால் நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்
கவலைகள்படவும் மாட்டார் கண்டதை யுண்ணமாட்டார்
தெருவிலேசண்டை வந்தால் திரும்பியே பார்க்கமாட்டார்
அடிதடிவெறுத்து நிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
உரிமையாயுதவி நிற்பார் ஊரிலே எங்களப்பா
பொய்யவர்க்குப் பிடிக்காது புழுகுவதை வெறுத்திடுவார்
மெய்பேசிநின்று விட்டால் விரும்பியவர் அணைத்திடுவார்
உண்மையே பேசுவென்பார் உழைப்பையே நம்புவென்பார்
எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்
அன்பாக விருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
பலகதைகள் ஊடாக பண்புகளை வளர்த்திட்டார்
பாரில் வாழநான் பாதையே அப்பாதான்
* தந்தையர்தினக் கவிதை!

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _
உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....
உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக்கலாம்....
ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

கொரோனாவால் இவ்வுலகு
பட்டழிதல் கொஞ்சமல்ல
பரிதவிப்பும் கொஞ்சமல்ல
கெட்டழிந்து போனாலும்
கெடுமதிக்குக் குறைவுமில்லை
ஒட்டிஉலர்ந்த வயிறு
தட்டுத்தடுமாறும் வயது
பொட்டென்று போவதென்ன
இத்தனையும்தாங்கி இன்னும்
உயிர்வாழும் இப்பூமி

‘மலம் கழித்துக் கொண்டிருக்கிறேன்
என்னருகில் தயவுசெய்து யாரும் வர வேண்டாம்’
என்கிற எச்சரிக்கை வாசகத்தை
மிருதுவான கரும்பலகையில் எழுதிவிட்டு,
மீண்டும் மலம் கழிக்கும் வேலையை அல்லது தொழிலை
அழுத்தம் திருத்தமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
சில நேரங்களில் சலிப்புத் தட்டும்போது
நான் நூலகத்திலிருந்துப் படிக்க எடுத்து வந்த
பழுதானவையும், பழுது நீக்கப்பட்டுள்ள
புதிய ஏடுகளைச் சுமந்த புத்தகங்களை
உறங்கும் நேரம்போகக் கழிவறையிலிருந்தே
பல நேரங்களில் எடுத்து வந்திருக்கிறேன்.
துருப்பிடித்த படைப்பு முதல்
பாலிஷ்டர் அப்பியிருக்கும் படைப்பு வரை
ஏற இறக்கம் பார்க்காமல்
என் வாசிப்பின் சமதளத்திலே வைத்து
அதனை மோப்பம் பிடித்தே
இதுநாள் வரையிலும் வந்திருக்கிறேன்.
சிலது நறுமணம் கமழும்;
சிலது மொப்பு அடிக்கும்.
என்ன செய்வது
வாசித்தாக வேண்டிய பொறுப்பிலே
என்னை அமர்த்திவிட்டார்கள்
சில கசப்பான மனிதர்கள்.

1. சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு
கோவிலுக்குச் சென்றாலும்கூட
கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் பார்க்கிறார்கள்
சாமான்யர்கள் என்று
மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின் மறைவிருந்து
அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்
பிரபலங்கள் _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்
தர்மதரிசனத்திற்கான வரிசையில்
அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து
சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக் காண
மனமொப்பாப் பெருந்தகைகள் _
அரண்மனைபோலொரு வீட்டைக்
கட்டிமுடித்த கையோடு
சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத் தாண்டி
வர அனுமதிக்காத பிரமுகர்கள் _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்
பெரியமனிதர்கள் _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்
எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….
பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட
வாய்ப்பேயில்லை என்று
திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்கொள்வார்க்கும்,
தன் முதுகைக் காணமுடியாது தன்னால்
என்று தத்துவம் பேசுவார்க்கும்
எதிரில் உண்டு எப்போதும்
விதவிதமான நீள அகலங்களில்
நிலைக்கண்ணாடிகள்.
"கார்காலம் பூத்தது
தலைவனும் இல்லகத்தே...
நுதல் மகிழ்வில்
ஓரை மனதில்...
தாரை கண்ணகம் அல்ல
தேரும் மாரில் தகும்...
முளிதயிர் பிசைந்து சிவந்தது
கையோடு மனதும் மணந்தது..
உச்சி முகரும் உள்ளி
மன்றல் ஆவின் ஓதையே சொல்லி...
செம்புலம் சிவந்தது
முல்லை அகன்றது...
ஓடா தேரின் ஆடா மணி நா..
பருக்கை நிறைத்த
அன்பின் அம் கை...
காடோ! நாடோ!
அனாதி ஊடல்
கூடிக் கழிகிறது
இருத்தல் நிமித்தமாய்...

1. அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும் !
தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ !
விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது !
வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி மக்களெல்லாம் திரிகின்றார் !
தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல் ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை !
1. உறங்காத பயணத்தில்........
சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.
ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது
தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன
அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்
இதயக் கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!
( படிமம் - பிரதிமை , வடிவம்)
கடற்கரை

ஓ! பெண்ணே…
கடலலையாய் நான்
கடற்கரையாய் நீ
தினம் உன்னை
தொட்டுச் செல்லத்தான்
முடிகிறது என்னால்
கூட்டிச் செல்ல
முடியலையே……..!
கடற்கரை தென்றலே
காதலர் வருவதறிந்து
வீசுகிறாயோ தென்றலை
தேகம் சிலிர்சிலிர்க்க
நெஞ்சம் படபடக்க
உடல்கள் நடுநடுங்க
உறவுகள் கைகொடுக்கத்
தென்றலும் தேகம்வருட
இனிதாய் கழிகிறது
மாலையெனும் மகிழ்வு….

இரவு வானில் கெக்கலிக்கும் சுடர்க்கன்னியர்கள்தம்
நகைப்பில்
எனை மறத்தலைப்போல் ஓரின்பம் வேறுண்டோ?
பால்யத்திலிருந்து இன்றுவரை பொழுதுபோக்குகளில்
முதற்பொழுதுபோக்கு அதுதான்.
சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி தொலைவுச்சுடர்தனில்
தனை மறந்திருப்பாரென் எந்தை.
சாறத்தைத் தூளியாக்கித் தொலைவுச்
சுடர்களை, விரி வானினை இரசிப்பதில்
எனை மறந்திருப்பேன்.
விடை தெரியா வினாக்கள் பல எழும்.
அவற்றுக்கப்பால் இருப்பவை எவையோ?
எனைப்போல் அங்கொன்றும்
தனை மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்குமோ?
எண்ணுவேன்.
வானியல் சாத்திர நூல்கள் பல வாங்கினேன்;
வாசித்தேன். சிந்தை விரிவு பெற்றேன். ஆயினும்
வினாக்களுக்கு விடைதானின்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் கேள்விக்கான பதில் நாடி
என் பயணம் தொடரும்.
இருப்பிருக்கும் வரையில் இப்பயணமும் தொடரும்
என்பது எனக்கும் தெரியும்.
ஏனென்றால் பரிமாணச்சிறைக்கைதி நான் என்பதும்
அறிந்ததால்தான்.

கல்லுண்டாய் வெளியினூடே
பயணித்த நாட்களை
எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனை காலைகள்!
எத்தனை மாலைகள்!
இருள் பிரியா அதிகாலைகளில்
நகர் நோக்கிச் செல்வதுண்டு;
நகர்நோக்கி மானுடர் சிலர்
நடந்தும் சில்லுகளிலும் செல்வர்.
உழைக்கும் தொழிலாளர் அவர்.
1. மாடிக்கு வந்த குரங்கு
காலை மாலை பூக்கிறதும்
வணத்துப்பூச்சிகள் சிறகசைய
வானவில் எழுதுறதும்
மைனாக்கள் வந்து கவிதை பேசிறதுமாய்
இந்த கொரோனா ஊரடங்கிலும்
உயிர்க்கும் என் மாடித்தோட்டம்
எந்த ஆடுகளுக்கும் எட்டாது என
மகிழ்ந்திருந்தேன்.
.
எதிர்பாரத வேடிக்கைகளால்
எழுதப்படுவதல்லவா வாழ்வு.
காலையில் எங்கிருந்தோ குதித்ததே
ஒரு குரங்குக் குட்டி.
நம்ம மாடிக்கு குரங்கு வராது என்கிற
இந்த மிதப்பில் இருந்தல்லவா
காவியக் கதைகள் ஆரம்பமாகிறது?
.
குரங்கின் காடுகளைவிடவும் அழகிய
மாடித்தோட்டமும் உண்டோ?
இந்த மலரும் குரங்கும்
நான் கொண்டு வந்ததல்ல.
குறும்புக் குரங்கை விரட்ட மனசுமில்லை.
பல்லுயிர்களின் கொண்டாடமல்லவா வாழ்தல்.
03.04.2020

என்னிடமிருக்கும்
அனைத்தையும்
அளந்துவிட்டுச் சென்ற
என்னவளாய் இருந்தவளுக்கு
இந்தக் கவிதை படையல்.
மணமான பிறகும்
இன்னும் மனமாகாமலே
காலத்தைத் தள்ளும்
சமூகச் சட்டகத்தில்
இடம்பிடித்த
புதுவிதத் தம்பதிகள்
நாம்.
மணவுறவு இல்லை
மனவுறவும் சரியில்லை.
இடையில் ஊசலாடும்
உடற்பசிக்குச் சோறில்லை.

சித்தம் கலங்காதே
சிந்திப்பாய் மனிதா..
சத்தியம் மறந்தாய்
சோதனை கண்டாய்...
வேதனை தீர்ந்திட
வழியினைத் தேடிடு..
வாழ்ந்த வாழ்வினை
கிளறிப் பார்த்திடு...

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.