ம.ஆச்சின் கவிதைகள் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -

1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!
மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!


உடலுக்குள்



அது புதிய வண்ணத்துப்பூச்சி 


வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ 
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்


எளிமையின் உருவமாக
ஒரு முன்னுரை
1








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









