பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு!
1. நலங்கிட்டு அழகூட்டுவேன்
கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.
கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது
உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.
தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்
நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.







கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது











பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









