வாணி அம்மா வாழ்கிறார் இசையாய்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் … அவுஸ்திரேலியா -

வாடாத மல்லிகையாய் வாணி அம்மா
வரமாக வந்தாரே தமிழ் இசைக்கு.
தேனான குரலாலே வாணி அம்மா
தித்திக்கப் பாடினார் பல மொழியில்.
ஊனுருக்க பலபாடல் அவர் தந்தார்.
உளம் இனிக்க உணர்வாக அவரீந்தார்.
வாழ்வதனை இசையாக்கி அவர் வாழ்ந்தார்.
வாணி அம்மா வாழுகிறார் இசையாக.
கலை வாணி குயிலாய் வாணியானார்.
கான சரஸ்வதியாய் ஆகி நின்றார்.
பலவிருதை பாராட்டைப் பெற்று நின்றார்.
பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தே விட்டார்.
வேலூரில் பிறந்தார் விரும்பியிசை பயின்றார்.
வடநாடு சென்றார் வங்கியிலும் இருந்தார்.
இந்தியிலும் இசைத்தார் இன்பவிசை கொடுத்தார்.
எல்லோரும் விரும்பும் இசையரசி ஆனார்.


நான் காலையில் கண்விழித்தேன் _






மானுடப் பிறவிகளுக்கு













பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








