செ.சுதர்சன் கவிதைகள் இரண்டு!

1. என் பலஸ்தீனியப் பாலகனே!
ஒற்றைப் பாலகன்...
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து,
அரவணைப்பே இல்லாது சரிந்த,
தன் தாயின் உடலைக் காண்கையில்...
உத்தம போராளியாகிறான்!
அவனை உலகம்
'தீவிரவாதி' என்றே தீர்த்துக்கட்டுகிறது!
அந்தப் பாலகனுக்கு...
"நீ தீவிரவாதி ஆகுக!" என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
அவன் உருக்கொள்ளட்டும்!
ஆயிரம் காளியாய் அவன் உரு
அணி வகுக்கட்டும்!
பலஸ்தீனியப் பாலகனின்....
எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது அவனது மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
அவனைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!




பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே.
ஒவ்வொரு மாலைப்பொழுதும்




சுதந்திரம் வரப்போவதில்லை

கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்.




அதிகாரம் என்ன செய்யும்?
நீங்கள் அதிசயமானவர்கள்


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









