மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்

1. அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும் !
தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ !
விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது !
வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி மக்களெல்லாம் திரிகின்றார் !
தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல் ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை !

1. உறங்காத பயணத்தில்........


1. மாடிக்கு வந்த குரங்கு















கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









