அன்னையர் தினக் கவிதை: குடியிருந்த கோவில் !
கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ !
குடியிருந்த கோவிலதை
கூடவே வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா !
அன்னதானம் செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை !


இரக்கமின்றி கொலைசெய்ய 





கடவுளை







நடந்து சென்று கொண்டிருந்தோம்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









