(அவள்) பாவை என் முகம் நோக்கிப், பதில் தருவாய் என எண்ணி, பக்கம் நான் வந்தேனே....! வெக்கத்தை மறந்தேனே....!! பார்வை கொஞ்சம் கீழிறங்கிப், பார்ப்பதிலே என்ன விந்தை? மாராப்பு சேலையிலே, மர்மம் என்ன தெரிகிறது...?
உறவுகள் வாழ்வில் என்றும் உணர்வுடன் கலக்க வேண்டும் அளவிலா அன்பை நாளும் அள்ளியே வழங்க வேண்டும் தெளிவுடன் என்றும் வாழ வழியினை காட்ட வேண்டும் நலமுடன் இருக்க வேண்டில் நாடுவோம் நல்லுறவை என்றும் !
பற்பல உறவை எங்கள் பண்பாட்டில் காணு கின்றோம் பாட்டியாய் தாத்தா என்று பரம்பரை வளர்ந்தே போகும் பெரியம்மா சித்தி அத்தை பெரியப்பா மாமா மச்சான் அன்புடை அக்கா அண்ணா அருகினில் வந்தே நிற்பார் !
திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள் சில இருப்பதாகத் தோன்றுகிறது. அது இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில், அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு பறந்த வானத்தை மீண்டும் சிருஷ்டிக்க முடியும். அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை அது அமர்ந்திருந்த மரத்தை அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை அதன் பறத்தலை மீண்டும் கண்டு இன்புற முடியும்.
ஓன்பது பத்து என்ற உயரிய அழகை யிட்ட அம்பியே புலவ ரேறே அகிலமே வியக்கும் மன்னா! நெம்புகோல் பார திக்குப் பின்னொரு கவிதை யூறும் தம்பியாய் வருகை தந்தாய் தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!
மழலையர் மகிழப் பாடி மதுரமாம் இலக்கி யத்தின் அழகென ஒலித்த அம்பி அணித்தமிழ் மரபின் நம்பி உழவெனப் பாக்கள் இட்டு உயிரெனக் கவித்தேன் வைத்தே விழுமியம் படைத்த பாகன் விளைநிலம் எழுதக் கண்டோம்!
ஓ கானடா ! எமது இல்லமே ! சொந்த பூமியே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுவது நீதான் ! ஒளி நிறைந்த உள்ளத் தோடு நீ உயர்வதைக் காண்கிறோம் ! நேர்வட திசையில் நீ நிலைத்திடும் தனி நாடே ! நீண்டு அகண்ட கண்டமே, ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! சீரும் சிறப்பும் பொங்கிட எமது திரு நாட்டை, இறைவா நீ சுதந்திர நாடாய் வைத்திரு ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் !
பதின் பருவ பள்ளியாய்ப் போன முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ ஆடுகளின் ஓய்விடங்கள் கவட்டையோடு உன்னை அடிக்க அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்
தலை தூக்கி சூரியனோடு நீ பேசும் உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல எதற்குத் தலையாட்டுகிறாய் என்று என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில் சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்
என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி தவறி அதனுள் விழுந்துவிட்டாள். அவளுடைய மூச்சுக் காற்றில் பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது
அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது. பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல தத்தளித்துக் கொண்டிருந்தாள் பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.
பட்டம் பெறுவதில்தான் : பற்றெல்லாம் இருந்ததனால், பழகியே எத்தொழிலும் : பார்ப்பதற்கு வாய்ப்பு இன்றிப், பாவம் இவன் நிலைமை : பயனற்ற அலைச்சலிலே……. பணிகள் பலதேடிப் : படியேறி இறங்குகின்றான்…..!
ஒரு ரூபாச் சீட்டினிலே : ஒரு லட்சம் கனவுகாணும்…. உருப்படார் வரிசையிலே : உள்ளபடி இவனும் ஒன்று ! “உனக்கும் கீழுள்ளோர் : ஒருகோடி என அவரை, நினைத்துப் பார் அதிலே : நிம்மதியை நாடு” என்று….,
செப்பிய கவிஞர் தன் : சிந்தனை வரிகளை…. திருப்பியே பார்த் துணர்ந்து : திருந்தியே கொள்ளுங்கள் ! “உனக்கும் முன்னே : உள்ளவர் பலரே…. உத்தியோகம் பெற்றோர் : ஒருவர் சிலரே….! ”
என்கின்ற உண்மையை : ஏற்றிட மறுத்தே, இன்னும் வாழ்க்கையை : இழந்திட வேண்டாம் ! பட்டம் பெறுவதும் : படிப்பில் உழல்வதும், “பாபச் செயல்” என்று பகர்ந்திட வில்லை !
ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் - பெண்ணடிமை தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான் விழுந்து கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !
அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து - காலன் வரும் காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !
நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத் தாயென்றணைத்து நின்றாள் - அவள் கரம்பட்டுத் தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !
எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள் எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்
நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம் பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்
யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள் வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும் தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய் சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
சிறு தூறலாய் காட்சி தந்த பெருமழையாயிற்று. அம்மா பெரிய கிடாரமாய் கொண்டுவந்து கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள். மரங்கள் முறிந்ததாயும், காற்று பேயாய் அடிப்பதாகவும் கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய் சன்னலோரம் குந்தியிருந்தவளுக்கும் கேட்டது. அப்பா மூலையில் குடங்கிப்போய் பிணம்போலக்கிடந்தார்.. மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்.. இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்.. கடைசிக்குரலும் 'அம்மா பசிக்குது' சொல்லி அடங்கிப்போனது. அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா? அழும் குழந்தைக்குப்பால்தர...??
வெறி கொண்டு அலைகின்ற நெறி பிறழ்ந்த கூட்டமதால் கறை படியும் காரியங்கள் கண் முன்னே நடக்கிறது பொறி புலன்கள் அவரிடத்து அழி என்றே சொல்லுவதால் குடி மக்கள் என்னாளும் கதி கலங்கிப் போகின்றார் !
மதம் என்னும் பெயராலே மதம் ஏற்றி நிற்கின்றார் சினம் என்னும் பேயதனை சிந்தை கொள வைக்கின்றார் இனம் என்னும் உணர்வுதனை இருப்பு கொள்ள வைக்குமவர் தினம் தீங்கு செய்வதிலே திருப்தி உற்று திரிகின்றார் !
பதிவுகள் விளம்பரங்களை விரிவாக அறிய அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" "Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி:girinav@gmail.com / editor@pathivukal.com'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்:ads@pathivukal.com'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com'பதிவுகள்' ஆலோசகர் குழு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா) பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு) பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) அடையாளச் சின்ன வடிவமைப்பு:தமயந்தி கிரிதரன் 'Pathivukal' Advisory Board: Professor N.Subramaniyan (Canada) Professor Durai Manikandan (TamilNadu) Professor Kopan Mahadeva (United Kingdom) Writer L. Murugapoopathy (Australia) Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகள் இணைய இதழின் முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
Pathivugal Online Magazine''s main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
IT TRAINING* JOOMLA Web Development * Linux System Administration * Web Server Administration *Python Programming (Basics) * PHP Programming (Basics) * C Programming (Basics) Contact GIRI email: girinav@gmail.comபதிவுகள் விளம்பரம்