கவிதை: பகையற்ற மதமும் கொலையற்ற படையும்.
வானம் கொழித்து
வனமும் செழித்த மண்ணில்
நல்லிணக்கம் விளைந்ததில்லை.
பஞ்சம் பிளைக்க வந்தவரை
தஞ்சம் களைத்து
வஞ்சகம் பிளைக்க வைக்கிறது.
மத்தியகிழக்கில் தெறித்து விழுந்த பொறி
தென்கிழக்கால் காட்டுத் தீயானது எப்படி?
தரைபட்ட உயிரை காக்க
ஒரடி குழந்தை அரையடி சேற்றில்
பல மைல்களை உழுது வருகிறது.
கைக்குழந்தைக்கு கழுத்திலும் மார்பிலும்
சேற்றுப்புண் பார்த்திடும் மாயமென்ன?
தாகம் தாளாது
சேற்றுமண்ணை குவித்து
தண்ணீர் கட்டி குடிக்க விளைய
அதனுள் சிறுநீர்கழித்து
களிப்புறும் காவல்படையும்
ஏளனம் செய்து மகிழும் துறவியும்
உடைகளில் பிரிந்து நின்றனர்.


சந்தேகமே இல்லை 







ஹப்பி பேர்த்டே என்றுபாடும் 

ஆளுக்கொரு பெயர்வைத்து
இரவின் இருளைக் கிழித்தது
1. காதல் அணுக்கவிதைகள்





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









