சிறுகதை: தென்புலத்தார் தெய்வமுணர் படலம் - அன்பரசன் அப்பாச்சாமி -

ஓவியம் _ AI
அ
அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல்பாக சுயக்கட்டுப்பாடுடன் இருக்கச் செய்தாரே அன்றி ஒருநாளும் ஒரு சிறிய அறிவுரைகூடக் கூறியதில்லை. முக்கியமாக என்னை எனது சுதந்திரத்திற்கு விரோதமாக நடத்தி அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் என்னை வைத்திருக்க முயன்றதில்லை.
என் முதிராத, வெகுளித்தனமான பேச்சை அவர் எப்போதும் ரசித்துக் கேட்பார். என்னுடைய ஆதங்கத்தை, கோபத்தை, புறணிகளை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் புரிதல்களின் பின்னே உள்ள விடுபாடுகளை, பார்வைக் கோணல்களை அவருக்கேயுரிய கேலி, நகைச்சுவைகளோடு எனக்குப் புரியவைப்பார்.
திருமணமானதும் மிகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் வேலையை, இலட்சங்களில் உள்ள சம்பளத்தை மன அழுத்தம் என்று உதறிவிட்டு விவசாயம் செய்ய வருகிறேன் என்று சொன்னதும் ஒரு வார்த்தை மறுத்துப் பேசாமல் தானே உழைத்து வாங்கிய எங்கள் குடும்பத்தின் ஒரே சொத்தான 15 ஏக்கர் விவசாய நிலத்தையும் ஊருக்குள் வாடகைக்கு விட்டிருந்த நான்கு வீடுகளையும் என் பெயருக்கு மாற்றி எழுதித் தந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் குடியிருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை மட்டும் – இந்த வீடு எங்களுடைய பூர்வீக இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது - அவர் பெயரிலேயே வைத்துக்கொண்டார். இப்படியாக எங்களுடைய உறவு எந்தவித ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சரிவிகிதமான புரிதலுடன் நிலைத்தன்மையில் சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் அம்மாவின் எதிர்பாராத இறப்பு எங்கள் குடும்பத்தை உலுக்கி எடுத்துவிட்டது. அதன் பிறகு அப்பாவுடைய இருப்பே எனக்குப் பெரும் தொந்தரவளிக்கக் கூடியதாக மாறியது. அந்த சமயத்தில் அப்பாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் எங்கள் உறவில் கசப்பை உண்டாக்கி, அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு மரியாதையைக் குலைத்து ஆற்றுவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மண்குதிரை போலாக்கியது. எங்களுடைய தந்தை, மகன் உறவு அவ்வளவு தூரம் மாசு படிந்து போகும் என்பதை இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.
அவராக என் வழிக்கு வந்துவிடுவார் என்ற எனது நம்பிக்கை நாளடைவில் தகர்ந்துவிட்டது. அவர் மீது ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாவற்றையும் அவருடைய இறப்பு இப்போது மிகுவிக்கிறதே அன்றி குறைக்கவில்லை. ஒருவேளை அம்மாதான் அவரைக் கையாளச் சரியான ஆளோ என்று ஆதங்கமாக இருக்கிறது இப்போது. இன்று அப்பாவுக்குப் பதினாறாவது நாள் காரியம். அக்கா அழுது கொண்டேயிருக்கிறாள். தேற்ற முடியாத இழப்பு அவளுக்கு. துக்கம் விசாரிக்க வருகிறவர்களும் என்னிடம் கடமைக்கு விசாரித்துவிட்டு அவளை நினைத்துப் பரிதாபப்படுவது போல் எனக்குத் தோன்றும். அவர்கள் எல்லோருக்கும் தெரியும் செத்துப்போனவர் எனது அப்பா என்கிற உறவுக்கு வெறும் பெயராக மட்டுமே நடமாடியவர் என்பது. இத்தனை இழவு விசாரிப்புகளும் என்னைப் பொறுத்தளவில் எப்போதோ உயிரற்றுப் போன ஒரு பெயரழிந்த மனிதருக்குத்தான்.


அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.

உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.





சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.

சங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது உண்மையா, சந்திரனில் பிசாசு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டாம் வகுப்பில் என்னிடம் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலை நாட்டவருக்கும் இந்தப் பேய், பிசாசுகளில் நம்பிக்கை இருப்பதால்தான், கலோவீன் தினத்தைப் பிரமாண்டமாக இங்கே கொண்டாடுகின்றார்கள். சின்னப் பிசாசா அல்லது பெரிய பிசாசா? எப்படி இந்த நீலப்பிசாசு சந்திரனுக்கு வந்தது?
உண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல !
தற்போது ,ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் , சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது . அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...? எதிரியாகி , சார்ப்பாக நின்றதிற்கு அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி விரயமாக சாகிறது வருத்தமாக இருக்கிறது .

ஷம்பாலா 2019 - இல் வெளியான நாவல். தமிழவன் அவர்களால் எழுதப்பெற்ற இந்நாவல் ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற கோணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் கூறுகின்ற அரசியல் மக்களுக்கு எந்த விதமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கிறதா? அல்லது பயனற்றதாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்போம். இந்நாவல் இரண்டு வகைக் கதைப்போக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று பேராசிரியர் அமர்நாத் எனபவரது எழுத்தும் சிந்தனையும் அரசால் உளவு பார்க்கப்படுகிறது. அமர்நாத் என்பவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர், அறிவுஜீவி, முற்போக்காளர் என்ற அடையாளத்துடன் விளங்குபவர். அதனால்தான் அவர் சிந்தனைப் போலீசால் கண்காணிக்கப்படுகிறார். எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறார்? எதற்காக கண்காணிக்கப்படுகிறார்? அதனால் அமர்நாத் அடைந்த வேதனை - மனநிலை என்ன? அவர் குடும்பம் அனுபவித்த அவல நிலை என்ன? சிந்தனை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது. தன் வாழ்வை எப்படி? நகர்த்திச் செல்கிறார். குடும்பத்துக்காக என்ன செய்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கண்காணிப்பை மீறி அதிகாரத்தை உடைத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்கலாம்.

தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்

மனதின் சாளரங்கள் திறப்பதற்கு மாமனிதர்களின் தத்துவங்கள் உதவுவது போல, சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்கவும் , இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க வல்லதும் வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








