சிறுகதை: காடுபோக்க - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -

- முனைவர் கோ.சுனில்ஜோகி -
1
இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.
அவளின் கபாலத்திற்குள் கார் இடிகள்... மேலும், இறுக்கமாகக் காதுகளை இறுக்கினாள். அவளது சிறுவிழிகள் விம்பிப் புடைத்தன. பல்லைக் கடித்துக்கொண்டு நாசியகட்டி மூச்செறியும் அவளின் முகம் அடைமழைக் காலத்தில் புகைப்போக்கியில் ஒதுங்கிய காடுபோக்காவையே ஒத்திருந்தது. அதிலும், லேசாகப் புலரத் தொடங்கியிருக்கும் இந்தவேளையில் அவளின் மனநிலையும் அந்தக் காடுபோக்காவின் மனதொத்திருந்தது.
அவளால் முடிந்தவரை காதுகளை இறுக்கியாகிவிட்டது. அலைபேசியையே ஓர்ந்திருந்தாள். அது அணைந்தது. காதுகளிலிருந்து கையை விலக்க அவளுக்கு மனமில்லை. அது அடுத்தநொடியே மீண்டும் ஒலிக்குமென்று அவளுக்குத் தெரியும். அவள் நினைத்ததைப்போலவே அது ஒளிர்ந்தது. மீண்டும்… மீண்டும்… மீண்டும்…. முன்னினும் சத்தமாய் ‘காடுபோக்க… காடுபோக்க…’ இறுக்கத்தைக் கூட்டினாள்… கழுத்துப் புடைத்து நரம்பெழுந்தது… காதுகளில் அழுத்தியதின் வலி.. அழுத்தத்தின் வலி…. அலைபேசியை எடுத்து ஓங்கி சுவற்றில் அறைந்துவிடலாம் போலிருந்தது.
எத்தனைமுறைதான் சொல்வது… எவ்வளவுதான் சொல்வது… இப்படியே விட்டால் இது அடங்காது… சேற்றில் இறங்கிய எருமையைப்போல… அவள் தெரிந்தேதான் இறங்கியிருந்தாள்… இறக்கப்பட்டிருந்தாள்…. வேறு வழியில்லை… அதை மீட்பதும் கடமை... அதோடு காப்பதும் கடமை…. கடனிலுழலும் நெஞ்சம்.. பட்டுதான் தீரும்… விடவே விடாது… பாடாய்ப் படுத்தும்…. அலைபேசியை எடுத்தாள்… திரையில் அலைந்த பச்சைக் குமிழி கடப்பாட்டில் அலைந்தது. அதைச் சொடுக்கினாள்.


மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்



மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.

மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.







தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். 



அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








