முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று நுட்ப அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் நுட்ப அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

நுட்ப அணி

நன்கு தெரிந்து வேறுபட மொழியாது குறிப்பினாலும், தொழிலாலும் அரிதாக உணரும் தன்மை கொண்டு விளக்குவது நுட்ப அணியாகும்.

“தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
அருதுணர் வினைத்திறம் நுட்பம் ஆகும்”
(தண்டியலங்காரம் 37)

நுட்ப அணியின் வகைகள்

குறிப்பு நுட்பம்,தொழில் நுட்பம் என இருவகைப்படும்.

1.குறிப்பு நுட்பம் - ஒன்றனுக்கு எந்தவிதமான இடர்களும் ஏற்படக்கூடாது என நுட்பமாக நடந்து கொள்ளுதல் ஆகும்.

2.தொழில் நுட்பம் - தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த செயலால் வெளிப்படுத்துவதாகும்.

குறிப்பு நுட்பம் அகம், புறம் இரண்டிலும் அமைந்துள்ளது.தொழில் நுட்பமும் அகம், புறம் இரண்டிலும் அமைந்துள்ளது

குறிப்பு நுட்பம் - அகம்

ஒருத்தி தன் பிரிவுத் துன்பத்தைச் சொல்வதற்காக ஓவியத்தில் தீட்டப்பட்ட மன்மதனைப் பார்த்து தன் தோழியைப் பார்த்தாள். அத்தோழி தன் தலைவியின் கருத்தைக் குறிப்பால் உணர்ந்து அவளுடைய கணவன் அப்போது தங்கியுள்ள இடத்தை நோக்கிச் சென்றாள்.

“சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்
காரிகையாள் அவள் கருத்தை நோக்கி ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள்”
(உண்டாட்டுப்படலம் 952)

ஒரு மங்கையின் ஓவியத்தில் எழுத முடியாத எழிலான கொங்கையின் மேல் மன்மதன் எய்த அம்புகள் துளைத்ததால் புண்கள் ஏற்பட்டன. அவள் வளையல் அணிந்த தன் கையால் அப்புண்களை இதமாக ஒற்றிக்கொண்டே அழுதாள். தன் நிலையை நினைத்து சிரித்தாள். தன் துன்பத்தைச் சொல்லி தூது போகும் படி தன் தோழியை வேண்டி அவளைத் தொழுதாள்.

“எழுத அருங்கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம்புண்களில் வளைக்கை ஒற்றினாள்
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள்
தொழுதனள் ஒருத்தியைத் தூது வேண்டியே”
(உண்டாட்டுப் படலம் 963)

ஒருத்தி எனக்கு வந்த பிரிவு அது தந்த துயரம் ஆகிய குறையை நேராகக் கண்டு அறிந்தவர்களுக்கு அதை வெறும் சொல்லால் நானே விளக்குவது வீணே அல்லவா என்ற கருதி மனது துயரத்தை வெளியே சொல்லாது, உள்ளத்தில் வைத்து விம்மிவியர்த்து மெலிந்து தளர்ந்தாள். அப்போதும், தன் பக்கத்தில் இருந்த தோழியைப் பார்த்தாலேயன்றி எதுவும் உரைக்கவில்லை.

“ஆர்த்தியும் உற்றதும் அறிஞருக்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு அனாளையே”
(உண்டாட்டுப் படலம் 964)

குறிப்பு நுட்பம் -புறம்

வேள்வியைக் காப்பதற்காகவே விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களை அழைத்துச் சென்றார். இருவரும் வேள்வி காத்தனர். அப்போது அரக்கர் எவ்வேளை வருவர் என இராமன் கேட்டதும், விசுவாமித்திரர் மௌனமாக இருந்தபடியே ஆகாயத்தைக் குறிப்பு காட்டினார். விசுவாமித்திரர் விரதம் கொண்டதால் அவன் வினாவுக்கு அவர் விடை அளிக்கவில்லை. போர் தொழிலில் வல்ல இராமனும், முனிவனை வணங்கி வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தான். அங்கே கார்காலத்து நீர் கொண்ட மேகம் போல இடியும் அச்சமும் கொள்ள அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர்.

“வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய்
போர்த் தொழில் குமரனும் தொழுது போந்தபின்
பார்த்தனன் விசும்பினைப் பருவ மேகம் போல்
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே”
(வேள்விப்படலம் 441)

சதானந்தர் உரைத்தவாறு செய்யும்படி விசுவாமித்திரர் இராமனுக்கு குறிப்பு காட்ட இராமன், வில்லை நோக்குதல் அந்த சதானந்த முனிவன் நன்றாக சிந்தனை செய்து கூறிய அனைத்தையும் விசுவாமித்திரர் முறையாக எண்ணிப் பார்த்தான். பின்பு சடையை உடைய தனது தலையை அசைத்து, போரிலே வல்ல காளை போன்ற இராமனின் முகம் பார்த்தான். சித்திரத்திலே தீட்டியது போன்ற திருமேனியை உடைய வள்ளலான இராமன் தான் வில்லை அறிந்து தானும் அதே நினைப்போடு அந்த நீண்ட வில்லைப் பார்த்தான்.

“நினைந்த முனி பகர்ந்த எல்லாம் நெறி உன்னி அருந்தவனும்
புனைந்த சடை முடி துளக்கிப் போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மா தவத்தோன்
நினைத்த எலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்”
(கார்முகப்படலம் 639)

இராம- ராவண யுத்தம் முடிந்த பிறகு இராமனைக் காண வந்த சீதையை அவன் கோபித்தான். உடனே சீதை, இலட்சுமணனை அருகில் அழைத்து நான் மூழ்கற் பொருட்டு தீயை வளர்ப்பாயாக என்று வாயால் வெளிப்படையாகச் சொன்னாள். அதைக் கேட்டு மன வருத்தம் கொண்ட இலட்சுமணன்,இ ராமனின் உள்ளக் கருத்தை அறிவதற்காக உலகம் அனைத்துக்கும் புகலிடமான அவனை வணங்க, அவனும் கண் குறிப்பால் தீயை வளர்க்குமாறு உரைத்தான்.

“இளையவன் தனை அழைத்து இடுதி தீயென
வளை ஒலி முன் கையால் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களை கணைத்தொழ அவன் கண்ணில் கூறினான்”
(மீட்சிப் படலம் 39 70)

தொழில்நுட்பம் -அகம்

தோழியர்கள் அமைத்த மலர் படுக்கையில் கணவன் அருகே இருந்தும் கூடாமல் மூடி ஒதுங்கி இருந்தாள் ஒருத்தி. அவளுக்குத் தன் ஊடலை நீக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. கணவன் அதை அறிந்து கொள்ளவில்லை. ஊடலை நீக்கி கூடலைத் தான் விரும்பியதைக் கணவனுக்குத் தானே தெரிவிக்க நாணிய அவள் பொய்யான ஒரு சோம்பல் முறித்து கைகால்களை நீட்டி நிமிர்த்தி அதனால் அவளுடைய கை கால்கள் அவனைத் தொட்டன. இதுவரை எத்தனை நாழிகை வீணாக கூடல் இன்றி கழிந்தன என்று அவனிடம் கேட்டாள்.

“உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் நேர்கிலான்
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவான்
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள்”
(உண்டாட்டுப் படலம் 945)

தொழில்நுட்பம்- புறம்

சீதையை அசோகவனத்தைக் கண்டு கணையாளியைக் கொடுத்து சூளாமணியைப் பெற்று வந்த அனுமன், இராமனுக்கு சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்தினான். இராமன் இருந்த இடத்தை அனுமன் அடைந்தான். அடைந்ததும் இராமனுடைய திருவடிகளை வணங்கவில்லை. அதற்குப் பதிலாகத் தாமரையை விட்டு பூமியில் அவதரித்த சீதை இருந்த தென் திசையை நோக்கி தலைக்கு மேல் கையைக் குவித்தவனாய் நிலத்தில் விழுந்து வணங்கினான்.

“எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்”
(திருவடி தொழுத படலம் 1268)

முடிவுரை

நன்கு தெரிந்து வேறுபட மொழியாது குறிப்பினாலும், தொழிலாலும் அரிதாக உணரும் தன்மை கொண்டு விளக்குவது நுட்ப அணியாகும். குறிப்பு நுட்பம்,தொழில் நுட்பம் என இருவகைப்படும். குறிப்பு நுட்பம் என்பதுஒன்றனுக்கு எந்தவிதமான இடர்களும் ஏற்படக்கூடாது என நுட்பமாக நடந்து கொள்ளுதல் ஆகும். தொழில் நுட்பம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த செயலால் வெளிப்படுத்துவதாகும்.இதன் மூலம் நுட்ப அணியின் குறிப்பு நுட்பம், தொழில் நுட்பத்தை தண்டியலங்காரத்தின் வழி கம்பராமாயணத்தில் நுட்ப அணி குறித்து அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்