பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், பிரதான நூலக இந்திய தகவலகமும் இந்திய உதவித் தூதரகமும்  இணைந்து நடாத்திய  பல்கலைக்கழக மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு (05.03.2025) புதன்கிழமை அன்று இடம்பெற்றது.   பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஈழத்துக் கவிதை மரபிற்கும் மிக நீண்டகாலமாகவே  அணுக்கமான தொடர்பொன்றுள்ளது.ஈழத்தின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆரம்ப நாட்கள் பேராதனைக்களத்திலிருந்து உருவானதை அடையாளம் காண முடியும். அந்த வகையில் தமிழ்த்துறை வருடந்தோறும் ஒழுங்கமைக்கும் குறித்த பயிலரங்கு இம்முறை  பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதான  நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய பேராதனைப் பல்கலைக்கழகப் பிரதம நூலகர் கலாநிதி ஆர். மகேஸ்வரன். “உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம், அகத்திய முனிவர்இ தொல்காப்பியர் ஆகியோரின் இலக்கணப் பங்களிப்பு முதலான விடயங்களைக் குறிப்பிட்டார். மேலும் இந்திய, தமிழக அரசுகள்  வெளியீடு செய்யும் நூல்களை பிரதம நூலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அம்மையார் அவர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய கௌரவ இந்திய உயர் ஆணையர் ஸ்ரீமதி சரண்யா அவர்கள் “இத்தகைய நிகழ்வுகளை நடாத்துவது ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குவதில் முக்கியமானது என்று கூறினார். பிரதம நூலகரின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் தமிழ்த்துறையின் முக்கியமான செயற்றிட்டங்களுக்கு தம்மாலான பங்களிப்புக்களை வழங்கமுடியும்”; எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமையுரை ஆற்றிய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் படைப்பொன்றை மாணவர் பாலமைப் பருவத்தில் மனனம் செய்வதில் ஆரம்பமாகும் கற்றல் நடவடிக்கை, பின்  குறித்த படைப்பை விளங்கிக்கொள்ளுதல், பிறர் விளங்கும்படி விபரணம் செய்தல், படைப்பினை விமர்சனம் செய்தல் ஆகிய படிநிலைகளைக் கடந்து படைப்பொன்றை படைத்தல் எனும் புள்ளியை அடைவதே கல்வி முறையின் நோக்கம்" எனத்  தெளிவுபடுத்தினார்.

மேற்படி நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட  துறையின் மேனாள் தலைவர்களான பேராசிரியர் எம். ஏ. நுஃமான்,  பேராசிரியர் துரைமனோகரன் ஆகியோர் தொடர்ந்து அரங்கை வழிநடத்தினர். கவிதையின் தோற்றம், படைப்பு மனம், படைப்பாளுமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான தேர்ந்த வாசிப்பின் தேவை  ஆகிய விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் துரைமனோகரன் அவர்கள் கலந்துரையாடினார்.

பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள் நவீன கவிதைப் போக்குகள் தொடர்பாகவும் கவிதை நுட்பங்கள் தொடர்பிலும் உரை நிகழ்த்தினார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கவிதையில் வடிவ, மற்றும் அச்சக ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் நிறைவில் மாணவர்களின் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டன


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்