கலையரசனின் நூல் அறிமுகமும் எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான சந்திப்பும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குவிகம் இலக்கிய வாசல் <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச்சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி (03-02-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாரிஸில் எழுத்தாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் முகவரி: TIASCI --- 13, RUE DE L'AQUEDUC ---- 75010 PARIS . பாரிஸிலிருந்து வெளியாகும் " நடு" இணைய இதழின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை "நடு" ஆசிரியர் எழுத்தாளர் கோமகன் ஒழுங்குசெய்துள்ளார்.

தகவல்: முருகபூபதி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- தகவல்: கவிஞர் கருணாகரன் -

தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே! மேலும் ஒரு முயற்சி! காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.
பாடல் வரிகள் & பாடல் தயாரிப்பு : கவிஞர் அகணி சுரேஸ்
இசையமைப்பாளர் : சுதர்சன்
பாடகர்கள் : மதுசிகன் , மதுசா குகதாசன், டெனின்ரா (மழலைக் குரல்)
அணிசேர் கலைஞர்கள் : தசா குகன் - புல்லாங்குழல் , ரட்ணம் ரட்ணதுரை - மிருதங்கம், ரூபன், அபிஸன், வெற்றி துஷ்யந்தன்
ஒளிப்பதிவு : வினு
My sincere appreciation to Music Director Sutharsan and all artists. Kindly sign in to you tube and give your comments.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

"வேலணை.காம்" (கனடா) இன் நிதி அனுசரணையில் "தட்டுங்கள்.காம்" (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் "மகுடம்" கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் "பிரமிள் விருது"ம் பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும். 20-04-2019 இல் அமுத விழா காணும் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையாக கருதப்படும் உலகம் போற்றும் தமிழ் கவிஞர் பிரமிள் என அழைக்கப்படும் தர்மு சிவராம் நினைவாக கவிதைக்கு வழங்கப்படவிருக்கும் " பிரமிள் விருது" தொடர்பான அறிவிப்பும் நிபந்தனைகளும்.

toronto tamilsangam <torontotamilsangam
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 9-ம் திகதி (09 - 12 - 2018) ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் என். சண்முகதாசன் அரங்கில், மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், மூத்த கலை இலக்கியப் படைப்பாளர் - பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை கௌரவிக்கப்படவுள்ளார்.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிப்பார். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன், ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் மா. கணபதிப்பிள்ளை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ். பாஸ்கரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல..., ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் பத்மா இளங்கோவனின் 'செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றன.


வணக்கம், காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு. படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர்முடிகிறது. கார்த்திகை (2018) இதழுடன்,26 & 27ஆம் திகதிகளில் சிறப்பிதழ்களையும் தந்திருந்தோம். மின்னிதழ் கிடைக்காதவர்கள் உங்கள் மின்னஞ்சலை தாருங்கள். தொடர்வோம்.
நம்பிக்கையுடன்,
முல்லைஅமுதன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://kaatruveli-ithazh.blogspot.com/
காலம்- 08 டிசம்பர் 18 (சனி)
மாலை 3.00 மணிக்கு
இடம் - Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SG (Nearest Underground Station: East Ham)
அனைவரையும் அழைக்கிறோம். உரிய நேரத்திற்கு நிகழ்வு தொடங்கும்
ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES – A.C.T
தொடர்பு 07817262980 (Fauzer), 07402868713 (Sabesan)
அமர்வு-01 - வழிப்படுத்தல் - நா.சபேசன்
1. "ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன்" - உரை - எஸ். விசாகன் (மானிடவியல், சாசனவியல் ஆய்வாளர்)
2. "முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன்" - கட்டுரை - முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம் , சென்னைப் பல்கலைகழகம்
3. "கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி " உரை - மு. நித்தியானந்தன் ( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய விமர்சகர்)
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதியாக முன்னாள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அலுவல்கள் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் மூதூர் முகைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கொழும்பு பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், இப்ராஹீமிய்யா கல்லூரி பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், டாக்டர் அல்ஹாஜ். ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.), கலாநிதி யூசுப் கே. மரைக்கார், பன்னூலாசிரியர் கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப். இல்ஹாம் மரிக்கார், அஸீஸ் மன்றத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்வார்கள்.
மௌலவி. காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் வரவேற்புரையை நிகழ்த்த வாழ்த்துரைகளை சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன், காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.