நூல் வெளியீடு: ரூபவதி நடராஜா எழுதிய 'யாழ்ப்பாணப் பொது நூலகம் அன்றும் இன்றும்'




இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
வணக்கம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்:
பரிசு பெற்றவர்கள்
1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092)
2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000 (டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)
3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000
(ஒரு முழு நாவல்) (இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)
(உறவின் தேடல்) (விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)
பாராட்டுப் பரிசுகள் - (7) இலங்கை ரூபாய்கள் தலா 5000
(நான் யார்) தேவகி கருணாகரன் நியூசவுத்வேல்ஸ் - 2065 அவுஸ்ரேலியா , (கமழி) கோவிந்தராயு அருண்பாண்டியன் அண்ணாநகர் மேற்கு, தமிழ்நாடு , (இடுக்கண்களைவதாம்) சுமதி பாலையா காமராசர்நகர் பாண்டிச்சேரி -605006
(காணாமலே) ஹரண்யா பிரசாந்தன் பற்றிமாகிரிவீதி மட்டக்களப்பு இலங்கை , (கனடாவில் அம்மா) இராமேஸ்வரன் சோமசுந்தரம் சோலேஸ் றோட், மார்க்கம் கனடா , (நிர்ப்பந்தம்) இதயராஜா சின்னத்தம்பி ஸ்ரீசரணங்கார வீதி, தெகிவல இலங்கை , (போ வெளியே) அருண்சந்தர் றோட்1011 அல்சல்மானியா Kingdom of Bahrain
ஊக்கப் பரிசுகள் - (5) இலங்கை ரூபாய்கள் தலா 3000
(சுயகௌரவம்) சசீலா ராஜ்குமாரன் வரோதயநகர் திருகோணமலை இலங்கை.
(களவும் கற்று மற) பரமேஸ்வரி இளங்கோ ஹேகித்த வத்தளை இலங்கை
(தீக்குருவி) மொகமட்ராபி பாலையூற்று திருகோணமலை இலங்கை
(மெல்ல திறந்தது கதவு) ஜெயபால் நவமணிராசையா அண்ணா நகர், சென்னை-600101
(ஐந்தறிவு விதவை) அண்ணாதுரை பாலு ராஜபாளயம் விருதுநகர் 626117 தமிழ்நாடு

பெண்கள் சந்திப்பின் 34 ஆவது நிகழ்வு நெதர்லாந்தின் சோஸ்ட் என்னுமிடத்தில் திருமதி.திரேசிற்றா அந்தோனியின் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்றது. இச்சந்திப்பில் இந்தியா. கனடா. ஜேர்மனி. பிரான்ஸ். இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் தமது பெண்ணியக் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். சுய அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப் பெண்கள் சந்திப்பை திரேசிற்றா அந்தனி தனது வரவேற்புரையை வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த தர்சனாவின் அறிமுகத்துடன் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த வழக்கறிஞர் கிருபா முனியப்பா பேசும்போது: ‘இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் சாதி அடக்குமுறைகளினால் தலித்தியப் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக எடுத்துப் பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த வன்முறைகளை எதிர்கொண்ட பல பிரச்சனைகளை எடுத்துக்கூறிப் பேசியிருந்தார். இன்று இந்த சட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நியாயமன்றத்தில் நியாயம் கூறும் ஒரு துணிச்சலான செயற்பாடுகளை கிருபாவின் உரையில் உணர முடிந்தது’

On behalf of the World Tamil Research Conference (WTC) team, We would like to thank you for your continued support over the years in both participating as well as funding to preserve and enrich our Tamil traditions and culture.
We are honored to invite you to our upcoming 10th World Tamil Research Conference (WTC) to be held in Chicago. This event will take place at the Schaumburg Convention Centre, Schaumburg, IL, USA from 4th to 7th July 2019.
This will be a historical event with two days of cultural extravaganza and two days of research conference and entrepreneurship meet (GTEN) with an expected audience of over 6000 attendees from around the world. The conference offers an outstanding platform to display the rich heritage and significance of Tamil language and culture.
To grace this occasion, we have invited several Tamil Scholars from around the world, political figures from various states including governor, senators and congressman. We have also invited several eminent artists, poets, performers and academicians from all over the world.
'மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 - 03 - 2019) இலண்டன் மாநகர் - ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் 'கலாபூஷணம் - இலக்கிய வித்தகர்" வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.
நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல், அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல், வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி - பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் - இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது" என்றார்.
ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்" என்றார்.
இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோ பார்ட்டி ஹா'லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக் குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' பாராட்டுக்குரியது. குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா, பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , 'அரங்காடல்' செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.
நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்'பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது 'பையன்க'ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது 'பையன்கள்' செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் 'பையன்க'ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு. பாவிப்பீர்! பயனடைவீர்!


புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.
தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்ஸைல்புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.
புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.
உதாரணமாக பெண்பாடுவது போல்
“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய
மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “
இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .
இதே தர்க்கத்தை நாம் வைத்தால், நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ? அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே? புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள் ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.

அகில: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
"நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர்; தன்னார்வத்தொண்டர். அதன் காரணமாகவே சிறைவாசம் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அவரது அனுபவங்களைப்பதிவு செய்யும்படி கூறுவேன். சிரித்தபடியே செய்யவேண்டும். 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காக எழுதித்தருகின்றேன் என்று கூறுவார். அது நிறைவேறாமலே போனாலும் காலம் அவரை மறந்துவிடவில்லை என்பதற்குச் சான்று இந்நிகழ்வு. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள அவரது நண்பர்களுக்கு வாழ்த்துகள். சண்முகலிங்கம் அவர்களை நினைத்தால் அவரது சிரித்த முகமும், 'கிரிதரன்' என்று வாஞ்சையுடன் அழைக்கும் குரலுமே எப்பொழுதும் நினைவுக்கு வரும். ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றுப்பங்களிப்பைச் செய்த இவரைப்போன்றவர்களை வரலாறு ஒருபோதும் மறந்துவிடுவதில்லை." - வ.ந.கி -


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
