ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல் “சமகாலத் தமிழ்க் கவிதை”

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House - Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.

செப்டெம்பர் பதினொராம் திகதி மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலான காலப்பொழுதில் ‘குவியம்’ அறிமுக விழாவை இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலின் அரங்கில் நடாத்தி வைத்தனர். புரட்சிக் கவிஞன் பாரதியார் பிறந்ததினமாகிய அன்று ‘குவியம்’ என்றொரு இலக்கியம் சார்ந்த அமைப்பை எழுத்தாளரும் கவிஞருமான நிலா துவங்கியுள்ளார்.
அந்த விழாவை குவைத்திலிருந்து வந்திருந்த எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு வித்தியாசாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தமை மகுடமாக அமைந்தது. திருமதி யமுனா தருமேந்திரனின் தொகுத்து வழங்கலில் அமைந்த விழா மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

‘அரங்கேற்றம் என்பது ஒரு இளம் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும். பத்து வருடங்களுக்கு மேலாக புல்லாங்குழல் இசையை, பிரபல வேணுகானமணி ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனைக் குருவாகக் கொண்டு பயின்ற பிரீத்தியின் அரங்கேற்றமோ ஒரு புல்லாங்குழல் கச்சேரியைப் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. அபாரமான தேர்ச்சி பெற்ற கலைஞர் போன்று பிரித்தி பவித்ரா பிரபல மிருதங்க வித்துவான் ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரா, பிரபல வயலின் வித்துவான் ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் போன்ற கலைஞர்களுடன் தனது புல்லாங்குழல் இசையின் தாள லயம் குறித்த உணர்வை முக பாவங்கேளோடு வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. பிரீத்தியின் அண்ணனான டாக்டர் மேவின் மகேந்திரன் தன்னடக்கத்தோடு மோர்ஷிங் இசையை அழகாக வாசித்து தங்கைக்கு புத்துணர்வை ஏற்படுத்திய விதம் மகிழ்வு தரும் ஒன்றாகும்’ என்று செப்டம்பர் 21ஆம் திகதி லண்டன் ‘பெக்’ தியேட்டரில் இடம்பெற்ற அரங்கேற்றத்தில், சென்னையிலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ என். ராமகிருஷ்ணன் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.


வணக்கம், புதியவன் ராசையாவின் ஒற்றைப்பனைமரம் என்ற திரைப்படத்தை மீண்டும் Saturday October 12 ம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு திரையிட நண்பர்களில் சிலர் யோசித்துள்ளோம். இத் திரையிடலுக்கான உங்கள் ஆதரவை ம் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன்,
செல்வன்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான 'பதிவுக'ளும் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்' என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் இதழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019) கீழுள்ள படங்களை அழுத்தினால், அவை பெரிதாக, தெளிவாகத் தெரியும்.
அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது. கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டார்.

பிராந்திய கால்நடை அபிவிருத்திப் பயிற்சி நிலைய மண்டபம் (மத்திய வங்கியின் பிராந்திய நிலையத்துக்கு அருகில்), அறிவியல் நகர், கிளிநொச்சி
2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை
முன்வைப்புகளும் உரையாடலும்
1. வன்னி – நிலம், நீர், சமூகம்
2. வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி?
3. வன்னிக் காடு – வாழ்வும் அரசியலும்
(பிரதிகளில் உள்ளடக்கப்பட்டவையும் உள்ளடக்கப்படாதவையும்)
5. முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும்
6. அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர் மற்றும் போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை)
7. இலக்கிய அரசியல்: உண்மையும் விடுபடலும்
8. பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் (வரலாற்றுச் சித்திரிப்பும் புதிய உணர்தல்களின் அவசியமும்)
9.போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம்: கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள்
10. போரின் பின்னான பத்திரிகைகள்: அறிக்கையிடலின் உளவியல்
11. ஈழ அகதிகள்: தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும்
12. போருக்குப் பின்னரான சிறுகதைப் பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும்
13. தெய்வம் – சடங்கு – மரபு: வன்னி நிலமும் கையளிப்புகளும்
14. வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும்
15. மரபும் நவீனமும்: மன்னார்ப்பண்பாட்டு இடையசைவுகள்
16. திரையும் நிஜமும்


இழப்பும் இருப்பும் (LOSS AND EXISTENCE) காண்பியக்காட்சி யாழ்.பல்கலைக்கழக கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. கடந்துபோன காலங்களையும் கடந்து கொண்டிருக்கும் காலங்களையும் கண்முன்கொண்டுவரும் வகையில் நிலானியின் ஓவியங்கள் அமைந்துள்ளன. வேலிகளும் எல்லைகளும் வீடுகளும் முகப்புக்களும் வாழ்விடங்களும் Unveiled Barrier, Address of Residence ஆகிய தலைப்புகளில் கோடுகளால் நிறைந்து அவரவர் வாழ்வனுபவத்திற்கு ஏற்ப அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. அவரின் Yall Jewellery எனப் பெயரிடப்பட்ட காட்சிகள் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டு வந்துள்ளன. ஈழத்து ஓவியக் கலைக்கு நிலானியின் தொடர் பங்களிப்பு வளம்சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.