Open Call: Translators from South Asia! - Kanchana Priyakantha -



நாள்: 16 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 9:30 மணி (கனடா ரொறன்ரோ)
சிறப்பு பேச்சாளர்கள்:
'எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஜீவாவின் பங்கு' - கலாநிதி பார்வதி கந்தசாமி
'மல்லிகை பந்தல் வெளியீடுகள்' – கவிஞர் மேமன் கவி
'டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பயணத்தின் போக்கும் அதன் சமூகத் தாக்கமும்' – எம்.எஸ்.தேவகௌரி (ஊடகவியலாளர்> விரிவுரையாளர்)

எழுத்தாளர் க.பரணீதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ஜீவநதி சஞ்சிகையின் 150ஆவது இதழ் (மார்ச் 2021) 'ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பித'ழாக வெளியாகியுள்ளது. ஆசிரியர் க.பரணீதரனின் கடுமுழைப்பில் வெளியாகியுள்ள சிறப்பிதழ் சிறப்பாக வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். மேற்படி சிறப்பிதழில் எழுத்தாளர் முருகபூபதி எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனமும் வெளியாகியுள்ளது. கட்டுரையை முழுமையாக ஜீவநதியின் 150ஆவது இதழில் வாசிக்கலாம். ஜீவநதி 150 ஆவது இதழை வாங்க 'ஜீவநதி' ஆசிரியர் க.பரணீதரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

[ தமிழ் மொழிச் செயற்பாட்டகம் சார்பில் இலண்டனில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய மீள்வாசிப்பு பற்றிய நிகழ்வு பற்றிய , பதிவுகள் இணைய இதழில் வெளியான, எழுத்தாளர் பெளசரின் அறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலைப் பல்வேறு பிரிவுகளாகக் கோட்பாடுகள் வாயிலாக, காலகட்டம் வாயிலாகப் பிரித்தாலும், அவற்றை மேலும் பல உப பிரிவுகளாகப் பிரித்தாலும், அவற்றில் மூன்று காலகட்டங்கள் முக்கியமானவை: முற்போக்கு, நற்போக்கு மற்றும் பிரபஞ்ச யதார்த்தவாதம். இம்மூன்றின் மூலவர்களாக நான் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை மற்றும் மு.தளையசிங்கம் ஆகியவர்களையே குறிப்பிடுவேன்.
மு.த மகத்தான ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. என்னைப்பொறுத்தவரையில் அவர் தனது நூலான 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களில் (தாழ்த்தப்பட்ட சமூகங்களின் இலக்கியம் பற்றிய கருத்துகள்) உடன்பாடில்லையென்றாலும் நிஜவாழ்வில் அவர் அவ்விதமான சொற்பதங்களுக்கேற்ப வாழவில்லையென்பதையும் அறிந்து மதிக்கின்றேன். அச்சொற்பதங்களைப்பாவிக்காமல் அவர் சிறப்பாக அந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தால், அந்நூல் முக்கியமான இடத்திலிருந்திருக்கும். இவ்விதம் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கும் நிலையில் இருந்திருக்காது.
இவரும் தனது குறுகிய வாழ்வில் மறைந்து விட்டார். தனது சமூக,அரசியற் செயற்பாடுகளுக்கேற்ப வாழ்ந்ததாலேயே அவரும் மரணத்தைத்தழுவியதாகவும் அறியப்படுகின்றது.
அவரைப்பற்றி அறிய முயற்சி செய்பவர்கள் கூடுதலாக மு.பொ.வின் பிரபஞ்ச யதார்த்தவாதம் என்றால் என்ன? அது கூறும் தத்துவம் என்ன? என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மார்க்சியமும், மதங்களும் மனிதர்களின் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான விடுதலைக்குத்தான் தமது கோட்பாடுகளுக்கேற்ப வாதங்களை முன் வைக்கின்றன. பிரபஞ்ச யதார்த்தவாதம் என்பது மு.பொ. மார்கசியத்தை உள்வாங்கி, அதனைத் தனது பார்வையில் மேலும் தர்க்கங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு தத்துவத்தை முன் வைக்கின்றார். அது சரியா தவறா என்பதற்கப்பால் , அந்த அவரது தர்க்கச்சிறப்புள்ள சிந்தனைதான் முக்கியமானது. மு.த.வை அறிந்துகொள்வதற்கு அவரது பிரபஞ்ச யதார்த்தவாதக் கோட்பாடுகளை அவர் எவ்விதம் மார்க்சியத்திலிருந்து வந்தடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரது அக்கோட்பாடு பற்றிய கட்டுரைகளிலேயே முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்பே அவரது படைப்புகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதுவே எனது பார்வை.
ஒரு மனிதரின் பங்களிப்பினையும் பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது திறந்த வாழ்வையும் மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா? - வ.ந.கிரிதரன் -
மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள...... 14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -
ஒரு மனிதரின் பங்களிப்பினையும் பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது திறந்த வாழ்வையும் மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா?
திருப்பூர் சக்தி விருது 2021 விழா
7/3/2021 , மதியம் 4-7 மணி , காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், ( பழைய பேருந்து நிலையம் பின்புறம் ) திருப்பூர்
திருப்பூர் சக்தி விருது 2021 ( 17ம் ஆண்டில்) : இவ்வாண்டு விருது பெறுவோர் : எழுத்தாளர்கள் , கல்வியாளர்கள், பிற துறையினர்
படைப்பிலக்கியம்:
புதிய மாதவி , மும்பாய்.,ராஜலட்சுமி பாண்டிச்சேரி,
கிருத்திகா பொள்ளாச்சி, தேவகி ராமலிங்கம், சென்னை.
பொற்கொடி சென்னை, வான்மதி சென்னை.,
பிரபாவதி சுகுமார் கோவை,அம்பிகாவர்ஷினி மதுரை , பா.தென்றல் காரைக்குடி, ஜெயஸ்ரீ கோவை
ஜெயா வேணுகோபால் தர்மபுரி, மங்கை கோவை,
,உமாராணி விழுப்புரம், பவித்ரா நந்தகுமார்,
ஆரணி இரா.பிரபா பாண்டி, கமலம் சுப்ரமணியம் , கொடுவாய், அறச்செல்வி கோவை , சரஸ்வதி சண்முகம் திருப்பூர்
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது.
1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்பு ஆகிய ஐந்துவகை தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
2. ஒவ்வொரு வகையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கு தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.
3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல்வேண்டும்.

February 25, 2021— To mark Black History Month, the Honourable Marco E. L. Mendicino, P.C., M.P., Minister of Immigration, Refugees and Citizenship, and the Institute for Canadian Citizenship, along with distinguished guests, will welcome 20 candidates into the Canadian family at a special virtual citizenship ceremony.

2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.